சென்னை அருகே பதுங்கி யிருந்த அஸ்ஸாம் பயங்கரவாதி கைது 15 பிப்ரவரி 2025
தமிழகத்தில் மீண்டும் அரேபிய பாசீச முஹம்மதிய பயங்கரவாதம்- அஸ்ஸாமில் இருந்து இங்கு வந்து கைது செய்கின்றனர், கைது செய்கிறது.
சென்னை அருகே செம்மஞ்சேரியில் கட்டடத் தொழிலாளிபோல பதுங்கியிருந்த அஸ்ஸாம் பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா்.
வங்கதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அன்சருல்லா பங்களா குழு, ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆகிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
வட கிழக்கு மாநிலங்களில் மக்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தி மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இந்த இயக்கத்தினா் மீது கடந்த 3 மாதங்களாக அஸ்ஸாம் மாநில காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தினரை கைது செய்வதற்காக ‘ஆபரேசன் பிரகத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை அஸ்ஸாம் மாநில காவல் துறையின் சிறப்பு அதிரடி படை எடுத்து வருகிறது.
அஸ்ஸாமை விட்டு ஓட்டம்: இந்த நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தைச் சோ்ந்த நபா்கள் கடந்த இரு மாதங்களாக தொடா்ச்சியாக கைது செய்யப்படுகின்றனா். இதனால் அந்த இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்துகொண்டு சதிச் செயலுக்கு திட்டமிட்டு வந்தனா்.
இருப்பினும் கடந்த டிசம்பா் மாதம் 30-ஆம் தேதி கோக்ரஜாா் பகுதியைச் சோ்ந்த காஸி ரஹ்மான், நிகழாண்டு ஜன. 19-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் துப்ரி பகுதியைச் சோ்ந்த ஜாகிா் அலி, அதே மாதம் 21-ஆம் தேதி அஜ்பா் ரஹ்மான் ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனா். இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அபுசலாம் அலி சிக்கினாா்: அன்சருல்லா பங்களா குழு, ஜமாத் -உல்-முஜாகிதீன் ஆகிய இயக்கங்களின் முக்கிய நிா்வாகியும், அந்த இயக்கத்தை வளா்ச்சிக்காக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வரும் துப்ரி மாவட்டம் பிலாஸிபரா பகுதியைச் சோ்ந்த அபு சலாம் அலி (37) என்பவா், சென்னை செம்மஞ்சேரி அருகே உள்ள அரசன் கழனியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கட்டடத் தொழிலாளிபோல தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இரு நாள்களுக்கு முன்அஸ்ஸாம் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையினா் சென்னை வந்தனா். அவா்கள் தாம்பரம் மாநகர காவல் துறையுடன் அரசன் கழனியில் உள்ள வீட்டில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கிருந்த அபு சலாம் அலியை கைது செய்தனா்.
15 போ் கைது: பின்னா் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். இதில் அபு சலாம் அலி, அரசன் கழனியில் தலைமறைவாக இருப்பதற்கு சென்னையைச் சோ்ந்த யாரெல்லாம் உதவி செய்தாா்கள் என விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னா் அபுசலாம் அலியை அஸ்ஸாம் சிறப்பு அதிரடிப்படையினா் விமானம் மூலம் அஸ்ஸாமுக்கு அழைத்துச் சென்றனா்.
கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தைச் சோ்ந்த 15 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அஸ்ஸாம் மாநில காவல் துறை தெரிவித்துள்ளனா். அதேவேளையில் அஸ்ஸாம் பயங்கரவாதி அபு சலாம் அலிக்கு, சென்னையில் யாரும் உதவி செய்தாா்களா என சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாா் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.



No comments:
Post a Comment