பல பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை செய்த புகாரில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யா கைது
சமூக வலைத்தளங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியான மதூர் சத்யா மீது, பல பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் புகார் அளித்திருந்தனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். கே.சிவா வெளியிட்டிருந்த அறிக்கையில், மதூர் சத்யா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் புகார்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரானது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியதைத் தொடர்ந்து, பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மதூர் சத்யா மீது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதூர் சத்யாவை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.


No comments:
Post a Comment