சிகைக் கொற்றனை தெலுங்கு, மலையாள ஊடகங்கள் எவ்வாறு அணுகின?
சாக்ஷி மற்றும் ஈநாடு போன்ற தெலுங்கு இதழ்கள் இந்த விவகாரத்தை "திராவிட கடல்வழி சில்க் ரூட்" என்று அழைத்தன. மன்னர்கள் பள்ளத்தாக்கில் கிடைட்த்ஹ பிராமி எழுத்துக்களுக்கும், ஆந்திராவின் ஆரம்பகால கல்வெட்டுகளில் காணப்படும் பட்டாப்ரோலு பிராமி எழுத்துக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக் காட்டி, தென்னிந்தியா முழுவதும் ஒரு பொதுவான எழுத்துமுறை மரபு இருந்ததை இவை உணர்த்துவதாகக் கூறின. சிகை" என்ற பெயரை சமஸ்கிருத மூலச்சொல்லான 'ஷிகா'வோடு ஒப்பிட்டு ஒப்பிட்டன. இது தெலுங்கு கலாச்சாரச் சூழலில் இன்றும் புழக்கத்தில் உள்ள ஒரு சொல் என்பதையும் அழுத்தமாகச் சொல்லின. அங்கு கி்டைத்த சமஸ்கிருத கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 'க்ஷஹரதா' (Kshaharata) தூதுவரைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதின. இதன் மூலம் சாதவாகனர் காலத்து தென்னிந்தியா, ரோமானிய உலகத்துடன் அரசியல் மற்றும் வணிக ரீதியாக ஆழமாக இணைக்கப்பட்டிருந்தது என்பதை அறிய முடிகிறது என்றன. சாதவாகனப் பேரரசை இந்தியாவின் முதல் பெரிய கடல்சார் சக்தியாகச் சித்தரித்தன. கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட சாதவாகன நாணயங்கள் செங்கடல் துறைமுகங்களில் கிடைத்தது, ஆந்திரப் பகுதி வெறும் பொருட்களை மட்டும் விற்கவில்லை; சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பணப்பரிமாற்ற முறையையும் கொண்டிருந்தது என்பதை நிரூபிப்பதாக அவை எழுதின.
மாத்ருபூமி, மலையாள மனோரமா மற்றும் மாத்யமம் போன்ற இதழ்கள், இந்த கண்டுபிடிப்பை முசிறி (Muziris) வணிக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகச் சித்தரித்தன. 'பெரிப்ளஸ்' (Periplus) குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த வணிகர்கள் எடுத்துச் சென்ற மிளகு மற்றும் வாசனைப் பொருட்கள் நிச்சயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சென்றவை என்று அவை வாதிட்டன.
கொற்றன்" (Koṟṟaṉ) -. நவீன தமிழில் மருவிப்போன 'ற' கரத்தின் தனித்துவமான உச்சரிப்பு, கேரளாவின் சில வட்டார வழக்குகளில் இன்றும் அப்படியே இருப்பதைச் சுட்டிக்காட்டி, பெயர் மலையாளிக்கு மிகவும் நெருக்கமானது என்றன! கிடைத்த நாணயங்கள் சாதவாகனர்களுடையதாக இருந்தாலும், அவை கேரளக் கடற்கரையில் "கருப்புத் தங்கம்" எனப்படும் மிளகை வாங்கவே பயன்படுத்தப்பட்டன என்று மலையாள ஊடகங்கள் விளக்கின.
உதயவாணி, ப்ரஜாவாணி, விஜயவாணி போன்ற கன்னட ஊடகங்கள், மேற்குகடற்கரைப் பகுதிகளுக்கும் எகிப்திற்கும் இடையே உள்ள் தொடர்பைக் குறிப்பிட்டு எழுதின. எகிப்தின் பிராமிக்கும் ஹல்மீடி கல்வெட்டிற்கும் இடையே உள்ள் ஒற்றுமையை வலியுறுத்தின. சிகையைப் பற்றியும், பிராகிருத எழுத்துகளைப் பற்றியும் பேசின.
தென்னிந்தியாவின் மற்றைய மொழி ஊடகங்கள், எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டவை இந்தியத் துணைக்கண்டத்தின் கலாச்சார ஒற்றுமையைப் பறைசாற்றுவதை அடிக்கோடிட்டுக் கூறின.
















































