Sunday, March 15, 2026

American wars increase under Trump


 

Luz Corner 14 Grounds Temple Property- Amrutanjan appeals against Fair rent

கோயில் நிலத்திற்கான வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரிய உத்தரவை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் மேல்முறையீடு -முகமது இம்ரானுல்லா எஸ்.,
சென்னை வலி நிவாரண தைலத்திற்கு புகழ்பெற்ற 132 ஆண்டுகள் பழமையான அம்ருதாஞ்சன் லிமிடெட் நிறுவனத்திற்கு இப்போது ஒரு புதிய 'தலைவலி' ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலத்திற்கான பல கோடி ரூபாய் வாடகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயமே இதற்குக் காரணம்.
வெளியேற்ற உத்தரவு
கோயில் நிலத்திலிருந்து தங்களை வெளியேற்றவும், நவம்பர் 1, 2001 முதல் மாதத்திற்கு ₹3.3 லட்சம் என்ற வீதத்தில் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும் ஒரு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அக்டோபர் 2001 வரை அந்த நிலத்திற்கு மாதம் வெறும் ₹1,400 மட்டுமே அந்நிறுவனம் வாடகையாக செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2005-ம் ஆண்டு அம்ருதாஞ்சன் தொடர்ந்திருந்த மனுவை கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று நீதிபதி எம். தண்டபாணி தள்ளுபடி செய்திருந்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்தே தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
99 ஆண்டு குத்தகை
நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ள படி, லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் மற்றும் 910 சதுர அடி நிலத்தை பி.ஆர். சுந்தர ஐயர் என்பவருக்கு கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் ஆகஸ்ட் 28, 1901 அன்று குத்தகைக்கு வழங்கியது. ஒப்பந்தப்படி, 99 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,400 வாடகை நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் சுந்தர ஐயர் அந்த குத்தகை உரிமையை அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்தார்.
பல தசாப்தங்களாக அந்நிறுவனம் அங்கு இயங்கி வருகிறது. அசல் குத்தகை காலம் ஆகஸ்ட் 27, 2000 அன்று முடிவடைந்த நிலையில், கோயில் நிர்வாகம் உயர்த்தப்பட்ட வாடகையை கேட்டது.
ஆனால், அம்ருதாஞ்சன் நிறுவனம் அதைச் செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து, நவம்பர் 1, 2001-க்குள் நிலத்தை காலி செய்யுமாறு செப்டம்பர் 17, 2001 அன்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. நிறுவனம் நிலத்தை காலி செய்யாததால், ஜூன் 16, 2024 அன்று மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் நிறுவனம் தொடர்ந்து அந்த நிலத்தை தன் வசமே வைத்திருந்தது.
இதற்கிடையில், 2003-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் (HR&CE Act, 1959) கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் 'பிரிவு 34A' இணைக்கப்பட்டது.
இதன் மூலம் கோயில் சொத்துக்களுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட வாடகை அறநிலைய துறை இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் மாவட்டப் பதிவாளர் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு, 2005-ம் ஆண்டில் அந்த 14 கிரவுண்ட் நிலத்திற்கு மாத வாடகையாக ₹3.30 லட்சத்தை நிர்ணயம் செய்தது.
மேலும்,2001-ம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு இந்த வாடகையை செலுத்துமாறு கோரியது.
இதை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் அறநிலையத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தது.
ஆனால், 'பிரிவு 34A(5)'-ன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தொகையை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே மேல் முறையீட்டை ஏற்க முடியும் என ஆணையர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தச் சட்டப் பிரிவு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி அம்ருதாஞ்சன் 2005-ல் மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கு 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போதும் நிறுவனம் நிலத்தை காலி செய்யவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போது, நிறுவனம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
"ஒருவேளை இதுவரை வெளியேற்றம் செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து மனுதாரரை (அம்ருதாஞ்சன்) வெளியேற்றவும், நிர்ணயிக்கப்பட்ட வாடகை மற்றும் நிலுவைத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிபதி உத்தரவிட்டார்.

Puducherry 2026 assembly elections Preview




 

Kerala 2026 Assembly elections a Preview

 
 

Tamilnadu 2026 assembly elections preview



Assam 2026 assembly elections Preview



 

West Bengal Elections a preview




 

Trivanandapuram- 2 crore Jewels from Palace theft


 

Hyderabad = Rave Drug party- TDP MP and others arrested





 

Road contract scam - Peravurani DMK panchyat chief and 7 others charged with case

 



Cimbatore IPS Commander arrested for Rape of Police woman inside office




 

Saturday, March 14, 2026

அறிவு எழுதிய 'என்ஜாய் எஞ்சாமி' (Enjoy Enjaami) பாடல் சந்தோஷ் நாராயணன் இசை Royalty

'என்ஜாய் எஞ்சாமி' (Enjoy Enjaami) பாடல், 2021 இல் வெளியான ஒரு பிரம்மாண்டமான தமிழ் சுயாதீனப் (Indie) பாடலாகும். சந்தோஷ் நாராயணன் இசையில், அறிவு மற்றும் தீ (Dhee) பாடிய இப்பாடலை, அறிவு எழுதியுள்ளார்.  இப்பற்று, மண்ணின் மைந்தர்கள், முன்னோர்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் கீழ் உழைக்கும் மக்களின் துயரத்தைப் பாடும் சமூக-அரசியல் பாடலாகக் கருதப்படுகிறது.


பாடல் பற்றிய முக்கியத் தகவல்கள்: 
  • பாடகர்/பாடலாசிரியர்: அறிவு (தெருக்குரல்), தீ (Dhee).
  • இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்.
  • வெளியீடு: 2021 மார்ச் 7 (மேஜா - Maajja தயாரிப்பு).
  • பாடல் வகை: பாப், ஹிப்-ஹாப் மற்றும் ஒப்பாரி கலந்து உருவாக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடல்.
பாடல் அறிவு (பொருள்):
  • மண்ணின் மணம்: குக்கூ குக்கூ, தாத்தா தாத்தா எனத் தொடங்கும் பாடல், இயற்கையோடு இணைந்த பழைய தமிழர்களின் கிராமிய வாழ்க்கை முறையைச் சித்தரிக்கிறது.
  • உழைக்கும் வர்க்கத்தின் குரல்: சொந்த நிலத்தில் உழைத்து, 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு, தோட்டம் போட்டு, பாய் பாயாக பசியோடு நிற்கும் நிலமற்ற தொழிலாளர்களின் வேதனையை இப்பற்று பேசுகிறது.
  • ஒப்பாரி வடிவம்: அறிவு, தனது பாட்டியின் நினைவுகளைப் பாடி, நிலத்தொடர்பு மற்றும் சமூகப் பொருளாதாரக் பின்னடைவை ஒட்டிய சமூக நீதியைப் பேசுகிறார்.
சர்ச்சைகள் (2026):
பாடல் வெளியான 5 ஆண்டுகளுக்குப் பிறகும், தனக்கான உரிய அங்கீகாரம் மற்றும் ஊதியம் (Royalty) கிடைக்கவில்லை எனப் பாடகர் அறிவு ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்தோஷ் நாராயணனுக்கும் அறிவுக்கும் இடையே கருத்து மோதல் மற்றும் சமூக ஊடக விவாதங்கள் மீண்டும் வெடித்துள்ளன.

திமுக அரச பயங்கரவாதம் - சாதரண குற்றத்திற்கு குண்டர்சட்டம் - ஹைகோர்ட்




முள்ளிகொளத்தூர் ஏரி கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா? நிபுணர் ஆய்வு ஹைகோர்ட்

முள்ளிகொளத்தூர் ஏரியில்  அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் அள்ளப்பட்டுள்ளதா என்று  அண்ணாதுரை பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், முள்ளிகொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புல எண். 260-ல், 24.33.5 ஹெக்டேர் பரப்பளவில், 60 நாட்களில் 5,000 லாரி லோடுகள் (சுமார் ) வரை சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.  

தமிமுன் அன்சாரி - தமிழர் இறைவன் தேர் ஊர்வலம் எதிர்த்து சட்ட சபையில் பாம்பு டான்ஸ் ஆடிய முஸ்லிம் எம்எல்ஏ

 2018-ல் தமிழ்நாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய தமிழர் இறைவன் தேர் ஊர்வலம் (ராமர் ரத யாத்திரை) எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில் சபாநாயகர் இருக்கைக்கு முன் தர்ணா போராட்டம் ன பாம்பு டான்ஸ் ஆடினார்.

ஈவேரா படமிட்ட டி-சர்ட் அணிந்து, தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்து அவர் அமர்ந்ததால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம்: 2018 மார்ச் மாதம், ரத யாத்திரைக்கு எதிராக, சபாநாயகர் தனபால் இருக்கையின் முன் அமர்ந்து போராட்டம்.

  • தனித்துவ செயல்: போராட்டத்தின் போது, ஈவேரா  உருவம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்து, பாம்பு டான்ஸ் ஆடி தர்ணா போராட்டம கவனம் பெற்ற கூத்தாக அமைந்தது 
  • விளைவு: தமிழர் இறைவன் தேர் எதிர்த்து அவரது பாம்பு டான்ஸ்   போராட்ட செயல் சட்டசபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழுக்கு அவமானம்- காமக்கொடூரன் வைரமுத்துவிற்கு தனியார் ஞானபீட விருது -ஜெயமோகன்

 தமிழுக்கு அவமானம் -ஜெயமோகன் 

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர்.


வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.






இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப் பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந் இருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்து ருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.
இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.
தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.


www.youtube.com/watch?v=bIIjnSgHDFM&feature=youtu.be
வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை வேகமெடுக்கும் சட்டம்
 
 


American wars increase under Trump