Saturday, July 18, 2026

வங்கிக் கொள்ளையும் கார்ப்பரேட் கொள்ளை ஊழியர்களும்

 

அமெரிக்காவில் ஒரு வங்கிக் கொள்ளையின் போது, கொள்ளையன் அனைவரையும் நோக்கி:

"யாரும் அசையாதீர்கள். இந்தப் பணம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது!" என்று கத்தினான்.

வங்கியில் இருந்த அனைவரும் அமைதியாக தரையில் படுத்துக் கொண்டனர்.

இதுதான் "மனநிலையை மாற்றும் சிந்தனை" (Mind Changing Concept).ஒரு கருத்தைச் சொல்லும் விதத்தை மாற்றினால், மக்களின் செயல்பாடும் மாறி விடும்.

அப்போது ஒரு பெண் சற்றே ஆபாசமாக மேசையின் மீது படுத்துக் கொண்டார். உடனே கொள்ளையன்,

"நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்! இது கொள்ளை; பாலியல் வன்முறை அல்ல!" என்று கூறினான்.

இது தான் "தொழில்முறை அணுகுமுறை" (Being Professional).எதற்காக வந்தோமோ, அதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

கொள்ளையர்கள் வீட்டிற்குத் திரும்பியதும், எம்.பி.ஏ. படித்த இளைய கொள்ளையன்,

"அண்ணா, எவ்வளவு பணம் கிடைத்தது என்று எண்ணிப் பார்ப்போம்." என்றான்.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மூத்த கொள்ளையன் சிரித்தபடி,

"முட்டாள்தனமாக பேசாதே. இவ்வளவு பணத்தை எண்ண பல மணி நேரம் ஆகும். இன்று இரவு செய்திகளில் எவ்வளவு கொள்ளை போனது என்று சொல்லி விடுவார்கள்!" என்றான்.

இதுதான் "அனுபவம்" (Experience).இன்றைய உலகில், பல நேரங்களில் பட்டப்படிப்பை விட அனுபவமே அதிக மதிப்புடையது.

கொள்ளையர்கள் சென்ற பிறகு, வங்கி மேலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கச் சொன்னார்.

ஆனால் மேற்பார்வையாளர்,

"ஒரு நிமிடம்! நாமே முதலில் 10 மில்லியன் டாலரை எடுத்துக்கொள்வோம். அதோடு, ஏற்கனவே மோசடி செய்து எடுத்திருந்த 70 மில்லியனையும் சேர்த்துவிடலாம்." என்றார்.

இதுதான் "சூழ்நிலைக்கு ஏற்றபடி நீந்துவது" (Swim with the Tide).சாதகமில்லாத சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது.

பின்னர் அவர் சிரித்தபடி,

"ஒவ்வொரு மாதமும் ஒரு கொள்ளை நடந்தால் நன்றாக இருக்கும்!" என்றார்.

இதுதான் "சலிப்பை போக்குவது" (Killing Boredom).சிலருக்கு வேலைக்குப் பதிலாக தனிப்பட்ட லாபம்தான் முக்கியம்.

மறுநாள் தொலைக்காட்சி செய்தியில்,-"வங்கியில் இருந்து 100 மில்லியன் டாலர் கொள்ளையடிக்கப்பட்டது" என்று அறிவித்தனர்.

கொள்ளையர்கள் தாங்கள் எடுத்த பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களிடம் இருந்தது வெறும் 20 மில்லியன் டாலர் மட்டுமே.

அவர்கள் கோபமாக,

"நாங்கள் உயிரைப் பணயம் வைத்து கொள்ளையடித்தும் 20 மில்லியன் டாலர்தான் கிடைத்தது. ஆனால் வங்கி மேலாளர் ஒரு நொடியில் 80 மில்லியன் டாலரை எடுத்துவிட்டார்! திருடனாக இருப்பதைவிட படித்தவனாக இருப்பதே நல்லது போலிருக்கிறது!" என்று புலம்பினர்.

இதுதான் "அறிவு" (Knowledge). அறிவும் அதிகாரமும் சில நேரங்களில் பலத்தை விட அதிக லாபத்தைத் தருகின்றன.

சிந்தனை, தொழில்முறை அணுகுமுறை, அனுபவம், சூழ்நிலையைப் பயன்படுத்தும் திறன் மற்றும் அறிவு ஆகியவை மனிதர்களின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன. 

No comments:

Post a Comment

வங்கிக் கொள்ளையும் கார்ப்பரேட் கொள்ளை ஊழியர்களும்

  அமெரிக்காவில் ஒரு வங்கிக் கொள்ளையின் போது, கொள்ளையன் அனைவரையும் நோக்கி: "யாரும் அசையாதீர்கள். இந்தப் பணம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால...