Wednesday, June 17, 2026

தங்கம் தென்னரசு - திமுக காட்டு ஆட்சி கொள்ளை பின்னர் தவெக என்ன செய்ய முடியும் சவால்

PTR பழனிவேல் தியாகராஜன் எக்ஸ்பிரஸ் 2022 பேட்டி -தமிழ்நாடு பட்ஜெட்டில் வருவாய் அதிகரிக்கும் சீர்திருத்தங்கள் வரும்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான இரண்டு மணி நேர பிரத்யேக உரையாடலின் சுருக்கம் இங்கே.

தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை கவலைக்குரியது. இதை எப்படி சரிசெய்கிறீர்கள்? மாநில வரிகளில் கடுமையான உயர்வுகளை எதிர்பார்க்கலாமா?

நமது முதன்மை சிக்கல், பொருளாதாரத்தின் (GSDP) சதவீத அளவில் போதுமான வருவாய் கிடைக்காதது. வணிக வரி, சுரங்கம், மதுபானம்/எக்சைஸ் போன்றவற்றிலிருந்து நாம் பெற வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய்களை இழக்கிறோம், இது நமது GSDPயின் 2-3% வரை. TASMAC அமைப்பில் கசிவு 50% வரை உள்ளது. வணிக வரியில் 40-50% வரை. ஒவ்வொரு ஆண்டும் சுரங்க அமைச்சகத்தின் கொள்கை அறிக்கையில், டிஎன் மேக்னெசைட், கிரானைட், பாக்சைட், சுண்ணாம்பு மற்றும் கார்னெட் போன்றவற்றால் ஏராளமாக வளம் கொண்ட சில மாநிலங்களில் ஒன்று என்று கூறுகிறது. அது உண்மைதான். ஆனால் அரசு ஆண்டுக்கு சில நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் வருவாய் ஈட்டுவதில்லை.

இவை அனைத்தும் கட்டமைப்பு சிக்கல்கள். நிலைமையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சிலவற்றை ஏற்கனவே அறிவித்துள்ளோம், இன்னும் சில பட்ஜெட்டில் வரும்.

கசிவுகளை எப்படி சரிசெய்வீர்கள்?

எக்சைஸ் வலையைத் தாண்டி மதுபான இயக்கம் மிகப்பெரியது என்று நினைக்கிறோம். 50% வரை உயர்வு. சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பைப் பயன்படுத்தி இதைத் தடுக்க வழி காண வேண்டும். தற்போதைய ஹாலோகிராம் அமைப்பு பயனற்றது. TASMAC கடைகளில் இன்னும் போயிண்ட் ஆஃப் சேல் (PoS) டெர்மினல்கள் இல்லை. அமைப்பை அடிப்படையில் மேம்படுத்த வேண்டும்.

நாங்கள் தொடக்கம் செய்துள்ளோம். நிதித் துறையின் நிர்வாக மாதிரியை மாற்றியுள்ளோம், மாநில செயல்முறைகளை நிர்வகிப்பதை மாற்றியுள்ளோம். பணத்தை ஒதுக்கத் தொடங்கியுள்ளோம். ஆனால் அவை இரவில் மாறாது.


மனநிலை குன்றிய திமுகவினர் (ஒன்றிய என மத்திய அரசை அழைப்பவர்கள்) நிதி பங்கீடு பற்றி மன்மோகன் சிங் ஆட்சியின் நிதி ஆலோசகர் கட்டுரை
https://www.youtube.com/watch?v=myOmBYofjKs







வெள்ளை அறிக்கையும்... முத்தையா செட்டியாரின் கேள்வியும்?
காரைக்குடி அருகே ஒரு பெரிய நாட்டுக்கோட்டை செட்டியார் வீடு இருந்ததுங்க. அந்த வீட்டின் தலைவர் பேரு முத்தையா செட்டியார்.
வயது எண்பதைக் கடந்துவிட்டது. வீட்டு நிர்வாகத்தை மகன் சிதம்பரம் செட்டியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
பொறுப்பேற்கும் முன் சிதம்பரம் செட்டியார் குடும்பத்தினரிடம் பெரிய பெரிய வாக்குறுதிகளை வழங்கினார்.
"பழைய வீட்டை புதுப்பிப்பேன்."
"புதிய வியாபாரங்களை தொடங்குவேன்."
"குடும்ப வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்."
"எல்லோருக்கும் நல்ல காலம் வரும்."
என்றெல்லாம் பேசினார்.குடும்பமும் நம்பியது.
பொறுப்பும் கொடுத்தது.
ஒரு மாதம் கழித்து குடும்பக் கூட்டம் நடந்தது.
கையில் லெட்ஜர்...
முகத்தில் கவலை.
சிதம்பரம் செட்டியார் எழுந்து பேச ஆரம்பித்தார்.
"அப்பச்சி... நம்ம வீட்டுக் கணக்கு ரெம்ப மோசமாக இருக்கு."
"மொத்த கடன் ₹13.18 கோடி."
"ஒவ்வொருத்தர் தலையிலும் ₹13.18 லட்சம் கடன்."
"வருமானத்தை விட செலவு அதிகம்."
"வட்டி சுமை அதிகம்."
முற்றத்தில் அமைதி.
சிறிது நேரம் யோசித்த முத்தையா செட்டியார் ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.
"தம்பி..."
"இந்த லெட்ஜர் உனக்கு இன்று தான் கிடைத்ததா?"
சிதம்பரம் செட்டியார் அமைதியாக இருந்தார்.
முத்தையா செட்டியார் தொடர்ந்தார்.
"நீ சொல்வது தவறு இல்லை."
"கடன் இருக்கிறது."
"செலவு அதிகம்."
"வட்டி சுமை கூடிவிட்டது."
"ஆனா..."
"இந்தக் கணக்கு உனக்கு பொறுப்பேற்பதுக்கு முன்னாடி தெரியாதா?"
அங்கே இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஏனெனில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவது எளிதல்ல.
இன்று தமிழ்நாட்டிலும் அதே கேள்விதான் எழுகிறது.
வெள்ளை அறிக்கை சொல்கிறது:
தமிழகத்தின் மொத்த நிதிப் பொறுப்பு ₹13.18 லட்சம் கோடி.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ₹5 லட்சம் கோடி புதிய கடன்.
ஒவ்வொரு தமிழனின் தலையிலும் ₹1.29 லட்சம் கடன்.
வருவாய் பற்றாக்குறை ₹78,324 கோடி.
வட்டி மட்டும் ஆண்டுக்கு ₹67,000 கோடி.
இவை எல்லாம் கவலைப்பட வேண்டிய எண்கள்தான்.
யாரும் மறுக்க முடியாது.
ஆனால் சாதாரண மக்கள் ஒரு கேள்வி கேட்கிறார்கள்.
"இந்த எண்கள் தேர்தலுக்கு முன்னாடி தெரியாதா?"
தெரியாமல் இருந்தால் அது அரசியல் அறியாமை பற்றிய கேள்வி.
தெரிந்திருந்தும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தால் அது அரசியல் நேர்மை பற்றிய கேள்வி. வெள்ளை அறிக்கையின் மிகப்பெரிய பலவீனம் என்ன தெரியுமா? அது பிரச்சனையை விளக்குகிறது.
ஆனால் தீர்வை விளக்கவில்லை. ஒரு விவசாயி தன் வயலில் நின்று: "தண்ணீர் இல்லை."
"உரம் இல்லை." "செலவு அதிகம்." என்று சொல்வது சரி.
ஆனால் அடுத்த கேள்வி: "சரி... இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்பதுதான். தமிழக மக்களும் அதைத்தான் கேட்கிறார்கள்.
மின்வாரியத்தின் கடனை எப்படி குறைக்கப் போகிறீர்கள்? போக்குவரத்து கழகங்களை எப்படி மீட்கப் போகிறீர்கள்? வருவாயை எப்படி உயர்த்தப் போகிறீர்கள்?
புதிய தொழில்களை எப்படி கொண்டு வரப் போகிறீர்கள்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்?
வெள்ளை அறிக்கை ஒரு கண்ணாடி. அது முகத்தை காட்டும். ஆனால் முகத்தை அழகாக்காது. அதற்கு செயல் வேண்டும். திட்டம் வேண்டும். நிர்வாகம் வேண்டும்.
முத்தையா செட்டியார் அந்தக் கூட்டத்தின் முடிவில் சொன்ன ஒரு வார்த்தைதான் இன்று தமிழ்நாட்டுக்கும் பொருந்துகிறது.
கடன் இருப்பதைச் சொல்வது கணக்கு. கடனை குறைக்கும் வழியைச் சொல்வதுதான் நிர்வாகம்.
தமிழக மக்கள் இப்போது கணக்கைப் பார்த்துவிட்டார்கள். இனி அவர்கள் காத்திருப்பது... காரணங்களை அல்ல. நிர்வாகத்திறனை...தீர்வுக்கான வழியை...

Whats new in the White Paper released by the TN Finance Minister yesterday?
இதுவரை தெரியாத விஷயங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை. எல்லாம் முந்தைய பட்ஜெட்டிலேயே இருந்தவைதான் . அந்த பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் 10 லட்சம் சொச்சம் கோடி என்று சொல்லப்பட்டதை, போக்குவரத்துத்துறை,மற்றும் மின்துறை ஆகியவற்றின் கடன்களுடன் சேர்த்து இவர்கள் 13.18லட்சம் கோடி என்று சொல்கிறார்கள் அவ்வளவே.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை The people are relatively well off, but the govt is Poor என்றுதான் சொல்லவேண்டும்.80களில் இருந்த மூச்சை திணறவைக்கும் வறுமை இன்றில்லை.அதற்கு காரணங்களை அடுக்கினால் பல நூறு பக்கங்கள் போகும்.
சுருக்கமாக இப்படிச் சொல்வோம்,மக்கள் நலத்திட்டங்கள் எனப்படும் பெரும்பாலும் இலவசத் திட்டங்களுக்கு அந்த வறுமையைக் குறைத்ததில் நிச்சயம் பங்குண்டு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக,தேவையேயில்லாத, யாரும் கேட்காத பல அப்பட்டமான வாக்கு வாங்கி அரசியல் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலவசத்திட்டங்கள் அரசின் நிதி நிலையை சீரழித்துவிட்டன.. 2006ல் மு,.க அரசு துவங்கிய இலவச கலர் டிவி யிலிருந்து,ஜெயா அரசின், மிக்சி க்ரைண்டர் மின்விசிறி என்று நிறைய சொல்லலாம்.
அப்புறம் விவசாயிகள் அனைவர்க்கும் இலவச மின்சாரம்,சென்ற ஆட்சியில் அறிமுகமான,அனைத்துப் பெண்களுக்குமான இலவச பஸ் பயணம்,இவையிரண்டும்தான் மின்துறை, போக்குவரத்துத் துறை இரண்டின் முதுகெலும்பையும் முறித்துப்போட்டிருக்கின்றான்.பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்துக்கு முன்பே போக்குவரத்துத் துறை தள்ளாடிக் கொண்டுதான் இருந்தது. இது ஒரு கூடுதல் சுமை.
அப்புறமிந்த 1.31 கோடி மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை (அதற்கு உரிமைத்தொகை என்ற பெயர் வேறு,உரிமை என்றால் எல்லோருக்கும் தானே தரவேண்டும்.இது அப்படியில்லையே)அவ்வப்போது செய்யப்டும் கடன் தள்ளுபடிகள் ,இதெல்லம்சேர்த்துதான் இந்த நிலைக்கு காரணம்.
இதையெல்லாம் அறிந்திருந்துமே சென்ற தேர்தலின் போது தமது தேர்தல் அறிக்கைகளில் திமுக அதிமுக த வெ க ஆகிய 3 கட்சிகளுமே இன்னும் அதிக இலவசங்களை அறிவித்தன.இப்போது எதிர்பாராத விதமாக த வெ க ஆட்சியில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது.
இருக்கும் நிலையை சமாளிக்க வேண்டும். மேலும் இவர்கள் அறிவித்திருக்கும் இலவசத் திட்டங்களையும் ஓரளவுக்காவது அமல் படுத்த வேண்டும்..என்ன செய்யலாம்? வேறு வழியேயில்லை..புதிதாக மேலும் கடன் வாங்கத்தான் வேண்டும்..அதைத்தான் அவர்களும்செய்வார்கள்.
அரசின் வருவாயை பெருக்குவோம், நிதி நிர்வாகத்தை சரி செய்து செலவினங்களை குறைப்போம் என்பதெல்லாம் சொல்வதற்கு எளிதானது.செய்துபார்க்கும்போது தான் அதன் சிரமங்கள் தெரியும் பார்போம் இவர்களின். முதல் பட்ஜெட் எப்படி இருக்கிறதென்று..
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. மக்கள் relatively well off என்றேன் இல்லையா? அதில் கறுப்புப் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. அரசுத் திட்டங்களின் செலவுகளில் செய்யப்படும் ஊழல், பலவேறு இயற்கை வளங்களின் விற்பனை வழியாக அரசின் கஜானாவுக்கு செல்ல வேண்டிய பணத்தை தனியார் கொள்ளையடிப்பது போன்றவைகளினால் உருவாகும் லஞ்ச ஊழல் பணமும் கணிசமான கட்சிக்காரர்களிடம் சென்று சேர்ந்து, சமூகததில் புழங்கிக் கொண்டுதான் இருக்கிறது (அவர்களும் மக்களில் ஒரு பகுதி தானே..வெளிப்படையாக இன்ன தொழில் செய்து சம்பாதிக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கும் பெரும்பணக்காரர்களும் நிறையவே இருக்கிறார்கள்.)அது முக்கியமாக ரியல் எஸ்டேட்,சினிமாத் துறை,தனியார் போக்குவரத்துப்போன்ற துறைகளில் பாய்ந்து கொண்டிருந்தது.
இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதில் இந்த அரசு உண்மையாகவே முனைப்பு காட்டுகிறது இந்த அரசு நிறுத்தினால் அந்தப் பணப்புழக்கமும் பெருமளவு குறையும்.அதுவும் கூட வேலை வாய்ப்புகளை எல்லாம் குறைக்கும். இது ஒரு Catch 22 Situation..இதைத்தவிர்க்க என்ன செய்வது என்றும் யோசிக்க வேண்டும்.இவற்றைத் தடுக்கையில் அரசின் நிதி வருவாய் கூடும்.செலவினங்கள் குறையும்.அரசின் கையில் கூடுதல் நிதி சேரும்.ஆனால் அது நியாயமான வழிகளில் தேவைப்படும் மக்களுக்கு சென்று சேர நல்ல திட்டங்கள் வேண்டும்.அதற்கு அதிக காலமும் பிடிக்கும்.அது வரை மக்களும் எதிர்க்கட்சிகளும் பொறுமை காப்பார்களா?
நான் முன்பே சொன்னது போல விஜய்க்கு இது நிச்சயம் மலர்ப் படுக்கை அல்ல. முள் படுக்கை தான்.இதிலிருந்து மீள வேண்டும் என்றால்,அவர் தைரியமாக பல இலவசங்களை பற்றி Rethink செய்தே ஆக வேண்டும். பாத்திரமறிந்தே பிச்சை இட வேண்டும்.
He should be ready to bite the bullet..Will he?

No comments:

Post a Comment

ED Unearths Massive Evangelical International Debit Card Racket

  https://www.youtube.com/watch?v=8VtEYAOFvpY ED Unearths Massive Evangelical International Debit Card Racket: How a US-Based Group Smuggled...