பிரிகேட் நிறுவனம் ஒரு மாத காலமாக உருட்டிய பொய்கள் அனைத்தும் வீணா போச்சு.
https://www.facebook.com/photo/?fbid=1650384533760640&set=a.445727120893060
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலம் என்று திமுக அரசு அறிவிக்கிறது. அதற்கு சாட்டிலைட் மூலம் எல்லைகளை நிர்ணயித்து அந்த வரைபடத்தை அரசாங்க இணையதளங்களில் வெளியிடுகிறது. அதன் பிறகு அந்த எல்லைகளை களத்தில் சென்று உறுதி செய்து மார்க் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் வழக்கம் போல தூங்கி விடுகிறார்கள். இதனால் ராம்சார் எல்லைக்குள் பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. இதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே அவர்கள் களத்தில் எல்லைகளை மார்க் செய்யும் வரை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ராம்சார் சாட்டலைட் எல்லையில் இருந்து 1 கிமீ தொலைவுக்கு எந்த வித கட்டுமானத்திற்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று உத்தரவு போட்டு விடுகிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் cmdaவும் ராம்சார் எல்லைக்கு வெளியே 1கிமீ சுற்றளவுக்கு கட்டுமான அனுமதி கொடுப்பதை நிறுத்தி வைத்து விடுகிறது. திமுக அரசு எல்லைகளை மார்க் செய்து முடித்திருந்தால் இந்த கட்டுமான தடையே வந்திருக்காது. அவர்கள் ஏன் இதை செய்து முடிக்கவில்லை என்று உங்களுக்கு கேள்வி வரும்.
அதற்கு காரணம் திமுக அரசு ராம்சார் எல்லை என்று வரைபடம் வெளியிட்ட இடத்திக்கு உள்ளேயே 1250 வீடுகளுக்கு கட்டிட அனுமதியை அதே திமுக அரசு கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுபவர்கள் தான் சீர்கேட் நிறுவனம். ராம்சார் எல்லைக்கு உள்ளே இருக்கும் இந்த இடத்தை எல்லையில் இருந்து 1 கிமீ தாண்டி தான் இருக்கிறது என்று பொய் சொல்லி ஏமாற்றி இங்கே கட்டிடம் கட்ட தடை இல்லா சான்றிதழையும் அதே திமுக அரசின் சுற்றுச்சூழல்துறை வழங்குகிறது. அந்த சான்றிதழ் அடிப்படையில் தான் இந்த கட்டிட அனுமதியை சேகர் பாபு தலைமையிலான cmda கொடுக்கிறது. இந்த விஷயத்தை தான் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளியிட்டு புகார் அளித்தது. ஆனால் திமுக ஆட்சி முடியும் வரை இது குறித்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனம் காத்தனர்.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி மீண்டும் வராது என்று உறுதியான பிறகு விஜய் முதல்வராக பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சுற்றுச்சூழல்துறை அவர்கள் கொடுத்த தடை இல்லா சான்றிதழை விலக்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அந்த NOC மூலம் வாங்கப்பட்ட CMDA அனுமதியும் செல்லாமல் ஆகும் நிலை வருகிறது.
உண்மை நிலவரம் இப்படி இருக்க சீர்கேட் நிறுவனம் இதை எல்லாம் மறைத்துவிட்டு NGT தற்காலிக தடை விதித்த 1கிமீ சுற்றளவில் நிலம் வைத்திருப்பவர்களிடையே ஒரு பயத்தை உருவாக்க கடந்த ஒரு மாதமாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. இதன் விளைவாக தான் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு படங்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். சென்னையில் வளர்ச்சிக்கு தடை, வேளச்சேரியில் வீடு வாங்கியவர்களுக்கு பாடை என்ற ரீதியில் பீதியை கிளப்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மை என்னவென்றால் ராம்சார் எல்லைகளை உறுதி செய்து அறிவித்துவிட்டால் இந்த 1 கிமீ தற்காலிக தடையை NGT விலக்கிக் கொள்வார்கள். குறைந்த பட்ச அளவிற்கு எல்லையை பாதுகாக்க 50 மீட்டர் வரை கட்டுமான அனுமதிக்கு தடை விதிக்கலாம்.
சீர்கேட் நிறுவனம் இப்படி பீதியை கிளப்பி என்ஜிடி உத்தரவால் தான் தங்கள் கட்டிடமும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்து அப்படியே உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள். இந்த அனுமதியை நீக்கியதால் எங்களை போலவே பல்வேறு மக்கள் சென்னையில் தங்கள் நில உரிமையை இழக்கிறார்கள் போன்ற கட்டுக்கதைகளை பரப்பி உச்சநீதிமன்றத்தை ஏமாற்றி விடலாம் என்று இந்த வேலையை செய்துள்ளார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இன்று அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து நீங்க NGT அல்லது உயர்நீதிமன்றம் சென்று வழக்கு போடுங்கள் என்று விரட்டி விட்டிருக்கிறது. இதனால் ஒரு மாத காலமாக சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தி இவர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் பயனில்லாமல் போனது.
இந்த சீர்கேட் நிறுவனம் தொடர்ந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை தடுக்க விஜய் அரசு உடனடியாக இவர்களுக்கு கொடுக்கப்பட்ட CMDA அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அடுத்து திமுக அரசு செய்யாமல் விட்டுச்சென்ற ராம்சார் எல்லைகளை களத்தில் உறுதி செய்யும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். அல்லது அதை விரைந்து முடிப்போம் என்று NGTயிடம் முறையிட்டு இந்த 1கிமீ தற்காலிக தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
https://www.facebook.com/photo/?fbid=1650384533760640&set=a.445727120893060

பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலம் என்று திமுக அரசு அறிவிக்கிறது. அதற்கு சாட்டிலைட் மூலம் எல்லைகளை நிர்ணயித்து அந்த வரைபடத்தை அரசாங்க இணையதளங்களில் வெளியிடுகிறது. அதன் பிறகு அந்த எல்லைகளை களத்தில் சென்று உறுதி செய்து மார்க் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் வழக்கம் போல தூங்கி விடுகிறார்கள். இதனால் ராம்சார் எல்லைக்குள் பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. இதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே அவர்கள் களத்தில் எல்லைகளை மார்க் செய்யும் வரை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ராம்சார் சாட்டலைட் எல்லையில் இருந்து 1 கிமீ தொலைவுக்கு எந்த வித கட்டுமானத்திற்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று உத்தரவு போட்டு விடுகிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் cmdaவும் ராம்சார் எல்லைக்கு வெளியே 1கிமீ சுற்றளவுக்கு கட்டுமான அனுமதி கொடுப்பதை நிறுத்தி வைத்து விடுகிறது. திமுக அரசு எல்லைகளை மார்க் செய்து முடித்திருந்தால் இந்த கட்டுமான தடையே வந்திருக்காது. அவர்கள் ஏன் இதை செய்து முடிக்கவில்லை என்று உங்களுக்கு கேள்வி வரும்.
அதற்கு காரணம் திமுக அரசு ராம்சார் எல்லை என்று வரைபடம் வெளியிட்ட இடத்திக்கு உள்ளேயே 1250 வீடுகளுக்கு கட்டிட அனுமதியை அதே திமுக அரசு கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுபவர்கள் தான் சீர்கேட் நிறுவனம். ராம்சார் எல்லைக்கு உள்ளே இருக்கும் இந்த இடத்தை எல்லையில் இருந்து 1 கிமீ தாண்டி தான் இருக்கிறது என்று பொய் சொல்லி ஏமாற்றி இங்கே கட்டிடம் கட்ட தடை இல்லா சான்றிதழையும் அதே திமுக அரசின் சுற்றுச்சூழல்துறை வழங்குகிறது. அந்த சான்றிதழ் அடிப்படையில் தான் இந்த கட்டிட அனுமதியை சேகர் பாபு தலைமையிலான cmda கொடுக்கிறது. இந்த விஷயத்தை தான் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளியிட்டு புகார் அளித்தது. ஆனால் திமுக ஆட்சி முடியும் வரை இது குறித்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனம் காத்தனர்.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி மீண்டும் வராது என்று உறுதியான பிறகு விஜய் முதல்வராக பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சுற்றுச்சூழல்துறை அவர்கள் கொடுத்த தடை இல்லா சான்றிதழை விலக்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அந்த NOC மூலம் வாங்கப்பட்ட CMDA அனுமதியும் செல்லாமல் ஆகும் நிலை வருகிறது.
உண்மை நிலவரம் இப்படி இருக்க சீர்கேட் நிறுவனம் இதை எல்லாம் மறைத்துவிட்டு NGT தற்காலிக தடை விதித்த 1கிமீ சுற்றளவில் நிலம் வைத்திருப்பவர்களிடையே ஒரு பயத்தை உருவாக்க கடந்த ஒரு மாதமாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. இதன் விளைவாக தான் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு படங்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். சென்னையில் வளர்ச்சிக்கு தடை, வேளச்சேரியில் வீடு வாங்கியவர்களுக்கு பாடை என்ற ரீதியில் பீதியை கிளப்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மை என்னவென்றால் ராம்சார் எல்லைகளை உறுதி செய்து அறிவித்துவிட்டால் இந்த 1 கிமீ தற்காலிக தடையை NGT விலக்கிக் கொள்வார்கள். குறைந்த பட்ச அளவிற்கு எல்லையை பாதுகாக்க 50 மீட்டர் வரை கட்டுமான அனுமதிக்கு தடை விதிக்கலாம்.
சீர்கேட் நிறுவனம் இப்படி பீதியை கிளப்பி என்ஜிடி உத்தரவால் தான் தங்கள் கட்டிடமும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்து அப்படியே உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள். இந்த அனுமதியை நீக்கியதால் எங்களை போலவே பல்வேறு மக்கள் சென்னையில் தங்கள் நில உரிமையை இழக்கிறார்கள் போன்ற கட்டுக்கதைகளை பரப்பி உச்சநீதிமன்றத்தை ஏமாற்றி விடலாம் என்று இந்த வேலையை செய்துள்ளார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இன்று அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து நீங்க NGT அல்லது உயர்நீதிமன்றம் சென்று வழக்கு போடுங்கள் என்று விரட்டி விட்டிருக்கிறது. இதனால் ஒரு மாத காலமாக சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தி இவர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் பயனில்லாமல் போனது.
இந்த சீர்கேட் நிறுவனம் தொடர்ந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை தடுக்க விஜய் அரசு உடனடியாக இவர்களுக்கு கொடுக்கப்பட்ட CMDA அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அடுத்து திமுக அரசு செய்யாமல் விட்டுச்சென்ற ராம்சார் எல்லைகளை களத்தில் உறுதி செய்யும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். அல்லது அதை விரைந்து முடிப்போம் என்று NGTயிடம் முறையிட்டு இந்த 1கிமீ தற்காலிக தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment