Friday, June 12, 2026

கொல்லூர் மூகாம்பிகையில் இறைவன் கோவிலில் விஜய் - ஜோதிடர் ஆலோசனை?



ரத்தன் பண்டிட் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவரால் ஒரு மாற்றம் செய்ய முடிந்ததே.
அதிலும் ஒருவர் நம்பிக்கையோடு ஆத்ம சுத்தியோடு மத வழிபாடு.
பழைய நினைவுகள்
நேரு பிரதமராக இருந்த நேரத்தில், அரசு மத விழாக்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் (strict secularism / anti-association with religion). என்பதே.இது ஒரு போலியான மதச்சார்பின்மை.
அதை அன்றைய பாரத குடியரசு தலைவர் பாபுஜி ராஜேந்திர பிரசாத் கடுமையாக விமர்சித்து , அரசு மதத்துக்கு எதிரானதாக இருக்கக் கூடாது; மத சுதந்திரத்தை மதிக்க வேண்டும் (positive secularism / equal respect). என்று கூறினார்.
மேலும் , ராஜேந்திர பிரசாத், நேருவுக்கு பதிலளித்தபோது சொன்ன முக்கியமானது.
“நமது அரசு மதமற்றதும் அல்ல, மத எதிர்ப்பு கொண்டதும் அல்ல (Our state is neither irreligious nor anti-religious). மசூதி அல்லது தேவாலயத்துக்கு அழைப்பு வந்தால் நான் அதற்கும் செல்வேன்.”
என்று நேருவின் எதிர்ப்பை மீறி 1951 மே 11 அன்று ராஜேந்திர பிரசாத் சோம்நாத் கோயில் விழாவுக்கு சென்று பங்கேற்றார்.
இந்த சம்பவத்தின் சாராம்சம் Indian Secularism பற்றிய ஆரம்பகால விவாதத்தை காட்டுகிறது. இது பிழையானது என்பதையும் உணர்த்தியது.
நேருவின் மதச்சார்பின்மை (secularism)தேர்ந்தெடுத்த சமத்துவம் (selective equality) போன்றவை ,மதசார்பற்ற அரசு என்று கூறி அரசை வழிநடத்தும் அரசியல் வாதிகளால் ஹிந்து மத அடையாளங்களை ஒடுக்குவதில் மட்டுமே தீவிரம் காட்டும்.
மற்ற மதங்களுக்கு சலுகை மற்றும் அரசின் நேரடி ஆதரவு உண்டு.
அந்த பிழை தமிழகத்தில் திராவிட இயக்க அரசியலில் தொடர்கிறது.
அதே நேரத்தில், திராவிட கொள்கை கொண்ட
மக்கள் திலகம் , பொன்மன
செம்மல் எம்ஜிஆர் அவர்கள் 1984-ஆம் ஆண்டு தனது அரசியல் மற்றும் தேர்தல் வெற்றிகளின் நினைவாக, கொல்லூர் சென்று அன்னை மூகாம்பிகைக்கு 1 கிலோ எடையும், 2.5 அடி நீளமும் கொண்ட தங்க வாளை காணிக்கையாக வழங்கி அன்னையை வழிபட்டார்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று இக்கோவிலுக்குச் சென்று சிறப்பு வாய்ந்த சண்டி ஹோமத்தை (சத்ரு சம்ஹார யாகம்) நடத்தி , கோவிலுக்கு 1000 கிலோ பசு நெய் வழங்கி அன்னை மூகாம்பிகையை வழிபட்டார்.
இவர்களின் ஆன்மீக மரபைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் ஜூன் 2026-இல் இக்கோவிலுக்குச் சென்று 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளைக் காணிக்கையாக அளித்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஆண்கள் சட்டை, பனியன் அல்லது மேல் சட்டை அணியாமல், மார்பு திறந்த நிலையில் மட்டுமே உள்சென்று வழிபட வேண்டும் என்பது அங்குள்ள அதிகாரப்பூர்வ சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் ஆடை விதிமுறை (Dress Code) ஆகும். முதல்வர் சட்டை அணியாமல் சென்றது ,அந்த ஆன்மீகத் தலத்தின் பாரம்பரிய விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்துகொண்ட ஒரு சாதாரண பக்தரின் செயலாக வரவேற்பு பெறுகிறது.
தமிழ்நாடு அரசியலில் இந்த நிகழ்வு , திராவிட இயக்கத்துக்கும், மற்றும் அந்த இயக்கத்தின் பற்றாளராக தங்களை காட்டிக்கொள்ளும் அனைத்து கட்சிகளுக்கும், எதிர்க்கட்சியான திமுக-விற்கு (குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு) இது ஒரு வலுவான அரசியல் பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.
திராவிடம் vs ஆன்மீகம் திமுக பாரம்பரியமாக பகுத்தறிவுக் கொள்கைகளையும், சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துகளையும் பேசி வரும் சூழலில், முதல்வர் விஜய் பகிரங்கமாக நெற்றியில் திலகமிட்டு, பாரம்பரிய சனாதன தர்ம முறைப்படி கோவிலில் பக்தியோடு அன்னை மூகாம்பிகையை வழிபட்டது , திமுக-வின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மாற்று அரசியல் பாதையைக் காட்டுகிறது.
திராவிடர் கழகப் பின்னணி கொண்ட திமுக தலைவர்கள் பொதுவெளியில் கோவில் வழிபாடுகளைத் தவிர்ப்பார்கள். ஆனால், தமிழகத்தை ஆண்ட ஆன்மீகப் பற்றுள்ள முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையைத் தான் பின்பற்றுவதாக விஜய் இந்த வழிபாட்டின் மூலம் நிரூபித்துள்ளார்.(எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மரபு) இது அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களைத் கவரும் ஒரு உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் அவர்களின் , அன்னை மூகாம்பிகை தரிசனம் சனாதன மற்றும் கோவில் விதிகளின்படி சட்டை அணியாமல், திலகமிட்டு வழிபட்டது திமுக-வின் போலி பகுத்தறிவு அரசியலுக்கு மாற்றான ஒரு ஆன்மீக அரசியல் பதிலாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
இதிலும் திமுக அவர்கள் பாணியில் நேரடியாக சரி, தவறு என்று கருத்தை சொல்லாமல்
டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் கர்நாடகா சென்ற முதல்வர் விஜய், மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் காவேரி நீர் விவகாரம் குறித்து கர்நாடக அரசிடம் பேசாமல், கோவிலுக்குச் சென்று அமைதியாகத் திரும்பியுள்ளார்
என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்
https://www.facebook.com/balajemv/posts/pfbid03111yoNNBW763rMvhepDS7jC7SJen9RVQxqssPXvrV5jqiDxEKjkSGrJcWunD334il?__cft__[0]=AZbi1bDG7QcKNuTc35smvZ3yzmGH1KAeeoM-9BYsw5zvCrmdIWdH-6LZjodErkOOJJ70bVIfT_8LFKqbeCvat52MXRDScVxLbkB6mg6xj81Vgsl8-NfZtADVIJvNXYWV7Odfn01A-yQvkJObMoX_PJGwaRSh_gp_sYlNTb5fEY5gnOlEFXiyv2Dg_z5FxkYBftkn0voPX-Zr-w7dqhmm8n7v&__tn__=%2CO%2CP-R

No comments:

Post a Comment

Israeli Court Acquits Jewish Settler Who Assaulted A Nun on Insanity claims & ordered that he be held in a psychiatric hospital for up to 6 years.

  Israeli Court Acquits Settler Who Assaulted A Nun An Israeli court absolved Israeli settler Yona Schreiber of wrongdoing, despite their be...