Friday, May 22, 2026

ஸ்ரீரங்கம் தவெக MLA & அமைச்சர் ரமேஷ்


 

அறநிலையத்துறை அமைச்சராக ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டதற்கு பரவலான எதிர்ப்புகள் விமர்சனங்கள். திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கையே கொடுத்து விட்டார். இந்து சமய அறநிலையத்துறைக்கு எப்படி பிராமணரை அமைச்சராக்கலாம். ஒரு பட்டியிலினத்தவரை, ஒரு பெண்ணை அமைச்சராக்கியிருக்கலாமே என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதே கேள்வியை திமுக ஆட்சியில் இருந்த போது கேட்டிருக்கலாம். ஆனால் சோறு கிடைக்காது என்பதால் மறந்திருப்பார்.

ஒரு பிராமணர் அமைச்சரானதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் வரும் இதே தமிழ்நாட்டில் தான் ஒரு பிராமணர் முதலமைச்சராகவே இருந்திருக்கிறார். ஒன்றில்லை இரண்டில்லை, மொத்தம் 14 வருடங்கள் முதல்வராக இருந்திருக்கிறார். அவர் காலத்தில் சமூக நீதி திட்டங்களை யார் சிறப்பாக செய்தது என்று கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கு போட்டி வைத்தால், ஜெயலலிதா தான் வெற்றி பெறுவார். திமுகவை விடவும் மிகச்சிறப்பாக சமூக நீதி திட்டங்களை முன்னெடுத்த அரசு அதிமுக தான் என்பது வரலாறு. திமுக இன்று அதை மறைக்க பார்க்கலாம் ஆனால் மாற்ற முடியாது.

இன்று துள்ளிகுதிக்கும் இதே கி வீரமணி ஒரு பிராமண முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்று பட்டம் கொடுத்தார். ஆனால் இன்று ஒரு பிராமணர் அமைச்சராவதா என்று மாற்றி பேசுகிறார். மக்கள் வரலாறை மறந்து விடுவார்கள் என்கிற தைரியம்.

திமுகவின் பிராமண எதிர்ப்பு குறித்து பலமுறை எழுதியிருக்கிறேன். இன்று திமுகவிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பிராமண எதிர்ப்பு தான். திமுகவின் அனைத்து தவறுகளையும் மறைத்து கொள்ள அவர்களுக்கு பயன்படுவதும் பிராமண எதிர்ப்பு தான். இடதுசாரிகள், திருமா, முற்போக்கு கூட்டம் அனைவரையும் இணைப்பதும் பிராமண எதிர்ப்பு தான். ஆனால் இந்த பிராமண எதிர்ப்பை ஜெயலலிதா இருந்த வரை திமுகவால் செய்ய முடியவில்லை. இவர்கள் பிராமணர்களை பற்றி என்னவெல்லாம் கட்டுக்கதைகளை சொல்கிறார்களோ அதையெல்லாம் உடைத்து வீசியவர் ஜெ.

பிராமணர்கள் கல்விக்கு எதிரானவர்கள், அவர்களை மட்டுமே முன்னிறுத்துவார்கள், பிராமணர்கள் பட்டியலின மக்களுக்கு எதிரானவர்கள், இடைநிலை சாதிக்கு எதிரானவர்கள், தீண்டாமை பார்ப்பவர்கள், சாதி வெறி பிடித்தவர்கள். பெண் கல்வி, பெண் உரிமை, பெண் விடுதலைக்கு எதிரானவர்கள், மூடநம்பிக்கை கொண்டவர்கள். இவ்வளவு தானே பிராமணர்களுக்கு எதிரான விமர்சனங்கள். இதில் ஒன்றையாவது ஜெயலலிதாவிற்கு எதிராக சொல்ல முடியுமா? இல்லை அவர் உயிரோடு இருந்தவரை இந்த விமர்சனங்களை சொல்வதற்கு எந்த ஆண்மகனுக்காவது தைரியம் இருந்ததா?

உண்மையில் இந்த விமர்சனங்கள் பிராமணர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சாதியினருக்கும் பொருந்தும். எல்லா சாதியிலும் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. சுய சாதி வெறியர்களும் உண்டு, முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் உண்டு.

ஆனால் திராவிட கூட்டத்தை பொறுத்தவரை பிராமணர்கள் அனைவருமே கெட்டவர்கள். அடித்து துரத்த வேண்டியவர்கள், இனப்படுகொலை செய்யப்படவேண்டியவர்கள் எனும் அளவுக்கு பிராமணர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள்.

அதற்கு ஒரே காரணம், பிராமண எதிர்ப்பின் மூலம் தான் இந்து மத எதிர்ப்பு செய்ய முடியும்.

இதுதான் அடிப்படை காரணம். திராவிட கூட்டம் கையில் எடுத்திருக்கும் இந்து மத எதிர்ப்பிற்கு வேராக இருப்பது பிராமண எதிர்ப்பு தான். பிராமணர்கள் தான் இந்து மத அத்தாரிட்டியாக காண்பித்து, பிராமணர்கள் வேறு, தமிழர்கள் வேறு என பிரச்சாரம் செய்தால், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்ல முடியும். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க முடியும்.

பிராமண எதிர்ப்பின் மூலமாகவே இந்து மத கடவுள்களை எதிர்த்து பேச முடியும்.
பிராமண எதிர்ப்பின் மூலமாகவே பிற மதத்தை சேர்ந்தவர்களும் இந்து மதத்தை எதிர்த்து அவதூறு பேச முடியும். மீறி கேட்டால் நான் பிராமணர்களை தான் சொல்கிறேன் என்று தப்பித்து கொள்ள முடியும்.

பிராமண எதிர்ப்பின் மூலம் இந்து மதத்தை எதிர்த்து விமர்சித்து சிறுபான்மையினர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும்.

பிராமண எதிர்ப்பை பாஜகவுடன் இணைத்து, ஆர் எஸ் எஸ்ஸுடன் இணைத்து, பாஜக பிராமணர்களுக்கான கட்சி என்று தமிழர்களை ஏமாற்ற முடிந்தது. ஆர் எஸ் எஸ் பிராமண இயக்கம் என இவர்களால் தினசரி பேச முடிந்தது. தமிழகத்தில் உள்ள பாஜக எதிர்ப்புக்கு அடிப்படையே பிராமண எதிர்ப்பு தான். பாஜகவின் திட்டங்களை எதிர்ப்பதற்கு கூட இவர்களுக்கு பிராமண எதிர்ப்பு தான் கைகொடுக்கிறது. கைகொடுத்திருக்கிறது என்பது தான் உண்மை.

இந்த திருட்டு திராவிட கூட்டத்தின் சுயநலத்திற்கு தான் பிராமண எதிர்ப்பே. பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று இவர்கள் சொல்வதெல்லாம் கற்பனையான கட்டுக்கதைகள் மட்டும் தான். வேறெதுவும் இல்லை. எதிரில் இருக்கும் வரை பார்ப்பான் என்று திட்டுவது, அதுவே இவர்கள் உடன் சேர்ந்து விட்டால் முற்போக்கு பட்டம் கொடுப்பது. இந்த கேடுகெட்ட அரசியலைத்தான் இந்த திருட்டு திராவிட கூட்டம் செய்து வருகிறது.

இந்த திருட்டு கூட்டம் பிராமணர்களின் மீது வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என்பதற்கு ஜெயலலிதாவின் 14 வருட ஆட்சியே சாட்சி. இந்த திருட்டு கூட்டத்தின் பிரச்சாரங்களை மக்கள் மயிராக கூட மதிக்கவில்லை என்பதற்கு ஜெயலலிதாவிற்கு மக்கள் கொடுத்த ஆதரவே சாட்சி.

இன்று டிஜிட்டல் யுகத்தில் ஊடக, சமூக வலைத்தளம் மூலம், பிராமண எதிர்ப்பை, அடுத்த தலைமுறைக்கு கடத்தி, எப்படியாவது கட்டி காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறது இந்த திராவிட கூட்டம். மேலும் ஆட்சி போனாலும் அதிகாரம் எங்களிடம் தான் என்று ஆளும்கட்சியை மிரட்டி பார்க்கிறது. திராவிடம் சொல்வது தான் தமிழகத்தின் குரல் அதை தாண்டி வேறொரு குரல், வேறொரு கருத்து கிடையாது என்று நிறுவ பார்க்கிறது.

இந்த அரசியலை முதல்வர் விஜய் புரிந்து வைத்திருப்பாரா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு பிராமணரை இந்து சமய அமைச்சராக்கினால் எதிர்ப்பு வரும், விமர்சனம் வரும் என்று கண்டிப்பாக அவருக்கு தெரிந்திருக்கும். உடன் இருப்பவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனாலும் இதை செய்திருக்கிறார் என்றால், இதன் மூலம் விஜய் அவர்கள் சொல்ல நினைக்கும் செய்தி என்ன என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ரமேஷின் பழைய பேட்டிகளை பார்க்கும் பொழுது அவரும் இதே திராவிட அரசியலை உள்வாங்கியவர் தான் என்பது புரிகிறது. திராவிட கூட்டத்தின் பிரச்சாரங்கள் உண்மை என்று நம்புபவர் தான் என்றும் தெரிகிறது. அவர் பதவிக்கு வரும் போதே எதிர்ப்பு, இதற்கு பின் அவர் என்ன செய்தாலும் விமர்சிக்க ஒரு கூட்டம் காத்திருக்கும். அந்த எதிர்ப்புகளை அவர் எப்படி சமாளிக்க போகிறார். அவருக்கு முதல்வர் விஜய் எப்படி துணை நிற்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

31 வயதில் எம் எல் ஏ முதல் வெற்றியிலேயே அமைச்சரான ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
https://www.facebook.com/mahadevanchandrasekaran.c.9/posts/pfbid0E1RwY2KiCQVYnZwWm5eL9LmmKkgmbasxNH6i7UaSrPg1KrNVC485n6rc5L1KUXpyl?__tn__=%2CO*F

 

No comments:

Post a Comment

Karnataka Cabinet withdraw 52 Criminal cases against Rioters

  SHOCKING SERIAL "RIOT" CASE CLOSURES https://x.com/RShivshankar/status/2057687437661569081 KARNATAKA SARKARA EXEMPTS "RIOTE...