Monday, August 26, 2024

சேர மன்னன் குட்டுவன்கோதை பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு காசு

சேர மன்னன் குட்டுவன்கோதைக் காசு

 உலோகம் :வெள்ளி -எடை : 2.3 கிராம் கிடைத்துள்ளன

வடிவம் : வட்டம் -அளவு :1.9

காலம் :பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு (தோராயமாக)

https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kuttuvankotai-cash-280456
குட்டுவன் கோதை
காசுகள் எவற்றிலும் காலம் குறிக்கப்பெறுவதில்லை. எழுத்தமைதி , இலக்கியக் குறிப்புகளோடு பிறச் சான்றுகளையும் ஒப்பிட்டே காசுகளுக்குக் காலம் கணிக்க இயலும். சில நேரங்களில் காசுகளில் உள்ள எழுத்தமைதி பிற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும். மன்னனின் பெயரோ முற்காலத்தைச் சேர்ந்தாக இருக்கும். அது போலவே குட்டுவன் கோதை என்று பெயர் பொறித்த இக்காசை சேரன் செங்குட்டுவன் நினைவாகப் பின்னர் வந்த அரசர்கள் கூட வெளியிட்டிருக்க வாய்ப்புள்ளது.
இவரைப்பற்றிய நேரடிப்பாடல் ஒன்று இலக்கியத்தில் இடம்பெறுகின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் என்ற புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார். நாணயவியலார்கள், இந்த அரசனே "குட்டுவன் கோதை" என்ற பெயர் பொறித்த நாணயத்தை வெளியிட்டுள்ளார் எனக் கூறுகின்றனர். குட்டுவன் என்பதும் தனிப் பெயரல்ல. இரண்டும் பொதுப் பெயர்களே, இமயத்தில் கொடிபொறித்த குட்டுவனை இலக்கியம் குறிப்பிடுகின்றது. குட்ட நாட்டை ஆண்டவர்கள் குட்டுவர் எனப் பெயர் பெற்றனர். கோட்டயத்திலிருந்து, கொல்லம் வரை உள்ள பகுதியே குட்ட நாடு என்று இராசுகாளிதாசும் குட்டம் அல்லது ஏரிகள் நிறைந்த பகுதி தற்போது கோட்டயம், கொய்லான் என்ற பகுதிகள் உள்ளடக்கியது எனக் கனகசபைப்பிள்ளையும் குறிப்பிடுகின்றனர். குடகுப்பகுதியை ஆண்டவர்கள் குட்டுவர்கள் என சி.இ.இராமச்சந்திரனும் குறிப்பிடுகின்றார். "கோதை” என்பதும் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. அகநானூற்றில் "கோதை மார்பன்" என்ற அரசன் குறிக்கப்பெறுகின்றான்.

இவனையே பிற இலக்கியங்கள் கோதை எனக் குறிப்பிடுகின்றன. இவரைப்பற்றி நக்கீரர், பொய்கையார், ஆலத்தூர் கிழார் , மாறோக்கத்துநப்பச்சலையார், கோவூர்க் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இம்மன்னனைப்பற்றிப் பாடப்பெறும் பாடல் வரிகளில் தான் வஞ்சியும், கரூரும் ஒன்றே என்பது தெளிவாக்கப்பெறுகிறது. மேலும், இவன் உதியஞ்சேரல் வழிவந்தவன். செங்குட்டுவனுக்குக் குட்டுவன்சேரல் என்றொரு மகன் இருந்தான். இந்தக் கோதை மார்பன் குட்டுவன் சேரலின் மகனாக இருக்கலாம் என்று மயிலை சீனி வேங்கடசாமி கருத்து தெரிவிக்கின்றார். இம்மன்னன் வஞ்சியில் முடிசூட்டிக்கொண்டதை இலக்கியத்தில் பெருநாள் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. எனவே, இவ்வளவு சிறப்புகளையும்பெற்று ஆட்சி நடத்தியுள்ள இக்கோதைமார்பனே "மாக்கோதை" என்ற நாணயத்தை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. "மா" என்பது சிறப்பு கருதி இடம்பெற்ற முன்னோட்மாக இருக்கலாம். மேலும் குட்டுவன் கோதை நாணயமானது சேர அரசர்களிலேயே மிகவும் சிறப்புற ஆட்சி நடத்திய சேரன் செங்குட்டுவனால் வெளியிடப்பெற்றிருக்கலாம் எனக்கருதவும் இடமுண்டு. ஏனெனில் இலக்கியத்தில் ஓரிடத்தில் இவ்வரசன் வாய்வாட்கோதை எனக் குறிப்பிடப்பெறுகிறான். மேற்கூறப்பட்ட கருத்துகளை நோக்குகையில், இரும்பொறை எனப் பெயர் வெளியிட்ட நாணயங்கள் வேறு, "கோதை" எனப் பெயர் வெளியிட்ட நாணயங்கள் வேறு என அறிய முடிகிறது. இதனால் "மாக்கோதை" என்று பெயரிட்ட நாணயத்தையும், பெருஞ்சேரல் இரும்பொறையே வெளியிட்டுள்ளார் என்ற புலவர் இராசு அவர்களின் கருத்து மேலும் ஆராயத்தக்கதாகும்.


பார்வை 105

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...