Saturday, September 5, 2026

நாயன்மார்கள் கூறும் நான்மறைகள்

 நாயன்மார்கள் கூறும் நான்மறைகள் எவை- Gowtham Kalidass

தமிழ் வேதங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றில் நாயன்மார்கள் பெருமக்களே நான்மறை என்பவை "அறம், பொருள், இன்பம், வீடு" என்றுதான் கூறியிருப்பதாக "தனித்து அமிழ்" கும்பல் பிதற்றி வருகிறது.
நான் இங்கு திருஞானசம்பந்தப் பெருமானின் தேவாரத் திருப்பதிகங்களில் கூறப்படும் நான்மறைகள் பற்றிய திருப்பதிக வரிகளைத் தந்துள்ளேன்.
திருஞானசம்பந்தப் பெருமான் நான்மறைகள் என்று எந்த நூல்களைக் குறிப்பிடுகிறார் என்று படிப்பவர்களால் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும்.
1.முதலாம் திருமுறை:
1.நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
நேர்புரி நூன்மறை யாளரேத்த.
2.தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி.
3.நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய.
4.மறைமுத்தீ ஆனவன்.
5.மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.
6.அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் பங்கமில்.
7.வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
8.மந்திரத்த மறைபாட வாள் அவனுக் கீந்தானும்.
9.அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார்.
10.எரியிடை மூன்றினர் நான்மறை யாளர் மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்.
11.அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்து.
12.அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
13.வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்.
14.அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்.
15.தொன்மறை ஆறங்கம் ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
16.யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை யோதி ஐவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை.
17.அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி.
18.புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலையாமே.
2.இரண்டாம் திருமுறை:
1.மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர் செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்.
2.பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.
3.நல்லானை நான்மறை யோடிய லாறங்கம் வல்லானை.
4.முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை.
5.வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதி யரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.
6.வேதமொலி சொல்லி மறை யாளரிறை வன்றன் பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே.
7.ஓம் என்று மறைபயில்வார்.
8.அங்கமா றோடும் அருமறைகள் ஐவேள்வி தங்கினார்.
9.பாங்கினார் நான்மறையோடு ஆறங்கம்.
10.தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கை.
11.ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்.
12.சுருதி மறைநான் கான செம்மை தருவானை.
13.தீயோம்பு மறைவாணர்.
14.முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர்தூம மோடி யணவிக் குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.
15.மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
16.வேதம்நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கிடம்.
3.மூன்றாம் திருமுறை:
1.முவ்வழல் நான்மறை ஐந்துமா யமுனிகேள்வனும்.
2.மந்திர மறையவை வானவ ரொடும்.
3.இலங்கு மூவெரி மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்.
4.மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
5.தொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம் வகுத்தவன்‌.
6.மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்.
7.மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்வி.
8.நாலுமறை அங்கம்முதல் ஆறும் எரிமூன்று.
9.அழல தோம்பும் அருமறை யோர்திறம் விழல தென்னும் அருகர் திறத்திறங்.
10.ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
11.நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும் ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நாயன்மார்களின் திருவாக்குகளுக்கு தம் மனம்போன போக்கில் தவறான பொருளைத் சிவதுரோகிகளும், சைவதுரோகிகளுமான "தனித்து அமிழ்" தற்குறிகள் பிதற்றுகின்றனர்.
தேவாரத்‌ திருமுறைகளில் நான்மறைகள் பற்றிக் கூறும் போது நாயன்மார்கள் தெளிவாக "இருக்கு நான்மறை,மந்திர நான்மறை,நான்மறை ஆறங்கம்,சுருதி நான்மறை,மறைமுத்தீ,மந்திரத்த மாமறை,நான்மறையா றங்கமோ டைவேள்வி,அங்கமொராறும் அருமறைநான்கு,புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு,மந்திரந்தரு மாமறை யோர்கள்,ஓம் என்று மறைபயில்வார்,தீயோங்கு மறையாளர்,மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி"
என்றெல்லாம் பலவாறாகக் கூறி தெளிவாக நானமறைகள் இருக்கு முதலான நால்வேதங்கள் தான்,அவற்றிற்கு ஆறு அங்கங்கள் உள்ளன,அந்த மறைகளில் மந்திரங்கள் உள்ளன,அந்த மறைகளில் கூறப்பட்டுள்ள முறைப்படி அந்தணர்கள் வேள்விகள் செய்தனர்,முத்தீ வளர்த்தல் எனும் அக்னிஹோத்ரம் செய்தனர்,நெய்,சமித்து முதலானவை கொண்டு யாகங்கள் செய்தனர் என்றெல்லாம் கூறுகின்றனர்.
நாயன்மார்கள் ருக்,யஜுர்,ஸாம வேதங்களை மட்டும் தான் குறிப்பிடுகிறார்களாம்‌.நாயன்மார்கள் பெயரைக் குறிப்பிட்டு ருக் மற்றும் ஸாம வேதங்களை மட்டுமே குறிப்பிடுகின்றனர். யஜுர் வேதத்தை பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. அதற்காக இரண்டு வேதங்கள்தான் என்று கூற முடியுமா.
நாம் இந்த"தனித்து அமிழ்" தற்குறிகளிடம் கேட்கும் கேள்விகள்,
1.அறம், பொருள், இன்பம், வீடு தான் நான்மறைகள் என்றால் அவற்றின் ஆறு அங்கங்கள் எவை?
2.அந்த "நான்மறைகளிலும்" மந்திரங்கள் தான் இருந்ததா?
3.அந்த "நான்மறைகளிலும்" நெய், சமித்து முதலானவை கொண்டு வேள்விகள் செய்யும் முறைகள் விளக்கப்பட்டிருந்தனவா?
4.அந்த "நான்மறைகளைப்" நேரடியாகக் குறிப்பிடும் ஒரேயொரு கல்வெட்டு அல்லது செப்பேடுகள் உண்டா‌?
5.அவற்றைப் பயின்றவர்கள் யார்? அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு அல்லது செப்பேடுகள் உண்டா?
வடமொழி வேதங்கள் மூன்று தான் என்று மீண்டும் மீண்டும் பிதற்றும் "தனித்து அமிழ்" தற்குறிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
யஜுர்வேத மற்றும் ஸாமவேத ப்ராஹ்மணங்கள் தெளிவாக வேதங்கள் நான்கு என்று கூறுகின்றன.
உதாரணமாக,
1.யஜுர்வேத தைத்திரீய ப்ராஹ்மணம்:
"3.12.8.1-2.ருசோ யஜூக்ம்ஷி ஸாமானி அதர்வாங்கிரஸஶ்ச யே| ஸர்வாஸ்தா:|"
2.யஜுர்வேத ஶதபத ப்ராஹ்மணம்:
"11.5.6.4.யத்ருச: ஸ ய ஏவம் வித்வான்ருசோஅஹரஹ: ஸ்வாத்யாயமதீதே|
11.5.6.5.யத்யஜூம்ஷி ஸ ய ஏவம் வித்வான்யஜூம்ஷ்யஹரஹ: ஸ்வாத்யாயமதீதே|
11.5.6.6.யத்ஸாமானி ஸ ய ஏவம் வித்வான்ஸாமான்யஹரஹ: ஸ்வாத்யாயமதீதே|
11.5.6.7.யததர்வாங்கிரஸ: ஸ ய ஏவம்வித்வானதர்வாங்கிரஸோஅஹரஹ: ஸ்வாத்யாயமதீதே|"
3.ஸாமவேத பஞ்சவிம்ஶ ப்ராஹ்மணம்:
"6.10.10.பைஷஜம் வை தேவானாம் அதர்வாணோ பைஷஜாயைவாரிஷ்ட்யை|"
மிகப்பழங்கால ஸ்ம்ருதிகளான தர்மஸூத்ரங்களும் வேதங்கள் நான்கு என்று கூறுகின்றன.
உதாரணமாக போதாயன தர்ம ஸூத்ரத்தின் நான்காம் ப்ரஶ்னத்தின் மூன்றாம் அத்யாயத்தில் நான்கு வேதங்களும் குறிப்பிடப்படுகின்றன.
"4.3.3.யத்ப்ரதமமாசாமதி தேனருக்வேதம் ப்ரீணாதி யத்த்விதீயம் தேன யஜுர்வேதம் யத்த்ருதீயம் தேன ஸாமவேதம்||
4.3.4.யத்ப்ரதமம் பரிமார்ஷ்டி தேனாதர்வவேதம் யத்த்விதீயம் தேனேதிஹாஸபுராணம்||"
எனவே வேதங்கள் மூன்று தான் என்று பிதற்றுபவர்கள் "தனித்து அமிழ்" தற்குறிகள் என்று தான் அழைக்கப்படுவார்கள்.
மேலும் நாயன்மார்களின் திருவாக்குகளுக்கு தவறான பொருளைப் பிதற்றுபவர்கள் சைவவிரோதிகள், சைவதுரோகிகள் என்றே அழைக்கப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.சிவ சிவ.
திருமுறைகளில் சுட்டப்பெறும் வேதங்கள் - வடமொழி வேதங்களா ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) அல்லது தமிழ் வேதங்களா ( அறம் , பொருள் இன்பம் & வீடு ) ? இரண்டாம் திருமுறை. 078 திருவிளநகர் பாடல் எண் : 7 பண் : காந்தாரம் திருச்சிற்றம்பலம். சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே. திருச்சிற்றம்பலம். பொழிப்புரை: எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும். குறிப்புரை: சொல்தரும் மறை - `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். `சொற்றருமறை முதல் தொன்மை நூல்முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவரு குரவன்` (சிவபுண்ணியத்திரட்டு). கல்தருவடம் - செபமணி மாலை. தருவ்வடம் - வகரம் விரித்தல் விகாரம். மல் - வலிமை. திரள்தோளினார், பொடிப் பூசினார் - திருநீற்றையணிந்தவர். ஒற்றுமிகை. வில் - ஒளி. தரும்மணி - நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினையாதலும் கூடும். குறிப்பு : மேலே எடுத்தாளப்பட்ட திருமுறைப்பாடலும் , பொழிப்புரையும் மற்றும் குறிப்புரையும் தருமை ஆதீன Website உதவி . முதலில் மேலே உள்ள திருப்பாடலில் வந்துள்ள முதல் வரி : '' சொற்றருமறை பாடினார் '' - பொருள் : எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர் / `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். வேதங்களை இறைவன் ' வைகரி வாக்காக பிரபஞ்சத்தில் ஒலிக்குறிப்பொடு அருள , அதைக் கேட்டுணர்ந்த ரிஷிகள் , தம் சீடர்களுக்கு திரும்ப அருளினார்கள் . இறைவன் ஞானியருக்கு வேதங்களை அருளினான் / பாடிக்காட்டினான் / சொன்னான் என்ற பலவிடங்களில் நம் சமய ஆச்சாரியர்களால் திருமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன . இந்த வேதங்கள் யாவை ? 1. நம் தரப்பு. நம் தரப்பு இந்த வேதங்கள் , வடமொழியில் உள்ள வேதங்களே ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) என்பதாகும் . - வேதங்களின் பெயர்கள் ரிக் மற்றும் ஸாம வேதங்களின் பெயர்கள் திருமுறைப்பாடல்களில் பயின்று வருகின்றன . வேதங்களை ' ஸ்ருதி ' என்பார்கள் , அதாவது செவியினால் உணரப்படுவது , என்று பொருள் . ஸம்ஸ்க்ருத மொழியில் வேதங்கள் முதலில் வாயினால் ஓதப்பட்டு வந்தன . வரிவடிவம் மற்றும் நூல்களாக முதலில் இல்லை . செவியால் கேட்டுணரப்படுவதில்தான் முக்கியமாக கருதப்பட்டது . ஒலிக்கே சிறப்பு , ஏன்னென்றால் தவறான ஒலிக்குறிப்பு மந்திரங்களின் அர்த்தம் பிறழ்ந்து , சரியான பலனைக் கொடுக்காது அல்லவா ? எனவே நெடுங்காலம் இவை வாயால் ஓதப்பட்டு , செவியால் கேட்கப்பட்டு , மனனம் செய்யப்பட்டு வந்தன . இதற்காக தனியான குருமார்களும் , சிஷ்ய பரம்பரைகளும் கறாரான விதத்தில் பிராமணர் குலங்களிலே நிலைநிறுத்தப்பட்டன . வரிவடிவம் உருவாக்கப்ட்டு , ஏடுகளிலே இந்த வேதங்கள் ஏறினால் , பாடபேதம் மற்றும் தவறான உச்சரிப்பு போன்ற பிழைகளினால் , இந்த வேதங்களில் உள்ள மந்திரங்களின் சக்தி பலன் அளிக்காது என அஞ்சப்பட்டது நெடுங்காலம் கழித்தே , பிராமணர்களில் சில பிரிவுகள் இருவேதம் படித்தவர் ( துவேதி ) , மூன்று வேதங்கள் படித்தவர் ( திரிவேதி ) & நான்கு வேதங்கள் படித்தவர் ( சதுர்வேதி ) நிலைநிறுத்தப்பட்டபின்னரே வேதங்கள் ஏடுகளில் வரிவடிவம் பெற்று ஏறின. மேலே சொன்ன வரிகளில் , நாம் சொல்ல வருவது என்னவென்றால் , வேதங்கள் தோன்றி , ஏடுகளில் வரிவடிவம் பெற்று ஏறிய பிறகும் கூட , இந்த ஏடுகள் , அந்நிய சமயத்தினர் படையெடுப்பு மற்றும் இயற்கை உற்பாதங்கள் ( ஆழிப்பேரலை , தீ , நிலநடுக்கம் ) ஏற்பட்டு அழிந்திருந்தாலும் , பல்வேறு பிராமண குரு / சிஷ்ய மரபின் நினைவிலிருந்து இவை ஒருபோதும் அழிந்துபட்டு இருக்காது . அதனால்தான் , சிறிதும் மாற்றமில்லாமல் வேதங்கள் தோன்றின காலத்திலிருந்து இன்றளவும் இடைப்பட்ட பல்லாயிரம் கால இடைவெளியை மீறி , வேதங்கள் அதன் தூய வடிவிலே நமக்கு இன்றும் இருந்து வருகின்றன. 2. எதிர்தரப்பு . இந்த எதிர்தரப்பு என்பது தமிழ்நாட்டில்தான் . கழக / தனித்தமிழ் / மிஷனரி சைவம் / வடமொழி - ஸம்ஸ்க்ருத எதிப்பாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் ? நம் சமய பரம ஆச்சாரியரான ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான் பதிகங்களில் உள்ள " அறம் , பொருள் , இன்பம் & வீடு "' என்பனவே நம் வேதங்கள் . மேலே குறிப்பிடப்பட்ட வடமொழி வேதங்கள் ( ரிக் , யஜுர் , ஸாம & அதர்வண ) , நம் வேதங்கள் அல்ல என்கிறார்கள் . அவர்களுக்கு பின்வருமாறு சில ஐயங்களை முன் வைத்து தெளிவு பெற விரும்புகிறோம் : - நம் திருமுறைகளில் - மறை என்று ரிக் மற்றும் ஸாம வேதங்களின் பெயர்களை நம் சமய ஆச்சாரியர்களே குறிப்பிட்டு உள்ளார்களே ? பல இடங்களில் முதலில் தோன்றிய ரிக் வேதத்தை சிறப்பாக குறிப்பிடுவதால் , அதன் இனம் பற்றி மற்றைய மூன்று யஜுர் , சாம & அதர்வண வேதங்களையும் குறிப்பிடுவதக்கத்தானே பொருள் ? நீங்கள் குறிப்பிடும் அறம் , பொருள் , இன்பம் & வீடு போன்ற வேதங்கள் இப்பொழுது எங்கே உள்ளன ? வேதங்களை இறைவன் '' சொற்றருமறை பாடினார் '' என்றல்லவா மேலே உள்ள திருமுறைப்பாடலின் முதல் வரி , ஆகவே இறைவனிடம் இதனை அருளக்கேட்ட குருமரபும் / சீடர்மரபும் ( வடமொழி வேத குரு மரபும் மற்றும் சீடர் மரபும் போல ) சைவர்களிடையே வழிவழியாக தற்போது உள்ளனவா ? அவர்கள் யார் ? இந்த வேதங்கள் பின்னொரு காலத்தில் ஏடுகளில் எழுதப்பட்டு எவ்வாறு மறைந்தன ? ஏடுகள் ஒருவேளை காலவெள்ளத்தில் / ஆழிப்பேரலையில் மறைந்தாலும் இந்த வேதங்களை கற்று உணர்ந்ததங்கள் நினைவில் இருத்திக்கொண்ட ஒரு சைவ மரபோ / குலமோ கூடக் கிடைக்கவில்லையா ?

No comments:

Post a Comment

சு.வெங்கடேசன் MP மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காமிரா போனில் படங்களை எடுத்து ஷேர் செய்தார்

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கேமரா வசதியுள்ள செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்ற தடை அமலில் உள்ள நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன...