Saturday, June 13, 2026

குழந்தைகள் சமூக வலைதளங்களில் ஈடுபடுவதை தடை முயற்சி

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளும் குழந்தைகள் சமூக வலைதளங்களில் ஈடுபடுவதை தடை செய்ய முயற்சித்து வருவதாக கூறி இருக்கின்றன. இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் இந்த தடை இருப்பதாக அறிகிறேன்.( கண் துடைப்பாக தான் இருக்க முடியும்) .. இது குறித்த Mint தலையங்கம் சொல்வது என்னவென்றால் இந்தியாவிலும் இது போன்ற தடைகள் சட்டமாக கொண்டு வர வேண்டும் என்பது தான். இது இந்தியா போன்ற நாடுகளில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

காரணம் இங்கு பெற்றோர்களே குழந்தைகள் கைகளில் மொபைல் போன்களை கொடுத்து விட்டு என்னமா விளையாடுகிறது பாருங்கள் என்று புளகாங்கிதம் அடையும் மன நிலையில் தான் இருக்கிறார்கள். சின்ன குழந்தைகள் கைகளில் இரு சக்கர வாகனங்கள் கொடுத்து அதை பார்த்து மகிழும் பெருமக்கள் கொண்ட சமூகம் தான் நம்முடையது.

ஒரு சராசரி மேற்கத்திய நாட்டு குடிமகன், மற்றும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் அடிப்படையில் நேர்மையை விரும்பும் மன நிலை கொண்டவர்கள். நேர்மைன்னா என்ன என்கிற மன நிலை கொண்டவர்கள் பெருவாரியான இந்திய பெற்றோர்கள் மற்றும் பெருவாரியான மக்கள். ஆக, நாம இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டோம். இங்கு குழந்தைகள் தான் ஆட்சி அமைப்பதையே தீர்மானிக்கும் சக்தியாக மாறி விட்ட பிறகு, வேறு என்ன வேண்டும்?

 

No comments:

Post a Comment