Saturday, June 6, 2026

திமுக & காங்கிரஸ் அனுதாபியின் கருணாந்தி பற்றிய கருத்தும், அவர் சந்த்தித்த சிக்கல்களும்

கலைஞர் பிறந்த தினத்தை ஒட்டி ஏராளமான பதிவுகள். திக, திமுக குடும்ப பின்புலத்தை சேர்ந்த எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. அவரது சாதனைகள், கடும் உழைப்பு, அறிவுக் கூர்மை, பேச்சுத் திறன் பற்றி பிரமிப்பு உண்டு. 1996-2001இல் அவரது ஆட்சி சிறப்பாக இருந்தது. 2001இல் 77 வயதில் அவர் ஓய்வு பெற்றிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று பல முறை நினைப்பேன். ஏனெனில் 2006-11இல் அவரது கடைசி ஆட்சி மிக மிக மோசமாக, அவருக்கும், திமுகவிற்கும் கெட்ட பெயரை பெற்றுத் தந்தது. மதுரையில் அழகிரியின் அராஜகங்கள், திருச்சியில் நேரு சகோதரர்கள், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் அராஜகங்கள், நில அபகரிப்புகள். சன் டிவி சகோதரர்கள் SCV கேபிள் டிவியை ஏகபோகமாக்கி (போட்டி நிறுவனங்களின் கேபிள்களை அடியாட்கள் மூலம் அறுத்து, ஒழித்து) அனைத்து இதர சேனல்களையும் மிரட்டி (ராஜ் டிவி, Zee டிவியின் செய்தி ஒளிபரப்பை நிறுத்தச் செய்து) அட்டகாசம் செய்தனர். எதையும், யாரையும் கலைஞரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்காத அவப்பெயர் பெற்றார்.

இவற்றால் வெறுத்து போய், என் வாழ்க்கையில் முதலும் கடைசி முறையாக நான் 2011 தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தேன்.
ஒரு வேளை 2018க்கு பதிலாக 2005 இல் கலைஞர் காலமாகியிருந்தால், நல்ல பேருடன் சென்றிருப்பார் என்று கருதுகிறேன். இதை என் திமுக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

2021 மே 2ஆம் தேதியை என்றும் மறக்க மாட்டேன். அன்று தான் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த தினம். இந்தத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக நான் முகநூலில் எழுதி, வாக்களித்திருந்தாலும், 2006-11 ஆட்சியில் திமுகவினர் புரிந்த பல்வேறு அராஜகங்கள், நில அபகரிப்புகள் குறித்த uneasiness, தயக்கமும் இருந்தது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடித்தே ஆக வேண்டிய கட்டாயமும் இருந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை, கோவையில் இருந்து எனது நீண்ட வருட குடும்ப நண்பன் ஒருவன் தொலைபேசினான். பெரிய தொழிலதிபரான அவனின் நண்பன் ஒருவன் பிரான்ஸில் இருந்து அவனுக்கு அன்று பேசிய விசியம் பற்றி கூறினான். கோவை நகரின் மத்தியில் உள்ள ஒரு prime propertyக்கு சொந்தகாரரான அந்த நபர், அதை என் நண்பனுக்கு விற்பதற்காக பல மாதங்களாக பேசிக் கொண்டிருந்தார். விலை படியாமல் இழுபறியாக இருந்த நிலையில், திமுக மீண்டும் வென்றுள்ளது என்ற தகவல் தெரிந்த உடன், என் நண்பனுக்கு போன் செய்து, உடனே நான் அடுத்த ஃபிளைட்டில் கோவை வருகிறேன், நீ சொன்ன விலைக்கு உடனே உனக்கு கிரையம் செய்து கொடுக்கிறேன் என்று சொன்னாராம். திமுக ஆட்சிக்கு வந்தால், அந்த இடத்தை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற அச்சம் தான் காரணம்.
இந்த தகவலை நான் அப்படியே முகநூலில் எழுதியது பெரும் பிரச்சனையாக மாறியது. திமுக அரசை நான் அவதூறு செய்கிறேன் எனக் குற்றம் சாட்டி, நான் பொய் சொல்கிறேன் எனக் கூறி, ஏகப்பட்ட கண்டனங்கள், எதிர்ப்புகள். திமுகவினர் தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் என் மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர். பிளாகர் காலத்தில் இருந்து எனக்கு நண்பராக இருந்த எம்.எம்.அப்துல்லா (இவர் என்னை அண்ணே என்று மரியாதையுடன், அன்புடன் விளிப்பார்) ‘அதியமான் என்னும் நபர் அவதூறு செய்வதால் அவர் மீது சைபர் கிரைமில் தமிழகம் முழுவதும் DMK IT wing சார்பாக புகார் அளித்து, அவரை அலைய விடுவோம், தண்டிப்போம்’ என்று முகநூலில் எழுதினார். திடீரென நான் ‘நபர்’ ஆகி விட்டேன். அப்துல்லாவிற்கு பல mutual நண்பர்கள் கண்டனம் தெரிவித்து, எனது கருத்துரிமைக்கு ஆதரவாக நின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
பிறகு பிரச்சனை மேலும் பெரிதானது. பாஜக ஐடி விங்கைச் சேர்ந்த எஸ்.ஜி.சூரியா என்பவர் இது பற்றி டிவீட் செய்து, அதில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடியை டேக் செய்தார். அதில், தந்தி டிவியின் எடிட்டர் அதியமான் என்பவரை திமுக ஐ.டி பிரிவினர் harass செய்கின்றனர், etc என்று எழுதியிருந்தார். நான் ஒரு சாதாரண sub-editor in Thanthi TV. இந்த டிவீட்டின் ஸ்கீரீன் ஷாட் வைரலாகி, எமது நிறுவன எம்.டி வரை சென்று விட்டது. பிறகு தந்தி டிவியின் COO என்னை அழைத்து செம டோஸ் விட்டு, சஸ்பெண்ட் செய்தார். (நல்லவேலையாக டிஸ்மிஸ் செய்யவில்லை !). மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தேன். இந்த விசியத்தை என் மனைவியிடம் இருந்து மறைத்து விட்டதால், வீட்டில் தப்பினேன்.
அதன் பிறகு பல mutual friendsகளில் வற்புறுதலினால் எம்.எம்.அப்துல்லா, எனது மீதான அனைத்து புகார்களையும் வாபஸ் பெறச் செய்தார். I haven’t met him after this incident and I don’t want to ever meet him again in my life. He later became Rajya Saba MP for one term.
என்னைப் பெரும் சிக்கலில் மாட்டி விட்ட பாஜகவின் எஸ்.ஜி.சூரியா (அவருக்கு தந்தி டிவியின் எடிட்டர் யார் என்று தெரியும்) பின்னாட்களில், அவதூறு வழக்கில் சிக்கி, கைது செய்யப்பட்டார். அன்று மிக மிக மகிழ்ச்சியடைந்த நான், உடனே ஸ்வீட் பாக்ஸ் வாங்கி, தந்தி டிவி நண்பர்கள், சகாக்கள் மற்றும் என்னை சஸ்பெண்ட் செய்த COOவிற்கு வழங்கி கொண்டாடினேன். இது எனது லிபரல் விழுமியங்களுக்கு எதிரான, முரணான செயல் என்பதை உணர்ந்தே இதை செய்தேன். இது போன்ற வழக்குகளில் யாரையும் கைது செய்வதை கடுமையாக எதிர்ப்பவன் தான். ஆனால் எனது வேலைக்கு உலை வைக்கும் செயலை செய்த, பொய்யர் ஒருவர் கைது செய்யப்பட்ட போது சந்தோசம் அடைந்தேன். அது எனது weakness of character தான்.

https://www.facebook.com/athiyaman.karur/posts/pfbid0DiczikXXrhbebaFSJUtLAncqpFhjcD9ejcd5mVHXvbtSi5LR1LKYAa2SvBCR1TXxl?__cft__[0]=AZbcm2dlGQ0O0751iaBQeQ9mwtjJwn0xWwWWVzSqM_Ia_FeUSXfCC0039cztdwbDSaaXMyquQZeexhR-YXCbyToiNeuwJ4JxpEvxiCJ1SBmsDkkk4TwEZDtB7hkEV4XNT_QxkNAK5prE6ljFB9bDpg6wjdCQyPRFGCvuDe0RNhCyRQ&__tn__=%2CO%2CP-R


 

No comments:

Post a Comment

தவெக அரசு -PWD பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம்

 பொதுப்பணித்துறையில் சென்னை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம் : புதுச்சேரியில் வைத்து கை மாறியதாக...