Saturday, July 22, 2023

ஏசு -சுவிசேஷக் கதை நாயகர்- யூதர் அல்லாதவரிடம் மதம் சேர்க்க சொல்லவே இல்லையே

சுவிசேஷக் கதை நாயகர் ஏசு- யூதர் அல்லாதவரிடம் மதம் சேர்க்க சொல்லவே இல்லையே

புதிய ஏற்பாடு தொன்மத்தில் ஏசுவின் கதை கூறும் சுவிசேஷக் கதைகளில் சீடரை அனுப்புகையில் ஏசு சொன்னதாக உள்ளது.

மத்தேயு10:5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 

ஏசு சீடரோடு இயங்கியபோது யூதரல்லாத ஒரு கிரேக்க பெண்ணிடம் ஏசு நடந்து கொண்ட இனவெறி கதை.


ஏசு: ரோமன் அரசு -தனக்கு எதிரா யூதர்களின் மேசியா(கிறிஸ்து-ராஜா) என ஒரு சிறு கும்பலைச் சேர்த்துக்கொண்டு இயங்கிய -ஏசு என்ற மனிதனை கைது செய்து, விசாரணை செய்து ரோமன் மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்தார் எனச் சுவிசேஷக் கதைகள் காட்டுகின்றன. 

இறந்த மனிதன் ஏசுவுடைய சீடர் இல்லாத பவுல் என்பவர் இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகம் ஆக்கி வழிபடுவதைத் தொடங்கிய கிறிஸ்துவ மதம்.  கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் ஏசுவைப் பற்றிய அனைத்து கதைகள், செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஆதாரம் மதம் பரப்ப  கிரேக்க மொழியில் வரைந்த புதிய ஏற்பாடு மதத் தொன்மக் கதைகள் மட்டுமே. 

இறந்த மனிதன் ஏசுவை யூதர்களின் கிறிஸ்து (ஹீப்ரு-மேசியா- ராஜா) என்பதாகவும் அவரை யூதப் புராணக் கதையின் தாவீது ராஜா பரம்பரையில் பிறந்தவர் எனவும் பவுல் கூறி உள்ளார்.   

ரோமர் 1:4 ஏசு ஒரு மனிதனாக தாவீதின்(Spherma- விந்தணுவில்) குடும்பத்தில் பிறந்தார். 

பவுல் இந்தக் நம்பிக்கையின் அடிப்படை என்பது எபிரேயப் புராணக் கதை வழியாக இஸ்ரேல் ஆட்சியின் அரச உரிமை

தாவீதிடம் கர்த்தர் கூறியதாக 
2 சாமுவேல் 7:16 என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்
ஏசு யூதராகவே வாழ்ந்து இறந்தார்  
மாற்கு 14: 12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள், 16  .. சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.  17 மாலையில் 12 சீஷர்களோடு இயேசு பஸ்கா. 18. உணவு உண்டார். 

சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார்,  பொஆ.70 வாக்கில் முதலில் வரைந்த மாற்கு சுவி கதையின்படி- கலிலேயாவைச் சேர்ந்த ஏசு  90மைல் நடந்து யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார். யோவான் கைதாகிவிட கலிலேயா திரும்பி வந்து அங்கு சீடர்களை சேர்த்துக் கொண்டு இயங்கினார். அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்கு ஒரு யூதனாக(எபிரேய பைபிள் புராணக் கதையில் எகிப்தில் முதல் குழந்தைகளைக் கொன்றதற்கு நன்றி கூற) ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் தெய்வமான யாவே-கர்த்தர் இருக்கும் ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி தர வந்த போது கைது செய்யப்பட்டார்.

யூதர்களின் மேசியா - கிறிஸ்து என்றால் என்ன  

யூதர்களில் முக்கிய பதவி ஏற்பு போது வாசனை எண்ணெய் தடவுவது பதவி ஏற்பு நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நிகழ்வு. அது பதவி ஏற்கும் அந்த மனிதன் அப்பத்விக்கு தேர்வு ஆகிவிட்டவன் என்பதை உறுதி செய்யும். இந்த எண்ணெய் தடவுதல் யூதர் ராஜா, யூத ஆலயப் பாதிரி மற்றும் படைத் தலைவன் எனப் பல பதவி ஏற்பிலும் நடைபெறுவது என உள்ளது.  

 தாவீதிடம் கர்த்தர் கூறியதாக 
1சாமுவேல்10:1சாமுவேல் எண்ணெய் தைலக் குப்பியை எடுத்து, சவுல் தலை மீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் அரசவனாக இருக்கும்படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார்".  
  1 சாமுவேல் 16: 3 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து தாவீது மேல் அவன் சகோதரர் முன்னிலையில்  ஊற்றினார்.

 யூத மத தெய்வம் யாவே ஆலயப் பாதிரி பணிக்கும்

யாத்திராகமம் 29:41 உன் சகோதரன் ஆரோனையும் அவன் ன்களையும் ஏபோத்து துணி உடுத்துவாய். அவர்கள் மீது விசேஷ எண்ணெயை ஊற்றி தூய்மைப் படுத்து.   அவர்கள் எனக்கு சேவை செய்யும் பாதிரிகளாக இருப்பார்கள்.  

 இஸ்ரேல் ராஜா மட்டும் இல்லை சிரியா ராஜாவிற்கும் மற்றும் தீர்க்கர் எல்லா பதவிக்கும் எண்ணெய் தலையில் ஊற்றுவர்

1 ராஜாக்கள் 19:15 எலியாவிடம் - கர்த்தர், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் போ, அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக தலை மேல் எண்ணெய் ஊற்று16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூ தலை மேல் எண்ணெய் ஊற்று. பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக  ஆக்க தலை மேல் எண்ணெய் ஊற்று.

இஸ்ரேலை அடிமைப் படுத்திய பாரசீக அரசன் கோரேசும் எண்ணெய் ஊற்றப்பட்டபடி தேர்ந்து எடுக்கப்பட்டவர் தான்

45:1 கர்த்தர் தன்னால் எண்ணெய் ஊற்றப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசு  பற்றி “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக் கொள்வேன்.  அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். 
ASV Isaiah 45:1  Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him

மேலே பார்த்த எல்லாமே மனிதப் பதவிகள் மட்டுமே. யூத எபிரேய புராண நம்பிக்கையில் தெய்வம் மனிதனாக வருவது கிடையாது,  ஸ்ரேலிற்கான தெய்வம் பெயரை வாயால் சொல்லவே கூடாது என்பது பத்து கட்டளைகளில் ஒன்றும் ஆகும். இன்னும் சொல்லப் போனால் தேவ குமாரர்கள் மனிதப் பெண்களை அனுபவித்து ராட்சதர்களை உருவாக்கியதாகக் கதை உள்ளது.

பவுல் தான் தொடங்கிய தெய்வீகக் கிறிஸ்து கற்பனை மதத்தை யூதர் அல்லாத கிரேக்கர்களிடம் கொண்டு சென்று பெரும் பணம் சம்பாதித்தார் என அவர் கடிதங்கள் காட்டுகின்றன, இதை விரிவாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர் ஹயம் மேக்கோபி தெளிவாகக் காட்டி உள்ளார்.

பவுல் தெய்வீகப் புனையல் கிறிஸ்து நம்பிக்கையின் வேர்

பவுல் இந்த கர்த்தரின் நாளில் எப்படி என்ன நடக்கும் என்றது 

1கொரிந்தியர்15:51 ..நாம் யாவரும் பூமியில்  ம்  அடைய மாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்று உரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும் போது  இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்று உரு பெறுவோம்

ஏசுவிடம் பவுல் போதனை பெற்றதாகக் கதை

1 கொரிந்தியர் 7: 29 கர்த்தரின் தீர்ப்பு நாள் மிகவும் அருகில் உள்ளது. எனவே மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப் போல உறவு இல்லாமல் தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும்.   
 
No belief is more characeristic of Paul or more fundamental to every thing he wrote and did than his belief that the World was very soon coming to end. It is the absolute foundation of his thought. A reader who misses this point can understand very little else about Paul. 
Page- 244 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press
It never occured to Paul that Parousia or 2nd coming (the Day of Jesus Christ Phil1:6) might be postponed beyond his own age in the distant hardly imaginable future as the Church eventually had to acknolege. Page- 245 The Bible As Literature: An Introduction  John B. Gabel (Author), Charles B. Wheeler (Author), Anthony D. York Oxford University Press

பவுல் மதமும்- ஜெருசலேமில் வாழ்ந்த ஏசு சீடர்கள் மதமும் 

 ஜெருசலேமில் யாக்கோபு, பேதுருவைச் சந்தித்து செல்லும் போது 

அப்போஸ்தலர் 16:3 பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.

 யாக்கோபு & மூப்பர்கள் பவுலிற்கு கொடுத்த கட்டளை  (ஏசு மரணத்திற்கு 30 வருடம் பின்பு)

பவுல் யாக்கோபைச் சந்தித்தல் 
அப்போஸ்தலர் 21: 18  பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான்.
23. யாக்கோபு & மூப்பர்கள் பவுலிடம் எனவே நீங்கள் செய்ய வேண்டியதை கூறுகிறோம்-  எங்களுடன் உள்ள நான்கு பேர் தேவனுக்கு ஒரு பொருத்தனை நேர்த்தி செய்கின்றனர்.  24இவர்களைக் கூட்டிக் கொண்டு போய், இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும். அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும். 

 All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from  Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view....  Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving  a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.  page 144-45.  Christian Beginnings Part- 2  by Morton Scott Enslin

"The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occassion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the sabbath with the, pla that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission."  C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81


yuu%2B%25281%2529.jpg

மத்தேயுசுவிசேஷக் கதையில் 

yu%2B%25281%2529.jpg

மாற்கு எழுதிய சுவிசேஷக் கதையத் தழுவியே மத்தேயுவும், லூக்காவும் தங்கள் சுவிசேஷத்தை வரைந்துள்ளமையால் இவை ஒத்த கதையமைப்பு (Synoptic Gospels) சுவிசேஷம் எனப்படும்.ஆனால் லூக்கா சுவிசேஷக் கதாசிரியர் இந்தக் கதை எழுதவே இல்லை – ஏன் என ஒரு பைபிளியல் அறிஞர் நூல் அழகாய் விளக்குகிறது

yus%2B%25281%2529.jpg

ஏசு எல்லா யூதர்களையும் சமமாக பார்த்தாரா – அதையும் பார்ப்போம், யோவான் சுவியில் உள்ள கதையில் -சமாரியர் எனப் படுபவரும் யூதர்களே, பழைய ஏற்பாடு கதைகளில் உள்ள மானசே & எபிராயிம் கோத்திரத்தினர், ஆனால் பொமு.110ல் நடந்த போரின் பின்பே அரசியல் பிரிவால் பிரிந்தவர்கள், சமாரியர் யாவே கர்த்தர் கோவில் கெர்சிம் மலையில் உள்ளதே யூதர்களின் தொன்மையான ஆலயமும் ஆகும், இந்த பொமு.110  போருக்கு பின் தான் எபிரேய நியாப் பிரமாணங்களில் ஜெருசலேம் ஆலயம் மட்டுமே எனும்படி மாற்றப்பட்டது என்பதை சாக்கடல் சுருள்கள் உறுதி செய்துள்ளன

yusi%2B%25281%2529.jpg

ஏசுவின் போதனைகளை நாம் பார்த்தால் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு யூதர் அல்லாத கிரேக்க பெண்ணிடம் மட்டுமின்றி தன் யூத சகோதர்களையே இழிவாய் அருவருப்பாய் பேசுவதை காண்கிறோம். 

நாம் இவற்றை சுட்டிக் காட்டினால் உடனே லூக்கா கதையில் உள்ள நல்ல சமாரியன் கதை காட்டுவர் மழுப்பலாளர், இதைப் பற்றி பைபிளியலாளர் நூலில் கூறுவது

yusid%2B%25281%2529.jpg

பழைய ஏற்பாடு மோசே சட்டங்கள்படி யூதர்களின் 12 ஜாதிகளும் அவரவர் ஜாதிக்கு உள்ளே மட்டுமே பெண் கொடுத்து திருமணம் எனவும் சட்டம் உள்ளது. லேவி 19:18  எடுத்து ஏசு சொன்னதாக உள்ள மூல ஹீப்ரு வசனத்தின் மொழிபெயர்ப்பு

http://www.zenzoneforum.com/threads/23705-Love-Your-(Jewish)-Neighbour 

 "Love your neighbor as yourself. — Jesus 22:36-40

As it turns out, this extremely famous quote is not at all what it seems. The word “neighbor” is an incorrect translation of the original word — reyacha. Rather than mean “a fellow human”, which is how most Christians are taught to accept the word “neighbor”, reyacha actually means “fellow Jew“.இஸ்ரேலிற்கு உரிய தேவன் மட்டுமே, என்பதும், அந்த எல்லைக்கு உரிய சிறு தெய்வம் இஸ்ரேலிற்கான அருவருப்பானவர் யாவே கர்த்தர்- என்பதும் உன் பக்கத்து யூதரை மட்டுமே என்றார் 

மாற்கு 12:31 ஏசு - நீ உன் மீது அன்பு கொள்வது போல் உன் அருகில் உள்ள மற்ற 11 ஜாதி யூதர்கள் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை(லேவி 19:18) 

அதற்குமுன் நாம் ஏசு காலத்திற்கு முன்பிருந்து ன்று வரை யூதர்கள் தினசரி கூறும் ஜெபம்- ஏசுவும் சொல்லியிருக்க வேண்டியது.

Sedur (Jewish prayer book).This prayer is said every morning by millions of Jews around the world. The exact prayer is this:-

"Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile." "Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave."       Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.   "யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே என்னை ஒரு புறஜாதியாக்காததற்காக நீர் பாக்கியவான்"

"யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே -என்னை அடிமை ஆக்காததற்காக நீர் பாக்கியவான்." 

"யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே -என்னை பெண்ணாக     படைக்கததால் நீர் பாக்கியவான்                                                                       (புறஜாதியாக-உலகைப் படைத்த கடவுளை நம்பும் இறைவனின் புதல்வர்கள்)

யூதர் அல்லாதவர் நட்பு எனும் எந்த ஒரு சம்பவமும் மாற்கு சுவிசேஷக் கதையில் இல்லை; இது மட்டும் இல்லாமல் மாற்கு & மத்தேயுவில் உள்ள யூதர் மட்டுமே என்பவற்றை நீக்கி; லூக்கா தானாக புற இன நட்பு கதைகளை சொருகி உள்ளார்.

பவுல் என்பவர் ஏசு சீடர்களை துன்புறுத்தியவர் எனவும் ஸ்டீபன் கொலைக்கு காராண்மானவர் என்பவர்- பின் ஏசுவைத் தெய்வீகர் எனப் பரப்பி தனக்கு பண வசூல் செய்ததை கடிதங்கள் கூறுகின்றனபவுல் மரண தண்டனையில் இறந்த ஏசுவை யூதக் கிறிஸ்து என்ற போதே தாவீது பரம்பரையின் விந்தணுவில் பிறந்தவர் என்றார். இது உபாகம வசனம் 17:14- 15 மற்றும் அது பிற்காலத்தில் யூதா ஜாதியின் தாவீது பரம்பரை எனச் 2 சாமுவேல் 7: 16  சுருங்கியதையையும் ஏற்றதே. சுவிசேஷக் கதை முழுவதையும் ஆராய்ந்த ஏசு – கதை முழுவதும் யூதர்கள் உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இயங்கினார் என மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல் நூலில் காட்டுகிறார் 

yusidd%2B%25281%2529.jpg

மத்தேயு 5:19 ,“ஒருவன் மோசேயின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

 மத்தேயு 23:2 2 ,“பைபிளிய யூதப் பாதிரியும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.

 

ஏசு சுவிசேஷக் கதைகளின்படியே தான் அமைக்கும் பரலோகம் என்பது யூதர்களுக்கு மட்டுமே எனவும், 12 அப்போஸ்தலர் யூத 12 ஜாதிகளை மேய்ப்பர் என்றார்.

மத்தேயு 19:28 சு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனித குமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள்.  நீங்கள்      12 அரியணைகளில்  அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்.

இது நல்ல சமாரியன் கதை இடைச்செருகல் செய்த லூக்காவிலும் உள்ளது

லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள்.

ஏசுவின் பரலோக ராஜ்ஜியம் யூதர்களுக்கு மட்டுமே 

பவுல் முதலில் யூதர்களை நோக்கியும், பிறகு கிரேக்கர் யூதர் அல்லாதவர் இடையேயும் மத வியாபாரம் செய்து காசு பண்ணிடவும், உலகம் தன் வாழ்நாளில் அழியும் என்ற போதனையுமே செய்தார். ஆனால் பவுல் கடிதங்களுக்கு பின்பான வெளிப்படுத்தின விசேஷங்கள் கதையில் 


வெளி 7:4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பன்னிரண்டு  குடும்பக் ஜாதிகளிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள். 
வெளி14:1 சீயோன் மலைமீது நின்று கொண்டிருந்த  ஆட்டுக்குட்டி னவர் முன்பாக ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள்(ஒவ்வொரு  யூத ஜாதி 12ல்  லிருந்து 12000) பெண்களோடு உடலுறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக் கொள்ளாதவர்கள்.
வெளி 21: 12 ஏசுவின் புதிய ஜெருசலேம் தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு ஜாதிகளின் ஒரு ஜாதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஏசுவின் பரலோகத்தில் யூத ஜாதி 12ல் இருந்து பெண்ணை தொடாத 1,44,000 ஆண்களுக்கு மட்டுமே


No comments:

Post a Comment