திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ஆன விளாத்திகுளம் மாணவி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 495/500 எடுத்தவராம்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தண்டனை குற்றவாளி. மேலும் மூதாட்டியை கொலை செய்து விட்டு அந்த கொலையில் இருந்து தப்பிப்பதற்காக, சாலையில் நின்று கொண்டிருந்த காவலர் ஒருவரை வேண்டுமென்றே தாக்கி, சிறை சென்றிருக்கிறான். ஆனாலும் காவல்துறை அவனை கொலை வழக்கில் கைது செய்து தண்டனையும் பெற்று கொடுத்திருக்கிறது.
ஆனால் உச்சநீதிமன்றம் சென்று தண்டனைக்கு தடை வாங்கியவன் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறான். எட்டயபுரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்தவன் கண்ணில் தான் விளாத்திகுளம் மாணவி சிக்கியிருக்கிறார்.
ஒரு கேடு கேட்ட குற்றவாளியை ஜாமீனில் விட்டவர்களை யார் கேள்வி கேட்பது. மேலும் உச்சநீதிமன்றம் வரை செல்லும் அளவுக்கு இவனுக்கு ஏது வசதி.
தமிழர் இறைவன் கோவில் வழக்கில் - தமிழர் கார்த்திகை தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்து பல கோடி செலவு செய்யும் திமுக கொலை/பாலியல் குற்றவாளியை அடைக்காது விடுத்துள்ளனர்


No comments:
Post a Comment