Friday, July 31, 2026

போகர் -சித்தர்

போகர் -சித்தர் -பதினெண் சித்தருள் ஒருவர், இரசவாதி, தத்துவ ஞானிம், எழுத்தாளர் என்பபடுகிறார்.


 இவர் வைகாவூர் (பழனி) எனும் ஊரில் பிறந்தார். இவர் தன் தாய் மற்றும் தன் தாத்தாவிடமும் கல்வியைக் கற்றார் என்று கூறப்படுகிறது.[3] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காலங்கி நாதர் என்பவரின் சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாகப் புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார்.


பழனி முருகன் சிலை

பழனி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் நவபாடாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு

கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை

பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி

நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்

ஆறு ஆதாரங்களில் முக்கியமான ஆக்ஞா எனப்படும் புருவமத்திக்கும், உச்சந்தலைக்கும் மத்தியில் குடிகொண்டிருக்கும் மனோன்மணியின் அனுக்கிரகத்தாலே (பீனியல் சுரப்பி அல்லது கூம்புச் சுரப்பி என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிற அரிசியின் அளவே உள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும்) ஒன்பது வகையான பாஷாணங்களாகிய;

1. கௌரிப் பாஷாணம் : Arsenic pentasulfide

2. கெந்தகப் பாஷாணம் : Sulfur

3. சீலைப் பாஷாணம் : Arsenic Di sulphite

4. வீரப் பாஷாணம் : Mercuric Chloride

5. கச்சாலப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

6. வெள்ளைப் பாஷாணம் : Arcenic Tri Oxide

7. தொட்டிப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

8. சூதப் பாஷாணம் : Mercury

9. சங்குப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

இவைகளைப் பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றைச் சுத்திகரித்துப் பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாகப் போகர் இப்பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை புதிராகவும், நவீன அறிவியலுக்குச் சவால் விடும் விதமாக அமைந்திருப்பதால் தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாகக் கருதப்படுகிறது.

இச்சிலை௧்கான வழிபாடு, திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும் ஒருசில குறிப்புகளின் வாயிலாகக் கிடைக்கப்பெருகிறது.

"பாரப்பா மலையதுவின் உச்சியிலே

பாங்கான போகருட சமாதியருகே

கட்டான பாடாணவகை எட்டுடனொன்று

காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்

நண்ணவே பிரதிட்டைதான் செய்து

நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய

ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்

ஆரப்பா அறிவார்க ளாருமில்லை." - புலிப்பாணி

இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதி‌ல்லை. 

போகர் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள்

போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர் பட்டியல்;

  • போகர் 7000 (சப்த காண்டம்)
  • ஜெனன சாகரம் 550
  • நிகண்டு 1700
  • வைத்தியம் 1000
  • சரக்குவைப்பு 800
  • கற்பம் 360
  • உபதேசம் 150
  • இரணவாகமம் 100
  • ஞானசாராம்சம் 100
  • கற்ப சூத்திரம் 54
  • வைத்திய சூத்திரம் 77
  • முப்பு சூத்திரம் 51
  • ஞான சூத்திரம் 37
  • அட்டாங்க யோகம் 24
  • பூசா விதி 20
  • வாண சாஸ்திரம்

No comments:

Post a Comment

FCRA Bill on monday