

சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார். ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர் , எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.
இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா ?!
ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா ?!
சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம் ? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தால் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்.
இன்னொரு முறை பட்டிமன்றம் என்று எங்கும் சென்றுவிட வேண்டாம். அந்தத் தகுதி உமக்கு இல்லை. மீறி வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்.
தமிழகத்தின் தனித்துவமான இந்த பட்டிமன்றம் என்ற கன்றாவியை கிராம திருவிழா நிகழ்ச்சிகளில் சிவனா சக்தியா? கல்வியா செல்வமா வீரமா? என உருட்டி, சன் டிவி புண்ணியத்தில் தீபாவளி பொங்கல் பண்டிகையைகூட மகளா மருமகளா? கூட்டுக்குடும்பம் சுமையா சுகமா? என பூமர் அங்கிள் தலைப்புகளில் நாலு கவிதை, சிரிக்கவே முடியாத நகைசுவை, நாலு துணுக்கு செய்திகள், தட்டையான புரிதலற்ற வாத பிரதிவாதங்கள், இதற்கென்றே ஞாயதராசுடன் அவதாரம் எடுத்துவந்து நடுவர் என இந்த கன்றாவியை தமிழ் கலாச்சாரத்தில் கொண்டு சேர்த்தி இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் இந்த கூறுகெட்ட கும்பல் விடாது கருப்பாக சுத்திவருகிறது!
இதில் முற்போக்கு ஜாதி ஒழிப்பு கும்பலின் பார்வையில் ஏன் இந்த பட்டிமன்ற புளி ஆம் புளித்துப்போன கருத்தாக்கங்களின் தொகுப்பாக இன்னும் எண்பதுகளில் உறைந்துபோன பேச்சு நுணக்கங்களை போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் ராஜா ஏன் எப்படி சிக்கினார் என புரியவில்லை!
நீங்க என்ன ஆளூக என்று கேட்டுவிட்டாராம்! கதற கதற வைத்து செய்கிறார்கள்! எப்படியோ இந்த கன்றாவி பட்டிமன்றங்கள் ஒழிந்துபோனால் அடுத்த தலைமுறை தமிழர்கள் தப்பித்துக்கொள்வார்கள்!
தமிழகத்தில் ஒருவர் எந்த பகுதி எந்த ஜாதி என தெரிய நாலு வார்த்தை பேசினால்போதும் !
பேசுபவரும் கேட்பவரும் நாப்பது வயதிற்குமேல் என்றால் நாலு வார்த்தைகளில் “கண்டு”கொள்வார்கள்! வட்டாரவழக்கு நாலு வார்த்தைகளில் எந்த ஊர் என சொல்லிவிடும், எந்த ஜாதி என்பதற்கு இன்னும் கொஞ்சம் பேசவேண்டும்! ஆனால் எப்படியோ “அதை” பிடித்துவிடுவார்கள்! இல்லையென்றால் சில கேள்விகளில் பிடித்துவிடுவார்கள்!
ஆனால் இன்று டிவி/ ஊடகம்/ சினிமாவில் கட்டமைக்கப்பட்ட பொது தமிழ் தாக்கதால் இன்றைய தலைமுறையின் ஜாதி கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான்! கொஞ்சம் மெனங்கெட்டு கேட்டு இப்படி முழிக்கவேண்டியதுதான்!
செட்டிநாடா என கேட்டது செட்டியாரா என தவறாக புரிந்துகொண்டார்கள் என புலம்பும் ராஜா ! உண்மையில் செட்டி நாடு என்ற நாடும் இல்லை அதற்கு ராஜா ஒருவரும் இல்லை ! ஆனால் உலகம் அப்படி இருப்பதாகவே நம்புகிறது! உங்க நிலையும் இனி அப்படித்தான்!
நாங்க சாதி சொல்லி இழிவுபடுத்த மாட்டோம்... ஒன்லி கலர் - சாலமன் பாப்பையா.



No comments:
Post a Comment