Wednesday, June 2, 2021

சிலுவைக் கொலைகள் -கனடாவில் கிறிஸ்துவ- 215 பள்ளி குழந்தைகள் எலும்புக்கூடுகள் சிக்கின

உலகை உலுக்கும் செய்தி ஒன்று கனடாவில் இருந்து கிளம்பி உலக மாந்தரின் மனசாட்சியினை உலுக்கி கொண்டிருக்கின்றது


விஷயம் ஒரு சவகுழி தோண்டபட்டது என்பதோடு மேல் நாட்டு ஊடகங்கள் முடித்து கொள்கின்றன, ஆனால் நடந்தது ஒரு இன அழிப்பு மற்றும் மதமாற்ற கொடுமை

வெள்ளையன் அமெரிக்க கண்டதில் ஊடுருவும் பொழுதே அங்கு மக்கள் இருந்தார்கள், அவர்கள் இந்துக்கள் சாயலில் பண்டைய நாகரீகத்தோடு இருந்தார்கள், வானியல் அறிவு முதல் மருத்துவ அறிவுவரை அவர்களுக்கு இருந்தன‌
கொலம்பஸ் இந்தியாவினை தேடி அமெரிக்க கரையினை அடைந்ததால் அவர்களுக்கு இந்தியர்கள் என பெயரிட்டான், அதுவே நிலைத்துவிட்டது
பிரிட்டன் ஸ்பெயின் போர்ச்சுகல் ஸ்பெயின் டச்சுக்காரர்கள் என அந்த மக்களை கொன்றுகுவித்து மதம் மாற்றி இன்னும் பல வகையில் வஞ்சகமாக கொன்று அந்த வளமான மண்ணை ஆக்கிரமித்தனர்
தென் அமெரிக்கா ஸ்பெயினுக்கும் போர்ச்சுகல்லுக்கும் சென்றது, வட அமெரிக்கா பிரிட்டிஷ் பிரான்சின் கட்டுபாட்டில் வந்தது
அதன் பின் அம்மக்களை அதாவது அம்மண்ணின் பூர்வகுடிகளை "ரெட் இண்டியன்ஸ்" (அதாவது இந்தியர்கள் கருப்பர்களாம் இவர்கள் சிகப்பாம்) என பெயரிட்டு மிக கடுமையாக கொன்று குவித்தார்கள்
அதன் பின் தங்களுக்கு தோதாக அடக்கி, அந்த மாபெரும் நாகரீகமும அறிவும் தனித்துவமும் பெற்ற மக்களை அடிமைகளாக்கி தங்கள் மதத்தை ஏற்க வைத்து பெரும் கொடுமை செய்தனர்
இது 15ம் நூற்றாண்டில் இருந்து இந்த 1980 வரை நீடித்தது
ஒரு கட்டத்தில் அந்த மண்ணின் மக்கள் இவர்களை எதிர்க்க வலிவிழந்த பின்னால் தங்கள் வழக்கமான முகமூடியால் அவர்களை அழித்தார்கள்
ஆம், அந்த பழங்குடியினருக்கு இரண்டே வாய்ப்புதான் இருந்தது
ஒன்று இவர்களோடு போரிட்டு சாவது அல்லது அவர்களுக்கு அடிமையாய் அவர்கள் மதத்தை ஏற்றுகொண்டு வாழ்வது
தனி கண்டத்தில் மிக அமைதியாக அந்த மக்களின் சொந்த பூமியில் புகுந்து இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியது ஐரோப்பா
போரில் செத்த எஞ்சிய பழங்குடியினரை மிக தந்திரமாக அழிக்க தீட்டபட்ட திட்டம்தான் "இந்தியன் பள்ளி" உள்ளிட்ட பல திட்டங்கள்
காடுகளில் எதிர்க்க வலுவற்றை இனங்களை ஏமாற்றி அவர்களின் தலைமுறையினை கல்வி உள்ளிட்ட மாற்றங்களால் மாற்றி நல்ல எதிர்காலத்தை கொடுக்க போவதாக அழைத்து வந்து, கல்வியில் இது எல்லோருக்கும் பொதுவான நாடு ஐரோப்பியர் நல்லவர்கள், கிறிஸ்தவம் நல்லமதம், பழங்குடியினர் அயோக்கியர்கள் என மூளைசலவை செய்வது
இதனை ஏற்காமல் அடம்பிடிக்கும் மாணவர்கள் அல்லது சிந்திக்க தெரிந்த மாணவர்கள், கிறிஸ்துவத்தை ஏற்க முடியாத‌ குழந்தைகளை மாணவர்களை கொன்று புதைப்பது
ஆம், பழங்குடியினர் எண்ணிக்கை பெருகினால் அது ஆபத்து. பல சலுகைகளை அவர்களுக்கு கொடுப்பது முதல் பிற்காலத்தில் அவர்கள் சுதந்திர போராட்டத்தில் இறங்கினால் இன்னும் ஆபத்து எனும் வகையில் செய்யபட்ட சதி அது
ஹிட்லர் எங்கிருந்து பாடம் படித்தான் என்றால் இங்கே இருந்துதான் படித்தான் சந்தேகமில்லை
கிறிஸ்தவம் என சொல்லிகொண்டே அந்த பழங்குடியினரை கொடூரமாக சிலுவையினை விட கொடிய தண்டனையில் கொன்ற கொடூரம் அது
அமெரிக்கா கனடாவில் இப்படி ஏகபட்ட புதைகுழிகள் உண்டு
அதில் ஒன்று நேற்று கண்டெடுக்கபட்டிருக்கின்றது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அந்த சவகுழி கண்டெடுக்கபட்டு 214 குழந்தைகளின் எலும்பு கூடுகள் மீட்கபட்டிருகின்றன‌
விஷயம் உலகளவில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது
கனடிய பிரதமர் ட்ரூடோ "எம் வரலாற்றில் இருண்ட பக்கம் திறக்கபட்டது" என்பதோடு விஷயத்தை முடித்து கொண்டார்
பல லட்சம் எலும்பு கூடுகள் மண்ணில் புதைந்திருக்கும் நாட்டில் வெறும் 214 எலும்பு கூடுகளை கண்டு என்னாக போகின்றது என அமைதியோடும் இறுமாப்போடும் கடந்து செல்கின்றது ஐரோப்பா
வளமான பகுதிகளையெல்லாம் இப்படி மிக கடுமையான அழிவுகளுடன் கைபற்றி அம்மக்களை ஒழித்து தங்கள் அடிமைகளாக மாற்றுவது ஐரோப்பிய பாணி
இதில் இந்தியா தப்பி பிழைத்தது, சனாதான தர்மமும் அது கொடுத்த சிந்தனையும் வீரமும் இன்னும் பலவும் இங்கு கிறிஸ்தவம் பெரும் அளவில் காலூன்றாமல் விரட்டி அடித்தது
இப்பொழுது இந்த பூமி சிலிர்த்து கொண்டு தன்னை மீட்டெடுக்கின்றது
வரலாற்றில் நிரம்ப காணபடும் விஷயம் எதுவும் யாராலும் இங்கு சும்மா கொடுக்கபடாது, அது கல்வியோ பொருளோ மதமோ எது கொடுத்தாலும் சுயநலம் ஒன்றே காரணமாயிருக்கும்
இந்தியாவுக்கு கல்வி கொடுத்ததாக சொன்ன கிறிஸ்தவம் ரகசியவழியில் இந்நாட்டை அடிமைபடுத்த விரும்பிற்று, அந்த நீண்டகால திட்டம் இப்பொழுது தேசத்தின் இந்து எழுச்சியால் நொறுங்கி கொண்டிருக்கின்றது
ஐரோப்பிய கிறிஸ்தவம் எவ்வளவு கொடூரமானது என்பதை வரலாறு பல இடங்களில் காட்டிற்று, கிறிஸ்து எனும் பெருமகனின் சிந்தனை அல்லாது ரோமரின் கொடிய அடக்குமுறையும் கொள்ளையும் நயவஞ்சகமுமே கிறிஸ்தவம் என உலகாள கிளம்பிற்று
அந்த கொடிய ஐரோப்பிய கிறிஸ்தவ முகமூடியுடன் கனடாவில் நடைபெற்ற மனித வேட்டைக்கு சாட்சியாக இப்பொழுது தெரிகின்றன அந்த எலும்பு கூடுகள்
இன்னும் ஏராளமான எலும்புகள் அங்கே கண்டம் முழுக்க புதைக்கபட்டிருக்கலாம், ஆனால் அவர்களுக்கான நீதி ஒரு காலமும் கிடைக்க போவதில்லை
ஆர்மீனிய இன அழிப்பு, யூத இன அழிப்பு என எங்கெல்லாமோ மானிட நீதி பேசும் ஐரோப்பிய நாடுகள் இங்கு வாய்திறக்கட்டும் பார்க்கலாம், செய்யவே மாட்டார்கள்
பாவிகளை இரட்சிக்க இயேசு வரவில்லை, மாறாக இவர்களை பெரும்பாவிகளாக மாற்றுவதற்காக வந்திருக்கின்றார் என்பதை வரலாறு குறித்து கொண்டது
ரத்தம் சிந்தி இயேசு மனிதரை மீட்கவில்லை, கோடான கோடி மக்கள் கிறிஸ்தவ கும்பலால் ரத்தம் சிந்தி சாகவே அவர் வந்துள்ளார் என கண்ணீரோடு எழுதுகின்றது வரலாறு
கிறிஸ்தவம் ஒன்றும் அன்பின் மதமல்ல, தொங்கும் கிறிஸ்துவின் சிலுவையோடு வரும் அக்கும்பல் சிரித்து கொண்டே கத்தி சொருகும், அன்பை போதித்து கொண்டே மூச்சடைத்து கொல்லும் ஒரு தந்திர போர்வழி என்பதை சொல்லிபடி கனடாவில் கிடக்கின்றன அந்த சிறுவர்களின் சடலங்கள்
https://www.hindutamil.in/news/world/676864-canada-school.html

கனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு

canada-school

ஒட்டாவா

கனடா பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

கடந்த 15-ம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763-ம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.1982-ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார்.

ஐரோப்பியர்கள் கனடாவில் குடியேறியபோது அங்கு இனுவிட், மெயிரி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசித்துவந்தனர். அவர்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு கனடாவின் பூர்வகுடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப் படுகொலை செய்தனர். லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன்கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டன. கடந்த 1863 முதல் 1998 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கனடாவின் பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் கடந்த 1890 முதல் 1969 வரை பழங்குடியின குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 1969-ம்ஆண்டில் கனடா அரசு, பள்ளி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்தது. கடந்த 1978-ல்பள்ளி மூடப்பட்டது.

கனடா பழங்குடியின அமைப்பு சார்பில் கம்லூப்ஸ் பள்ளியில் அண்மையில் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பூமிக்கடியில் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேடாரில் இதுவரை 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உள்ளூர் பழங்குடியின தலைவர் லிசா கூறும்போது, "ரேடாரில்மட்டுமே எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தோண்டி எடுத்துஆய்வு செய்ய வேண்டும். 3 வயது குழந்தையின் எலும்பு கூடும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளி வளாகத்தில் வேறு எங்கேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

கனடா முழுவதும் சுமார் 130-க்கும் மேற்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளின் செயல்பாடு குறித்து விமர்சனம் எழுந்ததால் கடந்த 2008-ல் கனடா அரசுபழங்குடி உறைவிட பள்ளி நடைமுறையை முழுமையாக ஒழித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2017-ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, "கனடா பழங்குடியின உறைவிட பள்ளி நடைமுறைக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கம்லூப்ஸ் பள்ளியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டிருப்பது இதயத்தை உடைக்கிறது. நமது நாட்டின் இருண்ட காலத்தை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது. இந்த செய்தியால் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் சோகத்தில் நானும் பங்கு எடுக்கிறேன். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பழங்குடியின மக்களின் பிராந்திய தலைவர் டெரி கூறும்போது, "பழங்குடி உறைவிட பள்ளிகளில் படித்த குழந்தைகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். எங்களது தாய் மொழியை அழித்து பிரெஞ்சு, ஆங்கிலத்தை திணித்தனர். நாட்டில் முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தோண்டியெடுத்து மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். இதைஇனப்படுகொலை என்றே குற்றம் சாட்டுகிறோம். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இப்போது உயிரோடு இருக்கவாய்ப்பில்லை. எனினும் கனடா அரசுமுழுமையாக விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

பழங்குடி அமைப்பின் தேசிய தலைவர்ரோஸ்னே கேஸ்மிர் கூறும்போது, "கனடா உறைவிட பள்ளிகளில் பயின்றகுழந்தைகளுக்கு முறையான உணவுவழங்கப்படவில்லை. பள்ளி நிர்வாகங்களின் கொடுமை, தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு குழந்தைகளை கொலை செய்து புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 இடங்களை கண்டறிந்துள்ளோம். இதில் கம்லூப்ஸ் பள்ளியில் மட்டும் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளோம். நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் சமுதாய குழந்தைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து ஆய்வு செய்வோம்" என்றார்.

இதுவரை 4,100 குழந்தைகள் மாயம்

ஓட்டாவா: கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் கமிஷன் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கனடாவில் சுமார் 150 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகளில் எத்தனை மாணவ, மாணவியர் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். எங்களது ஆய்வின்படி சுமார் 4,100 பேர் மாயமாகி உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின தலைவர்கள் கூறும்போது, "உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம். அவர்களின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment