Tuesday, January 20, 2026

இறைவன் கோயில்களில் TNHRCE தரிசன கட்டண உயர்வு என வழிபாடு தொல்லை - ஐகோர்ட்

 கோயில்களில் தரிசன கட்டண உயர்வு: வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்  Updated on21 Jan 2026 

மதுரை: தமிழக கோயில்​களில் தரிசனக் கட்டண உயர்வு தொடர்பான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்க, அரசுக்கு அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் இடைநிறுத்த தரிசனம் மற்​றும்                ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்து வரும் தரிசனங்​களுக்​கான கட்​ட​ணத்தை உயர்த்​து​வது தொடர்​பான அறி​விப்​பு​கள், பக்​தர்​களிடம் ஆட்​சேபனை கோராமல் செயல்​படுத்​தப்         ​படு​கின்​றன.

இது தொடர்​பான அறி​விப்​பு​களை கோயில் வளாகத்​தில் பக்​தர்​கள் அதி​கம் செல்​லாத இடங்​களில் ஒட்​டு​கின்​றனர். ஏதேனும் ஒரு நாளிதழில் விளம்​பரம் செய்​கின்​றனர். இதனால் கட்டண உயர்வு தொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் பக்​தர்​களால் உரிய காலத்​தில் ஆட்​சேபனை​களை தெரிவிக்க முடி​யாமல் போகிறது.

பின்​னர் ஆட்​சேபனை​கள் வரவில்லை என்று அறநிலை​யத் துறை ஆணை​யருக்கு தகவல் தெரி​வித்​து​விட்​டு, கட்டண உயர்வை அமல்​படுத்​துகின்​றனர். கோயிலுக்கு வரும் போது​தான் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்ட விவரம் பக்​தர்​களுக்கு தெரிய​வரு​கிறது. தமிழக கோயில்​களுக்கு வெளி மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் இருந்​தும் பக்​தர்​கள் வரு​கின்​றனர். எனவே, கட்​ட​ணத்தை உயர்த்​தும்​போது அந்த பக்​தர்​களிட​மும் கருத்து கேட்க வேண்​டியது அவசி​யம். இதனால், கட்டண உயர்வு அறி​விப்பு தொடர்​பாக மாவட்​டத்​துக்​குள் மட்​டும் விளம்​பரம் செய்​வதுசரி​யான நடவடிக்கை அல்ல.

மேலும், பல்வேறு கோயில்​களி​லும் ஒரு மணி நேர நிறுத்த தரிசனம் அமல்​படுத்​தப்​படும் என அறநிலை​யத் துறை அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். எனவே, கோயில் நிர்​வாகத்​தின் அறி​விப்பு அதிக பக்​தர்​களை சென்​றடை​யும் வகை​யில் இணை​யதளங்​களில் பதிவேற்​றம் செய்​ய​வும், தமிழகம் முழு​வதும் தெரி​யும் வகை​யில் நாளிதழ்​களில் விளம்​பரம் செய்​ய​வும், கோயில் வளாகத்​தில் பக்​தர்​கள் நடமாட்​டம் அதி​க​முள்ள இடங்​களில் அறி​விப்பு பலகை வைக்​க​வும், ஆட்​சேபனை​களை தெரிவிக்க 30 நாட்​கள் காலஅவ​காசம் அளிக்​க​வும், ஆட்​சேபனை கடிதங்​கள், கோயில் நிர்​வாக முடிவு, ஆணை​யரின் அனு​மதி ஆகிய​வற்றை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​வது உள்​ளிட்ட கட்டண உயர்வு நடவடிக்​கை​யின்​போது, கோயில் நிர்​வாகம் பின்​பற்ற வேண்​டிய வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், “பு​திய வழி​காட்​டு​தல் உரு​வாக்​கப்​பட்​டு, அறிவிக்​கப்​படும். அதற்கு அவகாசம் தேவை” என்று கோரப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, வி​சா​ரணையை பிப்​. 23-ம்​ தேதிக்​கு நீதிப​தி​கள்​ தள்​ளிவைத்​தனர்​.

https://www.hindutamil.in/news/tamilnadu/deadline-to-develop-guidelines-for-darshan-fees-in-temples

No comments:

Post a Comment