அதிமுகவின் எந்த அணி... MLA பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்..?!
கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக...
கட்சியின் MLA கள் அவை வாக்கெடுப்பில் ஓட்டை மாற்றிப் போட்டால்...
அப்படி ஓட்டை மாற்றிப் போட்டவர்கள் எண்ணிக்கை 3ல் 2 பங்கை விட குறைவாக இருந்தால்...
கொறடா உத்தரவுக்கு எதிராக பங்கேற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தாமாகவே கட்சி உறுப்பினர் பதவியைத் துறந்ததாக கூறி... சட்டமன்றத்திலிருந்து அந்த அணியினர் அனைவரையும் அவைத்தலைவர் உடனடியாக (இன்றே) பதவி நீக்கம் செய்ய முடியும்.
இங்கே அதிமுக கட்சியின் தலைவர் மற்றும் அவர் நியமித்த கொறடா இருவரும்... ஒரே (எதிர்ப்பு-சிவப்பு) அணியில் உள்ளதால்... கொறடா உத்தரவை மீறிய குற்றத்திற்கு... இன்னொரு (பச்சை -ஆதரவு) அணியில் உள்ள 25 பேரின் பதவிகள் பறிக்கப்படலாம்.
ஆனால்...
அந்த இன்னொரு அணி... தாங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாகவும்... தங்களிடம் ஒரு தலைவர் மற்றும் ஒரு கொறடா உள்ளதாகவும்... கூறுகிறார்கள். ஆகவே... அந்த எதிர் அணியில் உள்ள 22 பேரின் பதவிகள் பறிக்கப்படலாம். இந்த பச்சை அணியில், முறைப்படி அக்கட்சியின் பொதுக்குழுவில் யார் தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்கள்... யார் கொறடா.. என்பதில் எந்த தெளிவும் இல்லாத காரணத்தால்... இந்த பச்சை அணிக்கு ஆதரவாக அவைத்தலைவர் செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில்...
அவைத்தலைவர் ஜெசிடி பிரபாகர்... முன்பொரு காலத்தில் அதிமுகவில்... எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக... ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்தவர். ஆகவே, 2022ல், எடப்பாடி பழனிசாமியால்... பிரபாகர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஹை கோர்ட்டு எல்லாம் சென்று தோற்று கடைசியில்... தவெகவில் சேர்ந்து இன்று அவைத்தலைவர் ஆக... எடப்பாடி பழனிசாமியை விடவும் உயரத்தில் அமர்ந்து இருக்கிறார்..!
"என் கட்சி சார்பாக தலைவர் நான் பேசி விட்ட பிறகு, நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ஓட்டு போடுவோம் என்று எங்கள் கட்சி நிலைப்பாட்டை கூறிய பிறகு நீங்கள் எப்படி இன்னொருவரை பேச அனுமதிக்க முடியும்?" என்கிற எடப்பாடி பழனிசாமி கேட்ட சரியான கேள்வி நசுக்கி ஒடுக்கி கிள்ளி வீசி அழிக்கப்பட்டு... எஸ் பி வேலுமணி பேச அனுமதிக்கப்பட்டார். அவர், தவெக அரசுக்கு நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரித்து ஓட்டு போடுவதாக பேசினார். (வேறு எந்த கட்சி சார்பாகவும் 2 உறுப்பினர்கள் பேச வில்லை)
ஆகவே... இன்று தங்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்ட... நேற்று முதலமைச்சர் விஜய் நேரில் சென்று சந்தித்த... எஸ் பி வேலுமணி சி வி சண்முகம் தலைமையிலான அதிமுக அணியே உண்மையான அதிமுக என்றும்... தங்களின் கட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக... பழைய 2022ன் வஞ்சம் தீர்க்கும் வகையில்... எந்த வழக்கு வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், என்று துணிவோடு... எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரையும்... தகுதி நீக்கம் செய்து விட்டால்... திருச்சி கிழக்கு உட்பட 23 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்..!
அல்லது...
சட்டத்துக்கு விரோதமாக...
இரண்டு அதிமுக அணியினரில் எவரையுமே அவைத்தலைவர் தகுதிநீக்கம் செய்யாமல்... அவையில் இரண்டு அணியையும் ஒன்றாக அமர வைத்து... அவர்களுக்குள் இன்று நடந்தது போல... தினமும் சண்டை போடவிட்டு... மோதிக் கொள்ள வைத்து ரசிக்கும் மனதோடு தவெக இருந்தால்... ஏகப்பட்ட சட்டக் குழப்படிகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகள் யாவும் டிவி நேரலையில் வருவதால்... இனிமேல் நன்றாக வேடிக்கை பார்க்கலாம்.

No comments:
Post a Comment