வேலைப்பளு பேச்சுவார்த்தை நடைபெறும்.நிர்வாகத்திற்கு சாதகமான யூனியன் செட்டில்மென்ட்டில் கையெழுத்து போட்டு நிர்வாகம் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும். மற்றொரு யூனியன் இரண்டொரு பேச்சு வார்த்தையில் மறுத்து விட்டு மூன்றாவது தடவை பேச்சு வார்த்தையில் செட்டில்மெண்டில் கையெழுத்து போட்டு விடும்.
இப்போது நாங்கள் இடதுசாரிகள் முடிவெடுத்தாக வேண்டும்.மாவட்ட செயலாளர்,மாநில செயலாளர்கள் எல்லாம் கலந்து கொண்டு கூட்டம் நடைபெறும்.தலைவர்கள் பேசுவார்கள்.
"ரெண்டு யூனியன்க கையெழுத்து போட்டுட்டாங்க அதனால வேலைப்பளுவை நிர்வாகம் அமல்படுத்திட்டான்.நம்மலாள ஒன்னும் செய்ய முடியாது.அதனால நம்ம தொழிலாளர்களும் புதிய வேலைப்பளுவை ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க வேண்டும்.ஆனால் செட்டில்மென்ட்டில் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம்"
"அதுதான் வொர்க் லோட ஏத்தாச்சு பெறகென்ன செட்டில்மெண்ட்ல கையெழுத்து போட வேண்டியதுதானே"
"இல்ல இதை எதிர்த்து நம்ம லேபர் கோர்ட்டுக்கு போறோம்.நம்ம கையெழுத்து போட்டுட்டா கோர்ட்டுக்கு போக முடியாது" என்று சொல்வார்கள்.நாங்களும் ஒன்னும் பேச முடியாது. அப்புபறம் மூனு மாசம் நாலு மாசம் அஞ்சுமாசம்னு போயிரும்.தோழர் கேஸ் எப்ப போடப் போறீங்கனு கேட்போம்.மிகத் தெளிவான பதில் மாநிலத் தலைமையிலிருந்து வரும்.
"அதாவது நம்ம செட்டில்மெண்ட்ல கையெழுத்துதான் போடலியே ஒழிய நம்ம தொழிலாளர்களும் புதிய வேலைப்பளுவை ஏத்துக்கிட்டு வேலை பார்க்கான்.கோர்ட்ல இதை நிர்வாகம் சொல்லுவான். எப்படினா தொழிலாளிங்க வேலை பாக்க தயாரா இருக்கான் பாக்கான்,தலைவர்கள்தான் தொழிலாளிகளை வேலை செய்ய விடாமல் தடுக்குறாங்க அப்படிம்பான்.அதனால இப்போதைக்கு கேஸ் போடமுடியாது"
"கேஸ் போட முடியாதுனா செட்டில்மெண்ட்ல கையெழுத்து போடுங்க நம்ப தொழிலாளிகளும் புதிய வேலைப்பளுவை ஏத்துக்கிட்டு வேலை பார்க்கிறார்களே"
"அது நம்மளா முடிவு பண்ண முடியாதுப்பா.மேலருந்து முடிவு பண்ணி சொல்வாங்க"
எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.ஒரு பத்து நாள் கழிச்சு முதலாளியோ மேனேஜரோ கூப்பிடுவார்.சர்வசாதாரணமாக சிரித்துக் கொண்டே சொல்வார்.
"இங்க கேளுப்பா எனக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டு பெழைக்கிற வழியைப்பாரு,போனமாசமே ஒங்க பெரிய தலைவர்க வந்து திருப்பூர் மாநாட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் ஐநூறு மீட்டர் கச்சைத் துணியும் வாங்கிட்டுப் போய்ட்டாங்க,ஒங்களுக்கு தெரியாதா?அதுக்குப் பிறகுதான் வொர்க் லோடு நோட்டீஸே கொடுத்தோம்"
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரிகளிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை.
குறிப்பு:தற்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆயிரம் பக்கம் வரக்கூடிய நாவலில் என்னுடைய தொழிற்சங்க அனுபவங்களை எழுதுகிறேன். இதுவரை ஒரு சிறுகதை கூட என் பஞ்சாலை அனுபவங்களை எழுதவில்லை.

No comments:
Post a Comment