ஒவ்வொரு வருஷமும் ஞானபீட விருதுக்கு பரிந்துரைக்க கடிதம் அனுப்புவார்கள்.இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.நானும் இலக்கியத்தில் ஞானபீட விருதுக்கு தகுதியானவர் என நான் நினைக்கும் எழுத்தாளரை பற்றிய ஒரு பெரிய கட்டுரை எழுதி அவர் எழுதியிருக்கிற நூல்களின் பட்டியலை வரிசைப்படுத்தி அவர் வாங்கியிருக்கிற விருதுகளின் பட்டியல் அதற்கான சான்றுகள் இத்தனையும் சேர்த்து அவைகளை கோர்வையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (எனக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிற அளவுக்கு புலமை இல்லை.)
இருக்கவே இருக்கிறார் எங்க ஊர் ஜாம்பவான் தேவதச்சன்.அனுப்பி வைப்பேன்.இனி இரண்டு ஆண்டுகளுக்கு பரிந்துரைகள் கேட்டு கடிதங்கள் வராது.ஞானபீட விருது பெறுகிற மொழிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த விருது இல்லை. ஞானபீட விருதுக் கமிட்டியின் விதி.
ஏற்கனவே ஒவ்வொரு மொழியிலிருந்தும் வருகிற பரிந்துரைக் கடிதங்களை பரிசீலித்து அவைகளிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மொழியிலிருந்தும் மூன்று பேர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஞான பீடம் நியமிக்கும்.இந்தாண்டு தமிழிலிருந்து நியமிக்கப்பட்ட அந்த மூன்று பேர் யாரென்று தெரியவில்லை.அவர்களை தெரிந்து கொள்வதுதான் மிக முக்கியம்.
அனைத்து மொழிகளிலிருந்தும் ஒவ்வொருவர் தேர்வான பின்னர் பொதுவான ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருதுக்குரியவரை அறிவிக்க ஆறு பேர் கொண்ட ஒரு கமிட்டி இருக்கும்.அதில் யார் யார் இடம் பெற்றிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.
குறிப்பு:ஞானபீட விருது பெறுபவர்களின் ஒழுக்கம் பற்றியோ நன்னடத்தை விதிகள் பற்றியோ விதிகளில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

No comments:
Post a Comment