Saturday, August 29, 2026

ஸ்டாலின் சித்தரஞ்சன் சாலை வீடு மர்மங்கள் - உதயநிதிக்கு முன்ஜாமின் இல்லை

சித்தரஞ்சன் சாலை வீடு ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முன்ஜாமின் இல்லை

சென்னை: அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஸ்டாலின் சென்னையில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் தாமாக முன்வந்து ஆஜராகி விளக்கம ளித்து  ள்ளார். இந்நிலையில் அவரது மகன் உதயநிதி முன்ஜாமின் கேட்டு தாக்கலான வழக்கு வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. 

சென்னை, ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்தவர் குமார் என்ற சேஷாத்ரி குமார்,64. இவர், நவ., 29ல், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு : என் தந்தை நாராயணசாமியால் வாங்கப்பட்டு, சித்தரஞ்சன்தாஸ் சாலை என்று, என் தந்தையால் பெயரிடப்பட்ட இடத்தில், என் பங்காக கிடைத்த இரண்டரை கிரவுண்டில், நான் 4,445 சதுரடிக்கு கட்டடம் கட்டி வசித்து வந்தேன். பின், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான ஆறு கிரவுண்டு நிலத்தை, ஸ்டாலின் (தி.மு.க., பொருளாளர்), ஐ.சி. ஐ.சி.ஐ., வங்கி மூலம் வாங்கி குடியேறினார். அவர், அங்கு வந்ததில் இருந்து, அருகில் உள்ள என் வீட்டையும் வாங்கி, ஒரே வீடாக்கிவிட திட்டமிட்டார். அதற்காக, என் வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி, வீட்டை காலி செய்ய வைத்தனர். அத்துடன், சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்னைகள் வரும் என்று மிரட்டினர்.

அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ல் புகார் செய்ய சென்றேன். என் மனுவை வாங்க மறுத்து விட்டனர். அதன் பின், பத்திர பதிவாளரை என் வீட்டிற்கு அழைத்து வந்து, வேணுகோபால் ரெட்டி பெயரில், என் வீட்டை கிரையம் செய்து கொண்டனர். அதற்கு, 5.5 கோடி ரூபாயை (5,54,50,000) டி.டி.,யாக கொடுத்தனர். அதன் பின், சீனிவாசன் என் வீட்டிற்கு வந்து, ஒரு கோடியே 15 லட்ச ரூபாயை பணமாக கொடுத்தார். இது கணக்கில் வராத பணம் என்றும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, சொன்னால், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்திடம், தளபதி சொல்லி வருமான வரித்துறை மூலம் தொந்தரவு செய்வார்கள் என்று சொன்னதுடன், 15 லட்ச ரூபாயை கமிஷன் என்று சொல்லி எடுத்துச் சென்றுவிட்டார். தற்போது, இந்த வீட்டை உதயநிதி ஸ்டாலின் பெயரில், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு, ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, தன் பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், கறுப்பு பணத்தை என் வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக கொடுத்து, வருமான வரி சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும், வேணுகோபால் ரெட்டி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், என் குடும்பத்தினரின் உயிருக்கு பாதுகாப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.



ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு: கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் வேணுகோபால்ரெட்டி, சுப்பாரெட்டி, ராஜாசங்கர், சீனிவாசன் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துமீறி நுழைதல் (451), மரணம், கொடுங்காயம் ஏற்படுத்திவிடுவேன் என அச்சுறுத்தி பணம் பறித்தல் (386,387), கொலை மிரட்டல் (506-1), கூட்டு சதி செய்தல் (120-பி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணையைத் துவக்கியுள்ளனர். நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக, தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் சிக்கி, சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளனர். இந்த வரிசையில், ஸ்டாலின் மீது விரைவில், கைது நடவடிக்கை இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு உதயநிதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். உதயநிதிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்‌து உதயநிதிக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் ஸ்டாலின் நண்பர் ராஜா,சங்கர் ஆகியோரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையையும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.


https://www.vikatakavi.in/magazines/202/7370/chitaranjansalaimarmangalnamathusirappunirupar.php

சித்தரஞ்சன் சாலை மர்மங்கள்…! - நமது சிறப்பு நிருபர்.

20210224113856707.jpg

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள பங்களாவில் திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற வேட்பாளராக தேர்தல் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்த சொத்து விவர அபிடவிட்டில் சித்தரஞ்சன் சாலை இல்லம் பற்றி குறிப்பிடப்படவில்லை.

சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினும், தனது வேட்புமனுவில் சொத்துவிவர பட்டியலில், சித்தரஞ்சன் சாலை இல்லம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தரஞ்சன் சாலையிலுள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டின் ப்ளாஷ் பேக்கிற்கு செல்வோம்.

2010-ஆம் ஆண்டு, சென்னை தேனாம்பேட்டை செனடாப் ரோடு, வார்டு எண் 8A, சித்தரஞ்சன் சாலையில் உள்ள 6000 சதுர அடி உள்ள பிளாட் சேஷாத்ரி குமார் என்ற பிசினஸ்மேணுக்கு சொந்தமானது. இந்த இடத்தினை மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீநிவாஸ், வேணுகோபால் ரெட்டி, ராஜா சங்கர் மற்றும் சுபா ரெட்டி ஆகியோர் தங்கள் அரசியல் பலத்தினை பயன்படுத்தி வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

தன்னுடைய வீட்டை அபகரிக்க முயன்றதாக புகார் தெரிவித்த சேஷாத்ரி குமாருக்கு சொந்தமான வீட்டை, அவரது தகப்பனார் நாராயணசுவாமி சுயமாக சம்பாதித்து கிரையம் பெற்று தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். சேஷாத்திரி குமார் தன் பணி நிமித்தமாக, சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டினை வாடகைக்கு விட்டுவிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரி சாலையில் இருக்கும் ஒரு இல்லத்தில் குடியேறினார்.

2010ஆம் ஆண்டு, ஆழ்வார்பேட்டை வீட்டில் குடியிருந்த சேஷாத்ரி குமாரை சந்தித்து, சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் 6000 சதுர அடி உள்ள பிளாட்டை தங்களுக்கு கிரையம் கொடுக்க வேண்டும் என்று வாசன் மற்றும் ரவிசங்கர் இருவரும் கேட்டனர். சேஷாத்ரி குமார், தன்னுடைய வீடு விற்பனைக்கு இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்.

அதன்பின் சேஷாத்திரி குமாரை சந்தித்த வாசன் மற்றும் ரவிசங்கர், வீட்டை தங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அடுத்த சில நாட்களில்… சித்தரஞ்சன் சாலையில் வாடகைக்கு இருந்தவர்கள் இரவோடு இரவாக தனக்கு எவ்வித தகவலும் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டனர் என்ற விவரம் அறிந்து சேஷாத்திரி குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

சேஷாத்திரி குமார் தனது வீட்டினை, அப்போதைய திமுக தலைவர் மகன் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸடாலின் உடன் 5 நபர்கள் மீது தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்கின்றனர் என்று குற்றம் சுமத்தி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

2011ஆம் ஆண்டு, முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா மேற்கண்ட புகாரின் வீரியத்தை அறிந்து சொத்தை அபகரித்தல், ஆள் கடத்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் செய்வது என இந்திய தண்டனைச் சட்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கையை மேற்கண்ட நபர்கள் மீது சென்னை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் காவல்துறையினர் மூலம் வழக்கினை பதிவு செய்தார்.

மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவருடன் மேலும் 5 நபர்களை சேர்த்து சென்னை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் பதிவு செய்த வழக்கினை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய ஸ்டாலின் தரப்பினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சித்தரஞ்சன் சாலை வீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி, 6000 சதுர அடிகள் கொண்ட வீடு கிட்டத்தட்ட 2.5 கிரவுண்ட் விஸ்தீரணம் உள்ளது. ஸ்டாலின் இல்லத்திற்கு பக்கத்திலுள்ள பிளாட் குற்றம் சுமத்தியுள்ள சேஷாத்திரி குமாருக்கு சொந்தமானதாகும். இதனுடைய அப்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 1.75 கோடி. வீட்டை விற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்தி, அதன் உரிமையாளரை மிரட்டப்பட்ட சொத்து குறித்தான வழக்கு என்பதால், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அரசியலில் பலமிக்க நபர்கள் என்பது தெளிவாகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் நபர்கள் மீது, நில அபகரிப்பு வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நடந்த விவாதங்களை பார்த்த ஸ்டாலின் தரப்பினர், அடுத்து சமாதான தூதுவை குற்றம்சாட்டிய சேஷாத்திரி குமாரருடன் பேச ஆரம்பித்து, ஒரு வழியாக அப்போதைய மார்க்கெட் விலையை விட அதிமாக கொடுப்பதாக ஸ்டாலின் தரப்பில் சொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பிலிருந்து, புகார்தாரர் சேஷாத்ரி குமாருக்கு சந்தை மதிப்பைவிட இருமடங்காக கிரைய தொகையான ரூபாய் 5.54 கோடிகள் கொடுக்கப்பட்டு, வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் சித்தரஞ்சன் சாலை இல்லம் கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டது. சித்தர்ஞ்சன் சாலை வீட்டினை கிரையம் பெற்ற வேணுகோபால் ரெட்டி, பத்திர நகலை நீதிமன்ற பார்வைக்கு வைத்தார். அதனடிப்படையில் புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே, சமரசமாக கிரய தொகையினை புகார் கொடுத்த சேஷாத்ரி குமார் பெற்றுக்கொண்டதால்... சென்னை சென்ட்ரல் கிரைம் பிரான்ச் முதல் தகவல் அறிக்கையினை ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவருடன் குற்றம்சாட்டபட்ட ஐந்து நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கரவு (Quashed) செய்ததாக நீதியரசர் டி மதிவாணன் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இதனால் திமுக தலைவரின் மகன் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது பெரும் நிம்மதியும் கிடைத்தது.

சித்தரஞ்சன் சாலை வீட்டை சேஷாத்திரி குமாரிடம் இருந்து கிரையம் பெற்ற பி. வேணுகோபால் ரெட்டி, அந்த இல்லத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ஃபிலிம் யூனிட்டுக்கு குத்தகைக்கு விடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, அங்கு உதயநிதி ஸ்டாலினுடைய பிலிம் யூனிட் செயல்பட வைத்தனர்.

அதன்பின் சித்தரஞ்சன் சாலை வீட்டை, ஸ்நோ ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெயரில் அதன் இயக்குநர்கள் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கிரயம் பெற்றதாக தகவல் வெளியாகியது. எனவே சித்தரஞ்சன் சாலை இல்லத்தில், உதயநிதி ஸ்டாலினும் ஒரு பங்குதாரராக கிரயம் பெற்ற விவரம் வெளியானதால், தற்போது அவர் தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்த சட்டமன்ற வேட்பாளர் மனுவில் சித்தரஞ்சன் சாலை இல்லத்தை தனது சொத்தாகவும், தனது முகவரியாகவும் காட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் காட்டியுள்ள சித்தரஞ்சன் சாலை இல்லத்தினை அவர் எந்த வகையில் கிரயம் பெற்றார் என்ற விவரங்கள் வேண்டும், அத்துடன் சித்தரஞ்சன் சாலை இல்லத்தினை வாங்க, உதயநிதி ஸ்டாலினுக்கு எங்கிருந்து ரு10.34 கோடி வந்தது என்று எதிர்கட்சியினர் கேள்வி எழப்புகின்றனர்.

ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குடியிருக்கும் இல்லத்திற்கு பக்கத்தில் இருக்கும் பிளாட்டை அரசியல் சக்தியை பிரயோகப்படுத்தி தனது குடும்பத்தார் பெயரில் கிரயம் பெற்றதை, இன்று வரை சித்தரஞ்சன் சாலை மர்மமாகவே அரசியல் நோக்கர்கள் பார்கிறார்கள்!.

No comments:

Post a Comment