சுந்தர பாண்டியனின் துலாபாரம் (1250-1268 CE)
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் எல்லா மண்டலமும் கொண்டருளியவன். தில்லைக்கும் திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்து துலாபாரம் ஏறி பல்வேறு கொடைகளைச் செய்தவன். இவன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலிலும் துலாபாரம் ஏறியதாக அந்தக் கோயில் நுழைவாயிலில் கோபுரக் கல்வெட்டு கூறுகிறது.
जित्वा केरलमुद्गमय्य मगधं निर्जित्य लङ्काधिपंजित्वा क्षेममुदस्य होय्सलपतिं विद्राव्य चोलेश्वरम्।
भङ्क्त्वा काटकदुर्ग्गमन्ध्रनृपतिं हत्वाधिरूढस्तुलां
काञ्च्यां सुन्दरपाण्ड्यभूभृदशिषद्वीराभिषिक्तो महीम्॥
ஜித்வா கேரலமுத்₃க₃மய்ய மக₃த₄ம்ʼ நிர்ஜித்ய லங்காதி₄பம்ʼ
ஜித்வா க்ஷேமமுத₃ஸ்ய ஹோய்ஸலபதிம்ʼ வித்₃ராவ்ய சோலேஶ்வரம்.
ப₄ங்க்த்வா காடகது₃ர்க்₃க₃மந்த்₄ரந்ருʼபதிம்ʼ ஹத்வாதி₄ரூட₄ஸ்துலாம்ʼ
காஞ்ச்யாம்ʼ ஸுந்த₃ரபாண்ட்₃யபூ₄ப்₄ருʼத₃ஶிஷத்₃வீராபி₄ஷிக்தோ மஹீம்..
கேரளனை வென்று மகதனான வாணனை வேரறுத்து இலங்கையரசனை வென்றிகண்டு க்ஷேமனை வீழ்த்தி போசளனைப் புறந்தள்ளி சோழனை புறமுதுகிடவைத்து காடவனின் கோட்டையைப் பிளந்து ஆந்திர அரசனைக் கொன்று சுந்தர பாண்டியன் காஞ்சியில் துலாபாரம் ஏறி வீராபிஷேகம் செய்து கொண்டு புவியை ஆண்டான்.
இந்தக் கல்வெட்டு சுந்தர பாண்டியனின் வெற்றியோடு காஞ்சியில் துலாபாரம் ஏறியமையையும் துலாபாரம் தந்தமையும் குறிப்பிடுகிறது.

No comments:
Post a Comment