Saturday, February 14, 2026

ஒருகால பூஜை திட்டம்- தமிழகத்தில் 34 ஆயிரம் கோவில்களில் ஒரு வேளை விளக்கேற்றக் கூட வசதியில்லை

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்கள் இணைப்பு: அர்ச்சகர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_temple.php

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் ஆயிரம் கோயில்களை இணைக்க ரூ.25 கோடி நிதி, அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.1.500 மற்றும் 19 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூஜை உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 18 ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நிதி வசதியற்ற 1,000 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதை செயல்படுத்தும் விதமாக, வைப்புநிதியாக முதலீடு செய்யும் வகையில், மின்விசை நிதி நிறுவனத்தின் இயக்குநரிடம் ரூ,25 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, ஒருகால பூஜை திட்ட கோயில்களின் அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத் தொகையான ரூ.1,500 வழங்கும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு காசோலையை வழங்கினார்.

பூஜை உபகரணங்கள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூ.8.58 கோடி செலவில் 19 ஆயிரம் ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பூஜை உபகரணங்களை வழங்கும் அடையாளமாக 50 கோயில்களின் அர்ச்சகர்களிடம் வழங்கினார்.

ஒவ்வொரு கோயிலுக் கும் ரூ.4,515 செலவில் பித்தளை தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சிவிளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறைச் செயலர் க.மணிவாசன், துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், கோ.செ.மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்றக்கூட வசதியில்லை  மே 17,2022

https://temple.dinamalar.com/mahamaham/detail.php?id=124308
சென்னை: ‘‘தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழல் இல்லை ,’’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை , மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி வாயிலாக தானாக இயங்கும் சோலார் விளக்கு திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.


பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கோடைகாலத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னைநார் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோ ர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், வெயிலின் தாக்கம் அறியாதவகையில், நீர்த் தெளிப்பான் மற்றும் சோலார் விளக்குகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அன்னை தமிழில் அர்ச்சனை ட்டத்தை அனைத்து கோவில்களிலும் செ யல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில், 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின், கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனம்  செய்ய , தீட்சதர்களுக்கு கோரிக்கைவைக் கப்ப ட்டுள்­ளது. ஒரு கால பூஜை த் திட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து, 959 கோவில்களோடு, 2,000 கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட திருக்கோயில்களில், ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழ்நிலை இல்லை . இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர்

குமரகுருபரன், தொகுதிஎம்.எல்.ஏ., வேலு,இணை கமிஷனர்கள் காவேரி, ரேணுகாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







 

No comments:

Post a Comment

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம்

திமுக அரசு – சட்டவிரோத குவாரி கொள்ளைகளுக்கு ஒருமுறை சீரமைப்பு திட்டம் தமிழ்நாடு அரசு, சட்டவிரோதமாகவும் அதிகமாகவும் நடைபெறும் குவாரி நடவடிக்க...