Monday, August 24, 2026

முல்லைப் பெரியாறுக்கு மாற்றாக புதிய அணையைக் கட்ட முழுச் செலவையும் கேரளம் அரசே ஏற்கும்- கேரள முதல்வர்

 "தமிழக எல்லையில் தமிழக அரசே புதிய அணையைக் கட்டிக் கொள்ளலாம்; அதற்கான முழுச் செலவையும் கேரள அரசே ஏற்கும்" என இன்றைய கேரள முதல்வர்


அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இது தமிழகத்திற்குச் செய்யும் உபகாரம் போலத் தோன்றும். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் வஞ்சகமும் உண்மையின் கோர முகமும் உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும். முல்லைப் பெரியாறின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியான 5,398 சதுர கிலோமீட்டரில், 5,284 சதுர கிலோமீட்டர் கேரளப் பகுதியிலும், வெறும் 114 சதுர கிலோமீட்டர் மட்டுமே தமிழகப் பகுதியிலும் உள்ளது. தமிழக எல்லையில் நாம் அணையைக் கட்டினால், சுற்றிலும் நீர்ப்பிடிப்புப் பகுதியே இல்லாமல் ஒரு சிறிய கண்மாய் அளவுக்குக் கூட நீரைக் தேக்க முடியாது. அணையைக் கட்டிவிட்டு நீரனுப்பக் கோரி மீண்டும் அவர்களிடமே பிச்சை கேட்க வைக்கும் 'அறிவாளிகளின் பகடையாட்டம்' இது! நூறாண்டுகாலப் போராட்டத்திற்குப் பின், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுப் பெறப்பட்ட உரிமை இது. இந்த அணையின் கட்டுமானத்தின் போது தன்னுயிர் நீத்த தமிழர்களின் எண்ணிக்கையாவது அவர்களுக்குத் தெரியுமா? அங்குள்ள 483 சமாதிகளும் 21 கல்லறைகளும் தமிழன் சிந்திய குருதியை இன்றைக்கும் பறைசாற்றுகின்றன. உலகத் தரம் வாய்ந்த இந்த அணையின் கட்டுமானத் தொழில்நுட்பக் கூறுகள் கேரள முதல்வருக்குத் தெரியுமா என்பதும் சந்தேகமே. இங்கு ஆய்வு செய்ய வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே அணை பற்றிய அறிக்கைகளை அனுப்புகிறேன். "புதிய அணைக்குக் கேரளம் பணம் தருமாம்!" – இதைவிடப் பெரிய காதுகுத்து வேறு எதுவும் இருக்க முடியாது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது நாங்கள்; அதில் கேரளத்தின் ஒரு ரூபாய் பங்களிப்பு கூடக் கிடையாது. மாறாக, இயற்கை தந்த தண்ணீருக்குக் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாகக் கேரளத்திற்குத் வரி செலுத்தி வருகிறோம். தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தவனின் மடியிலிருந்தே பணத்தைப் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது இவர்களின் தர்மப் பேச்சு! கேரளத்தின் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சிகள் தொடர்ந்து செய்துவரும் இந்த அநீதியைத் தமிழகம் எடைபோட வேண்டிய தருணம் இது. பணத்தைப் பற்றிப் பேசும் கேரள முதல்வரே... இன்று அணை இருக்கும் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பழங்காலத்தில் மதுரை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த தமிழ்நிலங்கள். சந்தேகமிருந்தால் உங்கள் அருகில் உள்ள பூஞ்சாருக்குச் சென்று பாருங்கள்; பாண்டியர் பரம்பரையின் எச்சங்கள் எங்கள் வரலாற்றின் மீதிக்கதையை உங்களுக்குச் சொல்லும். ஒன்று செய்கிறோம்... எங்கள் வரலாற்றுக்குரிய அந்த மொத்த நிலத்திற்குமான தொகையை நாங்களே தருகிறோம்! எவ்வளவு தொகை என்பதை நீங்களே தீர்மானியுங்கள். எங்கள் நிலத்தையும் அணையையும் எங்களிடமே ஒப்படைத்துவிடுங்கள். அணையில் 152 அடி நீரைத் தேக்கி, இராமநாதபுரம் வரை எங்களின் ஐந்து மாவட்டங்களின் பஞ்சத்தைப் போக்கிப் பசுமையாக்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதன்பின் எங்களைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவையில்லை!

https://x.com/Srinivasan790/status/2091170815790428375?s=20

https://x.com/Babubabuji16/status/2091415021767262562?s=20

https://x.com/SivaSembian/status/2091162623505301578?s=20

https://x.com/ThamizhTharmar/status/2091541203955454422?s=20

No comments:

Post a Comment

சட்டவிரோத மசூதி -ஆதரிக்கும் மதவெறி திமுக, கம்யூனிஸ்டுகள்

  நீதிமன்றத்திற்கு எதிராக மத வழிபாட்டு முறைகளுக்கு எதிராக இவர்கள் மசூதி கட்டியதெல்லாம் அராஜகம் இல்லையாம் https://x.com/Srinivasan790/statu...