Friday, August 28, 2026

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு High court உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

26 ஆகஸ்ட் 2026, கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மாடம்பாக்கத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சந்தானம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் 37.49 ஏக்கா் பரப்பளவில் ரூ.525 கோடியில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம் கட்டப்பட்டு வருகிறது.

முட்டுக்காடு கிராமத்தில் உள்ள வேம்படியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.08 ஹெக்டா் நிலத்தை ஆக்கிரமித்து இந்தக் கருத்தரங்க மைய கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தக் கட்டுமானத்தை அப்புறப்படுத்தக் கோரி இந்து சமய அறநிலையத் துறைக்கு பலமுறை மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லலை என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏழுமலை, கோயில் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், 60 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. எனவே கட்டுமானத்தை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பரணிதரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இந்த மனு தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம் குறித்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [1, 2, 3]

கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம் என்பது சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையை (ECR) ஒட்டியுள்ள முட்டுக்காட்டில் ₹525 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஒரு உலகத் தரம் வாய்ந்த நிகழ்வு வளாகமாகும். [1, 2]

திட்டத்தின் கண்ணோட்டம்
  • இடம்: முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலை (ECR), சென்னை
  • பரப்பளவு: 37.99 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
  • செலவு: தோராயமாக ₹525 கோடி
  • எதிர்பார்க்கப்படும் நிறைவு: 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் (டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்) திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. [1, 2]
முக்கிய வசதிகள்
  • கண்காட்சி அரங்கம்: 91,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் 10,000 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டது.
  • மாநாட்டு அரங்கம்: 5,000 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டது
  • கலையரங்கம்: 1,500 பேர் அமரும் வசதி கொண்டது.
  • வசதிகள்: உணவருந்தும் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செயலி மூலமான வாடகைக் கார் வசதி மற்றும் 3,300-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான வாகன நிறுத்துமிடம். [1, 2, 3]

No comments:

Post a Comment

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு High court உத்தரவு

கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்க மையம்: அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவு கோயில் நிலத்தில் கலைஞா் சா்வதேச கருத்தரங்...