Thursday, February 12, 2026

ஆந்திரா சாமுவேல் ஜெகன் ஆட்சியில் பல கோயில்களுக்கு கலப்பட நெய் விநியோகம் - SIT விசாரணை அறிக்கை

ஆந்திரா சாமுவேல் ஜெகன் ஆட்சியில் பல கோயில்களுக்கு கலப்பட நெய் விநியோகம்: SIT விசாரணை அறிக்கையில் தகவல்

13 Feb 2026,  

 ஏலூரு: ஆந்​தி​ரா​வில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்​ மோகன் ரெட்​டி​யின் ஆட்சிக் காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.

இந்நிலையில், காணிப்​பாக்​கம் வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில், ஸ்ரீசைலம் மல்​லி​கார்​ஜுனர் கோயில் மற்​றும் ஏலூரில் உள்ள சின்ன திருப்​பதி என்றழைக்கப்படும் துவாரகா திரு​மலை கோயி​லிலும் பிரசாதங்களில் இதே கலப்பட நெய் உபயோகப்​படுத்​தப்​பட்​ட​தாக சிபிஐ சிறப்பு புல​னாய்வுக் குழு அளித்​துள்ள அறிக்​கை​யில் வெட்ட வெளிச்​ச​மாகி உள்​ளது.

போலே பாபா பால் நிறு​வனம் திருப்​ப​தி​யில் உள்ள விநாயகா ஏஜென்​சிஸ், சுமதி டிரேடர்ஸ் ஆகிய 2 நிறு​வனங்​களில் இருந்து ரசாயனங்​கள் வாங்​கி, அதனை நெய் போன்ற திர​வத்​தில் கலந்தது அம்​பல​மாகி உள்​ளது. இந்த 2 ஏஜென்​சிகள் மீது குற்றப்பத்​திரிக்கை தாக்​கல் செய்யப்பட்டுள்​ளது.

இந்த நெய் போன்ற ரசாயனம் கலந்த திர​வத்தை திருப்​பதி ஏழுமலை​யான் கோயிலுக்கு மட்​டுமல்​லாது, ஆந்​தி​ரா​வில் உள்ள பல முக்​கிய கோயில்​களுக்​கும் சுமதி டிரேடர்ஸ் மற்​றும் விநாயகா ஏஜென்​சிஸ் மூல​மாக வாங்​கிச் சென்று கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளது என சிறப்பு புல​னாய்​வுக் குழு தனது அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

இதனால் தற்​போது பக்தர்கள் தங்களின் கோபத்தை சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணமாக இருந்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

பழநி முருகன் கோயில் ஒலிபெருக்கியில் தவெக ஜோசப் விஜய் பாடல்: இளைஞர் மீது போலீஸில் புகார்

பழநி முருகன் கோயில் ஒலிபெருக்கியில் தவெக பாடல்: இளைஞர் மீது போலீஸில் புகார்  13 Feb 2026  பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்​டாயுதபாணி சுவா...