Wednesday, June 16, 2021

தோமாவின் பணிகள் காட்டும் கதையின் இந்தியாவிற்கும் தோமா வரவில்லையாம் - வாட்டிகன்

 தோமாவின் பணிகள்-Acts of Thomas கதை

தோமாவின் பணிகள்  என்பது கிபி 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிரியாக் மொழியில் இயற்றப்பட்ட  நூலாகும். இயேசு  கிறிஸ்துவின் 12 துணைவர்களில் ஒருவரான தோமாவின்  கதை கூறுகின்ற நூல். இந்திய அரசரான கொண்டபோரசை தோமா  கிறிஸ்தவராக மாற்றியது குறித்தும், மஸ்டாய் என்ற (பாலைவனஅரசரின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டது குறித்தும் இதில் கதைகள் உள்ளன

இயேசு கிறிஸ்து  தோமாவின் பணிகள்  கதையின்படி தோமா இயேசுவோடு ஒரே பிரசவத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர், பார்க்க இயேசு போலவே தான் இருப்பாராம்

 

மரணத்திற்குப் பிறகு, அவரது சீடர்கள் எந்த நாட்டில் சென்று பணியாற்ற வேண்டும் என்பது குறித்து சீட்டுப் போட்டு பார்த்தனர். அப்போது, தோமாவுக்கு விழுந்த சீட்டில் இந்தியா என வந்ததாம். வயது - உடல் நிலையால் மொழி தெரியாது என இந்தியாவுக்கு செல்ல அவர் விரும்பவில்லை.  மரணமான இயேசு வந்து சொல்லியும் மறுத்தாராம்

அப்போது பாலஸ்தீன் வந்திருந்த இந்தி வியாபாரி  ஹப்பான்-டம் அடிமையாக  இயேசு 30 வெள்ளிக்கு  தோமாவை விற்றாராம்.

 

முதலில் நுழைந்த நகரில் ஒரு அரச திருமணத்தில் கலந்து கொண்டு, இரவு முதலிரவு  படுக்கை அறையில் ஆணும்- பெண்ணும் உடலுறவு செய்தல் பரலோகம் நுழைய முடியாது - இயேசு போதித்து எனமணமக்கள் கூடலைத் தடுத்தார்.

 அறிந்த மன்னர் தோமாவைத் தேட தப்பி வியாபாரி  ஹப்பான் ராஜா கொண்டபோரஸ்ஸிடம் அழைத்து சென்று நல்ல வீடு கட்டுபவர் என்றிட பெரும் பணம் கொடுத்து தனக்கு அரண்மனை கட்ட சொன்னாராம்.  சி காலத்திற்கு பின் மாளிகையைப் பார்க்கச் அரசர் கொண்டபோரஸ்,   சென்றர். அங்கு ஒரு சிறிய கல் கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தோமா தம்மை ஏமாற்றி விட்டதாகக் கூறி, அவரை அரசர் சிறையில் அடைத்தார். அப்போதுஅரசரின் தம்பி காத் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். செத்துப்போன காத், மீண்டும் உடலில் உயிர் பெற்று எழுந்து மேலுலகில் உள்ள அண்ணன் மாளிகை தனக்கு கேட்க, தோமா மதமாற்றத்திற்கு செலவிட்டதால் எழுந்த மாளிகை எனப் அரசர் கொண்டபோரஸ், அவரது குடும்பத்துடன்  கிறிஸ்தவராக மதம் மாறினார்.

 

பின்னர் அருகிலுருந்த நாட்டுக்கு (பாலைவன) சென்ற தோமா, கேரிஷ் என்ற அரசவை பணியாளரின் மனைவி மிக்தோனியாயின் நோயை குணப்படுத்தினார்.  அறையில் ஆணும்- பெண்ணும் உடலுறவு செய்தல் பரலோகம் நுழைய முடியாது என மிக்தோனியா போதிக்க கணவரோடு உடலுறவு மறுத்தார். கேரிஷ் தோமாவை கைது செய்து சிறையில் அடைத்திட, லஞ்சம் கொடுத்து தப்பினார். மிக்தோனியாவை சந்தித்த போது உடன் இருந்த பணிப்பெண் நர்கியாவையும் மதம் மாற்றினாராம்.

அரசர் மஸ்டாய் மனைவி ராணி.டெர்டியாவை மிக்தோனியாவிடம் அனுப்ப ராணியின் மனதை அவர்கள் மாற்றிட கிறிஸ்தவராக மாறி, ராணியும் உடலுறவு மறுத்தார். 

மஸ்டாய் அரசர், தோமாவைக்  மரண தண்டனை ஆணையிட்டார்., அரசரின் காவலர்கள் நாட்டில் எல்லையில் மலை மேல் அழைத்து சென்று ஈட்டியால் குத்தி கொலை செய்தனர்.

 

சில காலம் பின்பு மாஸ்டய் மகன் உடல்நிலை மோசமடைய மருத்துவம் ஏதும் கேட்காது போக, தோமா மரணத்தின் பலன் என உணர்ந்து, தோமாவின் பிணத்தை புதைத்த பிணவறை சென்று பார்த்தார். பிணவறை காலி, கேட்டால் அங்கிருந்து பிணத்தை வெளியெடுத்து வேறிடம் மாற்றி பின்னர் மெசபோதோமியா, இத்தாலி அனுப்பியதை அறிந்தார். அரசர் மஸ்டாயும் கிறிஸ்தவராக மதம் மாறினாராம். 

மஸ்டாய் அரசர் நாடு பற்றி உள்ள குறிப்பு

எபிரேய பைபிள் கதைகளில் எஸ்ர் என்ற நூலில் இந்தியா குறிப்பிடப் பட்டுள்ளது

எஸ்தர் 1:1  செர்கஸ் (Xerxes) அரசனாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். 2 அரசன் அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.

 

எஸ்தர் 8:9 மிக விரைவாக அரசன்  செர்கஸ் செயலாளர்கள் அழைக்கப் பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது. 

ஈரான் அருகில் உள்ள பகுதியே இந்தியா என இந்தப் பகுதி கூறுகிறது

 
கொண்டபோரஸ் மன்னன் காசுகள் எனப் பல கிடைத்துள்ளன
 கொண்டபோரஸ் ஆட்சி செய்த காலமே பொமு.10ல் முடிந்தது என தற்போது வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கின்றனர்.
 
கொண்டபோரஸ் காசுகளில் கிரேக்க கடவுள் மற்றும் சிவ பெருமான் உருவங்கள் உள்ளது. 
கொண்டபோரஸ் பேரன் காசுகளில் கிரேக்க கடவுள் உருவங்கள் உள்ளது.
 
கத்தோலிக்க வாட்டிகன் போப்பரசர் பதிப்பகம் வெளியிட்ட நூல், பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ், பட்லர் புனிதர்களின் வரலாறு, என 12 புத்தகம் கொண்ட தொகுப்பு
இரண்டு பேராயர் மதிப்பீடுடன் உள்ள நூல் - மிகத் தெளிவாக் தோமா பணிகள் கதையில் சிறிதும் வரலாற்று உண்மை இல்லை என்றும், 3.நூற்றாண்டு கதாசிரியர் இந்தியக் கப்பல் பணியாளர் அல்லது வியாபாரிகளிடம் பழைய மன்னர், ஊர்கள் பற்றி கேட்டு கதையை புனைந்திருப்பார் எனத் தெளிவாக உரைக்கிறார்.

இந்தியாவில் கிறிஸ்துவம் 9ம் நூற்றாண்டு அல்லது சற்று முன்பு கானாவின் தோமா எனும் அரேபிய வியாபாரி கீழாக வந்த அகதிகளே. 
16ம் நூற்றாண்டு போர்ட்டுகீசியர் வந்த போது சில நூறு மக்களே கிறிஸ்துவர், பின்பு பல ஈழவா மற்றும் பட்டியல் சமூகத்தினரை மதம் மாற்றிட தங்களை தோமா கிறிஸ்துவர் என அழைத்துக் கொண்டனர்.


 








No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...