Monday, December 1, 2025

சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் (கிரவுண்ட்- ரூ.11.5 கோடி) இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்

சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் (கிரவுண்ட்- ரூ.11.5 கோடி) இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்

செய்திப்பிரிவுUpdated on:  02 Dec 2025 https://www.hindutamil.in/news/business/bhashyam-group-buys-58-acres-of-land-from-standard-chartered-bank-in-chennai-for-rs-1212-crore 

Devapriya view -இந்த இடம் உள்ள பகுதி ரோடு அகலம் அதீத FSIக்கு போதாது எனும் நிலையில் இது மிக அதைகமான விலை

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் ஸ்டாண்​டர்டு சார்ட்​டர்டு வங்​கி​யிட​மிருந்து 5.8 ஏக்​கர் இடத்தை ரூ.1,212 கோடிக்கு பாஷ்யம் குழு​மம் வாங்​கி​யுள்​ளது. 

சென்னை ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​களில் பிரபல​மான பாஷ்யம் குழு​மம், ரியல் எஸ்​டேட் வரலாற்​றில் மிகப்​பெரிய சாதனை படைக்​கும் வகை​யில் நுங்​கம்​பாக்​கம், ஹாடோஸ் சாலை​யில் உள்ள 5.8 ஏக்​கர் இடத்தை ஸ்டாண்​டர்டு சார்ட்​டர்டு வங்​கி​யிட​மிருந்து வாங்​கி​யுள்​ளது.

இந்த நிலத்​தின் மொத்த மதிப்பு பதிவுக் கட்​ட​ணங்​கள் உட்பட சுமார் ரூ.1,212 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சென்னை ரியல் எஸ்​டேட் சந்​தை​யில் இது​வரை நடந்​த​திலேயே மிகப்​பெரிய பணப் பரிவர்த்​தனை இது​வாகும்.

ஏற்​கெனவே பாஷ்யம் குழு​மம், கிழக்கு கடற்​கரை சாலை​யில் (இசிஆர்) வரவிருக்​கும் ‘பி​ரார்த்​தனா பை பாஷ்யம்’, ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கிர​வுன் பிளாசா தளத்​தில் ஆடம்பர அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அசோக் நகரில் ‘தி பீக்’, போட் கிளப்​பில் ‘தி பைனாக்​கிள்’, கோபாலபுரத்​தில் ‘தி எபிக்’, போயஸ் கார்​டனின் ‘ராயல் தமேரா கார்​டன்​ஸ்’, ஓஎம்​ஆர் துரைப்​பாக்​கத்​தில் ‘ப்​ரொமநேடு, என்​சாண்​டட்’ போன்ற பல்​வேறு ஆடம்பர குடி​யிருப்பு மற்​றும் வணி​கத் திட்​டங்​களை வெற்​றிகர​மாகச் செயல்​படுத்தி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிலை​யில் மத்​திய சென்​னை​யில் ஆடம்பர குடி​யிருப்​புத் திட்​டங்​களுக்​கான நிலத்​தின் தேவை அரி​தாகி வரும் சூழலில், பாஷ்யம் குழு​மத்​தின் இந்த கையகப்​படுத்​தல், முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த ஒப்​பந்​தத்​துக்​கான பரிவர்த்​தனை ஆலோ​சக​ராக சிபிஆர்இ நிறு​வனம் செயல்​பட்​டது. இந்த கையகப்​படுத்​தல் மூலம், நகரின் ஆடம்பர ரியல் எஸ்​டேட் பிரி​வில் பாஷ்யம் குழு​மம் தனது ஆதிக்​கத்தை மீண்​டும்​ ஒரு​முறை நிலைநிறுத்​தியுள்​ளது.

இலங்கை, இந்தோனேஷியா & தாய்லாந்து -டிட்வா புயலில் 1,140க்கும் மேற்பட்டோர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடுகளை கபளீகரம் செய்த புயல்; இதுவரை 1,140க்கும் மேற்பட்டோர் பலி நமது நிருபர்டிச 02, 2025


கொழும்பு: இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவமாடிய 'டிட்வா', 'சென்யார்' புயலுக்கு இதுவரை, 1,140க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; நுாற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். 

தென்கிழக்கு ஆசியாவின் மிக மோசமான பாதிப்பாக இது மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் நம் அண்டை நாடான இலங்கையை கபளீகரம் செய்து, நம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை நோக்கி மையம் கொண்டுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு களால், இந்தோனேஷியாவில் மட்டும் 604 பேர் உயிரிழந்துள்ளனர்; இலங்கையில் 366 பேரும், தாய்லாந்தில் 176 பேரும், மலேஷியாவில் மூன்று பேரும் பலியாகி உள்ளனர்.

இது தவிர நுாற்றுக்கணக்கானோர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், கனமழையால் அங்குள்ள பெரும்பாலான பாலங்கள் இடிந்து விழுந்தன; பிரதான சாலைகளும் மூடப்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் இதுவரை, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாது காப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் என, கூறப்படுகிறது. கனமழைக்கு இதுவரை, 366 பேர் பலியாகி உள்ள நிலையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். 

இதையடுத்து, அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இலங்கை அதிபர் திசநாயகேவிடம் தொலைபேசியில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார்.


முன்னதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நம் நாட்டின் சார்பில் நிவாரணப் பொருட்களையும், மீட்புப் படையினரையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.


இந்தோனேஷியா

இதேபோல் இந்தோனேஷியாவில் சென்யார் புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை, 604 பேர் உயிரிழந்துள்ளனர்; 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 


எனவே, அங்குள்ள சுமத்ரா தீவின் பெரும் பகுதிகளை, அணுக முடியாத நிலை உள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் இருந்து தப்பியவர்கள், தங்களின் வீடு, உடைமைகளை இழந்து நிர்க்கதியாய் நிற்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


தாய்லாந்து

தாய்லாந்திலும் சென்யார் புயலுக்கு 176 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள போதும், மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இது தொடர்பாக, இரண்டு அதிகாரிகளை அந்நாட்டு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.இதைத் தவிர, மலேஷியாவில் மூன்று பேர் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.


திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகைக்கு  தீபம் ஏற்ற அனுமதி - உயர்நீதிமன்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு:

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிச.,3 ல் நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றத்தின் 1996 உத்தரவின் அடிப்படையில் டிச.,3ல் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யுமாறு கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள (தர்காவிலிருந்து 15 மீ.,தொலைவில்) தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு சட்ட ரீதியாக தடை இல்லை. இது 1920 ல் பிரிவி கவுன்சில் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பழமையான தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பழமையான தீபத்துாணை கோயில் நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. இது பாரம்பரிய இடத்தில் பக்தர்கள் மத சடங்குகளை செய்வதை தடுக்கும் நோக்கத்தை குறிக்கிறது. அம்முடிவு சட்ட விரோதமானது. ரத்து செய்ய வேண்டும். மலை உச்சியிலுள்ள பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கநாதன் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மதுரை கனகவேல் பாண்டியன்,'பாரம்பரிய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

ராமரவிக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவு மனுதாரர்கள் மற்றும் சோலைகண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், வெங்கடேஷ், குமரகுரு, நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா, பொன்னு ரங்கன்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால்தான் சுற்றிலும் உள்ள ஊர்களை சேர்ந்த மக்களுக்கு தெரியவரும். உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றினால் மக்களுக்கு தெரியாது. தீபத்துாணில் ஏற்றினால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. பிற மதத்தினர் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு, அறநிலையத்துறை தரப்பில்தான் அனுமானத்தின் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. தர்கா எல்லை சுற்றுச்சுவரிலிருந்து தீபத்துாண் 63.20 மீ.,துாரத்தில் அமைந்துள்ளது.

அரசு தரப்பு: 1920 முதல் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது. மலை உச்சியிலுள்ள தீபத்துாணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர் கோருவதற்கு ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. பிரச்னையை உருவாக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கோயில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தீபத்துாணில்தான் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் 1994 ல் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் மனுவை கோயில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்தது தவறு.

வக்புவாரிய தரப்பு: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். ராம ரவிக்குமாரின் மனு நிலைக்கத்தக்கதல்ல. ஆதாரத்தை அவர் தாக்கல் செய்யவில்லை. கோயில் நிர்வாகத்திற்கு வக்பு வாரியம் ஒத்துழைப்பு அளிக்கத் தயார். ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால்தான் தீர்வு கிடைக்கும்.

தர்கா நிர்வாகம் தரப்பு: தர்கா எல்லைக்குள் தீபத்துாண் உள்ளது. அங்கு தீபம் ஏற்ற முடியாது. வழக்கம்போல் மாற்று இடத்தில் தீபம் ஏற்றுவதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே இரு தரப்பிலும் ஒப்புக் கொண்டபடி ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால்தான் தீர்வு கிடைக்கும்.

அரங்கநாதன் தரப்பு: கோயில் கருவறைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என கோயிலின் மூத்த ராஜபட்டர் தெரிவித்துள்ளார். அவர் அதில் நிபுணத்துவம் பெற்றவர். இவ்விவகாரத்தில் ராம ரவிக்குமார் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. =இவ்வாறு விவாதம் நடந்தது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது. கனகவேல் பாண்டியன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றார்

வாராகி விசில் பிளோயர் எதிராக போலி வழக்குகள் தொடுத்தார் சென்னை போலீஸ் கமிஷனர் – மதுரை உயர்நீதிமன்றம்

சென்னை போலீஸ் கமிஷனர் வாராகி விசில் பிளோயருக்கு போலி வழக்குகள் தொடுத்தார்: விசாரணைக்கு CB-CID-க்கு மாற்றம் – மதுரை உயர்நீதிமன்றம்

https://www.dtnext.in/news/chennai/chennai-police-commissioner-foisted-cases-against-whistleblower-says-hc-823076

2025 டிசம்பர் 2: மதுரை உயர்நீதிமன்றம், சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர், விசில் பிளோயர் வி.ஆர். கிருஷ்ணகுமார் அல்லது வாராகி மீது போலி வழக்குகளை தொடுத்தார் என்று கடுமையாக கண்டித்துள்ளது. இந்த வழக்குகள், வாராகியின் ஊழல் வெளிப்பாட்டைத் தடுக்கும் மோசடி நோக்கத்துடன் தொடுத்தவை என்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கூறினார். ஐந்து வழக்குகளையும் CB-CID (சென्ट्रல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் சிபி)க்கு மாற்றி, நியாயமான விசாரணை உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் விசில் பிளோயர் பாதுகாப்பு மற்றும் போலீஸ் அத்துமீறலுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல்கல். இந்தக் கட்டுரையில், வராகியின் பின்னணி, வழக்கின் சூழல், நீதிமன்ற கூற்றுகள், விளைவுகள் மற்றும் சமூக தாக்கங்களை தமிழில் விரிவாகப் பார்க்கலாம். இது அரசு ஊழல் வெளிப்பாட்டின் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது.

வராகி யார்? – ஒரு விசில் பிளோயரின் போராட்டம்

வி.ஆர். கிருஷ்ணகுமார், ‘வாராகி’ என்ற பெயரில் அறியப்படுபவர், சென்னையைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் மற்றும் விசில் பிளோயர். அவர் பொது அலுவலகங்களில் நடக்கும் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதில் முன்னணியில் உள்ளார். பொது நலன் வழக்குகள் (Public Interest Litigations - PILs) மூலம் அரசு அதிகாரிகளின் ஊழலை சவால் செய்துள்ளார்.

வாராகியின் சாதனைகள்:

  • சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனருக்கு எதிரான ஊழல் வெளிப்பாடு: அவர் இந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.
  • பல PILs: உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகளை தாக்கல் செய்து, பொது நலனை பாதுகாக்க முயன்றார்.
  • ஊடக செயல்பாடு: சமூக ஊடகங்கள் மற்றும் இதழ்கள் மூலம் ஊழல் தகவல்களை பகிர்ந்து, அரசியல் மற்றும் நிர்வாக அழுத்தங்களை எதிர்கொண்டார்.

வாராகி போன்ற விசில் பிளோயர்கள், இந்தியாவின் ஊழல் எதிர்ப்புச் சட்டம் (Whistleblowers Protection Act, 2014) கீழ் பாதுகாக்கப்பட வேண்டும், ஆனால் நடைமுறையில் அவர்கள் துன்புறுத்தல் மற்றும் போலி வழக்குகளை சந்திக்கின்றனர். இந்த வழக்கு, அவரது போராட்டத்தின் ஒரு அத்தியாயம்.

வழக்கின் பின்னணி: போலி வழக்குகள் எப்படி தொடுக்கப்பட்டன?

வாராகி, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனருக்கு எதிரான ஊழல் தகவல்களை சேகரித்ததும், அவருக்கு எதிராக ஐந்து வழக்குகள் தொடர்ந்து தொடுக்கப்பட்டன. இவை குறுகிய காலத்திற்குள் (short span of time) தொடுக்கப்பட்டவை, இது மோசடி நோக்கத்தை (malafide intention) காட்டுகிறது.

வழக்குகளின் விவரங்கள்:

  • ஐந்து வழக்குகள்: சென்னை சிட்டி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டவை – ஊழல் வெளிப்பாட்டைத் தடுக்கும் நோக்கத்தில்.
  • மோசடி நோக்கம்: வராகி தொடர்ந்து ஊழல் வெளிப்பாட்டில் ஈடுபடுவதைத் தடுக்க, போலி குற்றச்சாட்டுகளை வைத்து அவரை துன்புறுத்தல்.
  • வாராகியின் பதில்: அவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு தொகுப்பு மனுக்களை (batch of petitions) தாக்கல் செய்து, வழக்குகளின் விசாரணையை **CBI (சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்)**க்கு மாற்ற கோரினார். நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்காக.

இந்த வழக்கு, இந்தியாவின் போலீஸ் அத்துமீறல்களை (police overreach) எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு எதிரான விசில் பிளோயர்களுக்கு.

மதுரை உயர்நீதிமன்றத்தின் கண்டனம்: நீதிபதியின் கூற்றுகள்

நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரித்தபோது, போலீஸ் கமிஷனரின் செயல்களை கடுமையாக விமர்சித்தது. நீதிமன்றம் கூறியது:

“வாராகி தொடர்ந்து சட்டவிரோத செயல்களுக்கு எதிராக தனது பணியைத் தொடருவதைத் தடுக்க, அவர் சிட்டி போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரித்ததால், போலி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இது மோசடி நோக்கத்துடன் (malafide intention), குறுகிய காலத்திற்குள் நடந்தது.”

மேலும் கூற்றுகள்:

  • விசாரணை அழுக்கடைதல் ஆபத்து: வராகி மாநிலத்தின் உயர் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததால், அவர்கள் விசாரணையை பாதிக்கலாம். இது விசாரணையை அழுக்கடைக்கும் ஆபத்து (danger of being tainted).
  • நம்பிக்கை ஏற்படுத்தல்: விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்த, சுதந்திர அமைப்பான CB-CIDக்கு மாற்றம்.
  • அதிகாரிகளின் பங்கு: CB-CID இன் கூடுதல் இயக்குநர் (Additional Director General), டெப்யூட்டி சூபரிண்டெண்டன்ட் ஆஃப் போலீஸ் (DSP) தரத்திற்கு குறைவல்ல அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
  • கால வரம்பி: விசாரணையை 12 வாரங்களுக்குள் முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  • மேற்பார்வை: போலீஸ் இயக்குநர் ஜெனரல் (DGP) விசாரணையை கண்காணிக்க வேண்டும்.

இந்த தீர்ப்பு, விசில் பிளோயர்களின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது, மேலும் போலீஸ் அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிரான உதாரணமாகிறது.

விளைவுகள்: போலீஸ் அத்துமீறல் மற்றும் விசில் பிளோயர் பாதுகாப்பு

இந்த தீர்ப்பின் முக்கிய விளைவுகள்:

அம்சம்விவரம்
வழக்கு மாற்றம்ஐந்து வழக்குகளும் CB-CID-க்கு மாற்றம் – CBI அல்ல, ஆனால் சுதந்திர அமைப்பு.
விசாரணை அதிகாரிDSP தரம் அல்லது அதற்கு மேல் – நியாயமான விசாரணை உறுதி.
கால வரம்பி12 வாரங்களுக்குள் முடிவு – தாமதம் தவிர்ப்பு.
மேற்பார்வைDGP கண்காணிப்பு – உயர் அதிகாரிகளின் தலையீடு தடுப்பு.

சமூக தாக்கம்:

  • விசில் பிளோயர் ஊக்கம்: இது போன்ற தீர்ப்புகள், ஊழல் வெளிப்பாட்டை ஊக்குவிக்கும். ஆனால், இந்தியாவில் விசில் பிளோயர்கள் (எ.கா., சத்யேந்திர் துபே, மனுஷ்) துன்புறுத்தலை சந்திக்கின்றனர்.
  • போலீஸ் பொறுப்பு: போலீஸ் கமிஷனரின் செயல்கள் கேள்விக்குள்ளாகின்றன – இது மாநில போலீஸ் துறையில் சீர்திருத்தங்களை தூண்டலாம்.
  • அரசியல் சூழல்: தமிழ்நாட்டில், போலீஸ் அரசியல் தலையீடுகள் பொதுவானவை. இந்த தீர்ப்பு, அதிகாரிகளின் மோசடி நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை.

உதாரணங்கள்: இந்தியாவில், RTI ஆக்ட் கீழ் தகவல் கோருபவர்கள் போலி வழக்குகளை சந்திக்கின்றனர். 2024-இல் மட்டும், 50-க்கும் மேற்பட்ட விசில் பிளோயர் தாக்குதல்கள் பதிவு.

முடிவு: விசில் பிளோயர்களின் போராட்டம் – நீதியின் வெற்றி

மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வராகியின் போராட்டத்திற்கு நியாயம் அளிக்கிறது, மேலும் போலீஸ் அத்துமீறலுக்கு எதிரான உதாரணமாகிறது. ஊழல் வெளிப்பாட்டில் ஈடுபடுபவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – இல்லையெனில், அரசு பாரதபூமியான ஜனநாயகம் பலவீனமடையும். தமிழ்நாட்டில், இது போன்ற வழக்குகள் அதிகரிக்கலாம், ஆனால் நீதிமன்றங்கள் போன்றவை நம்பிக்கையை அளிக்கின்றன.

அரசு பொதுத்துறை 12 வங்கிகளை நான்காக இணைத்து குறைக்க திட்டம்

 புதுடில்லி: நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் மிகப்பெரிய வங்கி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2026 - 27ம் நிதியாண்டிற்குள் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எந்தெந்த வங்கிகள் இருக்கும்
* எஸ்.பி.ஐ.,
* பஞ்சாப் நேஷனல் பேங்க்
* பேங்க் ஆப் பரோடா
* கனரா மற்றும் யூனியன் வங்கிகள் இணைந்த புதிய வங்கி

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, வலுவான நிதி நிலை கொண்ட, நான்கு பெரிய வங்கிகளாக மாற்ற நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளை உருவாக்கவும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான பெரிய கடன்களை வழங்கும் திறனுள்ளதாக மாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இணைப்புக்கு பின் எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கியும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்த புதிய வங்கி, என நான்கு வங்கிகள் மட்டுமே செயல்படும்.

கனரா வங்கியும், யூனியன் வங்கியும் இணைந்த வங்கியுடன் இந்தியன் வங்கி, யூகோ வங்கி ஆகியவையும் இணைக்கப் படலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை மீதமுள்ள பெரிய வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது பேங்க் ஆப் பரோடா உடன் இணைக்கப்படும். பஞ்சாப் அண்டு சிந்து வங்கி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

இத்திட்டம் முதலில் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கோரப்படும். செபியிடமும் கருத்து கேட்கப்பட்ட பின் இறுதி செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தன.

இந்த நடவடிக்கைகள், வங்கி கிளைகளின் செயல்பாட்டை சீரமைக்கவும், தேவையற்ற கூடுதல் செலவுகளை குறைக்கவும், மூலதனத்தை மிக சிறப்பாக பயன்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே 2017 - 2020 காலகட்டத்தில் 21ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை இணைப்பு நடவடிக்கைகளுக்கு பின் 12ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம்- யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

 பிரபல யு டியூபரான சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: 

பத்திரிகையாளராக என் பணியை தொடர முடியாமல் தமிழக போலீசார் இடையூறு செய்து வருகின்றனர். என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மாநில உள்துறை செயலர் மற்றும் போலீசிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில் நிவாரணம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் என்னுடைய கோரிக்கையும் தாண்டி சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. குறிப்பாக என் மீதான வழக்குகள் அனைத்தையும் நான்கு முதல் ஆறு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

புலன் விசாரணையில் உள்ள 13 வழக்குகளை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், என் மீதான நிலுவையில் உள்ள 24 வழக்குகளை விசாரணை நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்குள்ளாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவை அனைத்தும் மனுவில் வைக்கப்படாத கோரிக்கை. எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த மனு, நீதிபதி தீபஸ்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

- டில்லி சிறப்பு நிருபர் -

உலக ஆயுத வர்த்தகம் ரூ.60.43 லட்சம் கோடி எட்டியது- அமெரிக்கா ஆதிக்கம்

உலகளவில் ஆயுத விற்பனை ரூ.60.43 லட்சம் கோடி எட்டியது: ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா நமது நிருபர் ADDED : டிச 02, 2025 

https://www.dinamalar.com/news/world-tamil-news/global-arms-sales-reach-rs-6043-lakh-crore-us-dominates/4097158

ஸ்டாக்ஹோம்: உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடான ஸ்வீடனை தலைமையிடமாக வைத்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்த மையம் சர்வதேச ஆயுத விற்பனை தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. 

இதன் ஆய்வறிக்கையை அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்: 

கடந்த, 2024-ம் ஆண்டில் உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வரலாற்றிலேயே அதிகபட்ச வருமானத்தைப் பதிவு செய்துள்ளன.

உலகின் முதல், 100 ராணுவ நிறுவனங்கள், மொத்தம், 679 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டி யுள்ளன.

கிழக்காசிய நாடான உக்ரைன் - ரஷ்யா, மேற்காசிய நாடான இஸ்ரேல் - காசா இடையே நீடிக்கும் போர்களால், ஆயுத தேவை பெருகியதே இந்த உயர்வுக்கு காரணம்.

இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட, 6 சதவீதமும், 2015ம் ஆண்டைவிட, 26 சதவீதமும் அதிகம். பல்வேறு நாடுகளின் ஆயுத தேவையைப் பயன்படுத்தி, ஆயுத விற்பனை நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன. ஆயுதங்களின் தேவை, ஆசியா - ஓசியானியா பகுதியை விட, ஐரோப்பாவில் அதிகரித்து காணப்பட்டன.

இதற்கு உக்ரைன் போர் காரணமாக கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தலாக பார்ப்பதாலும் அவற்றின் ஆயுத தேவை அதிகரித்துள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக அமெரிக்கா தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன்படி, ஆயுத விற்பனையிலும் அந்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் முதல், 100 இடங்களில், 39 நிறுவனங்கள், அமெரிக்காவைச் சேர்ந்தவை. இதன் வாயிலாக, 29.72 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன.

இதேபோல் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும், ஆயுத விற்பனையில் கடந்த ஆண்டு, 23 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆசிய - பசிபிக் பகுதியில் சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளால் அந்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆயுத கொள்முதல் வெகுவாக குறைந்தன.

எனினும், ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சியை பெற்றுள்ளது. மேற்காசியாவில் இஸ்ரேல் நிறுவனங்களின் கையே ஓங்கியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அமெரிக்க கிறிஸ்தவ விவிலிய மத மாற்ற வர்த்தகப் பிரசாரி ரெவ். பிராங்க்லின் கிராஹாம் நாகாலாந்து பயணத்திற்குவிசா மறுப்பு

 ரெவ். பிராங்க்லின் கிராஹாம் யார்? மோடி அரசு நாகாலாந்து பயணத்திற்கு அமெரிக்க கிறிஸ்தவ விவிலிய  மத மாற்ற வர்த்தகப் பிரசாரி விசா மறுத்தது – ஒரு விரிவான ஆய்வு

https://www.financialexpress.com/world-news/us-news/who-is-rev-franklin-graham-modi-govt-denies-visa-to-us-christian-evangelist-for-a-trip-to-nagaland/4061200/

2025 டிசம்பர் 2: இந்தியாவின் மோடி அரசு, அமெரிக்காவின் பிரபலமான கிறிஸ்தவ விவிலிய பிரசாரி ரெவ். பிராங்க்லின் கிராம்ஹாம் (Rev. Franklin Graham) அவரது நாகாலாந்து பயணத்திற்கான விசா விண்ணப்பத்தை மறுத்துவிட்டது. இந்த மறுப்பு, கிறிஸ்தவ பிரசாரிகளுக்கு இந்தியாவின் கடுமையான விசா கொள்கையை மீண்டும் நினைவூட்டுகிறது. கிராம்ஹாம், அமெரிக்காவின் பில்கிராம்ஹாம் வேவ்க்கிங் (Billy Graham) ரெவ். பில்கிராம்ஹாமின் மகன், உலகளாவிய கிறிஸ்தவ பிரசாரத்தில் முன்னணி நபராக உள்ளார். இந்தக் கட்டுரையில், கிராம்ஹாமின் பின்னணி, நாகாலாந்து பயணத்தின் நோக்கம், விசா மறுப்பின் காரணங்கள், பிரதிபலிப்புகள் மற்றும் சர்ச்சைகளை தமிழில் விரிவாகப் பார்க்கலாம். இது இந்தியாவின் மத சுதந்திரம் மற்றும் விசா கொள்கை குறித்த சர்வதேச விவாதத்தைத் தூண்டுகிறது.

ரெவ். பிராங்க்லின் கிராம்ஹாம் யார்? – ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு

பிராங்க்லின் கிராம்ஹாம் 1952-இல் பிறந்தவர், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்குமிக்க கிறிஸ்தவ வேதாகமப் பிரசாரிகளில் ஒருவர். அவரது தந்தை பில்கிராம்ஹாம், 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வேதாகமப் பிரசாரிகளில் ஒருவர் – அவர் 185 நாடுகளில் 215 மில்லியன் மக்களை அடைந்தார். பிராங்க்லின், பில்கிராம்ஹாம் வேவ்க்கிங் அமைப்பு (Billy Graham Evangelistic Association - BGEA) இன் தலைவர் மற்றும் சமரிடன் பர்ஸ் (Samaritan's Purse) என்ற சர்வதேச உதவி அமைப்பின் தலைவர்.

முக்கிய சாதனைகள்:

  • வேதாகமப் பிரசாரங்கள்: 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7 மில்லியன் மக்களை அடைந்து, 40 லட்சம் பேரை கிறிஸ்தவத்திற்கு மாற்றியுள்ளார்.
  • உதவி பணிகள்: சமரிடன் பர்ஸ் மூலம், இயற்கை பேரிடர்கள் (எ.கா., இந்தியாவின் 2004 சுனாமி, ஹைதி பூகம்பம்) போன்றவற்றில் உதவி அளித்துள்ளார். இந்தியாவில், COVID-19 காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
  • புத்தகங்கள் மற்றும் ஊடகம்: "Rebel With a Cause", "A Wing and a Prayer" போன்ற புத்தகங்கள்; "Decision Magazine" இதழின் ஆசிரியர்.

சர்ச்சைகள்:

  • இஸ்லாம் மற்றும் LGBTQ+ விமர்சனம்: கிராம்ஹாம் இஸ்லாமை "இஷ்டத்தால் கொடியது" என்று கூறியதால், அமெரிக்காவில் போராட்டங்கள் ஏற்பட்டன. LGBTQ+ உரிமைகளை "பாவம்" என்று விமர்சித்து, பல நகரங்களில் பிரசாரங்கள் ரத்தாகின.
  • அரசியல் ஆதரவு: டிரம்ப் அதிபரின் ஆதரவாளராக, அவரது பிரசாரங்களில் பங்கேற்றார். இது அவரை "அரசியல் கிறிஸ்தவவாதி" என்று விமர்சிக்க வைத்தது.
  • இந்தியா தொடர்பு: 2001-இல் இந்தியாவுக்கு விசா மறுக்கப்பட்டது, 2023-இல் உத்தர பிரதேசத்தில் பிரசாரத்திற்கு விசா மறுக்கப்பட்டது.

கிராம்ஹாம், கிறிஸ்தவ பிரசாரத்தை "மக்களை இயேசுவின் சுவிசேஷத்தை அறிய உதவுவது" என்று விவரிக்கிறார், ஆனால் அவரது அரசியல் நிலைப்பாடுகள் அவரை சர்வதேச அளவில் சர்ச்சைக்குள்ளாக்குகின்றன.

நாகாலாந்து பயணம்: என்ன நோக்கம்? ஏன் மறுக்கப்பட்டது?

கிராம்ஹாம், 2025 டிசம்பர் 10-13 வரை நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமா நகரத்தில் ஒரு கிறிஸ்தவ பிரசார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். இது BGEA மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் நாகா பேப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் உள்ளிட்ட உள்ளூர் சமய அமைப்புகள் ஒத்துழைத்தன.

பயணத்தின் நோக்கம்:

  • கிறிஸ்தவ பிரசாரம்: 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அடைந்து, கிறிஸ்தவ சுவிசேஷத்தை பரப்புதல்.
  • உதவி பணிகள்: சமரிடன் பர்ஸ் மூலம், நாகாலாந்தின் ஏழை மக்களுக்கு உதவி அளித்தல் (உணவு, மருத்துவம்).
  • நாகாலாந்து சூழல்: நாகாலாந்து 90% கிறிஸ்தவர்கள் கொண்ட மாநிலம், ஆனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவ பிரசாரங்கள் அரசியல் உணர்வுகளைத் தூண்டலாம்.

விசா மறுப்பு: இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) விண்ணப்பத்தை "தேவையான ஆவணங்கள் இல்லை" என்று கூறி மறுத்தது. ஆனால், உள்ளூர் அமைப்புகள் இதை மோடி அரசின் "கிறிஸ்தவ எதிர்ப்பு" கொள்கையின் பகுதியாகக் கருதுகின்றன. கிராம்ஹாமின் அரசியல் நிலைப்பாடுகள் (இஸ்லாம் விமர்சனம், டிரம்ப் ஆதரவு) இந்தியாவின் சர்வதேச உறவுகளை பாதிக்கலாம் என்று அரசு கருதியிருக்கலாம்.

உள்ளூர் ஒழுங்குமுறைகள்: இந்தியாவின் வெளிநாட்டர் (பாதுகாப்பு) சட்டம் (FEMA) மற்றும் விசா விதிகள், பிரசார நிகழ்ச்சிகளுக்கு கடுமையான அனுமதிகளை விதிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில், "மத மாற்றம்" தடைச் சட்டங்கள் (anti-conversion laws) உள்ளன.

பிரதிபலிப்புகள்: அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகளாவிய விமர்சனங்கள்

கிராம்ஹாமின் கருத்து:

“இது மிகவும் ஏமாற்றமானது. நாகாலாந்து மக்கள் இயேசுவின் சுவிசேஷத்தை கேட்க ஆர்வமாக இருந்தனர். இந்திய அரசின் முடிவு மத சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.”

உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புகள்: நாகா பேப்டிஸ்ட் சர்ச் கவுன்சில்: “இது கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும். நாகாலாந்து 90% கிறிஸ்தவர்கள், ஆனால் வெளிநாட்டு பிரசாரிகளுக்கு தடை.” நாகாலாந்து கிறிஸ்தவ ஃபோரம்: “இது மோடி அரசின் ‘ஹிந்து தேசியவாதம்’ கொள்கையின் பலன்.”

அமெரிக்கா பிரதிபலிப்பு: அமெரிக்க வெளியுறவு துறை (State Department) இதை "மத சுதந்திரம் குறித்த கவலையாக" குறிப்பிட்டது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டாம் டிஃபென்சியோ (D-NY): “இந்தியாவின் விசா மறுப்பு, அமெரிக்க-இந்திய உறவுகளை பாதிக்கும். கிராம்ஹாம் போன்றவர்களுக்கு தடை, மத பாகுபாட்டை ஊக்குவிக்கிறது.”

இந்திய அரசின் பதில்: MEA: “விசா முடிவுகள் தேசிய பாதுகாப்பு மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. இது எந்த மதத்தையும் பாகுபடுத்துவதல்ல.” BJP: “இது உள்நாட்டு விவகாரம்; வெளிநாட்டு பிரசாரங்கள் உள்ளூர் சமூகங்களை பாதிக்கலாம்.”

சர்ச்சைகளின் சூழல்: இந்தியாவின் கிறிஸ்தவ பிரசார விசா வரலாறு

இந்தியா, கிறிஸ்தவ வேதாகமப் பிரசாரிகளுக்கு விசா மறுப்புகளில் பழக்கப்பட்டுள்ளது:

  • 2001: கிராம்ஹாம் இந்தியாவுக்கு விசா மறுக்கப்பட்டது – அவரது இஸ்லாம் விமர்சனம் காரணம்.
  • 2023: உத்தர பிரதேசத்தில் பிரசாரத்திற்கு விசா மறுப்பு.
  • மற்ற உதாரணங்கள்: 2019-இல் கிராக் லெஸ்கோவா (Crock Leskova) மற்றும் 2024-இல் கிராக் டோலிவர் (Craig Culver) போன்றவர்களுக்கு மறுப்பு.
  • வடகிழக்கு மாநிலங்கள்: நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் போன்றவற்றில் கிறிஸ்தவ பெரும்பான்மை இருந்தும், "மத மாற்றம் தடுப்பு" சட்டங்கள் (UP, MP, Gujarat) கடுமையாக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய அறிக்கைகள்: அமெரிக்க வெளியுறவு துறையின் 2024 மத சுதந்திர அறிக்கை, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்களை (300+ சம்பவங்கள்) குறிப்பிட்டது. USCIRF (US Commission on International Religious Freedom) இந்தியாவை "கவலையின் நாடு" என்று வகைப்படுத்தியது.

முடிவு: மத சுதந்திரம் vs. தேசிய பாதுகாப்பு – ஒரு சர்வதேச சவால்

ரெவ். பிராங்க்லின் கிராம்ஹாமின் விசா மறுப்பு, இந்தியாவின் மத சுதந்திரம் மற்றும் வெளிநாட்டு பிரசாரிகளுக்கு அனுமதிகளை சூழ்ந்து சுற்றுகிறது. ஒரு பக்கம், அரசு தேசிய பாதுகாப்பை வலியுறுத்துகிறது; மறுபக்கம், கிறிஸ்தவ அமைப்புகள் இதை "பாகுபாட்டு" என்று விமர்சிக்கின்றன. இது அமெரிக்க-இந்திய உறவுகளை பாதிக்கலாம், குறிப்பாக QUAD மற்றும் வணிக ஒப்பந்தங்களின் சூழலில்.

நாகாலாந்து போன்ற மாநிலங்களில், கிறிஸ்தவ பிரசாரம் உள்ளூர் மத மாற்ற வர்த்தகசமூகங்களை வலுப்படுத்தலாம்

(ஆதாரம்: Financial Express, 2025; USCIRF Reports, BGEA Official Site)

அசிம் முனீர்- பாகிஸ்தான் நீதிமன்றம் சட்டமுறைமையை சிதைக்கிறார்

 அசிம் முனீர்- பாகிஸ்தான் நீதிமன்றம் சட்டமுறைமையை சிதைக்கிறார்


சார்லஸ் மார்ட்டின் (லாட்டரி) பாண்டிச்சேரியில் பாஜக எதிர்த்து புது கட்சி

 சார்லஸ் மார்ட்டின் (லாட்டரி) பாண்டிச்சேரியில் புது கட்சி,

“டிசம்பரில் அரசியல் கட்சி... தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி!” - மனம் திறக்கும் மார்ட்டின் மகன் நேர்காணல் சி.கண்ணன் Published on:  28 Nov 2025

https://www.hindutamil.in/news/tamilnadu/jose-charles-martin-interview

லாட்டரி அதிபர் சந்தியாகு மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். புதுச்சேரி பாஜக-வில் பத்தாண்டுகள் பயணித்த இவர், இப்போது அதிலிருந்து விலகி, ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பையே டிசம்பரில் அரசியல் கட்சியாகவும் மாற்ற முடிவெடுத்திருக்கும் சார்லஸ், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசினோம்.

Q

பாஜக-விலிருந்து ஏன் விலகினீர்கள்?

A

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், செயல்பாடுகள் பிடித்திருந்ததால் பாஜக-வில் இணைந்தேன். ஆனால், கட்சியில் எனக்கு பொறுப்புத் தரவில்லை என்பதுடன் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்டும் தரவில்லை. அதனால், பாஜக-வில் இருந்து வெளியேறிவிட்டேன்.

Q

உங்கள் சகோதரியின் கணவர் ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சியில் முக்கிய இடத்தில் இருப்பதால் உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ?

A

ஆதவ் அர்ஜூனாவுக்கு முன்பிருந்தே நான் அரசியலில் இருக்கிறேன். பதவிக்காக அரசியலில் இருக்கும் அவரை நான் அரசியல்வாதியாகவே நினைக்கவில்லை.

Q

காங்கிரஸ் பின்னணி உள்ளவர்களே பெரும்பாலும் வெற்றிபெறும் புதுச்சேரியில் புதியவரான உங்களால் சாதிக்க முடியுமா?

A

பிஹார் முடிவுகளைப் பார்த்தாலே காங்கிரஸ் நிலைமை புரிந்துவிடும். இன்னொருவரை நம்பியே காங்கிரஸ் உள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சியை பற்றி என்.ஆர்.காங்கிரஸ் சிந்திப்பதில்லை. இங்கு ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. புதுச்சேரியை கல்வி, மருத்துவம், சுற்றுலா, திரைப்படத் துறை உள்ளிட்டவற்றில் சிறந்த மாநிலமாக மாற்றலாம். அப்படிச் செய்யாமல் மாநிலத்தை வீணடிக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வோம்.

Q

தவெக-வுக்கு இப்போது ஆதவ் அர்ஜூனா தான் ‘கஜானா’ என்கிறார்களே... உண்மையா?

A

ஆதவ் அர்​ஜு​னா​வுக்கு கொடுக்க வேண்​டியதை நாங்​கள் கொடுத்​து​விட்​டோம். அவர் செலவு செய்​கிறாரா இல்​லையா என்​பது எனக்கு முழு​மை​யாகத் தெரி​யாது. அப்​படி செலவு செய்​தால் அதை நாங்​கள் கொடுத்த பணத்தை வைத்​துத்​தான் செய்​ய​வேண்​டும்.

Q

உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் என்ன தான் பிரச்சினை? ஆதவ் அர்ஜுனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைப்பது ஏன்?

A

தி​முக, அதி​முக, பாஜக கட்​சிகளை விமர்​சித்து வரும் ஆதவ் அர்​ஜூ​னா, இன்​னொருபக்​கம் அந்​தக் கட்​சிகளிடம் நெருக்​க​மாக​வும் இருக்​கிறார். “நான் பேசுவதற்​கும் மார்ட்​டின் குடும்​பத்​துக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை” என்று அவர் தெளிவுபடுத்​தாத​தால் அவரின் செயல்​களுக்​குப் பின்​னணி​யில் எனது தந்தை மார்ட்​டினும், நாங்​களும் இருப்​ப​தாக நினைக்​கின்​றனர். அதனால் எங்​கள் குடும்​ப​மும் சேர்ந்து பாதிக்​கப்​படு​கிறது. அதனை தெளிவுபடுத்த வேண்​டிய கடமை எனக்கு இருக்​கிறது. அதனால் சில விளக்​கங்​களை சொல்ல வேண்டி இருந்​தது.

Q

புதுச்சேரி அரசியலில் நீங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறீர்கள்?

A

ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து நாங்கள் செய்கிறோம்; அதை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

Q

புதுச்சேரியில் விஜய்க்கும் செல்வாக்கு இருப்பதால் அவருடன் கைகோக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா..?

A

ஆம். இதுகுறித்து கட்சி தொடங்​கிய பிறகு அதி​காரபூர்​வ​மாக விஜய் கட்​சி​யுடன் கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை நடத்​து​வோம்.

Q

உங்களை பாஜக தனது ‘பி டீம்’ லெவலுக்கு தயார்படுத்து வதாகவும் ரங்கசாமிக்கு பதிலாக முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் அக்கட்சி இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறதே..?

A

இது முழுக்க முழுக்க புரளி. நாங்கள் பாஜக-வையும் எதிர்த்துத் தான் அரசியல் செய்கிறோம்.

Q

புதுச்சேரி அரசியலில் ரங்கசாமி, நாராயணசாமி, வைத்தியலிங்கம் போன்ற ஜாம்பவான்களை தாண்டி நினைத்ததைச் சாதிக்க முடியும் என நம்புகிறீர்களா?

A

அவர்களின் அரசியல் அனுபவம் எல்லாமே ஆட்சியை பிடிக்க மற்றவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்பது தான். புதுச்சேரியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது.

Q

நீங்கள் தேர்தலில் லாட்டரி பணத்தை கோடி கோடியாய் கொட்டி எப்படியும் வெற்றியை தன்வசமாக்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறதே..?

A

அரசி​யல்​வா​தி​கள் எல்​லோருமே இது​வரைக்​கும் பணத்தை வைத்​துத் தான் வெற்றிபெற்​றார்​களா... அவர்​களுக்​கெல்​லாம் கொள்​கை, மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என்ற எண்​ணமே இல்​லை​யா? எங்​களுக்கு எதி​ராக இப்​படிச் சொல்​வது அவர்​களின் பயத்​தைக் காட்​டு​கிறது. குறிப்​பாக, திமுக ஊழலுக்கு பேர் போன கட்​சி. அந்​தக் கட்​சி​யில் அதி​க​மாக ரவுடிகள் தான் உள்​ளனர்.

தப்​பான பல தொழில்​களைச் செய்​வோர் தான் அங்கு இருக்​கிறார்​கள். திமுக-​வால் நாடு வளர்ச்சி அடை​யாது. எனவே, எங்​களை விமர்​சனம் செய்ய அவர்​களுக்கு எந்​தத் தகு​தி​யும் இல்​லை. மக்​களுக்கு நல்​லது செய்​வதற்​காக அரசி​யல் களத்​தில் இறங்​கி​விட்​டோம். எதை​யும் சந்​திக்​கத் தயா​ராக இருக்​கிறோம்.

Q

உங்கள் கைக்கு அதிகாரம் வந்தால் புதுச்சேரிக்காக என்ன செய்வீர்கள்?

A

புதுச்​சேரி​யில் சரி​யான பாது​காப்பு இல்​லை. அதனால், முதலில் சட்​டம் - ஒழுங்கு சரிசெய்​யப்​படும். பாது​காப்பு கொடுத்​து​விட்​டால், இங்​குள்ள மக்​களும், சுற்​றுலா வருபவர்​களும் சந்​தோஷப்​படு​வார்​கள். முதலீடு​களும் அதி​கரிக்​கும். மக்​களின் அடிப்​படை வசதி​களை செய்து தரு​வதோடு ‘அனை​வருக்​கும் வீடு’ என்ற திட்​ட​மும் எங்​களின் எண்​ணத்​தில் இருக்​கிறது.


சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் (கிரவுண்ட்- ரூ.11.5 கோடி) இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்

சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் ( கிரவுண்ட்- ரூ.11.5 கோடி)  இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம் செய்திப்பிர...