பலர் சமஸ்கிருதத்தில் பூஜை செய்வதா ?
தமிழில் பூசை செய்வதா ?என்று புது புதிதாகப் பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகிறீர்கள்
நீங்கள் இருக்கும் நாட்டில் மொழி பெயர்ப்பாளர் தேவைப் படலாம்
ஆனால் உன் தாய் நாட்டில் உனக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவையா ?
என்பது எனது வாதம் ,ஆனாலும் ஆன்றோர்களின் நடை முறைக்கு நான் அடிபணிந்து உங்களுக்காக இதைப் பதிவு செய்கிறேன் .
எல்லோரிடமும் இதைக் கொண்டு சென்று தெளிவை உண்டு பண்ணுவது உங்களின் கடமை யாகிறது
சமஸ்கிருதம் என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பழமையான செம்மொழியாகும். இது இந்து மதம், பௌத்தம் மற்றும் சமண மதம் ஆகியவற்றின் புனித நூல்களின் முதன்மை மொழியாக விளங்கியது
சமஸ்கிருதம்' என்ற சொல்லுக்கு 'நன்கு செப்பனிடப்பட்ட' அல்லது 'தூய்மையாக்கப்பட்ட' என்று பொருள்.
இது பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளைச் சீரமைத்து, இலக்கண வரம்புகளுக்குள் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட மொழியாகும்
மேலும்
உலகிலுள்ள மிகப்பழமையான மொழிகளில் ஒன்றாகும். இதன் வேதகால வடிவம் கிமு 1500 அல்லது அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
கிமு 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினி என்ற அறிஞர் எழுதிய 'அஷ்டாத்தியாயி' என்ற நூல் இம்மொழியின் மிகச்சிறந்த இலக்கண நூலாகும். இதுவே சமஸ்கிருதத்திற்கு நிலையான வடிவத்தைக் கொடுத்தது.
ஆரம்ப காலத்தில் வாய்மொழியாகவே கடத்தப்பட்ட இம்மொழி, பிற்காலத்தில் பிராமி எழுத்துமுறையிலும், தற்போது பொதுவாக தேவநாகரி எழுத்துமுறையிலும் எழுதப்படுகிறது
பாணினி இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாக கருதுகின்றனர்
சமசுக்கிருத இலக்கணம் மற்றும் மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்
அட்டாத்தியாயி
என்பது பாணினி என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் சுருக்கமாக இருந்தாலும் சமசுக்கிருத இலக்கணத்தின் எல்லா அம்சங்களையும் விளக்குகிறது
இது தாதுபாதம், கணபாதம் ஆகிய சொற்பட்டியல்களில் இருந்து தரவுகளைப் பெற்று அவற்றிலிருந்து சொற்களை உருவாக்குவது பற்றிய விளக்கங்களைத் தருகிறது. இது பெருமளவு முறைப்படுத்தப்பட்டதும், தொழில்நுட்பத் தன்மை கொண்டதும் ஆகும். இதன் அணுகுமுறையில் ஒலியன், உருபன், வேர்ச்சொல் ஆகிய கருத்துருக்கள் இயல்பாக அமைந்துள்ளன.
இக் கருத்துருக்கள் மிக 2000 ஆண்டுகளுக்குப் பின்னரே மேல் நாட்டு மொழியியலாளர்களுக்கு அறிமுகமாயின.
அட்டாத்தியாயியின் விதிமுறைகள் சமசுக்கிருதத்தின் உருபனியலை முழுமையாக விளக்குவதாகச் சொல்லப்படுகிறது இதனால் மேல் நாட்டு அறிஞர்கள் நம் மொழிகளுக்குள் புகுந்து விளையாட உதவியாயிற்று
அஷ்டாத்தியாயீ சுமார் 4,000 சூத்திரங்களை (சுருக்கமான விதிகள்) கொண்டுள்ளது. இந்த நூலின் முக்கிய அம்சங்கள்:
எட்டு அத்தியாயங்கள்: ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (மொத்தம் 32 பாதங்கள்).
பொருளடக்கம்: இது ஒலியியல் (Phonology), உருபனியல் (Morphology), மற்றும் வேர்ச்சொல் (Root words) ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.
மூலங்கள்: இது தாதுபாதம் (வேர்ச்சொற்களின் பட்டியல்)
மற்றும் கணபாதம் (சொற்களின் தொகுப்பு) ஆகியவற்றிலிருந்து தகவல்களைப் பெற்று, சொற்களை உருவாக்குகிறது.
தொழில்நுட்ப அணுகுமுறை: இந்த நூல் மிகவும் முறைப்படுத்தப்பட்டதும், தர்க்கரீதியானதும், தொழில்நுட்பத் தன்மை கொண்டதும் ஆகும்.
ஒலியன் என்றால் என்ன ?
ஒரு மொழியில் வழங்கும் அடிப்படை ஒலிகளை ஒலியன் என்கிறோம். பல்வேறு நுட்பங்களைக்கொண்ட பேச்சு மொழியில் ஒலி வேறுபாடுகளுக்கு இடையில் மாறாகவும், அடிப்படையானதுமான ஒலியை ஒலியன் என்கின்றனர். இவ்வொலியன் என்பது பேச்சொலியின் சிறு பகுதியாக அமைகிறது. அதே நேரத்தில் பொருள் மாற்றம் செய்யக்கூடிய தனி ஒலியாகவும் விளங்குவதை ஒலியன் என்கிறோம்
சொல்லிலுள்ள ஓர் ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும்.(இது பற்றிய விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடுகின்றேன் )
உருபன் என்றால் என்ன ?
உருபனியலில், உருபன் என்பது பொருள் குறித்து நிற்கும் மிகச் சிறிய மொழியியல் அலகு ஆகும். ஒவ்வொரு சொல்லும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்களால் ஆனது. ஒரு சொல்லின் பொருளை அறிய உருபன்களை பிரித்து அவற்றின் பொருள்களை அறிதல் உதவும்.
வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.
நான் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படாலாம்
காந்தார நாடு
ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் மறுசீரமைத்து "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது..இந்த காந்தார நாட்டுக்கும் எமக்கும் பல கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன .
(சமஸ்கிருதத்தில்
பாணினியின் அஷ்டாத்தியாயி தமிழாக்கம் நூல் வடிவில்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : சென்னையாழ் அச்சிட்டு வெளியிடப்பட்டது .ஆகவே தேவையானோர் தேடித் படிக்கவும் )
சம்ஸ்கிருத மொழியில்
ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இம்மொழியிலேயே அமைந்துள்ளன.
இதிகாசங்கள்: இந்தியாவின் பெரும் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.
காளிதாசர், பாஸர், ஹர்ஷர் போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் இம்மொழியில் பல நாடகங்களையும் காவியங்களையும் படைத்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 அதிகாரப்பூர்வ மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்றாகும்.
இந்திய அரசால் 2005ஆம் ஆண்டு இது செம்மொழியாக (Classical Language) அறிவிக்கப்பட்டது.
அன்றாடப் பேச்சுவழக்கில் மிகக் குறைவாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள கோயில்களின் வழிபாட்டு மொழியாகவும், ஆன்மீக சடங்குகளின் விளக்கங்களைக் கூறும் மொழியாகவும் இது இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐயம் திரிபற இந்த மொழியைக் கற்ற பலர் மதத்திற்கு பல சேவைகள் ஆற்றியுள்ளனர் .
இறைவனுக்கு அனைத்து மொழிகளும் சமமே என்பதால், பக்தி உணர்வோடு தாய்மொழியில் வழிபடுவது மிகவும் சிறப்பானது.
சங்க காலம் முதலே தமிழ் மொழியில் இறைவனை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது.
நாயன்மார்களும் (சைவம்) ஆழ்வார்களும் (வைணவம்) முறையே தேவாரம், திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்திப் பாடல்களைத் தமிழில் பாடி வழிபாட்டு முறையை வளர்த்தனர்.
தேவாரங்களைப் பாடித்திருமணம் செய்து வைத்த காலங்களும் உண்டு
காரணம்
திருமுறைகளும் பிரபந்தங்களும் 'தமிழ் வேதம்' என்று அழைக்கப்படுகின்றன. சமஸ்கிருத வேதங்களுக்கு இணையாக இவை போற்றப்படுகின்றன.
அஷ்டோத்திரம்: அனைத்து முக்கிய கடவுள்களுக்கும் (சிவன், முருகன், பெருமாள், வினாயகர், அம்மன்) 108 போற்றித் துதிகள் தமிழில் உள்ளன.
நாம் சொல்லும் மந்திரத்தின் பொருள் நமக்குப் புரியும் போது, வழிபாட்டில் ஈடுபாடும் பக்தியும் இன்னும் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்கள் ஏற்கனவே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துதான் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன
சைவக் கோவில்களில் பிரம்மோற்சவம் போன்ற பெரிய திருவிழாக்களின் போது, சாமி வீதியுலா (புறப்பாடு) வரும்போது ஓதுவார்கள் முன்னால் நின்று தேவாரம், திருவாசகம் மற்றும் திருவிசைப்பா போன்ற திருமுறைகளைத் தமிழில் பாடிச் செல்வார்கள்.
வைணவக் கோவில்களில் (உதாரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்) உற்சவங்களின் போது, ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களைப் பாடும் 'அத்யயன உற்சவம்' மற்றும் 'பிரபந்த சேவை' மிக முக்கிய அங்கமாகத் தமிழில் நடைபெறுகிறது.
கிராமப்புறக் கோவில்களில் நடக்கும் கொடை விழாக்கள், தீமிதித் திருவிழாக்கள் மற்றும் ஆடிப் பெருக்கு உற்சவங்கள் போன்றவை முழுமையாகத் தமிழ் வழிபாட்டு முறையிலேயே (உடுக்கைப் பாட்டு, வில்லுப்பாட்டு, கரகாட்டம், தமிழ் வழிபாட்டுப் பாடல்கள்) நடத்தப்படுகின்றன.
இறைவனுக்கு என்று தனிப்பட்ட ஒரே ஒரு மொழி கிடையாது. உலகிலுள்ள அனைத்து மொழிகளும், ஒலிகளும் அவனால் படைக்கப்பட்டவையே என்பதால், அனைத்து மொழிகளுமே கடவுளின் மொழிகள் தான் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் ஒருமித்த கருத்தாகும்.
கடவுள் மொழியைப் பார்ப்பதில்லை; பக்தர்களின் உண்மையான அன்பையும், தூய்மையான உணர்வையும் மட்டுமே பார்க்கிறார்.
"உள்ள உருகி" நாம் எந்த மொழியில் அழைத்தாலும் இறைவன் செவிசாய்ப்பார். மௌனமும் கூட இறைவனுக்குப் புரியும் ஒரு மொழிதான்.
அன்பானவர்களே !
இங்கே சமஸ்கிருதமா ?தமிழா ?
ஆண்டவன் மொழி என்பது வாதமல்ல .அப்படி வாதம் செய்ய வேண்டாம்
காரணம்
நீங்கள் வழிபடும் தீர ஆவுடயானாகிய ,திரா விடனாகிய
சிவபெருமான் வடமொழியை (சமஸ்கிருதம்) அகத்தியருக்கும், தென்மொழியை (தமிழ்) பாணினிக்கும்/அகத்தியருக்கும் கற்பித்தார் என்ற ஆன்மீக வரலாறு உண்டு. எனவே இவ்விரு மொழிகளும் இறைவனின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன.
"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்று தேவாரம் கூறுகிறது. இறைவனே தமிழ் பாடல்களுக்கு உருகி, அடியவர்களுக்காக நேரில் வந்த பல வரலாற்று நிகழ்வுகள் (உதாரணமாக: மாணிக்கவாசகர், சுந்தரர் கதைகள்) தமிழகத்தில் உண்டு. இறைவனை "தமிழ்க் கடவுள் முருகன்", "தமிழ் நாடன்" என்று பக்தி இலக்கியங்கள் போற்றுகின்றன
சமஸ்கிருதம் "தேவபாஷை" (தேவர்களின் மொழி) என்று அழைக்கப்படுகிறது.
இதன் ஒலிகளும், மந்திர அதிர்வுகளும் (Vibrations) பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புடையவை என்பதால், வேதங்கள் மற்றும் யாகங்களில் இது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
குர்ஆன் அருளப்பட்ட மொழியான அரபு மொழி புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இயேசு நாதர் பேசிய அராமைக் மொழி, மற்றும் பைபிள் எழுதப்பட்ட எபிரேய (Hebrew), கிரேக்கம் ஆகிய மொழிகள் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன
மொழி என்பது மனிதர்கள் தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
ஆனால், கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். எனவே, உங்களுக்கு எந்த மொழி நன்றாகத் தெரியுமோ, எந்த மொழியில் பேசினால் உங்கள் மனதில் பக்தி பெருகுகிறதோ, அதுவே உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் இடையேயான சிறந்த மொழி.
'தேவபாஷை' (Devabhasha) என்ற சொல்லுக்கு 'தேவர்களின் மொழி' அல்லது 'கடவுளின் மொழி' என்று பொருள். இச்சொல் பொதுவாக சமஸ்கிருத மொழியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்து மதத்தின் மிகப்பழைமையான வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இதிகாசங்கள் இம்மொழியிலேயே இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டது
சமஸ்கிருத மந்திரங்களின் துல்லியமான உச்சரிப்புகள் பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றலையும், தெய்வீக அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்று நம்பப்படுவதால் இது தேவபாஷை எனப்பட்டது
பக்தி இலக்கிய மரபில், சமஸ்கிருதம் 'தேவபாஷை' (வடமொழி) என்றும், தமிழ் 'தேன்பாஷை' அல்லது 'அமுதபாஷை' (தென்மொழி) என்றும் போற்றப்படுகிறது.
ஆன்மீகப் பெரியோர்கள் இவ்விரண்டு மொழிகளையும் இறைவனின் இரு கண்களாகவே கருதுகின்றனர். சிவபெருமானே தனது உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதத்தையும், மறு பக்கத்திலிருந்து தமிழையும் தோற்றுவித்தார் என்ற ஆன்மீக வரலாறும் உண்டு.
சமஸ்கிருதம் அன்றாடப் பேச்சுவழக்கில் மிகக் குறைவாக இருந்தாலும், கோவில்களின் யாகங்கள், குடமுழுக்குகள் மற்றும் மந்திர வழிபாடுகளில் முதன்மையான 'தேவபாஷையாக' இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே வழி நடப்பதில்ஏ து குறை ?
என்றும் நன்றியுடன்
Manikkavasagar Vaitialingam See less

No comments:
Post a Comment