Saturday, June 6, 2026

தவெக அரசு -PWD பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம்

 பொதுப்பணித்துறையில் சென்னை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம்: புதுச்சேரியில் வைத்து கை மாறியதாக தகவல்?: தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரி ஒருவர் தொட்டதுக்கெல்லாம் பணம் கேட்பாராம். அவர் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு எப்படியும் மாற்றி விடுவார்கள் என்ற பயத்தில் இருந்து வந்தாராம். 
https://x.com/sureshkalipandi/status/2063330345563615530
பல கோடி செலவு செய்து அந்த சீட்டில் வந்த அவர் தனது பணியிட மாற்றத்தை தடுக்க மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து மொத்தமாக வசூல் செய்து 70 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளாராம். புதுச்சேரியில் வைத்து இந்த பணம் ஆளுங்கட்சி  முக்கிய பிரமுகருக்கு தந்ததாக  என்று  அவரே சக பொறியாளர்களிடம் கூறியது அந்த துறை வட்டாரங்களில் பரபரப்பாக  பேசி வருகின்றனர். இதனால் தங்களை நிச்சயம் பணியிட மாறுதல் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அவர்கள் கூறியது போலவே மற்ற துறைகளில் பணியிட மாற்றங்கள் நடந்து வரும் சூழலில் பொதுப்பணித்துறையில் மட்டுமே இதுவரை யாரும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்பது அவர்கள் சொல்வது போல கோடிக்கணக்கில் பணம் மாறி இருப்பது உறுதியாகி இருப்பது போன்று தெரிகிறது என்று நேர்மையான பொறியாளர்கள் பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் உயர் அதிகாரி ஏற்கனவே முடித்த பணிகளுக்காக கிட்டத்தட்ட பில் பில் தொகையை வழங்கவும் ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தங்களுக்காகவும் பல நூறு கோடி  வசூல் செய்து  தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பத்து நாட்களுக்குப் பிறகு முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுத்துள்ளாராம். தற்போது பில் தொகை வழங்க தடையும், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கமிஷன் கொடுத்த காண்ட்ராக்டர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். துறையில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் சூழலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் நேர்மையான பொறியாளர்களின் வேதனையாக உள்ளது. இந்த ஆட்சியிலாவது மாற்றம் வரும் நம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் மூர்த்தி நிழலாக இருந்தவரும், நிழல் அமைச்சராக இருந்த மாவட்ட பதிவாளர் உட்பட 3 மாவட்ட பதிவாளர்களை சஸ்பெண்ட் செய்து பதிவு துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை: கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் நிழலாக இருந்த மாவட்ட பதிவாளர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் இருந்த்து. ஆனால் அவர் மீது கடந்த ஆட்சியில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உதவி பதிவுத்துறை தலைவர், துணை பதிவுத்துறை தலைவர் உட்பட யார் எங்கெங்கு பணியாற்ற வேண்டும், அவர்கள் எவ்வளவு தர வேண்டும் என்பது உட்பட அனைத்து முடிவுகளையும் அவர்தான் எடுத்து வந்தார். பத்திரப்பதிவுத்துறையில் நிழல் அமைச்சராக வலம் வந்த அவர் குறித்த முறைகேடு புகார்கள் மற்றும் அவரால் பதிவுத் துறைக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரிக்க தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரனுக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் அவர் விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளனுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நடந்த விசாரணையில் அவர் மீது ஏராளமான முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சியில் பதிவுத்துறை அமைச்சர் பெயரை பயன்படுத்தி மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் நிழல் அமைச்சர் சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பினாமி பெயர்களில் இந்த சொத்தை வாங்கி குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி நிழலில் இது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு விசாரிக்க கோரி கடிதம் எழுதி உள்ளது. இவரைப் போன்று முறைகேடு புகாரின் பேரில் மேலும் இரண்டு மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மேலும் மூன்று மாவட்ட பதிவாளர்களும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட மாவட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

No comments:

Post a Comment

பெந்தகோஸ்தே TPM வேலூர் பாதிரியார் வி. துரை (Pastor V. Durai) மீது இலங்கை தமிழ் பெண் பாலியல் குற்றச்சாட்டு

https://www.youtube.com/watch?v=vZkgy5NbbVw இலங்கையைச் சேர்ந்த  ஒரு தமிழ் பெண்  பெந்தகோஸ்தே பாதிரியார் வி. துரை (Pastor V. Durai)  மீது  கூற...