Monday, June 8, 2026

இந்து சமய அறநிலையத்துறை மூன்று இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்களாக பதவி உயர்வு.

இந்து சமய அறநிலையத்துறை மூன்று இணை ஆணையர்கள், கூடுதல் ஆணையர்களாக பதவி உயர்வு.
https://x.com/sureshkalipandi/status/2063964264529117474

இதில் இரண்டு பேர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற ஏழை ஜோடிகளுக்கு திருமண விழாவில் முறைகேடு நடந்ததாக கூறி பழிவாங்கப்பட்டவர்கள். அந்த விழாவில் தவறு செய்தவர்கள் தப்பித்து விட இரண்டு பேருமே மாட்டிக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பணி நியமனம் பெற்று வந்தவர்கள். இன்னொருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. திருவண்ணாமலை கோயில் மற்றும் திருநெல்வேலி மண்டலம், சென்னை மண்டல இணை ஆணையராக இருந்தபோது அவர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. தொடர்ந்து திருத்தணி கோயிலுக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்சியிலாவது அவரது நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

No comments:

Post a Comment

கேரள முஸ்லிம் லீக் பேரம்பரா பெண் MLA பாத்திமா தஹிலியா - ஹோட்டல் திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதால் மதத்தில் இருந்து விலாகுவதாக மிரட்டல்

  பாத்திமா தஹிலியா  கேரள   முஸ்லிம் லீக்  அரசியல்வாதியும் வழக்கறிஞ ர்;   https://x.com/AstroCounselKK/status/2063645827915239463 2026 முதல் ...