Saturday, March 21, 2026

விளாத்திகுளம் பள்ளி மாணவி பலாத்காரம் & படுகொலை வழக்கு

விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவியின் கொலை வழக்கை திறமையாக விசாரித்து குற்றவாளியை கைது செய்த இருபதுக்கு மேற்பட்ட தனிப்படையினரை தென்மண்டல ஐ.ஜி.அவர்கள் பாராட்டி பாராட்டுப் பத்திரங்கள் வழங்கிய செய்திகள் பார்த்தேன்.மிக்க மகிழ்ச்சி.
அதே நேரம் ஒன்பது நாட்களாக எவ்வித தடயங்களும் கிடைக்காமல் காவல்துறை திணறிக் கொண்டிருந்த போது தொடர்ந்து நாலைந்து நாட்களாக காட்டுக்குள் மணிக்கணக்காக தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை தான் போட்டோ எடுத்து வைத்திருப்பதாக சொல்லி அந்த போட்டோவை காவல் துறையிடம் ஒரு நபர் ஒப்படைத்ததாகவும் அதனடிப்படையில் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை விசாரித்து அதனடிப்படையிலேயே குற்றவாளியை காவல்துறை கைது செய்தார்கள் என்று சில முகநூல் பதிவுகள் பார்த்தேன்.
போட்டோ கொடுத்த நபரின் பெயர் சோலையப்பன் என்றும் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருவதாகவும் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்செய்தி உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.உண்மையான செய்தி என்றால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கௌரவப் படுத்த வேண்டும்.இது காவல்துறையின் கடமையும் கூட.
தமிழ் நாடெங்கும் பெரிய பிரச்சினையை உருவாக்கியதோடு தமிழக காவல்த்துறைக்கு சவாலாக இருந்த ஒரு குற்றத்தை கண்டுபிடிக்க உதவிய நபரை பாராட்டுவதில் தவறு ஒன்றுமில்லையே.





 

No comments:

Post a Comment