Monday, July 13, 2015

சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் -மக்கள்- வெளிநாட்டுப் பணத்தை கொள்ளை அடிக்கும் பேராயர்கள் - குடும்பத்தினர்.

கோயமுத்தூர் CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் உறவினர்கள்
பிஷப் அவர்களின் உறவினர்கள் டையோசிஸ்ஸின் முக்கிய பதவிகளில் நிறைந்துள்ளனர். பிஷப்Rt.Rev.துரை அவர்களின் மனைவி Mrs.Rev.சூடாமணி துரை அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட பதவிகள் ஆவன.
28_11_2010_006_047-kovai-bishop.jpg?w=542&h=761 Image result for சி.எஸ்.ஐ. சர்ச்  மோசடிகள் Image result for பலான பாதிரிகள் Image result for சி.எஸ்.ஐ. சர்ச்  மோசடிகள்   Image result for சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள்
 Image result for சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள்
1. Ann’s Human Resource Centre,
2. Mother.Jothi - Womens Empowerment
3. Sahayam - Leprosy Rehabilitation
4. Tree - Tribal Women - mowerment - 20 மாவட்டங்களில் நடக்கும் திட்டம்
5. Nesam- Prisoners Family Welfare,
6. Yuvathi- Grilcnild Programme
7. Casu - HIV/AIDS Care and Support,
8. Pasam - Senior Citizen’s Welfare
9. Thunai- Widows Welfare,
10. STC- Secretarial Training Centre
11. Tabitha Tailoring institute,
12. Sengithi - Care for Araramis.
இவைகளில் பெரும்பான்மையானவைகளுக்கு ஜெர்மனி தேசத்திலிருந்து உதவிகள் ஏராளமாக கிடைக்கிறது.
மேலே காணப்பட்ட ஸ்தாபனங்களுக்கு பணவுதவி அவசரமாக தேவை என்று ஜெர்மனி நாட்டில் உள்ள அனைத்து சபைகளுக்கும் உதவி கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
star2.gif (ஜெர்மனியில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் இதை விசாரித்து இதற்குமுன் கோயமுத்தூர் டையோசிஸ்க்கு அனுப்பப்பட்ட உதவி பணம் சரியாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டு மேற்கொண்டபின் மாத்திரமே உதவிகளை அனுப்பி இந்த நல்ல காரியங்களுக்கு உதவலாம்.    காரணம் இதுவரை பெற்ற உதவிகள் செலவழித்த கணக்குகளில் பல தவறுகள் நடந்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். ஜாமக்காரனை டொச் மொழியில் மொழிபெயர்த்து வளமையாக சபைத்தலைவருக்கு கொடுக்கும்போது இவ்விவரத்தையும் குறிப்பிட்டு இவைகளின் விவரம் தேவையானால் உங்கள் மூலமாகவே அவர்களை எழுதச்சொல்லுங்கள்).
star2.gifசேலத்தில் மட்டும் 6 ஸ்தாபனங்களுக்கு பிஷப் அவர்களின் மனைவி தலைவி பதவியில் இருக்கிறார்.
star2.gif ஆடிட்டர் கணக்குப்படி ஒருமுறை சேலம் வந்தால் 6 ஸ்தாபனங்களிலும் பிரயாண செலவு-உள்பட மற்ற செலவுகளுக்கான பெரும் தொகையாக தனித்தனியாக TA செலவு தொகையைஒவ்வொரு ஸ்தாபனத்தின் பெயரிலும் பெற்றுக்கொள்வதாக செய்திகள் கூறுகிறது. ஆடிட்டர் அவர்களும் அதை ஆட்சேபித்து இருக்கிறார்.

கோயமுத்தூர் பிஷப்.துரை அவர்களின் உறவினர்களின் பதவி பட்டியல்
பெயர்உறவின் முறைபதவி
1. Mr.Murthiபிஷப்.துரையின் கூடபிறந்த தம்பிErode CSI College Secretary
2. Mr.Dhanabalanபிஷப்.துரையின் கூடபிறந்த அண்ணன்CSI ஆரம்ப, தொடக்கப் பள்ளிகளுக்கும் Correspondent ஆக.
3. Mrs.Sudamaniduraiபிஷப்.துரை அவர்களின் மனைவிகண் ஆஸ்பத்திரியின் தலைவர், மன
நலம் குன்றியவர்களின் விடுதி தலைவர்.
Working Womens Hostel தலைவர்
- போதகசேகர Chief Executive Officer
4. Mr.Samuel Sargunamபிஷப்பின் அண்ணன் மகன்Treasurer - Visitor பதவி CSI Hr. Sec. Schools, Erode.
5. Mrs.Metilaபிஷப்பின் அண்ணன் மகள்CSI Hr. Sec. School, Erode.இன்டர்வியூ இல்லாமலே சேர்க்கப்பட்டவர் இவருக்கு பள்ளி அலுவலக வேலை தெரியாததால் ரிட்டயர்ட் ஆன கிளார்க் தனக்கு உதவியாக தற்காலிக வேலையில் அமர்த்தி 4000 சம்பளமாக கொடுக்கிறார்களாம்.
6. Mr.Daniel Thangamபிஷப் அண்ணன் மகன்Paying Hostel Warden. ஏற்கனவே மூன்று இடங்களில் வேலைசெய்து பல குற்றச்சாட்டுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறார்.
7. Mr.Godwin Santhoshபிஷப்பின் அண்ணன் மகன்உடற்கல்வி ஆசிரியர். இவருக்கு சீனியராக பலர் காத்திருக்க எந்தவித இன்டர்வியூயும் இல்லாமல் ஆசிரியர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
8. Mr.Edwin Santhoshபிஷப்பின் மற்றொரு அண்ணன் மகன்அப்பாசாமி கல்லூரியில் புரொபஸர் வேலை.
9. Mrs.Jaculinபிஷப் மனைவியின் தங்கைCSI (Salem) Hr. Sec. School BTஆசிரியை பதவி
10. Isreal Uthaya Thangamபிஷப் அண்ணன் மகன்CSI விடுதி நோட், புக் சப்ளை செய்வது
பிஷப்.துரை அவர்களின் சொந்தங்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. மேலே உள்ள பதவி விவரங்களை தொகுத்தவர்கள் அதை எழுதும்போது மேலும் மீதியுள்ள உறவினர் இரண்டு பேர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலே வாசித்த விவரங்கள் எந்த அளவு உண்மையானது. இப்போது அவர்களில் எத்தனை பேர்களுக்கு வேறு புது பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனைபேர் பதவியில் இப்போது இல்லை என்ற விவரங்கள் எனக்கு தெரியாது.
star2.gif இதில் பிஷப்.துரை அவர்களின் கூடப்பிறந்த தம்பியான மூர்த்தி என்பவருக்குதான் சுமார் கோடி ரூபாய் 3 செக்குகளாக டையோசிஸ்ஸிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கோடிகளின் கணக்கின் விவரத்தை கோயமுத்தூர் இம்மானுவேல் ஆலய வெஸ்ட்ரியில் வைத்து சபைமக்கள் பிஷப்பிடம் கேள்வி கேட்டப்போதுதான் வாடா போடா என்ற ஏகவசனத்தில் கேள்வி கேட்டவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் வெகுண்ட மக்கள் பிஷப் காரையும், பிஷப் மகனின் காரையும் போகவிடாமல் சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
star2.gif உறவினர் லிஸ்ட்டில் முதலாவதாக காணப்படும் நபர் Mr.மூர்த்தி அவர்கள் ஆவார். இவர் Erode CSI Christian Art College செயலாளராக இருந்தவர் இவர். பிஷப்.துரை அவர்களின் கூடபிறந்த சகோதரர் ஆவார்.
இவரும் முன்னாள் டையோசிஸ் பொருளாளருமான Mr.சுவாமிதாஸ் என்பவரும் மேற்படி கல்லூரி பேங்க் கணக்கில் Co-Signatoryயாக செயல்பட்டு Bank of Maharastra, Erode Branch A/c. CD 100361ல் நான்கு செக் உபயோகித்துள்ளார்.
1. Cheque No.254870      Date 10-08-2007 தொகை 50 லட்சம்
2. Cheque No.254871      Date 15-09-2007 தொகை 50 லட்சம்
3. Cheque No.254872      Date 25-10-2007 தொகை 45 லட்சம்
4. Cheque No.254873      Date 26-11-2007 தொகை 25 லட்சம்
ஒரு கோடியே எழுபது லட்சம் என்ற இந்த மொத்த தொகையானது கல்லூரியின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிக்காக என்று எழுதப்பட்ட அதற்காக செலவழிக்காமல் இவர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதுதான் வெளியரங்கமான குற்றச்சாட்டு.
மேலும் இந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படி கோயமுத்தூர் டையோசிஸ் நீதி மற்றும் சொத்து பராமரிப்புக்காக ஒரு கமிட்டி உண்டு. அந்த கமிட்டியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை அல்லது நிர்வாக கமிட்டியிடமாவது அனுமதி பெறவேண்டும். ஆனால் அங்கும் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த முறைகோடுகளை அறிந்து சிலர் கல்லூரி நிர்வாகக் குழு,        அலுவலக பொறுப்பாளர்களிடம் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. கிறிஸ்டியன் வெல்பேர் மூவ்மெண்ட் என்ற சபைக்காக பாடுபடும் நல்லெண்ண சங்கம் 26.8.2008ல் தினத்தந்தி என்ற தினசரி நாளிதழில் எச்சரிக்கை விடுத்தது.    அதன்பின் பிஷப் சார்பில் வக்கீல் பதில் எழுதினார்.    அதன் முடிவு இதுநாள் வரை அறியவில்லை.
star2.gif ஈரோடு பெண்கள் ஆசிரியர் பயிற்சியில் பள்ளியின் கரஸ்பான்ட்டாக இருக்கும் பிஷப்அவர்களின் உடன்பிறந்த தம்பி திரு.மூர்த்தி அவர்களிடம் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்க 80லட்சம்கொடுக்கப்பட்டது.      இதுவரை இதற்கான செலவு செய்ததின் காரணத்தையோ,    கணக்கையோ காண்பிக்கவில்லை.
இதுபோல ஏராளமான பெரும்தொகைகளை கையாண்ட திரு.மூர்த்தி அதன் கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.      இதன் காரணமாக திரு.மூர்த்திஅவர்களுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ்ஸில் விவரம் அறிவிக்கப்பட்டு தேடுதல் ஏற்பாடு நடந்துள்ளதால் மூர்த்தி என்பவர் தேடப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
star2.gif முன்காலத்தில் பிஷப்பாக பணி செய்தவர் யாவரும் இயேசுவின் வழியை பின்பற்றி நடந்தனர்.
நான் ஊழியம் கொள்ள வரவில்லை.
நான் ஊழியம் செய்யவே வந்தேன் என்று இயேசு கூறினார்.
ஆனால் இன்று பிஷப்மார் பதவி ஏற்றவுடன் ராஜாவைப்போல் பவனி வர மிக உயர்ந்த விலையுள்ள பல கார்களை டையோசிஸ் பணத்தில் வாங்கி பவனி வரவே ஆசைப்படுகின்றனர். பல்வேறு இடங்களில் பங்களாக்களும்,        பிளாட்களும்,        பினாமி பெயரில் சொத்துகளும் வாங்கி குவிக்கின்றனர். தன்  சொந்தக்காரர்களை பணம் பெரும்பகுதிகளில் பதவி கொடுத்து அவர்கள் மூலமாக பணக்கொள்ளை அபாரமாக நடைபெறுகிறது. திருமண்டல பொறுப்பாளர்களுக்கும் இதில் பெரும்பங்கு செல்வதால் எல்லா தவறுகளுக்கும் பக்கபலமாக நிற்கின்றனர்.

மதுரை-இராமநாதபுரம் CSI டையோசிஸ்
பிஷப்.கிறிஸ்டோபர் ஆசீர் அவர்களின் உறவினர் வகிக்கும் பதவிகள்
பெயர்உறவின் முறைபதவி
1. Mrs.Jothi Sophiaபிஷப்பின் மகள்நர்சிங் கல்லூரி முதல்வர்
2. Mr.Thavamani Christopherபிஷப்பின் மருமகன்அமெரிக்கன் கல்லூரியின் BARSAR
3. Mr.Joelபிஷப்பின் மகன்மதுரை அமெரிக்கன் High Schoolஆசிரியர்
4. Mr.Jebaபிஷப்பின் மகன்?
5. Mr.Jenovaபிஷப்; மருமகனின் தங்கைமதுரை OCPM High School Teacher
6. Mr.Novarajபிஷப் மருமகனின் சித்தப்பாபள்ளிக்களுக்கான தனி அலுவலர்
7. Mr.Maduramபிஷப் மருமகனின் தகப்பனார்மதுரைCSI டையோசிஸ்ஸின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்டிட வேலைகளின் நிரந்தர காண்ட்ராக்டர்.
இந்த கணக்கெடுப்பு செய்தி தொகுப்பு 4 மாதத்துக்கு முந்தியது. இந்த நான்கு மாதத்தில் பிஷப்.ஆசீர்அவர்கள் இன்னும் சொந்தங்கள் எத்தனைப்பேர்களை தன் டையோசிஸ்ஸில் வேறு பல பதவிகளில் அமர்த்தியிருப்பாரோ அறியேன். இதன் இடையில் மேலே குறிப்பிட்டவர்களில் யாரையாவது மாற்றி வேறு சொந்தத்தையோ, வேறு யாரையோ நியமித்திருப்பாரோ நான் அறியேன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்சனை:
15_03_2011_006_023-madurai-american-college.jpg?w=640&h=575 Image result for பாதிரியார் லுத்ரன் சர்ச்
அநேக நூற்றாண்டுகளாக இந்தியாவில் பிரசித்திப்பெற்ற கல்லூரிதான் அமெரிக்கன் கல்லூரி. இங்கு படித்து நீதிபதிகளாகவும், மந்திரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், அரசாங்க உயர் அதிகாரிகளாகவும் ஆகியிருக்கும் நபர்கள் ஏராளம்! ஏராளம்! அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர்கள் என்றாலே மிக பெருமையாகவும், கவுரவமாகவும் என்னப்படுவார்கள். இங்கு படித்தவர்களுக்கு உலகெங்கும் தனிமதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஒரு சொசைட்டி போர்டாக அந்த காலத்து மிஷனரிமார் ஏற்பாடு செய்து CSIடையோசிஸ்ஸின் அதிகாரத்துக்குட்படாத தனி Bபோர்டினால் இந்த கல்லூரி நடத்தப்பட்டு வந்தது. இதன் வளாகத்திலுள்ள Chapelலில் இரண்டுமுறை பல வருடங்களுக்கு முன் நான் பிரசங்கம் செய்து உள்ளேன். இந்த கல்லூரியைப்பற்றியும் இதன் ஆளுமைப்பற்றியும் 1965ம் வருடம் முதல் நான் அறிவேன்.
மதுரை CSI டையோசிஸ்ஸை எத்தனையோ பிஷப்மார் பொறுப்பெடுத்துள்ளனர். அந்த பிஷப்மார் யாரினாலும் இந்த கல்லூரிக்கு ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.    அவர்களெல்லாம் டையோசிஸ் காரியங்களில்மட்டும் தலையிட்டு ஊழியம் நடத்தி வந்தனர். ஆனால் பிஷப்.ஆசீர் அவர்கள் மட்டும்தான் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்கன் கல்லூரியிலும், தன் அதிகாரம் செலுத்திஅமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நீண்டு நெடுங்தூரம் உள்ள, மிஷனரிகள் வாங்கிபோட்ட நிலங்களை விற்று, அங்கு வியாபார Complex கட்டிடம் பணியும் திட்டமும் வேறு பல திட்டங்களும் இட்டு அதை நிறைவேற்ற சவுகரியமாய் தனக்கு சாதகமான நபரை பிரின்சிபாலாக நியமித்தார்.    அது சரிபட்டு வராததால்,    தன் மருமகனையும் Barsarஆக நியமித்தார்.    இப்போதுதான் பிரச்சனை எழும்பிற்று. அமெரிக்கன் கல்லூரி தனி Bபோர்டால் நடத்தப்படுகிறது.    எல்லா நியமனங்களும் Bபோர்டில் உள்ள கமிட்டிதான் தீர்மானிக்க வேண்டும்.      அந்த கமிட்டிக்கு பிஷப் தலைமை தாங்கலாம் ஆனால் ஆளுகைகளில் தலையிட முடியாது. இப்போது பிரச்சனை அதிகமானது. பிஷப் தன் ஆட்களையும், குண்டர்களையும், சில ஆளும் கட்சி தலைவர்களின் துணையுடன் கல்லூரிக்குள் கூட்டிவந்து பிரச்சனை உண்டாக்கினார். உதவிக்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் உதவியை நாடினார். முடிவில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அதை தலித் பிரச்சனைஎன்று கூறி மத கலவரமாற்றினார்கள்.
star2.gif அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, பட்டிமன்றங்கள் மூலம் பிரபலமாகியProf.Dr.சாலமன் பாப்பையா அவர்கள் அதே கல்லூரியில் படித்து, அதே கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவராகும். அவர் வைராக்கியத்தோடு இதில் தலையிட்டார். அமெரிக்கன் கல்லூரி பற்றிய பத்திர ஒப்பந்தங்களை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து எல்லா அரசியல் தலைவர்களையும் கூட்டி மிஷனரிகள் எழுதிய அன்றைய ஒப்பந்தங்களை காட்டி விவரித்தார். அத்தனைப்பேரும் பிஷப்.ஆசீரின்செய்கைகளையும் பிழையான ஆக்கிரமிப்புகளையும் எச்சரித்தனர். அதற்கும் பிஷப் இணங்கவில்லை.
பிஷப்.ஆசீர் அவர்கள் கோர்ட்டுக்கு போனார்.      கோர்ட் பத்திர ஒப்பந்தங்களை நீதிபதி வாசித்துபிஷப்பை நீதிபதி கண்டித்து இனி அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று பிஷப்பை எச்சரித்து பிஷப் நியமித்த இரண்டு பிரின்சிபல்களையும் நீக்கிவிட்டு சீனியாரிட்டி பிரகாரம் அடுத்த நிலையில் உள்ளவரை பிரின்சிபல்லாக நியமித்து கட்டளையிட்டார். மதுரை கலெக்டர் - போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியவர்கள் கல்லூரியின் இந்த புதிய ஏற்பாடுகளை தொடர்ந்து கவனித்து ரிப்போர்ட் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது பிஷப்.ஆசீர் அவர்களுக்கு பெருத்த அவமானமாகிப்போனது மட்டுமல்ல, மற்ற டையோசிஸ் பிஷப்மார்களுக்கு இந்த கோர்ட் தீர்ப்பு ஒரு பாடமாக ஆனது. இப்படி அதிகாரவெறியும், டையோசிஸ் சொத்து அபகரிப்பும், மதுரைடையோசிஸ் எங்கும் பலவிதங்களில் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. பசுமலைஎன்ற இடத்திலிருந்து காலகாலமாக வாழ்ந்த பலரை வீடுகளை காலிசெய்ய சொல்லி அவர்கள் கண்ணீரோடு எழுதிய கடிதங்கள் பல கதைகளை வெளிப்படுத்துகிறது. இத்தனைக்கும் இவர் மதுரைக்கான பிஷப் மாத்திரமல்ல, CSI முழுவதுக்கும் உதவி மாடரேட்டர் பதவியும் வகிக்கிறார். இவர் சபை குருவானவராக இருந்தபோது அன்று பிஷப்பாக இருந்த Rt.Rev.போத்திராஜிலு அவர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தவர்.    இவர் தொல்லை தாங்காமல் பிஷப்.போத்திராஜிலு அவர்களே பதவிகாலம் முடியும்முன் பிஷப் பதவியை ராஜினாமா செய்து ஒதுங்கிப்போனார்.
இப்படிப்பட்ட தெய்வபயம் அற்றவர்கள் பிஷப்பாகவும், உதவி மாடரேட்டராகவும் பதவி வகித்து அந்த பதவியின் கவுரவத்தை நாசப்படுத்தி அந்த பதவியை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பது வேதனைக்குறியதாகும். பிஷப்.போத்திராஜிலுக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து துண்டுபிரதிகளை அச்சடித்து 1994 சினாட் மீட்டிங்கில் உபயோகித்து சரித்திரம் படைத்தவர்.
    
20110224a_006101011-csi-school-teachers-strike.jpg?w=600&h=612
Image result for பாதிரியார் லுத்ரன் சர்ச்
சேலம், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் தேவாலயத்தின் பொருளாளர் பீட்டர் மார்ட்டின் ஞானமணி ரூ.50 லட்சம் மோசடி

 http://www.dinamalar.com/news_detail.asp?id=940963&Print=1

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்...
DINAMALAR.COM

Image result for பலான  பாதிரியார்
Image result for சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள்சர்ச்ச எனில் ஊழல் அராஜகம் தானா?

சர்ச்சே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்ச்சில் பாவமன்னிப்பு கேள் எனச் சொன்னால் ஊழல் எப்படி குறையும்
Image result for சி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள்


Image result for கிறிஸ்துவ பாதிரி

No comments:

Post a Comment