" கல்வெட்டில் முருகன் " Marirajan Rajan
திருவெண்காடு கல்வெட்டு. மூன்றாம் இராஜராஜசோழனின் மெய்கீர்த்திக் கல்வெட்டு. அரசனின் சிறப்புகளை சொல்லிவரும்போது.
27 வது வரி -
" செருவலியில் முருகனென்றும் "
போர்வெற்றிகளில் முருகனைப் போன்றவன் என்று அரசனின் கீர்த்தியைப் பதிவு செய்கிறது.
==================
கும்பகோணம் - ஆடுதுறை கோவில் கல்வெட்டு.
பராந்தகன் தெரிஞ்ச கைக்கோளார் படையைச் சேர்ந்த அசுவத்தான் என்பர் தானம் கொடுக்கிறார்.
சண்டனவல்லி என்னும் தெய்வத்திற்கும் முருகன் திருவடிக்கும் பத்துமா நிலம் கொடையளிக்கிறார்.
முருகப்பெருமானை நேரடியாகக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.

No comments:
Post a Comment