Tuesday, January 20, 2026

இறைவன் கோயில்களில் TNHRCE தரிசன கட்டண உயர்வு என வழிபாடு தொல்லை - ஐகோர்ட்

 கோயில்களில் தரிசன கட்டண உயர்வு: வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்  Updated on21 Jan 2026 

மதுரை: தமிழக கோயில்​களில் தரிசனக் கட்டண உயர்வு தொடர்பான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்க, அரசுக்கு அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அறநிலை​யத் துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் இடைநிறுத்த தரிசனம் மற்​றும்                ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்து வரும் தரிசனங்​களுக்​கான கட்​ட​ணத்தை உயர்த்​து​வது தொடர்​பான அறி​விப்​பு​கள், பக்​தர்​களிடம் ஆட்​சேபனை கோராமல் செயல்​படுத்​தப்         ​படு​கின்​றன.

இது தொடர்​பான அறி​விப்​பு​களை கோயில் வளாகத்​தில் பக்​தர்​கள் அதி​கம் செல்​லாத இடங்​களில் ஒட்​டு​கின்​றனர். ஏதேனும் ஒரு நாளிதழில் விளம்​பரம் செய்​கின்​றனர். இதனால் கட்டண உயர்வு தொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் பக்​தர்​களால் உரிய காலத்​தில் ஆட்​சேபனை​களை தெரிவிக்க முடி​யாமல் போகிறது.

பின்​னர் ஆட்​சேபனை​கள் வரவில்லை என்று அறநிலை​யத் துறை ஆணை​யருக்கு தகவல் தெரி​வித்​து​விட்​டு, கட்டண உயர்வை அமல்​படுத்​துகின்​றனர். கோயிலுக்கு வரும் போது​தான் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்ட விவரம் பக்​தர்​களுக்கு தெரிய​வரு​கிறது. தமிழக கோயில்​களுக்கு வெளி மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் இருந்​தும் பக்​தர்​கள் வரு​கின்​றனர். எனவே, கட்​ட​ணத்தை உயர்த்​தும்​போது அந்த பக்​தர்​களிட​மும் கருத்து கேட்க வேண்​டியது அவசி​யம். இதனால், கட்டண உயர்வு அறி​விப்பு தொடர்​பாக மாவட்​டத்​துக்​குள் மட்​டும் விளம்​பரம் செய்​வதுசரி​யான நடவடிக்கை அல்ல.

மேலும், பல்வேறு கோயில்​களி​லும் ஒரு மணி நேர நிறுத்த தரிசனம் அமல்​படுத்​தப்​படும் என அறநிலை​யத் துறை அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். எனவே, கோயில் நிர்​வாகத்​தின் அறி​விப்பு அதிக பக்​தர்​களை சென்​றடை​யும் வகை​யில் இணை​யதளங்​களில் பதிவேற்​றம் செய்​ய​வும், தமிழகம் முழு​வதும் தெரி​யும் வகை​யில் நாளிதழ்​களில் விளம்​பரம் செய்​ய​வும், கோயில் வளாகத்​தில் பக்​தர்​கள் நடமாட்​டம் அதி​க​முள்ள இடங்​களில் அறி​விப்பு பலகை வைக்​க​வும், ஆட்​சேபனை​களை தெரிவிக்க 30 நாட்​கள் காலஅவ​காசம் அளிக்​க​வும், ஆட்​சேபனை கடிதங்​கள், கோயில் நிர்​வாக முடிவு, ஆணை​யரின் அனு​மதி ஆகிய​வற்றை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​வது உள்​ளிட்ட கட்டண உயர்வு நடவடிக்​கை​யின்​போது, கோயில் நிர்​வாகம் பின்​பற்ற வேண்​டிய வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், “பு​திய வழி​காட்​டு​தல் உரு​வாக்​கப்​பட்​டு, அறிவிக்​கப்​படும். அதற்கு அவகாசம் தேவை” என்று கோரப்​பட்​டிருந்​தது. இதையடுத்​து, வி​சா​ரணையை பிப்​. 23-ம்​ தேதிக்​கு நீதிப​தி​கள்​ தள்​ளிவைத்​தனர்​.

https://www.hindutamil.in/news/tamilnadu/deadline-to-develop-guidelines-for-darshan-fees-in-temples

No comments:

Post a Comment

CSI & Church of South India Trust Association (CSITA) discharge falls within the contours of Article 21 and 21A of the Constitution of India.

  Madras High Court rules on Church of South India's public duty The Rassalam Clan’s plea overturned: A Landmark judgement by 3 member b...