பொதுப்பணித்துறையில் சென்னை உயர் அதிகாரி ஒருவர் பணியிட மாற்றத்தை தடுக்க 70 கோடி ரூபாய் லஞ்சம் தந்தாராம்: புதுச்சேரியில் வைத்து கை மாறியதாக தகவல்?: தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரி ஒருவர் தொட்டதுக்கெல்லாம் பணம் கேட்பாராம். அவர் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு எப்படியும் மாற்றி விடுவார்கள் என்ற பயத்தில் இருந்து வந்தாராம்.
பல கோடி செலவு செய்து அந்த சீட்டில் வந்த அவர் தனது பணியிட மாற்றத்தை தடுக்க மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து மொத்தமாக வசூல் செய்து 70 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளாராம். புதுச்சேரியில் வைத்து இந்த பணம் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகருக்கு தந்ததாக என்று அவரே சக பொறியாளர்களிடம் கூறியது அந்த துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். இதனால் தங்களை நிச்சயம் பணியிட மாறுதல் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அவர்கள் கூறியது போலவே மற்ற துறைகளில் பணியிட மாற்றங்கள் நடந்து வரும் சூழலில் பொதுப்பணித்துறையில் மட்டுமே இதுவரை யாரும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்பது அவர்கள் சொல்வது போல கோடிக்கணக்கில் பணம் மாறி இருப்பது உறுதியாகி இருப்பது போன்று தெரிகிறது என்று நேர்மையான பொறியாளர்கள் பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் உயர் அதிகாரி ஏற்கனவே முடித்த பணிகளுக்காக கிட்டத்தட்ட பில் பில் தொகையை வழங்கவும் ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தங்களுக்காகவும் பல நூறு கோடி வசூல் செய்து தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பத்து நாட்களுக்குப் பிறகு முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுத்துள்ளாராம். தற்போது பில் தொகை வழங்க தடையும், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கமிஷன் கொடுத்த காண்ட்ராக்டர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். துறையில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் சூழலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்பதுதான் நேர்மையான பொறியாளர்களின் வேதனையாக உள்ளது. இந்த ஆட்சியிலாவது மாற்றம் வரும் நம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment