Monday, August 31, 2026

கேரளா சுன்னி முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குள் அடையணும் - மிலாதுநபி & ஓணம் பின் பட்வா

https://www.facebook.com/story.php?story_fbid=1089455177160720&id=100082887444876

https://m.youtube.com/watch?v=kHMIIo_pr5U

கொச்சி: 'பெண்கள் பொதுமேடைகளை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்,' என்று கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு, சமஸ்தா கேரள ஜமியத்துல் உலமா பொதுச்செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சமஸ்தா அமைப்பின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'மத நிகழ்ச்சிகளில் பெண்கள் ஆண்களுடன் மேடையைப் பகிர்வதோ அல்லது பொது வெளியில் அவர்களுடன் இணைந்து தோன்றுவதோ கூடாது,' என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், கொச்சியில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டில் காந்தபுரம் அபூபக்கர் முஸ்லியார் பேசியது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது; பெண்கள் ஆண்களுடன் பொது நிகழ்வுகளில் மேடையைப் பகிரக் கூடாது. பொது வெளியில் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுப்பதற்காகவே, முஸ்லிம் பெண்களுக்கு பர்தா அணியும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 'பொது வெளிகளில் பெண்கள் தோன்றவே கூடாது. அவர்கள் வீடுகளில் தான் இருக்க வேண்டும் என்று புனித குரான் போதிக்கிறது.

நாங்கள் மத போதனைகளைக் முறையாகக் கற்றுள்ளோம். கடந்த 100 ஆண்டுகளாக சமஸ்தா தலைவர்கள் இதையே கற்பித்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே நாட்டில் உள்ள பெண்கள் கண்ணியத்துடன் வாழ்ந்து வந்ததை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இதைத் தொடர்ந்து சொல்வோம். யாரும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களின் பொதுவாழ்வு மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு எதிரான முஸ்லிம் மதகுருவின் இந்தப் பேச்சுக்கு, பெண் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.



No comments:

Post a Comment

பாகிஸ்தானில் இருந்து விஜய் தலபதி என கூலிக்கு தவெக ஆதரவு வலை பிரச்சாரம்

 'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து...