Thursday, June 16, 2022

சென்னை:பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் கடல்போல் காட்சியளித்த பெரிய ஏரியை காணவில்லை

 சென்னை:பல்லாவரம் - துரைப்பாக்கம் வட்ட சாலையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசுக்கு சொந்தமான நிலம், மண் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, அந்த நிலம் நேற்று அதிரடி யாக மீட்கப்பட்டது.பல்லாவரம் - துரைப்பாக்கம் வட்ட சாலையில், கீழ்க்கட்டளை பெரிய ஏரி அருகில், "தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்' என்ற அமைப்பின் கீழ், "புதுவாழ்வு கொண்டாட்ட மையம்' என்ற ஆலயம் இயங்கி வருகிறது.நிலம் மீட்புபல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை, ஆலய நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளதாக, பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.


https://www.dinamalar.com/News_Detail.asp?Id=587132&Print=1

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் உத்தரவின்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை, "பொக்லைனர்' உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகைவைத்தனர்.மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.



இதுகுறித்து, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் கூறியதாவது:ஆலந்தூர் வட்டம், கீழ்க்கட்டளை ஏரிக்கு அருகில், சர்வே எண், 100, 101ல் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சித்திர சேனன் உத்தரவின்படி, ஆய்வு மேற்கொண்டோம்.800 கோடி ரூபாய் மதிப்பு
இதில், ஏரிக்கு அருகில் உள்ள சர்வே எண், 13, 77, 78, 22, 73 மற்றும் 75 ஆகியவற்றில் உள்ள, 1.48 ஏக்கர் நிலம் உட்பட ஆறு ஏக்கர் நிலமும், தனியாருக்கு சொந்தமான பட்டா இடம், 12 ஏக்கரும் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது.ஆலயம் உள்ள, 15 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா உள்ளதாக கூறினர். ஆனால், இதுவரை எந்த ஆவணமும் சமர்பிக்கப்படவில்லை.அந்த நிலமும் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். மொத்தமாக, 40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு, 800 கோடி ரூபாய்.மீட்கப்பட்ட இடம், அதன் உரிமையாளர்களிடமும், பல்லாவரம்நகராட்சி வசமும்
ஒப்படைக்கப்பட உள்ளது.ஆவணம் உண்டா?ஆலயத்திற்கு சொந்தமானதாக கூறப்படும், 15 ஏக்கர் நிலத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால், ஆய்வு நடத்தபட்டு, அந்த ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, எட்டியப்பன் தெரிவித்தார்.ஆலய வழக்கறிஞர் ஜான்பீட்டர் கூறுகையில், ""2002ம் ஆண்டு முதல், நன்கொடையாளர்கள் மூலம் அவ்வப்போது நிலம் வாங்கினோம். இதுவரை, 38 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப் போம்,'' என்றார்.பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்
நிலம் மீட்கப்படும் தகவல் கிடைத்ததும். பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலத்தை, புகைப்படம் எடுத்தனர். அப்போது, ஆலயத்தை சேர்ந்த சிலர், புகைப்படம் எடுப்போர் மற்றும் பத்திரிகையாளர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து கேள்வி கேட்ட சிலரை, அவர்கள் மிரட்டினர். இதை பார்த்த மற்றபத்திரிகையாளர்கள் அங்கு கூடியதால், மிரட்டியவர்கள், அங்கிருந்து விலகினர்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடல்போல் காட்சியளித்த பெரிய ஏரியை காணவில்லை Byமாலை மலர்12 நவம்பர் 2019 1:41 PM (Updated: 12 நவம்பர் 2019 1:41 PM) பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடல்போல் காட்சியளித்த பெரிய ஏரி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது சமூக ஆர்வலர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. சென்னை: அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது சென்னை. எனவே நீர் நிலைகளை காப்போம் என்ற கோ‌ஷம் பலமாக கேட்கிறது. அதே வேகத்தில் இருக்கிற நீர் நிலைகளை அழிப்பதும் நடக்கிறது. பல்லாவரம் பெரிய ஏரி கடல் போல் காட்சியளிக்கும் இந்த ஏரிதான் பல்லாவரம், குரோம்பேட்டை, ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியின் நீர் ஆதாரமாக இருந்து வந்தது. 26 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்கும். பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை திட்டத்துக்காக இந்த ஏரியை முதலில் இரண்டாக பிளந்து ஏரியின் நடுவில் ரோடு உருவானது. இதையும் படியுங்கள்: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை சுமார் 40 வருடங்களாக பல்லாவரம் நகராட்சி குப்பைகளையும் இந்த ஏரியில் கொட்டினார்கள். இதனால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி மிகப்பெரிய குப்பைமேடாக மாறியது. அரசு ஒரு பக்கம் இப்படி அதிகாரப்பூர்வமாக ஏரியை ஆக்கிரமித்தது. இன்னொரு பக்கம் பல தனியாரும் ஆக்கிரமித்தார்கள். இப்போது மொத்தமே 5 ஏக்கருக்குள் சிறு குட்டை போல் மாறி விட்டது பெரிய ஏரி, இருக்கும் ஏரியை காக்கும் எண்ணம் கூட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வரவில்லை. இப்போது ரேடியல் சாலையை அகலப்படுத்துவதற்காக மண்ணை கொட்டி மேலும் ஏரியை நிரப்பி சாலையாக மாற்றும் பணிகள் நடக்கிறது. இதையும் படியுங்கள்: சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை படம் எடுத்து அனுப்பினால் பரிசு: நிதின் கட்காரி கீழ்க்கட்டளையில் இருந்து குரோம்பேட்டை வரை ரேடியல் சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் நூற்றுக்கணக்கில் நின்றன. கடந்த ஒரு மாதத்தில் அனைத்து மரங்களையும் வெட்டி விட்டனர். இப்போது விமான நிலைய ஓடுபாதை போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரத்தை நடுங்கள் என்று கோர்ட்டும் அறிவுறுத்தி விட்டது. ஆனால் எதையும் யாரும் கண்டு கொள்வதில்லை. கண்ணெதிரில் பிரமாண்டமான ஒரு ஏரி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது சமூக ஆர்வலர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.

https://www.maalaimalar.com/news/district/2019/11/12134157/1270900/big-lake-missing-in-Pallavaram-Thoraipakkam-radial.vpf?infinitescroll=1

ரூ.800 கோடி மதிப்பிலான அரசு, தனியார் நிலத்தை ஆக்கிரமித்த “தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்’ -”புதுவாழ்வு கொண்டாட்ட மையம்’

புதுவாழ்வு கொண்டாட்ட மையம் கிறிஸ்துவ “சர்ச்”
https://www.blogger.com/blog/post/edit/2396281196027567201/1312002531737993631
8oo crore land by church 17_11_2012_007_016
 20121117c_013101006
images
சென்னை:பல்லாவரம் – துரைப்பாக்கம் வட்ட சாலையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசுக்கு சொந்தமான நிலம், மண் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, அந்த நிலம் நேற்று அதிரடி யாக மீட்கப்பட்டது.பல்லாவரம் – துரைப்பாக்கம் வட்ட சாலையில், கீழ்க்கட்டளை பெரிய ஏரி அருகில், “தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்’ என்ற அமைப்பின் கீழ், “புதுவாழ்வு கொண்டாட்ட மையம்’ என்ற ஆலயம் இயங்கி வருகிறது.நிலம் மீட்புபல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை, ஆலய நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளதாக, பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
Chruch lands 20121117c_013101005
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் உத்தரவின்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை, “பொக்லைனர்’ உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகைவைத்தனர்.மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் கூறியதாவது:ஆலந்தூர் வட்டம், கீழ்க்கட்டளை ஏரிக்கு அருகில், சர்வே எண், 100, 101ல் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சித்திர சேனன் உத்தரவின்படி, ஆய்வு மேற்கொண்டோம்.800 கோடி ரூபாய் மதிப்பு
இதில், ஏரிக்கு அருகில் உள்ள சர்வே எண், 13, 77, 78, 22, 73 மற்றும் 75 ஆகியவற்றில் உள்ள, 1.48 ஏக்கர் நிலம் உட்பட ஆறு ஏக்கர் நிலமும், தனியாருக்கு சொந்தமான பட்டா இடம், 12 ஏக்கரும் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது.ஆலயம் உள்ள, 15 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா உள்ளதாக கூறினர். ஆனால், இதுவரை எந்த ஆவணமும் சமர்பிக்கப்படவில்லை.அந்த நிலமும் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். மொத்தமாக, 40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு, 800 கோடி ரூபாய்.மீட்கப்பட்ட இடம், அதன் உரிமையாளர்களிடமும், பல்லாவரம்நகராட்சி வசமும்
ஒப்படைக்கப்பட உள்ளது.ஆவணம் உண்டா?ஆலயத்திற்கு சொந்தமானதாக கூறப்படும், 15 ஏக்கர் நிலத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால், ஆய்வு நடத்தபட்டு, அந்த ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, எட்டியப்பன் தெரிவித்தார்.ஆலய வழக்கறிஞர் ஜான்பீட்டர் கூறுகையில், “”2002ம் ஆண்டு முதல், நன்கொடையாளர்கள் மூலம் அவ்வப்போது நிலம் வாங்கினோம். இதுவரை, 38 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப் போம்,” என்றார்.பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்
Pallavaram Lands  by church 17_11_2012_001_050
நிலம் மீட்கப்படும் தகவல் கிடைத்ததும். பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலத்தை, புகைப்படம் எடுத்தனர். அப்போது, ஆலயத்தை சேர்ந்த சிலர், புகைப்படம் எடுப்போர் மற்றும் பத்திரிகையாளர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து கேள்வி கேட்ட சிலரை, அவர்கள் மிரட்டினர். இதை பார்த்த மற்றபத்திரிகையாளர்கள் அங்கு கூடியதால், மிரட்டியவர்கள், அங்கிருந்து விலகினர்.

No comments:

Post a Comment