Saturday, August 31, 2024

மாரிசெல்வராஜ் கிறிஸ்துவராக மதம் மாறி பலன் பெற்று தன் படம் ஓட்ட அவைத்து விடும் கப்சாக்கள்



  மாரிசெல்வராஜ் கிறிஸ்துவராக மதம் மாறி  பலன் பெற்று தன் படம் ஓட்ட அவைத்து விடும் கப்சாக்கள்

 மாரிசெல்வராஜ் கூறும் வறுமை வாழ்வு இதுவா?
நேற்று ஒரு தம்பி வாட்ஸ் அப் மூலமாக வாய்ஸ் அழைப்பில் வந்து உரையாட ஆரம்பித்தார் - அந்த தம்பி இலங்கையை சார்ந்த ஒரு தமிழ் மாணவன் இப்பொழுது சீனாவில் மின்னியல் துறையில் பிஹெச்டி படித்துக் கொண்டு இருக்கிறார். 
எதிர்மறையான அரசியலை பேசும் எங்களிடையே உள்ள ஒரு நட்பு எங்கள் இருவரையும் இன்று வரை இணைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் மாரி செல்வராஜ் அவர்களின் பேட்டி ஒன்றை பார்த்து விட்டு பசிக்காக எலி  பாம்பு கீரிப்பிள்ளையை கூட  சாப்பிடும் நிலையில் இருந்து இருக்கிறார் என்று கேட்டவுடன் எனக்கு கண்ணீர் வந்து விட்டது-என்று கூறி நான் மாரிசெல்வரா ஜ் மறக்க நினைத்தாலும் நினைக்க வைத்து விட்டார்.
பதிலுக்கு அவரிடம் இல்லை தம்பி அதெல்லாம் பொய் தம்பி என்று அவரின் வாழ்க்கையை கூறும் மறக்கவே நினைக்கிறேன். தொடரில் நான் படித்த வரையி ல் அவரின் குடும்பத்தில் இருந்த வறுமையை பற்றி எங்குமே அ வர் கூறவில்லை என்று கூறினேன். 
2000க்கு முன்பே அவருடைய மூத்த அண்ணன் சிவனைந்தன் அரசு பள்ளியில் ஆசிரியராகி விட்டார். அடுத்து முருகம்மாளாக பிறந்து எஸ்தராக மதம் மாறிய அக்கா ஸ்டேட் பாங்கில் வே லைக்கு போய் விட்டார்.அடுத்து இன்னொரு அண்ணன் மாரிராஜாவும் தாசில்தாராக அரசு வேலைக்கு போய் விட்டார். இவரும் கிறிஸ்தவராக மாறி விட்டார்.
ஒரு குடும்பத்தில் 2000 வருடத்திலேயே 3 பேர் அரசு வேலையில் இருந்து இருக்கிறார்கள். ஆனால் மாரி செல்வராஜ் நான் சிறு வயதில் வறுமையினால் எலிக்கறி பாம்புகறி கீரிப்பிள்ளையெல்லாம் தின்று வாழ வேண்டிய நிலையில் இருந்தேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.
இதை விட முக்கியமானது இவர் சிறிய வயதிலேயே அதாவது அவருக்கு 12 -13 வயது இருக்கும் பொழுது இவரது மூத்த அண்ணனின் சட்டை பையில் இருந்து 50 ரூபாயை திருடுட்டு போய் ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவுக்கு போய் இருக்குறதை அவருடைய மூத்த அண்ணன் டைரியில் எழுதி வைத்து இருந்ததை மாரிசெல்வராஜே அவருடைய அண்ணன்  டைரியை திருடி படித்ததை தெரிவிக்கும் பொழுது கூறுகிறார்.
https://tamil.oneindia.com/television/director-mari-selvaraj-about-snake-and-rat-eating-631873.html
இது மட்டுமல்லாமல் இவருடை ய சின்ன அண்ணனும் டைரி எழுதுவாராம் .அதை இவர் யாருக்கும் தெரியாமல் படிப்பாராம். 30 வருடங்களுக்கு முன் ஒரு குக்கிராமத்தில் பிள்ளைகளுக்கு  டைரி வாங்கி கொடுத்து அவர்களை படிக்க வைத்து அரசு வேலைக்கு அனுப்பிய குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கு கஸ்டப்பட்டது என்று இப்பொழுது கூறினால் பைத்தியக்காரன் கூட நம்ப மாட்டான். 
https://www.youtube.com/watch?v=OEXpBLVv2sc

Uploading: 181216 of 181216 bytes uploaded.
இன்னொரு விசயத்தையும் கூறுகிறேன்.அவர்  அக்கா புதுக்கோட்டையில் தங்கி ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் பொழுது தான் அவர் மூலமாக அவருடைய வீட்டில் கிறிஸ்தவம் நுழைந்ததை பற்றி குறிப்பிடுகிறார்.
புளியங்குளம் என்கிற ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒரு பெண் பிள்ளையை சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதுக்கோட்டையில் தங்க வைத்து படிக்க வைத்து இருக்கிறார் கள் என்கிற பொழுது இவருடைய அக்கா வாழைத்தார் சுமந்த க தையை நம்ப முடியுமா?  இல்லை இவருடைய குடும்பம் வறுமை யில் வாழ்ந்தது  என்பதை நம்ப முடியுமா?
  
https://www.youtube.com/watch?v=a6RXgLIhXYg
இவருடைய எஸ்தர் அக்கா அவ ர் வளர்த்த பூனைக்கு விதம் வித மாக பிஸ்கட் வாங்கி கொடுத்து அதைத்தான் சாப்பிட வைப்பாராம்.வளர்ப்பு பூனைக்கு விதம் விதமாக பிஸ்கட் வாங்கி கொடுத்து வாழ வைத்த ஒரு குடும்பம் ஒரு வேலை சோற்றுக்கு வாழைத்தார் சுமந்தது என்று மாரி செ ல்வராஜ் கூறுவது எவ்வளவு பிராடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவருடைய எஸ்தர் அக்கா வளர்த்த பூனை இவர்கள் வீட்டில் ஒரு குவிண்டால் நெல் அவிக்கும் பொழுது அந்த பூனை அந்த நெல்லில் விழுந்து மறைந்து கிடந்ததை பார்க்காமல் அவித்து விடுவார்களாம்.பாருங்கள். ரேசன் அரிசையை தேடி அதனை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்ற எத்தனையோ குடும்பங்கள் வறுமையை பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்கள். ஆனால் சொந்த வயல்களில் வி ளைந்த குவிண்டால் கணக்கில் நெல்லை அவித்து அரிசியாக்கி உணவாக்கி வாழ்ந்த மாரி செல் வராஜ் குடும்பம் 10 மாடுகள் 60 ஆடுகளுடன் உழவுத்தொழிலில் இருந்த குடும்பம் ஒரு ரூபாய் கூலிக்காக வாழைத்தார் சுமந்தது என்று பைத்திய காரன் கூட நம் பமாட்டான் என்று சீனாவில் இருந்து பேசிய அந்த தமிழ் மாணவனிடம் மாரிசெல்வராஜ் பற்றி கூறினேன்.
பதிலுக்கு அந்தக் தமிழ் மாணவன் தம்பி அப்ப மாரி செல்வராஜ் பிராடா என்று என்னிடம் கேட்கநான் அட்டர் பிராடு என்று கூறவும் நன்றி அண்ணா என்று கூறி விட்டு வேறு வேலைக்கு நகர்ந்து விட்டார்.
 
ஏழை மாணவனின் உணவை ஏளனம் செய்த மாரி செல்வராஜ்-  ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுவதாக வாழையில்  காட்டப்ப ட்டும் மாரி செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை அவர் 10 வது படிக்கும் பொழுது எப்படி இருந் தது என்பதை அவர் கைபட எழுதிய டைரியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் 10 வது படிக்கும் பொழுது ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார், ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்பதால் இவருடன் ஹாஸ்டலில் இருந்த சுயம்பு சுரேஸ் காசி என்கிற மூன்று நண்பர்கள் உடன் காலையில் பிரேயர் நடக்கும் பொழுது வகுப்பில் இருந்து சக மாணவர்களின் டிபன் பாக்சை எடுத்து அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணவினை எடுத்து சாப்பிட்டு விடுவார்களாம்..
பாதி உணவை பறி கொடுத்தாலும் இதுவாவது கிடைத்ததே என்று அவர்கள் இருப்பதை சாப்பிட்டு விட்டு மாரி செல்வராஜ் அவர்களையும் அவரின் நண்பர்களையும் திட்டிக்கொண்டே இருப்பார்களாம்.ஒரு நாள் ஹெட்மாஸ்டரிடம் இவர்கள் திருடி சாப்பிடுவது பற்றி கம்ளைண்ட் செய்யப்பட  இவர்களை ஹெட்மாஸ்டர் அழைத்து இருக்கிறார்.இவர்களும் போகி றார்கள்.
அங்கு இவருடன் படிக்கும் மாணவர் சந்தன மாரியப்ப னும் அவன் நண்பன் சாமிக்கண்ணுவும்  இருக்கிறார்கள். இதில் சந்தனமாரியப்பன் ஹெட்மாஸ்டரிடம் சார் இவர்கள் 4 பேரும் என்னுடைய டிபன் பாக்சை திறந்து அதில் இருந்த சாப்பாட்டை தின்று விடுகிறார்கள் என்று புகார் கொடுக்க மாரி செல்வராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்ததாம்.
இவங்களை கண்டு பிடித்து விட்டார்கள் என்கிற அதிர்ச்சி இல்லையாம்.புழு பூச்சி நெளியிற இவனோட சோத்தை என்னைக் குடா தின்னோம்? என்கிற அதிர்ச்சி தான் இவருக்கு வந்ததாம். மாரி செல்வராஜ் அந்த சந்தனமாரியப்பன் உணவை பற்றி அவர் வாழ்க்கை வரலாற்றில் கூ றி இருப்பதை கேளுங்கள். டிபன் பாக்சை திறந்தாலே நாற்றம் தாங்காது இதை யாருடா தின் னார்கள் என்று இவர்கள் 4 பேருக்கும் இடையில் பஞ்சாயத்து நடந்ததாம்.
கடைசியில் நாலு பேரும் அவரவர் அம்மாவை துணைக்கு அழைத்து சத்தியம் செய்ததில் அவர்கள் நாலு பேரும் இல்லை என்று உறுதியாக கடைசியில் சந்தன மாரியப்பனை பழி வாங்க திட்டமிடுகிறார்கள்.எதற்கு தெரியுமா? 
பிரேயர் நடக்கும் பொழுது சக மாணவர்களின் டிபன் பாக்சை திறந்து திருடி தின்றதால் மாரிசெல்வராஜ்க்கும் அவருடைய நண்பர்களுக்கும் செம அடியும் ஏகப்பட்ட தண்டனைகளும் கிடைத்ததாம்.அதோடு அவருக்கு சோத்து களவாணி என்று வாத்தியார்கள் பெயர் வைத்து போர்டில் எழுதி போட்டு விடுகிறார்கள்.
இதனால் சந்தன மாரியப்பனை பழி வாங்க நினைத்த மாரி செ ல்வராஜ் என்ன செய்தார் தெரியுமா? இந்த சந்தன மாரியப்பனின் அப்பா ஒரு மாட்டு வண்டி தொழிலாளி.அவர்களுக்கு கிட்டதட்ட ரோட்டோர வாழ்க்கை மாதிரி தான் வாழ்க்கை.
ரோட்டில் கட்டப்பட்டு இருந்தசந் தன மாரியப்பனின் குடும்பத்திற்கு மாரி செல்வராஜ் ஏளனம் செய்த உணவையாவது கிடைக்க வைத்த மாட்டு வண்டியில் இருந்து இரண்டு காளை மாடுக ளையும் விடுவித்து இரவு நேரத்தில் மாரி செல்வராஜ் துரத்தி விட்டு விடுகிறார்
பாருங்கள் மகன் கப்ளைண்ட் செய்ததற்கு அப்பாவின் வேலையையே முடக்கிய மாரி செல்வராஜ் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பிரதிபலிக்கிறார் என்று சொல்வது எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும்? ஒரு மாட்டுவண்டி தொழிலாளி நிச்சயமாக மாரி செல்வராஜ் கூறும் ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து தானே வந்து இருப்பார்.
அவர்களின் உணவை புழு பூச்சிகளை விட கேவலமாக விமர்சித்த மாரி செல்வராஜ் இப்பொழு து வறுமையில் எலிக்கறி பாம்புகறி -கீரிப்பிள்ளை எல்லாம் சாப்பிட்டு வாழ்ந்தோம் என்று க தைவிடுவதை நம்ப முடியுமா?
கடைசியில் அந்த சந்தன மாரியப்பன் உணவை யார் தான் எடுத்தார்கள்?என்று தெரிய வே ண்டும் அல்லவா..அதுவும் தெரிந்தது.மாரி செல்வராஜ் மீது கம்ளைண்ட் கொடுத்த சந்தன மாரியப்பனின் நண்பன் சாமிக்கண்ணு தான்  சந்தன மாரியப்பனின் உணவை எடுத்து இருப்பார். 
சாமிக்கண்ணுவின் அப்பா தூத்துக்குடியில் ஒரு லாரி ஓனர். சாமிக்கண்ணுவும்  சந்தன மாரியப்பனும் நெருங்கிய நண்பர்க ள்.இரண்டு பேரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள். சந்தன மாரியப்பனுக்கு நல்ல உணவு அளிக்க வேண்டும் என்கிற ஆசையில் சாமிக்கண்ணு சந்தன மாரியப்பனின் உணவை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொட்டி விடுவானாம்.
இப்பொழுது சந்தன மாரியப்ப னுக்கு வேறு வழியில்லாமல் அவன் நண்பன் சாமிக்கண்ணு கொண்டு வருகின்ற உணவை சாப்பிட்டு தான் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான்.பாருங்கள் எவ்வளவு சிறந்த நட்பு.
இப்பொழுது யார் ஒடுக்கப்பட்டா ர்கள்? யார் ஒடுக்கினார்கள்? என்று மாரி செல்வராஜின் வாழ்க்கையை படித்த பிறகு எனக்குள்ளே கேள்விகள் எழுகிறது. ஒரு மாட்டு வண்டி தொழிலாளியின் மகன் கொண்டு வந்த உணவையே புழு பூச்சியை விட கேவலமாக நினைத்த ஒதுக்கி தள்ளிய மாரி செல்வராஜ் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவரா?
சொந்தமாக லாரிகள் வைத்துள்ள ஒரு பணக்கார  குடும்பத்தில் பிறந்து  ஒரு மாட்டு வண்டி தொழிலாளியின் மகனுக்கு நல்ல உணவு கிடைக்க தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்த  சாமிக்கண் ணு ஒடுக்க நினைத்தவரா? என்று எனக்குள் கேள்விகள் எழுகிறது.
பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு ஏழை மாணவனின் உணவை ஏளனம் செய்து வாழ்ந்த மாரி செல்வராஜ் அதே கால கட்டத்தில் பள்ளிக்கு செல்கிற வய தில் ஒரு வேலை சோத்துக்காக  வாழைத்தார் சுமந்தேன் என்று வாழையில் கூறுவதை யாரால் தான் நம்ப முடியும்?என்னால் நிச்சயமாக நம்ப முடியாது.


மாரி செல்வராஜை மறக்கவே நினைக்கிறேன்-.
மாரி செல்வராஜ் வாழை உணர்வுகள் எனக்குள்ளே இன்னும் முடியாது என்றே தெரிகிறது. வாழை அவரின் வாழ்வியலை கொண்டதா? இல்லை எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களிடம் இருந்து திருடப்பட்டதா? என்கிற கேள்வி என்னை தூங்க விடவில்லை.
அதனால் நேற்று அவருடைய எழுத்துக்களை தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.ஆச்சரியமாக அவரின் வாழ்க்கையை மாற்றிய வாழைத்தார் சுமந்த வாழ்வின் கதை இதுவரை என் கண்களில் தென்பட வில்லை.
ஒரு எழுத்தாளர் தன் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு களில் இருந்து தான் தன் எழுத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல விரும்புவார். அந்த எழுத்துக்கள் அவரின் ஆழ் மன தில் இருந்து வெளிவந்து கதை யாகவோ அல்லது வாழ்க்கை யை சொல்வதாகவோ இருக்கு ம்.
அந்த எழுத்துக்களுக்கு விளக்க ம் தேடி தயங்கி நிற்க வேண்டாம் ஏன் என்றால் அந்த எழுத்துக்கள் இரவலாக யாரிடமோ இருந்து பெற்று இருக்க மாட்டார்.அந்த எழுத்துக்கள் எழுத்தாளனின் ஆழ் மனதில் உறங்கி கொண்டு இருப்பவை.
வாய்ப்பு என்கிற வெளிச்சம் பட்ட உடன் அந்த எழுத்துக்கள் அவரிடம் இருந்து மடை திறந்த வெள்ளமாக தடையின்றி வெளி ப்பட்டு மக்களிடையே சென்று விடும்
.
அப்படி மாரிசெல்வராஜ் அவர்க ளிடம் இருந்து 2013 ம் ஆண்டில் வெளி வந்த தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற சிறுகதையும் ஆனந்த விகடனி ல் தொடராக வெளிவந்த மறக் கவே நினைக்கிறேன் என்கிற அவரின் வாழ்க்கை வரலாறும்
தான் முக்கியமானது.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்கிற அவருடைய சிறுகதை மாரி செல்வராஜின் குருவான டைரக்டர் ராம் அவர்களின் ப்ளாக்கில் காட்சி என்கிற பகுதியில் எழுதப்பட்டவை.அந்த சிறு கதையிலும் அவரின் வா ழ்வில் பயணித்த மனிதர்களின் கதையை தான் கூறி இருப்பார்.
ஆனால் வாழையின் வலியை மாரிசெல்வராஜ் எதிலும் சொலலவே இல்லை.அடுத்து மாரி
செல்வராஜ் அவர்களின் நிஜவாழ்க்கையை அவரின் புளியங் குள மண்ணின் வாழ்வை கூறி ய மறக்கவே நினைக்கிறேன் தொடரில் நான் இது வரை படித்த ஏழு அத்தியாயங்களில் எங்குமே இல்லை.
மாரி செல்வராஜ் அவர்கள் படித்த கருங்குளம் பள்ளியில் இருந் து தூத்துக்குடி அரசு பள்ளியில் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை சட்டக்கல்லூரி சம்பவங்கள் என்று நான் இது வரை வாசித்த மாரி செல்வராஜ் அவர்களின் மற க்கவே நினைக்கிறேன் வாழ்வில் எங்கும் அவரின் வாழைத்தார் சுமந்த வாழ்க்கையின் வலி தெரியவில்லை.
மாரி செல்வராஜ் அவர்களின் மூத்த அண்ணன் சிவனைந்தன் குல தெய்வம் அருளால் பிறந்து குல தெய்வத்தின் பெயரையே தாங்கி நிற்கும் வாழ்க்கை.அடு த்து முருகன் என்பவரால் காப் பாற்றப்பட்ட அவருடைய அம்மா அவரின் நினைவாக அக்காவிற் குமுருகம்மாள் என்று பெயர் சூ ட்டி பிறகு முருகம்மாள் எஸ்தராக மாறிய ழ்க்கை.அடுத்து இன்னொரு அண்ணன் மாரி ராஜாவும் கிறிஸ்தவத்தில் கலந்த வாழ்வு.எதிலும் வாழையின் வலிகள் இல்லை.
மாரி செல்வராஜ் அவர்களின் வாழைத்தார் வாழ்க்கையில் விபத்தில் இறந்து போனதாக கூறப்படும் மாரி செல்வராஜ் அவர்களின் இன்னொரு அக்கா வான உச்சினி மாகாளியின் சொல்லப்படாத வாழ்க்கை.இவரை பற்றி ஏன் மாரி செல்வராஜ் கூற வில்லை?
மாணவன் மாரி செல்வராஜின் கரங்களுக்குள் பைபிள் நுழை ந்த நிகழ்வு என்று நான் இது வ ரை படித்த எதிலும் மாரி செல் வராஜ் அவர்களின் வாழ்வை கூறிய மறக்கவே நினைக்கிறே ன் தொடரில் வாழையின் வலி யை என்னால் உணர முடிய வி ல்லை
நெல் அவிக்கும் பொழுது அதில் விழுந்து இறந்து போன பூனை ராஜியை பற்றியும் அதனை வ ளர்த்த அவருடைய அக்கா எஸ்த ரின் நினைவு வலிகளை பக்கம் பக்கமாக மக்களிடையே பேசிய மாரி செல்வராஜ் அவர் அனுப வித்த அவர் மக்கள் சந்தித்த வாழைத்தார் சுமந்த வலிகளை இது வரை கூற வில்லை.
ஆனந்த விகடனில் வெளிவந்த மாரிசெல்வராஜ் அவர்களின் மறக்கவே நினைக்கிறேன் வாழ்வு தொடரை இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. முடிந்தவுடன் அதில் வாழையின் வலியை என்னால் உணர முடிந்ததா? என்று தெரிந்து விடும்.
மாரி செல்வராஜ் படிக்கும்பொ ழுதே மூத்த அண்ணன் அரசு ப ள்ளியில் வாத்தியார் அக்கா ஸ்டேட் பேங்கில் வேலை என்று அவர்களின் குடும்பமே உயர்ந்தநிலைக்கு வந்த பிறகு வாழைத்தார் சுமந்த வலிகள் இருக்குமா? இருக்காது என்றே நினைக்கிறேன்.
மறக்கவே நினைக்கிறேன் தொடரில் நான் படித்து முடித்த பக்க ங்களில் இருந்து மாரி செல்வ ராஜ் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய வாழை அதில் இல் லை.ஆனால் அவரை வழி மாற் றிய பைபிளின் வாசகங்கள் தா ன் அதிகமாக இருக்கிறது.
மறக்கவே நினைக்கிறேன் தொடரின் ஆரம்பமே அடுத்தவரின் டைரிகளை மாரி செல்வராஜ் தி ருடி படித்ததில் இருந்து தான் ஆ ரம்பமாகி இருக்கும்.அதனால் வாழை கூட ஐயா தர்மன் அவர்க ளின் எழுத்தில் இருந்து திருடப் பட்டு இருக்கலாம் என்றே நி னைக்க தோன்றுகிறது.
அதனால் மாரி செல்வராஜை நானும் மறக்கவே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை

 நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை