Saturday, March 28, 2026

மனோ தங்கராஜ் தேர்தல் களம் காணாமல் வீழ்த்தபட்டு விட்டார்

 https://www.facebook.com/photo/?fbid=1830687764553698&set=a.115606862728472


மனோவின் வெற்றி வாய்ப்புகளை அவரின் சங்கி தொடர்புகளை குறித்து ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஜனவரி மாதம் அவரது கட்சி தலைமை ஒரு விசாரணை செய்தது அந்த குழுவில் வேலை செய்யும் ஒருவர் என்னிடமும் பலமுறை பேசினார். அவருக்கு குமரி மாவட்டத்தில் கழகம் சார்ந்த கழகம் சாராத என பலரின் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தேன்......
என்னிடம் ஏன் பேசினார் என்பதை என் முகநூல் பதிவுகளை தொடரந்து பின் தொடர்பவர்களுக்கு தெரியும். இன்றல்ல கடந்த தேர்தல் முதலே மனோவின் தகிடுதித்தங்களை அவரது பொய்களை ஆதாரங்களுடன் பேசி வருபவன் நான். முகநூலில் யுட்யுப் கானொளிகளில் மலை வளம் சார்ந்து வரும் பல பதிவுகளில் நான் கொடுக்கும் தகவல்கள் இருக்கும்...........
நான் அவரிடம் அவரின் சங்கி தொடர்புகள் ஒரு கத்தோலிக்க கோவில் விசயத்தில் அவரின் ஆதரவாளர்கள் செய்த வேலைகள் பத்மநாபுரம் தொகுதியில் கட்டப்படும் ஒரு கோவில் குறித்தான மனோவின் ஆதரவு நிலை என பலவற்றை குறிப்பிட்டிருந்தேன்.......
குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு மனோவுக்கு எதிராக ஒரு குழு மூன்று நாள் சென்னையில் தங்கியிருந்து தலைமைகளை சந்தித்து பிராதும் கொடுத்திருந்தது....
எங்களுக்கு மனோவுக்கு எதிராகத்தான் நிறைய கருத்துகள் வருகிறது அதைத்தான் நாங்கள் ரிப்போட் கொடுக்கிறோம் ஆனாலும் கனிமொழி காப்பாற்றிவிடுவார் என்று என்னிடம் பேசியவர் குறிப்பிட்டிருந்தார்......
அப்படி ஒருவேளை அழுத்தம் ஏற்பட்டால் கன்னியாகுமரி தொகுதியில் அவரை ஒரு வேளை நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்....
நான் அதை பெரிதாக நம்பவில்லை மனோவுக்கு எதிரான பிராதுகளோ அறிக்கைகளோ எதுவாக இருந்தாலும் அவரது கரன்சி நோட்டிற்கு முன்பு நிற்காது என நம்பிக்கை இருந்தது. ஆனால் நல்லதே நடந்திருக்கிறது...
தம்பி இம்லர் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு மனோதான் தம்பியோடு உரையாட போகிறார் என்றவுடன் என்னிடம் தெடர்நது பேசிக்கொண்டேயிருந்தான். நான் அவனிடம் அவருக்கு எதிராக பேசவேண்டிய சில முக்கிய பாய்ண்ட்டுகளை குறிப்பிட்டுவிட்டு ஒரு விசயம் சொன்னேன். தம்பி மனோ பொதுவிவாதத்தில் பொறுமை இழக்கும் நபர் அவரது பொறுமையை மட்டும் சீண்டிவட்டால் போதும் அவர் அம்பலபட்டுவிடுவார் உனக்கு கிடைத்திருக்கும் கோல்ட்ன் வாய்ப்பு தவறவிட்டுவிடாதே என்றிருந்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுதான் தம்பி மேடையேறினான்........
மனோவுக்கு எதிராக கடந்து ஐந்து வருடங்களாக களமாடியதில் சீலன் மற்றும் ஹிம்லருக்கு பெரும்பங்கு உண்டு. வழக்கறிஞர் தம்பி ஆல்டன் மற்றும் கழத்தினுள் கழகத்தின் வெளியே என்று தீவிரமான மனோ எதிர்பாளர்கள் குமரிமாவட்ட நலம் விரும்பிகள் பலரின் குரல் வென்றிருக்கிறது......
ஜெயன் தங்கராஜ் வீடியோவே கழக ஆதரவோடு வெளி வந்த வீடியோ என்பதை நான் உறுதியாக நம்பியிருந்தேன் அதனால் தான் ஜெயனின் வீடியோக்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் பயர் விடவில்லை. மனோ வீழ்த்தபடாவிட்டால் அவருக்கு எதிரான வியுகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டமிடுதலும் எங்களிடம் இருந்தது. அதனால் தான் கடந்த ஒரு வாரமாக மனோவின் அடிப்பொடிகள் கதறிய வீடியோக்களை சலனமில்லாமல் கவனித்து சேகரித்துக் கொண்டிருந்தேன்..........
எது எப்படியோ மனோ தேர்தல் களம் காணாமல் வீழ்த்தபட்டுவிட்டார். தற்காலிக வெற்றிதான் என்றாலும் ஊரில் இருந்தால் நிச்சயமாக பட்டாசு வெடித்திருப்பேன்........
இது வெற்றிதான் இந்த வெற்றியை குமரி மாவட்டத்தில் கனிமவள லாறிகளால் உயிரிழந்து உடல் உறுப்பு இழந்து தாய் தகப்பன்களை இழந்து தவிக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட குமரியான்களுக்கு சமர்ப்பிக்கிறேன்........

No comments:

Post a Comment

மனோ தங்கராஜ் தேர்தல் களம் காணாமல் வீழ்த்தபட்டு விட்டார்

  https://www.facebook.com/photo/?fbid=1830687764553698&set=a.115606862728472 மனோவின் வெற்றி வாய்ப்புகளை அவரின் சங்கி தொடர்புகளை குறித்த...