Thursday, June 11, 2026

பாரதிராஜா மரணம்- உடல் அரசு மரியாதையோடு அடக்கம்

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் என்றவுடன் பாரதிராஜாவைப் பேட்டி காண அவர் அலுவலகம் சென்றதும் “நீங்கள்தான் என்னிடம் பேசினீர்களா?” என்றார் புன்னகையோடு.
கலை ஆர்வம் குறையாத பாரதிராஜா ஒவ்வொரு கேள்விக்கும் உற்சாகமாகப் பதில் சொன்னார். யாருக்கும் பயப்படாமல் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். பல மேடைகளையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் கண்டிருந்தாலும் புது இயக்குநரைப் போலவே கேள்விகளைக் கூர்ந்து கேட்டு ஒவ்வொரு சொல்லாக அடிக்கிவைத்தார். நேரடி அரசியல் கேள்விகளை நேரடியாக மறுத்தார்.



அன்பு நண்பர், புகைப்படக் கலைஞர் ஸ்ரீஹரி பாரதிராஜா ரசிகர் என்பதால் அவரை ஒரு கதாநாயகனாக நினைத்துக் கொண்டு விதவிதமாக 50க்கும் மேற்பட்ட படங்களைச் எடுத்துத் தள்ளினார். அப்படியும் அடங்காமல் அருகில் சென்று பாரதிராஜா இயக்கிய படங்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.
“கேமரா வெளிச்சம் விழும் வரை ஒரு கலைஞன் உயிர்ப்புடன் இருப்பான். அவன் படைப்பும் வெளிச்சப்படும். காட்பிளஸ்யூ” என்று வாழ்த்தி வழியனுப்பினார். ஸ்ரீஹரிக்குத்தான் நன்றி.
கல்கி இதழில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டார் என் அன்பு பொறுப்பாசிரியர் ரமணன் சார். வெளியானதும் போனில் “உங்கள் பேட்டி கல்கியில் வந்துள்ளது பார்த்தீர்களா? ரஜினி முதல்வர் ஆக முடியாது என்று நீங்கள் சொன்னதைப் போட்டருக்கிறேன்” என்றேன்.
“சரிதான். அப்படித்தான் போடவேண்டும்” என்றார் கரகர குரலில். அன்றையிலிருந்து இன்றுவரை பல முன்னணி சினிமா பி.ஆர்.ஓ.க்கள் என் மெயிலில் தொடர்பில் இருக்கிறார்கள்.



 

No comments:

Post a Comment

மதுரை முகாலய சுல்தான்களின் கோரப் படுகொலைகள்

  மாறவர்மன் குலசேகரனுக்கு சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் என இரு மகன்கள்..இதில் சுந்தர பாண்டியனே பட்டத்து ராணிக்கு பிறந்து அரியணைக்கு உரித்தா...