ஸ்டாலின் வீட்டு முன் தீக்குளித்து தென்காசி குருவி குளம் ஒன்றியம் -ஜமீன் தேவர்குளம் வெற்றிமாறன் தற்கொலை
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் எனக்கு எதிராக சதி செய்தார். தன்னுடைய பலத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக செயல்பட்டார். பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுத்து எங்களது வேட்பு மனுவை நிராகரிக்க செய்துள்ளார். அவரின் அழுத்தம் காரணமாக எனது மனுவை நிராகரித்து உள்ளனர்.
லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு பிரபு என்ற அதிகாரியும் எனது மனுவை நிராகரித்துள்ளனர். நீங்கள்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நபர் உடல் முழுவதும் தீ காயங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம் நடந்த விஷயங்களை குறிப்பிட்டார். அதோடு முதல்வரிடம் கொடுக்கும்படி இது தொடர்பான மனுவையும் அவர் அமைச்சரிடம் வழங்கினார்.
உறுதி
அவர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் வெற்றிமாறனிடம், முதலமைச்சர் உங்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். விரைவில் உங்கள் மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படும், கவலைப்பட வேண்டாம் என்று கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-reason-behind-the-suicide-attempt-in-front-of-tn-cm-stalin-house-434129.html


No comments:
Post a Comment