Saturday, May 23, 2026

கேரளாவுக்கு கனிம வளம் சென்றால் என்ன தவறு.? - திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணன்

 கேரளாவுக்கு கனிம வளம் சென்றால் என்ன தவறு.? -அனிதா ராதாகிருஷ்ணன்


♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு..? - முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்எல்ஏ உடன் இணைந்து பேட்டி..!

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியரை நேரில் சந்தித்த நிலையில் "கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வளம் கொண்டு வர முடியாதே" என்ற கேள்விக்கு "அது அவர்கள் தவறு" "அந்த தவறை நாம் செய்யக்கூடாது" கனிமவளம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற நிலையில் பதில் அளித்ததால் அதிர்ச்சி..!!

♦️கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிமவளம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அதிக அளவு விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள், உடல் உறுப்புகள், உடைமை இழப்பு என பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வந்தனர். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் தீவிர முயற்சியால் கனிமவள வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு குமரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக இருந்து வருகிறது. கனிமவள வாகன விபத்தால் ஏற்படும் உயிர் பலிகளும் பூஜ்ஜியமானது.

♦️ஆனால் கடந்த 5 வருடங்களாக மிகப்பெரிய அளவில் கனிம வளம் கேரளாவுக்கு சென்றதும் அதற்கு கடந்த கால அரசு தான் முக்கிய காரணம் என்பதும் குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேட்டியால் வெளிவந்து உள்ளது.

♦️நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டினுடன் இணைந்து ஆட்சியர் அழகு மீனாவை சந்தித்த பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர் ஒருவர் ...தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆட்சி காலத்தில் அதிக அளவில் கனிமவளம் கொண்டு செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே, இதை தடுக்கத்தான் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

♦️கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு..? கேரளா இந்தியாவில் தானே இருக்கிறது..? வெளிநாட்டிலா இருக்கிறது...? அல்லது துபாய்லா இருக்கு..! எல்லா பொருளும் அங்கேயும் போகும். இங்கேயும் வரும். என்று பேசினர். உடனே செய்தியாளர் மீண்டும்... கேரளாவில் இருந்து கனிம வளம் தமிழகத்திற்கு கொண்டுவர இயலாதே என்று கேட்டபோது "அது அவர்கள் தவறு" "அந்த தவறை நாம் செய்யக்கூடாது" என்று கனிமவளம் கொண்டு செல்ல உடந்தையாக பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

♦️ஏற்கனவே கடந்த ஆட்சி காலத்தில் கனிம வளம் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் போராடிய நிலையிலும் கேரளாவுக்கு அதிக அளவு கனிம வளம் கொண்டு செல்லப்படுவது நடந்து வந்தது. அதன் பின்னர் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவு விபத்துக்களை ஏற்படுத்திய கனிமவள டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலையான 4 வழி சாலை பணிகள் முடியும் வரை கனிம வள வாகனங்கள் கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை வழியே செல்வதை அனுமதிக்க முடியாது என்று மாவட்ட ஆட்சியர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

♦️ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவரே தற்போதைய நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் உடன் இணைந்து குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேரளாவுக்கு கனிமவளம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மட்டுமின்றி, குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு...? என்று பேட்டி அளித்து இருப்பது, குமரி மாவட்ட மக்கள் மத்தியில் கனிம வளம் கேரளா செல்ல யார் காரணம் என்பதை அடையாளம் காட்டியுள்ளது என்கின்றனர் வேதனையுடன்..!!!😥

படம்: கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்எல்ஏ உள்ளிட்டோர்.

No comments:

Post a Comment

Church scams - form Christian Endowment board - Madras High Court

 I found several related orders/observations from the Madras High Court pushing for a statutory board to regulate church/Christian instituti...