திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் பகுதியில் முருகன் யாத்திரை ரதத்தின் (வாகனம்) மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் செப்டம்பர் 2026 தொடக்கத்தில் அரங்கேறியுள்ளது. [1]
https://x.com/NainarBJP/status/2096274120002675173
இச்சம்பவம் குறித்த முக்கிய விவரங்கள்:
- நடந்த இடம்: மீஞ்சூர் அருகே நெய்தவாயல் பகுதியில் உள்ள சோமராஜ சேகர் என்பவரது இல்லத்தின் முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. [1]
- பாதிக்கப்பட்ட வாகனம்: அறுபடை யாத்திரை நிறைவடைந்து, பல்வேறு ஆலயங்களுக்கு வழங்குவதற்காக 108 வேல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ரத வாகனத்தின் மீது நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. [1]
- காவல்துறை விசாரணை: இச்சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, மீஞ்சூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். [1]
- கண்டனங்கள்: இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முருக பக்தர்களுக்கு எதிரானதாக உருமாறுகிறதா அரசு?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விலைமதிப்பற்ற 2.5 அடி உயர மரகத முருகர் சிலை காணாமல் போன பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆன்மிக அரசியல் கட்சியின் சார்பாக, எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளுக்கும், சிறுவாபுரியில் இருந்து யாத்திரையாக கொண்டு செல்லப்படவிருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனத்தை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் சிலர் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
108 கிராமங்களின் வழிபாட்டிற்காக வழங்கப்படவிருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகுவதை பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போகிறது. சட்டமன்றத்தை “சர்ச்” ஆக மாற்றிய திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் வலுவாக தடை போட்டால் சமூகத்தில் மத நல்லிணக்கம் எப்படி மலரும்? இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்ற சமத்துவ உணர்வு ஆளும் அரசுக்கே இல்லாத போது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்? அதனால் தான் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் அச்சமின்றி அரங்கேறுகின்றன. இந்துக்கள் மீது தொடரும் இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை.
எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், “மதச்சார்பின்மை” என்ற போர்வையில், முழுக்க முழுக்க சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதல்வர் திரு. அவர்களை வலியுறுத்துகிறேன்.
.png)
No comments:
Post a Comment