Saturday, July 1, 2023

கிறிஸ்துவ மழுப்பல் நண்பர் Tamchris யூதாஸ் மரணம் கட்டுரைக்கு பதில் தராமல் ஓடி பதுங்கல்

ஏசு யூதர்களின் 12 ஜாதி மக்களை தன் பரலோகத்தில் நீதி முறை செய்ய எனத் தேர்ந்தெடுத்த சீடர்களில் ஒருவரான யூதாஸ் மரணம் பற்றிய சுவிசேஷப் பைத்தியக்காரக் கதை பற்றிய நம் வலைப் பதிவு

யூதாசு மரணம் எவ்வாறு? சுவிசேஷங்கள் கட்டுக் கதைகள் என நிருபிக்கின்றதே! 

நமது கிறிஸ்துவ மதவெறி மழுப்பலாளர் TAMCHRIS நண்பர் யூதாஸ் மரணம் பற்றி ஒரு மலிவான கிறிஸ்துவ மழுப்பல் வலைதளத்தை பின்பற்றி வலை கட்டுரை இணைப்பைப் பதித்து இருந்தார். 

நாம் அதில் உள்ள பொய்களை FBல்  சுட்டிக் காட்டி நம் வலையைத் திருத்திட, அவரும் தான் பின்பற்றிய அந்த மலிவான மழுப்பல் தளம் கூறியவற்றை மேலும் நீட்டி பல பொய்கள் - அதற்கு ஆதாரமாய் ஒரு மலிவான மழுப்பல் கிரேக்க அகராதி எனச் சேர்த்தார்  - இவை எல்லாமே தன் கையில் உள்ள செருப்பிற்கு ஏற்ப காலை வெட்டிப் பொருத்தும் வகை மூடத்தனம் எனப் பன்னாட்டு பல்கலைக் கழக அறிஞர் நூல் ஆதாரமோடு திருத்தி தந்தோம்

அதில் முழுவதும் பொய்; மேலும் அறிவியலை வேறு துணைக்கு இழுத்தல் - அவற்றை எல்லாவற்றையும் சரி பார்த்து பதில் கொடுத்து இணைப்பு தந்த உடன், எனக்கு நேரம் இல்லை என அப்பதிவில் பதில் போட்டார்.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவத் தம்பதி இந்தியக் குழுந்தையைத் தத்து எடுத்துக் கொன்றதற்கு மூன்று நாளில் பைபிள் கதை ஏசு போல 3ம் நாள் உயிர்த்து வரும் எனக் கொலை செய்தேன் என்ற ஆதாரத்தோடான பதிவில் வந்து பல பதில் போட்டார்.

தன் மூடப் பொய்கள் - வெளியான உடன் இப்போது தன்னை பதிவோடு கொடுத்த எடுத்தும் விட்டார். இது தான் கிறிஸ்துவர்கள் தன்மை. உண்மை, வரலாற்று ஆய்வு என வந்தால் ஓடி ஒளிந்து தனி நபர் தாக்குதல், அல்லது தமிழர் மத நம்பிக்கை இழிவு செய்தல் எனக் கீழ்த்தரமாக செயல் செய்வர். 

நான் இவற்றைத் தவிர்க்கவே - இனி இந்தியாவில் வெளியாகும் அனைத்து பைபிள் எல்லா மொழி பதிப்புகளிலும்- இஸ்ரேல் தொல்லியல்படி- பைபிள் கதைகள் ஆதாரமற்ற மனிதக் கற்பனை என நிரூபித்துவிட்டது என்பவதை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்

No comments:

Post a Comment