Wednesday, February 5, 2025

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு (Pathur Nataraja statue recovered cases) என்பது தமிழ்நாட்டின்திருவாரூர் மாவட்டம் (அப்போது தஞ்சாவூர் மாவட்டம்பாத்தூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான கொள்ளையடிக்ககபட்ட நடராசர் சிலையை இலண்டனில் இருந்து மீட்டுவந்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் தடய அறிவியல் நிபுணராக பி. சந்திரசேகரன் பணியாற்றினார்.[1]

பின்னணி

[தொகு]

தமிழ்நாட்டின்திருவாரூர் மாவட்டம் (அப்போது தஞ்சாவூர் மாவட்டம்) கொடாரச்சசேரி அருகில் உள்ள பாத்தூர் (இ்ந்த ஊர் பத்தூர் என்றும் எழுததப்படுகிறது[2]) என்னும் ஊரில் உள்ள விசுவநாத சுவாமி கோயில் என்ற சிவன் கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளை அந்நியர் படையெடுப்புகள் போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலுக்கு அருகேயே புதைத்துவைக்கபட்டுள்ளன. 1976இல் கோயில் காவலாளி குடிசை போடுவதற்காக பள்ளம் தோண்டியபோது நடராசர், நடராசர் உடனுறை அம்மனான சிவகாமி, சோமாசுகந்தர்பிட்சாடனர், தனி அம்மன், பிள்ளையார்முருகன்அப்பர்சுந்தரர் ஆகியோரின் ஒன்பது சிலைகள் கிடைத்துள்ளன. சிலைகள் கிடைத்த செய்தியை யாருக்கும் சொல்லாமல் அருகிலேயே இன்னொரு குழியை வெட்டி அதில் சிலைகளை இட்டு அதன்மீது வைக்கோலைப் பரப்பி மீண்டும் மூடிவிடுகிறார். பின்னர் அந்த சிலைகளில் இருந்த நடராசர் சிலையை மட்டும் ரூபாய் 500க்கு விற்றுவிட்டார். பின்னர் 1986இல் மீதமுள்ள சிலைகளை விற்பதற்காக மூடுந்தில் கொண்டு சென்றபோது காவல் துறையினரின் சோதனைச் சாவடியில் அகப்பட்டுக் கொண்டனர்.[3] விசாரணையில் ஏற்கனவே நடராசர் சிலையை எடுத்து விற்றுவிட்டதை காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அந்த நடராசர் சிலை பம்பாய் வரை சென்றது தெரியவந்தது. அதன் பிறகு எங்கே சென்றது என்று தெரியாததால் பன்னாட்டு காவல் துறை வரை தகவல்கள் அளிக்கபட்டன.

வழக்கு

[தொகு]

சிலகாலம் கழித்து பன்னாட்டு காவல் துறையிடமிருந்து சிலை குறித்த தகவல் ஒன்று வந்தது. கனடாவைச் சேர்ந்த எண்ணை நிறுவனம் ஒன்றின் 'ஆர்ட் கேலரி' நடராசர் சிலையை இலண்டன் அருங்காட்சியகக் காப்பாளரிடம் தூய்மைப்படுத்த கொடுதுள்ளது என்பது ஆகும். பின்னர் அது பாத்தூர் நடராசர்தான் என தமிழக அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். இந்த சிலையானது 11 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்திய கலை நேர்த்தி மிக்க சிலையாகும். பஞ்சலோக நடராசர் சிலையானது 100 செமீ உயரமும் 65 கிலோ எடையும் கொண்டது.[4]

இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்து சட்டப்படி கடவுள்கள் உயிருள்ளவர்களாக கருதப்படுவர். அவர்கள் சார்பாக வழக்குத் தொடரலாம். எனவே நடராசரை மீட்க அவரது துணைவியார் சிவகாமி சார்பில் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழக்கு போடப்பட்டது.[5] மேலும் அந்த நடராசருடன் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற எட்டு சிலைகளும் இலண்டன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வழக்கானது இராயல் ஐகோர்ட் ஆப் லண்டன் நீதியரசர் கென்னடியிடம் வழக்கு விசாரணை சென்றது. பாத்தூர் கோயிலுக்கு சொந்தமான பிற எட்டு சிலைகளுடன் சேர்ந்தது இந்த நடராசர் சிலை என்று நிரூபிக்க இந்த நடராசர் சிலையின் அளவையும், கோயிலின் சிவகாமி உள்ளிட்ட சிலைகளின் அளவையும் கொண்டு அவற்றை அவை சிற்ப சாஸ்திரத்தின்படி எவ்வாறு பொருந்துகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.[3]

அடுத்து நடராசர் சிலையின் மேல் படிந்துள்ள மண் மாதிரியும், பாத்தூரில் உள்ள பிற சிலைகளின்மேல் பதிந்துள்ள மண் மாதிரிகளையும் ஆய்வு மேற்கொண்டு அவை ஒரே மாதிரியான மண் என உறுதிபடுத்தினர்.[6] மேலும் நடராசர் சிலையில் இருந்து எடுக்கப்பட உலோக மாதிரி, பிற சிலைகளின் உலோக மாதிரிகளையும் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியான உலோகம் என்று நிரூபிக்கபட்டன. மேலும் அந்த நடராசர் சிலையானது சிலகாலம் குழிவெட்டி வைக்கோல் இட்டு மீண்டும் மண்ணால் மூடப்பட்டதால் அந்த வைக்கோலினால் சிலைகளின் மேல் கரையான் கூடு கட்டப்பட்டிருந்த அடையங்கள் காணப்பட்டன. நடராசர் சிலையின் மேல் உள்ள கரையான் கூடுகளின் தடையங்களும், பாத்தாரில் இருந்து கொண்டுவரப்பட்ட பிற சிலைகளின்மேல் உள்ள கரையான் கூடுகளின் தடையங்களும் ஒரே மாதிரியானவை என்றும் நிரூபிக்கப்படன.[7] மேலும் அந்தமாதிரியான கரையான் கூடுகள் நெல் விளையும் சதுப்பு நிலப் பகுதியில் காணக்கூடிய கரையான் கூடுகளே என குறிப்பிடும் கரையான் ஆய்வாளரின் அறிக்கையும் நீதியரசரின் பார்வைக்கு அளிக்கப்பட்டது.[3]

பாத்தூரில் சிலைகள் கண்டெடுக்கபட்ட இடத்தில் இருந்த மண் மாதிரியையும் நடராசர் சிலையில் ஒட்டி இருந்த மண் மாதிரியையும் ஆய்வுக்கு நீதிமன்றம் அனுப்பியது. ஆய்வின் முடிவில் இரண்டும் வெவ்வேறானவை என எதிர் பாராத முடிவை ஆய்வு சொன்னனது. இந்த ஆய்வு முடிவைக் கொண்டு இது பத்தூர் நடராசர் இல்லை என வாதிட்டது கனடா ஆர்ட் கேலரி. இதற்கு விளக்கமளித்த தமிழக தொல்லியல் துறை ‘பேரிடர் காலங்களில் குழி வெட்டி அதில் மணல் பரப்பி அதன் மீது சுவாமி சிலைகளை வைத்து மீண்டும் அவற்றின் மீது மணலைப் போட்டு மூடி, அதன் மீது மண்ணைத் தள்ளி மூடி சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஆகம விதி. அவ்வாறு மூடப்பட்டதால்தான் சிலையில் இருக்கும் மணலும் சிலை இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரியும் வெவ்வேறாக இருக்கின்றன’ என்று தொல்லியல் ஆய்வாளர் இரா. நாகசாமி விளக்கம் அளித்தார்.[8]

மேலும் கனடா எண்ணை நிறுவனமானது இந்த நடராசர் சிலையானது இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பஞ்சாப் பகுதியில் ஒரு இந்து குடும்பத்திடமிருந்து வாங்கப்பட்டது என்று மறுத்தது. இதற்கு தமிழக அரசு தரப்பினர் ஒரு அடிக்கு மேல் உள்ள எந்த சிலையையும் இந்து குடும்பத்தினரும் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். ஏனெற்றால் ஒரு அடிக்கு மேலுள்ள சிலைக்கு ஆகம விதிப்படி பூசை செய்வது அவசியம் என்று அவர்களது வாதத்தை உடைத்தனர்.[3]

வழக்கு விசாரணை முடிவில் நடராசர் சிலை கடத்தி வரப்பட்டதுதான். அது எந்தக் கோயிலில் இருந்து கொண்டு வரப்படதோ அங்கே கொண்டு செல்லவேண்டும் என்று தீர்பளிக்கப்பட்டது.[3] ஆனால், இந்தத் தீர்ப்பை பிரிவி கவுன்சிலின் மேல்முறையீட்டுக்கு கனடா ஆர்ட் கேலரி கொண்டு சென்றது. ஆனால் அங்கே பழைய நீதிமன்றத் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது.[8] அதன்பிறகு பாத்துர் நடராசர் 1992 இல் தமிழகம் கொண்டுவரப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1.  மின்னம்பலம். "சிறப்புக் கட்டுரை : தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன்! - ப்ரியன்"மின்னம்பலம். பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  2.  "சிலை சிலையாம் காரணமாம் - 5: பத்தூர் நடராஜர் வந்த கதை!"Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  3. ↑ இங்கு மேலே தாவவும்:3.0 3.1 3.2 3.3 3.4 கிரிமினல்கள் ஜாக்கிரதை -6, கட்டுரைத் தொடர், தடய அறிவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரசேகரன், கல்கி, 10.செப்டம்பர், 2000
  4.  CH, Ramesh; March 15, RAn; March 15, 1988 ISSUE DATE:; December 5, 1988UPDATED:; Ist, 2013 13:18. "Indian Government wins stolen Nataraja idol case in British court"India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21. {{cite web}}|first5= has numeric name (help)
  5.  கடம்பூர் விஜயன், B. (2019-03-27). "பத்தூர் சிவன் கோயில் பற்றி தெரியுமா?"தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  6.  "திக் திக் துறை..விறு விறு தகவல்கள்!"chenaitamilulaa.forumta.net. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  7.  Kolappan, B. (2012-08-27). "When destroyers proved to be the saviours"The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
  8. ↑ இங்கு மேலே தாவவும்:8.0 8.1 "சிலை சிலையாம் காரணமாம் - 6: உ.பி. யோகினி சிலை தெரியுமா?"Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.


 பாத்தூர் நடராஜர் சிலை

பாத்தூர் நடராஜர் சிலை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான சோழர் கால நடராஜர் திருவுருவச் சிலை ஆகும். இது இந்தியாவின் தொல்லியல் மற்றும் பண்பாட்டு மரபுகளை பிரதிபலிக்கும் மிகுந்த விலையுயர்ந்த பிரொன்ஸ் (வெள்ளி, தாமிரம் கலந்த உலோகம்) சிலைகளில் ஒன்றாகும்.


1. பாத்தூர் நடராஜர் சிலையின் கண்டுபிடிப்பு

  • இந்த சிலை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்தூர் கிராமத்தில் (Pattur, Tamil Nadu) கண்டுபிடிக்கப்பட்டது.
  • சுமார் 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்றாண்டு சோழர் அரச காலத்திற்குரியது என கருதப்படுகிறது.
  • இது நவரச பாணியில் சிற்பமிடப்பட்டிருந்தது (நடராஜர் சிலைகளின் ஒரு பிரத்யேக அம்சம்).
  • சிலை பிராஸ் உலோக கலவையில் செய்யப்பட்டு, மிகுந்த கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. சிலையின் சிறப்பு அம்சங்கள்

  • சிலை சுமாராக 3-4 அடி உயரம் கொண்டதாக இருக்கலாம்.
  • பஞ்சகிருத்யம் (ஏற்படுத்துதல், காப்பது, அழிப்பது, மறைப்பது, அருள் செய்வது) என்ற ஐந்து செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் நடராஜர் திருவுருவம்.
  • சிறிய முகம், அழகிய கரங்களைப் பெற்ற நடனம் செய்கின்ற முத்திரை, சோழர் சிற்பக்கலையின் உச்சநிலையை காட்டுகிறது.
  • இதற்கு அருகில் இருந்த சில சிற்பங்கள் திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

3. திருட்டும் மீட்பும்

  • பல தமிழக கோயில்களிலிருந்து பழமையான சிலைகள் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
  • பாத்தூர் நடராஜர் சிலை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதா? அல்லது கோயிலில் பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பதில் சரியான ஆவணங்கள் இல்லை.
  • ஆனால், இதுபோன்ற சிலைகள் கடத்தல், சட்ட விரோத விற்பனை, மற்றும் இந்தியா திருப்பிக்கொண்டு வந்த நிகழ்வுகளுடன் தொடர்பு உள்ளன.

4. இதை ஒத்த நடராஜர் சிலைகள்

  • பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் சிலை
  • நேஷனல் மியூசியத்தில் உள்ள சோழர் நடராஜர் சிலை (நியூ டெல்லி)
  • அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட தமிழக சிலைகள் (கிருஷ்ணன் வழக்கு)

Thursday, January 23, 2025

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.! 

https://www.tamilspark.com/tamilnadu/social-media-trend-about-suba-vee-kolathur-mani-sundara

தங்களை பெண்ணியவாதிகள், புரட்சியவாதிகள் என்று தமிழகத்தில் அடையாளப்படுத்தும் சிலரின் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் உட்பட பிற புகார்கள் போன்றவை முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ் தேசியம் என்ற முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முகநூலில் லுலு என்பவரின் குழுவில் நடைபெறுவதை சிலர் தமிழகத்தில் வெளிப்படையாக செய்கிறார்கள். பெரியாரிஸ்டுகள் குறித்து பிரான்ஸ் தமிழ்ப்பெண் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பெண் பேசியிருப்பதாவது, "திருமணம் தாண்டிய உறவுகளையும் (கள்ளக்காதல்), அது சார்ந்த கோட்பாடுகளையும் அப்பட்டமாக தமிழ் கலாச்சாரத்தில் திணிப்பது சுந்தரவல்லி மற்றும் பனிமலர் பன்னீர் செல்வம் தான். இவர்கள் முகநூலில் லுலு என்பவர் பேசி வருவதை தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள். கொளத்தூர் மணி மறைத்ததை, ஓவியாவும் மறைகிறார். 

கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பெண்ணுடன், சுப.வீ உடல் ரீதியான உறவு கொண்டதாக பிரச்சனை நடக்கிறது. இதனால் பெரியார் அமைப்பில் சர்ச்சை நிலவி விவாதம் நடக்கும் போது, ஓவியா அவரின் தனிப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். பாலியல் சுரண்டல் குறித்து பார்க்கும் போது, சுப.வீ செய்தது கொள்கைக்கு எதிரானது. இந்த பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனை என பெரியார் அமைப்பில் பேசுகிறார்கள். அவர்களை யாரும் கண்டிக்கவில்லை. 

இதனால் சமூக சீரழிவு அதிகரிக்கிறது. இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால், புரட்சி பேசுபவர்கள் பெண்களை அவர்களின் கொள்கைக்கு எதிராக பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடரும். அது வெளியுலகுக்கு தெரியாமல் நடக்கும். பெண்களுக்கு பெண்ணியம் தொடர்பான முழு புரிதல் இல்லாவிட்டாலும், அதனை மேடையில் பேசினால் மட்டும் போதாது. நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று பேசுகிறார். இந்த வீடியோ பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, January 15, 2025

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

Sunday, January 12, 2025

தமிழக உள்துறை அதிகாரி சாஹீரா பானு மீது DVAC வருமானத்திற்கு அதிக சொத்து வழக்கு பதித்தது மகன் சையத் முகமது கரீமுல்லா ரூ.8.5 கோடி தங்கம் கடத்தல்,

மகனின் தங்கக் கடத்தலுடன் தொடர்புடைய டிஏ வழக்கில் உள்துறை அதிகாரி மீது டிவிஏசி வழக்குப் பதிவு செய்துள்ளது

சுங்க விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்கில் கணிசமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது சித்தார்த் பிரபாகர் - புதுப்பிக்கப்பட்டது:11 ஜனவரி 2025, 

DVAC books home department official in DA case linked to son’s gold smuggling
Customs probe revealed substantial cash deposits in the accused’s bank account


சென்னை: தமிழ்நாட்டு உள்துறையில் உள்ள ஒரு பிரிவு அதிகாரி மீது, தங்கக் கடத்தலில் இருந்து கிடைத்த வருமானத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில், ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி) வியாழக்கிழமை ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. இதில் சென்னையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியரான அவரது மகன் சம்பந்தப்பட்டுள்ளார்.

உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் குண்டர்கள் பிரிவில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் எஸ்.ஏ. ஷாஹிரா பானு, செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலான சோதனைக் காலத்தில், ரூ.21.27 லட்சம் மதிப்புள்ள வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவின் எஃப்.ஐ.ஆர் குற்றம் சாட்டுகிறது.

இந்த வழக்கு, சென்னை சுங்கத்துறையால் தமிழக அரசுக்கு ஆகஸ்ட் 9, 2024 தேதியிட்ட கடிதத்திலிருந்து வந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் பர்கதுல்லா, இலங்கை பயணி அப்துல்லா ஜோமு ஜல்ஜஹானின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 12.6 கிலோ தங்கத்தை கடத்தியதாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த வழக்கு எழுந்தது. இந்த வழக்கு ஜூன் 8, 2024 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பானுவின் மூத்த மகன் சையத் முகமது கரீமுல்லாவின் இளைய சக ஊழியரான பர்கதுல்லா, கடத்தப்பட்ட தங்கத்தை தனது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கைப் போக்குவரத்து பயணிகளைப் பயன்படுத்தி தங்கத்தை கடத்தி விமான நிலைய ஊழியர்களிடம் ஒப்படைத்த கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்த மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவராக கரீமுல்லா அடையாளம் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2021 முதல் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் கரீமுல்லா, சுங்க விசாரணை தொடங்கியதிலிருந்து தலைமறைவாக உள்ளார், மேலும் அதிக அளவு தங்கத்தை கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ளார்.

சுங்க விசாரணையில் பானுவின் வங்கிக் கணக்குகளில் கணிசமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்ததாகவும், இது அவரது ஈடுபாடு மற்றும் அவரது மகனின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறித்த சந்தேகங்களை எழுப்பியதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியராக இதுபோன்ற பரிவர்த்தனைகளை அறிவிக்க வேண்டியிருந்த போதிலும், பானு தான் சம்பாதித்த சொத்துக்களுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனைக் காலத்திற்கு முன்பு, மதுராந்தகத்தில் இரண்டு நிலங்களையும் மூன்று இரு சக்கர வாகனங்களையும் பானு வாங்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையில் கண்டறியப்பட்டது. சோதனைக் காலத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் தாம்பரத்திற்கு அருகிலுள்ள சிட்லபாக்கத்தில் ரூ.39.24 லட்சம் மதிப்புள்ள நிலம், ஒரு கார் மற்றும் குறிப்பிடத்தக்க வங்கி வைப்புத்தொகைகளை வாங்கியது கண்டறியப்பட்டது.

சோதனை காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் இருந்ததாக DVAC கணக்கிட்டது. வழக்கு பதிவு செய்ய நவம்பர் 6, 2024 அன்று தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

மறைக்கப்பட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன

சோதனை காலத்தில், பானுவும் அவரது குடும்பத்தினரும் தாம்பரம் அருகே ரூ.39.24 லட்சம் மதிப்புள்ள நிலம், ஒரு கார் மற்றும் குறிப்பிடத்தக்க வங்கி வைப்புத்தொகைகளை வாங்கியது கண்டறியப்பட்டது.

Updated on: 

CHENNAI: The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) on Thursday registered a corruption case against a section officer in the Tamil Nadu Home Department for possessing disproportionate assets, suspected to have been amassed using proceeds from gold smuggling, involving her son, an Indigo Airlines staff member in Chennai.

The DVAC’s FIR alleges that S A Shahira Banu, an assistant section officer in the Goondas section of the Home, Prohibition and Excise Department, possessed disproportionate assets worth Rs 21.27 lakh during the check period between September 2021 and August 2024.

The case stems from a letter dated August 9, 2024 by Chennai Customs to the Tamil Nadu government, following a probe into a smuggling case where 12.6 kg of gold worth Rs 8.5 crore was smuggled by Barkatullah, an Indigo Airlines staff member, at Chennai airport with the assistance of a Sri Lankan passenger, Abdulla Jomu Jaljahan. The case was detected on June 8, 2024.

Barkatullah, a junior colleague of Banu’s eldest son Syed Mohammed Kareemullah in Indigo Airlines’ Customer Service division, allegedly concealed the smuggled gold in his office.

According to sources, Kareemullah was identified as one of the masterminds behind the smuggling racket, which used Sri Lankan transit passengers to smuggle gold and hand it over to airport staff. Employed by the airline since 2021, Kareemullah has been absconding since the customs investigation began and is under scrutiny for allegedly smuggling large quantities of gold.

Sources in the Tamil Nadu government stated that the customs investigation revealed substantial cash deposits in Banu’s bank accounts, raising suspicions about her involvement and awareness of her son’s illegal activities.

Preliminary investigations revealed that Banu was unable to provide explanation for properties she had acquired, despite being required to declare such transactions as a government employee.

The DVAC probe found that prior to the check period, Banu had purchased two parcels of land in Madurantakam and three two-wheelers. During the check period, she and her family were found to have acquired a plot of land worth Rs 39.24 lakh in Chitlapakkam near Tambaram, a car, and significant bank deposits.

DVAC calculated the total value of disproportionate assets during the check period to be Rs 21.27 lakh. Approval to register the case was granted by Tamil Nadu government on November 6, 2024.

Unearthed hidden wealth

During the check period, Banu and her family were found to have acquired a plot of land worth Rs 39.24 lakh near Tambaram, a car, and significant bank deposits

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு https://ta.wikipedia.org/s/9ihx மொழிகளைச் சேர் பாத்தூர் நடராசர் சிலை பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு...