Monday, June 8, 2026

வைத்தியலிங்கம் (Ex.அதிமுக அமைச்சர்) ஊழல் வழக்கு DVAC ரத்து திமுகவில் சேர்ந்ததால் பரிசுத்தர் ஆனார்

வைத்திலிங்கம் மீது ரூ.27.9 கோடி ஊழல்: முடிச்சு வச்ச திமுக, DVAC மூலம் மீண்டும் ஓபன் பண்ண தவெக அரசு

Authored by: Vidhya|Samayam Tamil
https://x.com/Sidprabhakar7/status/2064166457429381307/photo/2

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.




வைத்திலிங்கம் ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு(புகைப்படங்கள்- Samayam Tamil) 
அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது பதிவு செய்யப்பட்ட ரூ.27.9 கோடி லஞ்ச புகார் தொடர்பான வழக்கை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.

வைத்திலிங்கம் மீதான லஞ்ச வழக்கு மீண்டும் விசாரணை:

சென்னை அருகிலுள்ள பெருங்களத்தூரில் 57.94 ஏக்கர் பரப்பளவில் 1,453 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் கொண்ட திட்டத்திற்கு அனுமதி பெறும் நோக்கில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ரூ.27.9 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 2024 பிப்ரவரி 24ஆம் தேதி திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.


இதற்கிடையில்,கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வைத்திலிங்கம் மீதான வழக்கு கடந்த பிப்ரவரி மாதமே முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

திமுக முடித்து வைத்த வழக்கை மீண்டும் எடுக்கும் தவெக:

குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த ஊழல் புகார் தொடர்பான வழக்கு ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.இதனால் இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் அருண், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ.27.9 கோடி லஞ்ச புகார் தொடர்பாகவும், முன்பு வழக்கு முடித்து வைக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் புதிதாக விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால், இது குறித்து திமுக அரசு விசாரணைக்கு ஆதரவாக எந்தவித நடவடிக்கையும் எடப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சி மாற்றம் நடந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.நிதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இறுதிவரை கொண்டு சென்று நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்குமா?

இந்த சூழலில் திமுக முடித்து வைத்த வைத்திலிங்கம் மீதான வழக்கையும் தவெக மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. முன்னதாக கடந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், பெரியதாக விசாரணை நடந்தப்படவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

அதே போல், புதியதாக வந்துள்ள தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான "ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்" என்பதை நிலைநாட்டும் வகையில் பழைய மற்றும் நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை மீண்டும் கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

முந்தைய ஆட்சிகளின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் பாயும்போது, அரசு நிர்வாக எந்திரம் தற்காலிகமாகத் தேக்கமடையாமல் சீராக இயக்குவதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்ய வேண்டும். ஊழல் வழக்குகளை இறுதிவரை கொண்டு சென்று நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தருவதில்தான் இந்த அரசின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்பது பலரது எதிர்ப்பார்க்க உள்ளது.
DMK government under CM Stalin closed a corruption case against former AIADMK minister Vaithilingam one month after he joined the party, and one month before Model Code of Conduct for 2026 elections. Clear case of quid pro quo by Stalin, alleges Arappor Iyakkam. Not political says DMK. Most interesting part: DVAC confirmed the closure before the Sessions court on June 4, 3 weeks after TVK govt under CM Vijay took over. My exclusive report on front page of Free Press Journal (@fpjindia) today.

Protracted legal battle to start this week. #DMKWashingMachine
Siddharth Prabhakar
 மூல லஞ்ச ஊழல் வழக்கு மூடப்பட்டால் துறை வழக்கும் செயல் இழக்கும்
அதிமுக முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வுமான ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க ரூ. 28 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை (ED) மூலம் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [1, 2, 3, 4]

ஊழல் வழக்கின் பின்னணி
  • குற்றச்சாட்டு: கடந்த 2011 முதல் 2016 வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் (Shriram Properties) குடியிருப்பு திட்டங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அவரது மகன்களின் நிறுவனத்திற்கு ரூ. 28 கோடி வரை லஞ்சம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. [1, 2, 3]
  • வழக்குப்பதிவு: இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. [1]
  • அமலாக்கத்துறை சோதனை: இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்சம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. [1, 2]
  • முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கத்தை காப்பாற்ற மோசடி செய்த Ex CM ஸ்டாலின் uncle. 2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது. 2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது. 2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது. 2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. 2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது. 2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விட்டிருக்கிறார்கள்...



No comments:

Post a Comment