குளத்தை காணவில்லை!!
சென்னை வளசரவாக்கத்தில் அழகான ஒரு குளம் இருந்தது. அதற்கு பெயர் சிவன் கோவில் குளம். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்த போது அந்த குளத்தை மண் அடித்து நிரப்ப போட்ட திட்டத்தை அறப்போர் புகார் அளித்து தடுத்தது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று ஒரு டெண்டர் போட்டு குளத்தின் அளவை சுருக்கி உள்ளே ஒரு கான்கிரீட் நீச்சல் குளத்தை கட்டிவிட்டார்கள். இது குறித்து அறப்போர் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்து வந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்த பிறகு, நாங்க அதில் ஒரு மண்டபம் கட்ட போகிறோம் என்று டெண்டர் போட்டார்கள். அதையும் கண்டுபிடித்து புகார் அளித்து அறப்போர் இயக்கம் தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தை பற்றியே மறந்து விட்டார்கள். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 CUM) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருக TVK அரசு முயற்சி எடுக்குமா?

No comments:
Post a Comment