Saturday, February 14, 2026

ஹைகோர்ட் நீதிபதிக்கு ரூ.50 லட்சம்- சாதகமான தீர்ப்பு பெற மூத்த வழக்கறிஞர் வாங்கினாராம்

சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ரூ.50 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 15 Feb 2026 

விசாரணையில் இருந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி விலகல்

வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் ஒருவர் ரூ.50 லட்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நீதிபதி, இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008-09ம் ஆண்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, இந்திய உலோகம் மற்றும் கனிமங்கள் வர்த்தக கழகத்தை ரூ.113.38 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக, சென்னை என்எஸ்சி போஸ் சாலையைச் சேர்ந்த தந்தை, மகனான நரேஷ் பிரசாத் அகர்வால் மற்றும் கணேஷ் அகர்வால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி கணேஷ் அகர்வாலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நரேஷ் பிரசாத் அகர்வாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது, இந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற, நீதிபதிக்கு கொடுக்க வேண்டுமெனக்கூறி ரூ.50 லட்சத்தை பெற்றுள்ளதாக, இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞரான முரளிகுமரன் மீது குற்றம்சாட்டி நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தங்களுக்கு புகார் மனு வந்துள்ளதாகக் கூறி, அதன் நகலுடன் மத்திய சட் டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக, நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதையடுத்து, நீதிபதி சம்பந் தப்பட்ட மூத்த வழக்கறிஞரை அழைத்து இதுதொடர்பாக விசாரித்தார். அப்போது, இந்தச் குற்றச்சாட்டுகளை பகிரங்க மாக மறுத்த மூத்த வழக்கறிஞர் முரளிகுமரன், இதுதொடர்பாக தனக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன், நீதித் துறையின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் இது போன்ற கடிதத்தை புறம் தள்ள வேண்டும் என்றும், மூத்த வழக் கறிஞர் மீது குற்றம்சாட்டி மனு அனுப்பிய நபரை கண் டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரினார்.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பதிவாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி வி சாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத் தரவிட்டுள்ளார்.


 

No comments:

Post a Comment

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம் தமிழ்நாடு அரசு, சட்டவிரோதமாகவும் அதிகமாகவும் நடைபெறும் குவாரி நடவடிக்க...