Monday, June 8, 2026

திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் போலி டிக்கெட் பல நூறு கோடி மோசடி : மோசடியை மறைக்க டிக்கெட்டை எரித்த அதிகாரிகள்

திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்தில் போலி டிக்கெட் மோசடி : பல நூறு கோடி அரசுக்கு இழப்பு: மோசடியை மறைக்க டிக்கெட்டை எரித்த அதிகாரிகள்: திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்பு போலி டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்த போக்குவரத்து கழகத்தில் உயர் அதிகாரிகள், பேருந்து நடத்துனர்களை (Conductors) பல செட் டிக்கெட்டுகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்குவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் (Operational Costs) மற்றும் டிக்கெட் வருவாயைப் போலி கணக்குகள் மூலம் காட்டி, அரசுப் பொதுப் பணம் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காத நிலையிலும், அவற்றிற்குப் போலி டிக்கெட் புத்தகங்கள் மற்றும் எண்கள் தயார் செய்யப்பட்டு, அரசுப் பணம் மற்றும் டீசல் நிதிகள் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரி 28ஆம் தேதி மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்கிற பயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் இருந்து இரண்டு லாரிகளில் டிக்கெட் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு பாபநாசம் பணிமனைக்கு கொண்டு வந்துள்ளனர். பாபநாசம் பணிமனையில் வைத்து குறிப்பிட்ட சில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அந்த டிக்கெட்டுகள் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் லாரிகள் வந்தது மற்றும் உயர் அதிகாரிகள் யார் யார் பணிமனைக்கு வந்தார்கள் உள்ளிட்ட அனைத்து காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பலர் தென் மண்டலத்தில் தான் இன்னும் பணியாற்றி வருகின்றனர். தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு இந்த முறைகேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒத்துழைப்புடன் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கேரள முஸ்லிம் லீக் பேரம்பரா பெண் MLA பாத்திமா தஹிலியா - ஹோட்டல் திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதால் மதத்தில் இருந்து விலாகுவதாக மிரட்டல்

  பாத்திமா தஹிலியா  கேரள   முஸ்லிம் லீக்  அரசியல்வாதியும் வழக்கறிஞ ர்;   https://x.com/AstroCounselKK/status/2063645827915239463 2026 முதல் ...