ஸ்ரீரங்கம் தாலுகா திம்மராயசமுத்திரம் கிராமத்தில் சுமார் 21 ஏக்கர் 6 சென்ட் பரப்பளவு கொண்ட, சுமார் ₹600 கோடி மதிப்புள்ளதாகக் கூறப்படும் நிலம், கோவில் சமய மற்றும் அறப்பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், அந்த நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்வதற்கான பத்திரப்பதிவுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், அந்த அறக்கட்டளையின் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களின் திருப்பணி மற்றும் சமயப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், நிலத்தை விற்பனை செய்யவோ வாங்கவோ முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மனுதாரரின் குற்றச்சாட்டின்படி, பின்னர் சில தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கிரையப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், நிலத்தை வகைமாற்றம் செய்து வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை விசாரித்தபோது, சர்ச்சைக்குரிய அறக்கட்டளை நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்தால், ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அந்தப் பத்திரங்களைப் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்சி மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறிக்கையின்படி, சர்ச்சைக்குரிய முழு நிலத்திற்கும் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் தொடர்பான ஆவணங்களை அடுத்த உத்தரவு வரும் வரை பதிவு செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அடுத்த விசாரணை 5 நவம்பர் 2026 அன்று நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..png)
.png)
கோயில் நிலப் பதிவு & பின்னணி:
* 1862-ல் சேஷாத்ரி தத்தம் மற்றும் ரங்கசாமி ஆகியோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குப் புண்ணிய காரியங்களுக்காகவும், பிரம்மோற்சவம் போன்ற பணிகளுக்காகவும் நிலத்தை எழுதி வைத்தனர்.
* அந்த நிலத்தை நிர்வகிக்க அறங்காவலர்கள் (ட்ரஸ்டிகள்) நியமிக்கப்பட்டு, வாரிசுரிமை அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
* 2024 டிசம்பரில், அந்த வாரிசுகள் இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல், தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி ஒரு தனியார் நிறுவனத்திற்கு ("ஒற்றை எழுத்து நிறுவனம்") விற்பனை செய்தனர்.
* அடமானம் & பணப் பரிமாற்ற முறை:
* அந்நிலம் சுமார் 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு, பின்னர் அந்த தனியார் நிறுவனம் அதே நாளில் 'கேப்ரி குளோபல் கேப்பிட்டல் லிமிடெட்' (Capri Global Capital Limited) என்ற நிதி நிறுவனத்திடம் 200 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற்றது.
* இதன் மூலம் அந்தத் தனியார் நிறுவனத்திற்கு வங்கிக் கடன் வழியாகப் பணம் கிடைத்துள்ளது.
* லேஅவுட் & திருப்பதி தேவஸ்தான விவகாரம்:
* அந்த நிலத்தை லேஅவுட் போட்டு விற்பனை செய்ய முயன்றபோது, வாங்குபவர்கள் சிக்கலை உணர்ந்து நீதிமன்றத்தை அணுகியதால் நீதிமன்றத் தடை வந்தது.
* நிலத்தை விரைவாக விற்க, அங்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கிளை அமைய உள்ளதாக விளம்பரம் செய்தனர்.
* இதுகுறித்து ஊடகங்களில் வெளிவந்தபின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்குச் சென்று, "திருப்பதி பாலாஜிக்குக் கிளைகள் கிடையாது" என்று கூறி அத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது.
* அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு & நீதிமன்ற வழக்கு:
* இவ்வளவு புகார்கள் வந்தும் கோவை காவல்துறையினர் முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க (Closure report) முயன்றனர்.
* புகார் தாரர் நீதிமன்றத்தை அணுகியபோது வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
* ஆனால், நிலத்தை அபகரித்த தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் சீராய்வு மனு தாக்கல் செய்து, சிபி-சிஐடி விசாரணைக்கு இரண்டு வார கால இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளது.
* இவ்வழக்கை விசாரித்தவர், இதற்கு முன்பு கரூர் விவகாரத்தில் விஜய் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆவார்.
* முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை:
* சிபி-சிஐடி விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
* இவ்வழக்கைச் சரியாக புலன்விசாரணை செய்தால், இதில் தொடர்புடைய பெரிய நபர்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்கு இடையே உள்ள மறைமுகத் தொடர்புகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.
.png)
No comments:
Post a Comment