Friday, December 19, 2025

தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம்

 தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம்


“நீக்கப்பட்ட ஒரு கோடி பேரில் சுமார் 27 லட்சம் பேர் இறந்து போனவர்கள்”, 
அடுத்ததாக, “மூன்று லட்சத்து நாற்பது ஆயிரம் பேருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருக்கு, “ஊர்ல ஒரு ஓட்டு, வேலைக்கு போன இடத்துல ஒரு ஓட்டு…

மேலுமா, “66 லட்சம் பேர் வேற நாடு, வேற மாநிலம் போய் நிரந்தரமா செட்டில் ஆயிட்டாங்க”

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பேராவது தவறா விடுபட்டிருந்தா, அவங்கள சரி பண்ணி மீண்டும் இணைக்குறதுதான் வேலை. 

1,500 க்கும் மேற்பட்ட செவிலியர் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விட்ட திமுக அரசு

 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்ட திமுக அரசு

https://www.facebook.com/watch/?v=1550766269507697&__cft__[0]=AZa_9ihpD3j9RS7BVcTSQpLehHStM73YAy9gE-0zOjqOJMEjBbKL2uMKAdgyvrdDgq5hwWtk1nxnlvEUfGkbCdPolVIfXDlCO17WeUzBQscmKD6e30ktb19Sx7FSJljCWr-9uw1KGTei5-exvDLCoPsggxoSKdXrU1TQtN77Zm3d6dakEABoh0kkxCFcoii4lCPGSc2QdiIwhddWIMgdJk4W&__tn__=%2CO%2CP-R

பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் குறித்துக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய, அவர்கள் கோரிக்கை வைக்காத இடமே இல்லை. ஆனால், திமுக அரசு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்.
ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


நகர்வாலா ஊழல்

 நகர்வாலா ஊழல் என்பது என்ன? Paranji Sankar


1955ஆம் ஆண்டு இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்ற தனியார் வங்கி தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற புதுப்பெயர் பெற்றது. 1969ஆம் வருடம் பதிநான்கு தனியார் வங்கிகள் அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் தேசியமயமாக்கப்பட்டன. நாட்டை சோஷலிச பாதையில் இட்டுச் செல்வதற்காகவும், வங்கிகள் ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேசியமயமாக்கப்பட்டன என்றும் இந்திரா காந்தி அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சியினரும், மக்களில் பெரும்பாலோரும் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதில் வேறுசில உள்நோக்கங்கள் உள்ளன என்று கருதினர். வங்கிகள்மீது அரசாங்கமும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே அவை தேசியமயமாக்கப்பட்டன என்ற கருத்து நிலவியது. இதை மெய்ப்பிப்பது போன்று நடந்ததுதான் நகர்வாலா ஊழல் என்பது.
1971ஆம் ஆண்டு மே மாதம் 24ந்தேதி புதுடெல்லி நாடாளுமன்ற சாலையிலுள்ள ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் தலைமை கேஷியர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ராவிற்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசியது ஒரு பெண்ணின் குரல். அது இந்திரா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. மல்ஹோத்ரா போனில் பேசியவர் இந்திரா காந்தி என்றே நம்பினார்.
அந்தப் பெண்குரல் சொன்னது: "சகோதரா... பங்களாதேஷில் நடக்கவுள்ள ஒரு ரகசியமான பணிக்கு 60 லட்ச ரூபாய் உடனடியாக தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யவேண்டும். நான் ஒரு நம்பகமான ஆசாமியை அனுப்புவேன். அவன் வங்கிக்கு வெளியே சற்று தூரத்தில் காத்திருப்பான். அவன் உன்னிடம் "பங்களாதேஷ்கா பாபு" என்று சங்கேதக் குறியீடாக ( code language) சொல்லுவான். அவன் அப்படிச் சொன்னால் நான் அனுப்பிய ஆசாமி என்று அர்த்தம். நீ அவனிடம் "பார்- அட்- லா" என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் அவன் நீ மேற்படி என்ன செய்யவேண்டும் என்று சொல்வான். அவனிடம் 60 லட்ச ரூபாயை கொடுத்துவிடு. பணத்திற்கான ரசீதை பிரதமர் அலுவலகத்திலிருந்து பிறகு பெற்றுக்கொள் ".
பிரதமர்தான் ஆணையிட்டார் என்று உறுதியாக நம்பிய மல்ஹோத்ரா தனக்குக்கீழ் வேலைசெய்த கேஷியரிடம் 60 லட்ச ரூபாயை ஒரு பெரிய பெட்டியில் அடுக்கிக் கட்டும்படி பணித்தார். அவரும் அவ்வாறே செய்தார். இரண்டு வேலையாட்கள் பணப்பெட்டியை வங்கிக்குச் சொந்தமான காரில் ஏற்றினர். மல்ஹோத்ரா காரில் ஏறிக்கொண்டார். அவரே டிரைவ் செய்தார். சற்று தூரம் சென்றபின் உயரமான, சிவப்பான ஓர் ஆசாமி காரை கையசைத்து நிறுத்தினார். அவர்தான் ருஸ்டம் ஷோரப் நகர்வாலா. அவர் சாதாரண மனிதரல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தவர். உளவுத்துறை ( Intelligence Wing)யில் பணியாற்றியவர். அவர் "பங்களாதேஷ்கா பாபு" என்று மல்ஹோத்ராவிடம் கூறினார். புரிந்துகொண்ட மல்ஹோத்ரா பதிலுக்கு "பார்- அட்- லா" என்று சொன்னார். அவர் நகர்வாலாவை காரில் ஏற்றிக்கொண்டார். கார் சர்தார் படேல் சாலையும், பஞ்சசீல சாலையும் சந்திக்கும் இடம்வரை சென்றபோது நகர்வாலா காரை நிறுத்தச் சொன்னார். மல்ஹோத்ராவும் அவ்வாறே செய்தார். நகர்வாலா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டார். அவர் மல்ஹோத்ராவிடம் " நீங்கள் பிரதமர் பங்களாவுக்குச் செனறு ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள் " என்று கூறினார்.
மல்ஹோத்ரா காரை ஓட்டிக்கொண்டு பிரதமரின் இல்லத்திற்கு சென்றார். அங்கே பிரதமர் இல்லை. அங்கிருந்த சிலர் பிரதமர் நாடாளுமன்ற இல்லத்தில் (Parliament House) இருப்பார் என்று கூறினர். மல்ஹோத்ரா அங்கேயும் சென்று பார்த்தார். அங்கேயும் பிரதமர் இல்லை. உடனே மல்ஹோத்ரா பிரதமர் அலுவலகம் சென்று அங்கிருந்த பிரதமரின் தனிச்செயலாளரான திரு P.N.ஹக்சரை அணுகி தான் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டார். அதற்கு ஹக்சர் "ரசீதா ? எதற்கு ?" என்று கேட்டார். நடுங்கிப்போன மல்ஹோத்ரா நடந்ததைக் கூறினார். ஹக்சர் "மல்ஹோத்ரா அவர்களே.. பிரதமர் அவ்வாறு உங்களிடம் ஏதும் கூறவில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள்.. நீங்கள் நேராக போலீஸிடம் சென்று புகார் அளியுங்கள்" என்று அறிவுரை கூறினார். படபடத்துப்போன மல்ஹோத்ரா நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார்.
இதற்கிடையில் நகர்வாலா ஒரு டாக்ஸியில் பணப்பெட்டியை ஏற்றிக்கொண்டு நேராக Defence Colonyக்குச் சென்றார். அங்கு இறங்கி வேறு ஒரு டாக்ஸியைப் பிடித்து பணப்பெட்டியுடன் ராஜிந்தர் நகருக்குச் சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் சூட்கேஸ் ஒன்றை கடன்வாங்கிக்கொண்டு பணப்பெட்டியுடன் நிக்கல்சன் ரோடு சென்றார். பிறகு ரூட்டை மாற்றி Defence Colonyக்கு வந்து நண்பர் ஒருவர் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினார். பின்னர் நகர்வாலா பார்சி தர்மசாலாவில் உள்ள தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
மல்ஹோத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் உடனே விசாரணையைத் துவக்கியது. பிரதமர் சம்பத்தப்பட்ட விஷயம் என்பதால் மின்னல் வேகத்தில் விசாரணை நடந்தது. D.K.காஷ்யப் என்ற போலீஸ் உயரதிகாரியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவருக்கு உதவ ஹரிதேவ், A. K.கோஷ் என்ற இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த துப்பு துலக்குவதற்கு "ஆபரேஷன் தூஃபான்" என்று பெயரிடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் நகர்வாலாவையும், பணப்பெட்டியையும் ஏற்றிச்சென்ற டாக்ஸி டிரைவரை போலீசார் பிடித்துவிட்டனர். அவர் நகர்வாலா எங்கெல்லாம் சென்றார் என்று கூறிவிட்டார். இதற்குள் வங்கி மோசடி செய்தி டில்லி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. நகர்வாலா Defence Colony யில் யார் வீட்டில் பணப்பெட்டியை இறக்கினாரோ, அவர் தன் வீட்டில் பெட்டி இருக்கிறது என்று போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பணப்பெட்டியை கைப்பற்றினர். அதில் முழுப்பணமும் இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் பார்சி தர்மசாலாவுக்குச் சென்று நகர்வாலாவை கைது செய்தனர். எல்லாம் பத்து மணி நேரத்திற்குள் நடந்துவிட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு நகர்வாலா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை பத்து நிமிடங்களே நீடித்தது. அது நீதிபதி அறையில் ரகசியமாக விசாரிக்கப்பட்டது. வழக்கறிஞர்களோ, பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. நகர்வாலா தனக்கு அந்த சமயத்தில் தோன்றிய திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும், தொலைபேசியில் பெண்குரலில் இந்திரா காந்தி போல் பேசியது தான் தான் என்றும் ஒப்புக்கொண்டதாகவும் நீதிபதி கூறி உடனேயே தீர்ப்பை வாசித்தார். நகர்வாலாவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு நகர்வாலா செஷன்ஸ் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாற்று சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கை மறுவிசாரணை ( Retrial ) செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறினார். வழக்கை செஷன்ஸ் நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். ஆனால் நகர்வாலா தனக்கு தண்டனை வழங்கிய நீதிபதியே இந்த வழக்கை மறுவிசாரணை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதை நிராகரித்த செஷன்ஸ் நீதிபதி நகர்வாலாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அடுத்த மாதம் நகர்வாலா செஷன்ஸ் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமை கேஷியர் மல்ஹோத்ராவை கோர்ட்டில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் கோர்ட்டார் அவரது வேண்டுகோளின்மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந்த வழக்கை துப்புதுலக்கிய போலீஸ் அதிகாரி காஷ்யப் தனது தேன்நிலவிற்காக நவம்பர் 20, 1971 இல் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சிறையில் வாழ்நாளைக் கழித்த நகர்வாலா உடல்நலம் குன்றி திகார் சிறை மருத்துவமனையில் 1972 பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள G.B.Pant மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மார்ச் 2ந் தேதி 1972 அன்று நகர்வாலா மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்துடன் இந்த ஊழல் வழக்கும் முடிவுக்கு வந்தது.
இருந்தாலும் இந்த வழக்கில் விடை கிடைக்காத சில மர்மங்கள் இன்றுவரை நீடிக்கின்றன.
காசோலையோ, அடமானமோ இல்லாமல், மல்ஹோத்ரா எப்படி 60 லட்ச ரூபாயை நகர்வாலாவிடம் அளித்தார் ? இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் பல தடவை பிரதமர் அலுவலகத்திலிருந்து மல்ஹோத்ராவிற்கு பணம் அனுப்பும்படி உத்தரவு வந்து அவர் கொடுத்துள்ளதாக சில வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை ? மல்ஹோத்ரா போனில் பேசியது இந்திரா காந்திதான் என்று எப்படி உணர்ந்தார் ?
ஆண் ஆன நகர்வாலாவால் எப்படி பெண் குரலில் இந்திரா காந்தி போல் பேசமுடிந்தது ? கோர்ட்டில் நீதிபதி நகர்வாலாவை ஏன் தன் அறையில் கூப்பிட்டு விசாரித்தார். வழக்கறிஞர்கள் ஏன் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை ? வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உடனேயே தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ?
போலீஸ் அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் கார் விபத்தில் இறந்ததுபற்றி ஏன் முறையான விசாரணை நடத்தப்படவில்லை ?
நகர்வாலா மரணத்திலும் மர்மம் உள்ளது என்று பலர் கூறினர். அதுபற்றி விரிவான விசாரணை ஏன் நடத்தப்படவில்லை ? நகர்வாலா இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் தூதுவராக சென்றுள்ளார் என்று சிலர் கூறினர். இது உண்மையா ?
ஆக மொத்தம் இந்த சம்பவம் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.
ஆதாரம் : இந்தியா டுடே ( ஆங்கிலம்) ஏப்ரல் 30, 1977.

கிறிஸ்துவ ஆங்கிலேயரால் குற்றப் பரம்பரை என அறிவிக்கப்பட்ட தமிழர் ஜாதிகள்

 கிறிஸ்துவ விஷநரி வழிகாட்ட கிறிஸ்துவ ஆங்கிலேயரால் குற்றப் பரம்பரை என அறிவிக்கப்பட்ட தமிழர் ஜாதிகள் 


Thursday, December 18, 2025

வாக்கு எண்ணிக்கை - VVPAT வாக்குச்சீட்டுகள் எண்ணிக்கை 100% சரியாக வந்துள்ளது

ஒவ்வொரு தேர்தலிலும் VVPAT வாக்குச்சீட்டுகள் என்னப்படுகிறது ஆனால் எப்போது என்னப்படுகிறது, யார் கேட்கும் போது என்னப்படுகிறது என்பதற்கு தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட்களுக்குள், “எனக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் உள்ளது” என்று தோல்வியடைந்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தால், அந்த வேட்பாளர் தேர்வு செய்யும் சுமார் 40 முதல் 50 வாக்குச்சாவடிகளில் உள்ள VVPAT சீட்டுகளையும், அந்தச் சாவடிகளில் பதிவான EVM வாக்குகளையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.


இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும், EVM வாக்குகளுக்கும் VVPAT சீட்டுகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 104 வேட்பாளர்கள் சுமார் 95 சட்டமன்ற தொகுதிகளில் இந்தக் கிராஸ் செக்கிங்கை கேட்டார்கள். ஆனால் அங்கேயும் EVM – VVPAT இரண்டிலும் ஒரே முடிவுதான் வந்தது. அதனால் அவர்கள் வாயை மூடி அமைதியாகிவிட்டார்கள். (அந்தப் பட்டியல் வேண்டுமானால் கமெண்டில் இணைத்து வைக்கிறேன்).
கடந்த மாதம் நடந்த பீகார் தேர்தலில் கூட தேர்தல் ஆணையம் வாலண்டீராக ரேண்டாமாக சுமார் 1215 பூத்துகளில் உள்ள VVPAT மற்றும் EVM ஓட்டுக்களை கிராஸ் செக் செய்தார்கள் அதில் ஒரு ஓட்டு கூட வித்தியாசம் வரவில்லை. இதைப் பார்த்த வேட்பாளர்கள் இன்றுவரை ஒருவர் கூட தங்கள் தொகுதிகளில் உள்ள ஐந்து சதவீத VVPAT கிராஸ் செக் கொள்ளும் வசதியை கேட்டு அப்ளை செய்யவில்லை காரணம் அவர்களுக்கு தெரியும்..
உண்மையிலேயே இவர்கள் எல்லாம் இவ்வளவு அறியாமையாலா பேசுகிறார்கள், இல்லையா மக்களை முட்டாள்களாக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிப் பச்சையாக பொய் பரப்புகிறார்களா என்று தெரியவில்லை. மேலும், “VVPAT-ஐ என்ன செய்ய வேண்டும்” என்று அமித் ஷா எப்படி முடிவு செய்ய முடியும்? அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். மண்டையில் மசாலா இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இங்கே தான் எழுகிறது.
100% VVPAT வாக்குகளை எண்ண வேண்டும் என்று வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதிமன்றம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னது. எல்லா VVPAT சீட்டுகளையும் முழுமையாக எண்ணினால், வாக்கு எண்ணிக்கை நேரத்தில் தேவையற்ற குழப்பங்கள், தாமதங்கள், மனிதத் தலையீடு போன்ற பழைய பிரச்சினைகள் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. அதனால் தோல்வியடைந்த வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்தால், அவர்கள் தேர்வு செய்யும் 40 முதல் 50 வாக்குச்சாவடிகளில் மட்டுமே VVPAT சீட்டுகளை மறுஎண்ணிக்கை செய்து EVM வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த 40–50 வாக்குச்சாவடிகளைத் தேர்வு செய்வதற்கான உரிமையும் தோல்வியடைந்த வேட்பாளருக்கே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதைவிட வெளிப்படைத்தன்மை வேறென்ன வேண்டும்? இதன் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறி, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.
அதனால் EVM மீது சந்தேகம் கிளப்புவது அரசியல் தோல்வியை மறைக்கப் போடும் மலிவான நாடகமே தவிர, உண்மையல்ல. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனுடன் இணைந்த VVPAT முறையும், இன்று உலகமே பாராட்டும் அளவுக்கு பாதுகாப்பானதும், நம்பகமானதும், வெளிப்படையானதும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.

மணல் கொள்ளை மாஃபியா- ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா?

 ₹5 கோடி கொள்ளை… அபராதம் ₹5 லட்சமா? -மாஃபியா போல செயல்படும் மணல் கொள்ளையர்கள்.. பத்திரிக்கையாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு! ஹைகோர்ட் அதிரடி  By Rajkumar R Updated: Thursday, December 18, 2025,

 சென்னை: அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாகவும், மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதனை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடையும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு நவம்பர் வரை மொத்தம் 1439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, நீதிபதிகள் எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது?உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். ஐந்து கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது ? எனவும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாக கூறினர். 

மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக புகாரளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவில் கூறியுள்ளனர். மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகாரளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். 
தமிழ்நாடு அரசின் அறிக்கை ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சட்ட விரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை தடுக்க திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-slams-sand-mining-mafia-orders-police-protection-for-activists-and-journalists-758915.html



I periyasamy - no stay for ED Enquiry

 

 


Suicide for Thiruparangkundram

 


ஆஸ்திரேலியா -போண்டி பீச் யூதர் படுகொலை; மேலும் 7 தீவிரவாதிகள் கைது

 https://www.youtube.com/watch?v=HN3g12gzINo

Seven men in Sydney with possible links to extremism were arrested. Here's what we know

Police ruled out any links with the Bondi Beach terror attack despite concerns the men were travelling there.

Heavily armed police handcuff people on the ground.
Heavily armed police handcuffed several men during an operation in Liverpool in Sydney's south-west on Thursday. Source: 7 News    https://www.sbs.com.au/news/article/nsw-police-say-case-sydney-liverpool-no-link-bondi-shooting/vwy41sbdt
 One of seven men arrested by heavily armed police in Sydney's south-west was reportedly under investigation by ASIO, with police saying they are investigating whether the group had links to extremist Islamist ideology.

Heavily armed officers from the Tactical Operations Unit rammed at least one car and forced several men out by gunpoint near the intersection of George and Campbell streets in Liverpool on Thursday evening.

A second vehicle was also intercepted, with seven men arrested in total. 
ABC News reported that one of the men was under investigation by ASIO, citing intelligence sources.

NSW Police commissioner Mal Lanyon on Friday would not confirm the report but said police information from law enforcement partners prompted the arrest.

"We're certainly looking at radical Islamist extremism as one of the ideologies behind these males," Lanyon said.
NSW Police Commissioner Mal Lanyon speaks to media during a press conference at NSW Parliament in Sydney, 
NSW Police commissioner Mal Lanyon declined to confirm if one the arrested men was being investigated by ASIO. Source: AAP / Bianca De Marchi
Earlier, deputy NSW Police commissioner Dave Hudson said officers moved in after receiving intelligence about a "possible violent act" and police believed the group had links to Islamic extremism.

Lanyon said the men, who travelled to NSW from Victoria, haven't been released yet, but would be freed subject to a review of evidence.

"Whilst this specific threat posed by the males is unknown, I can say that the potential of a violent offence being committed was such that we were not prepared to tolerate the risk and interdicted accordingly," he said.

"The information received was that Bondi may have been one of a number of locations that the males were intending to attend, but the reason for attending is unknown. The justification for their ongoing detention no longer exists subject to a review of evidence.

"They will continue to be monitored whilst in New South Wales and we will work closely with our Victorian and Commonwealth law enforcement partners."

Lanyon said there was no confirmed link between the group and the Bondi Beach terror attack that claimed 15 lives.
What happened on Thursday?
Videos and images posted on social media showed tactical officers wearing camouflage uniforms and helmets standing over several men lying face down on the road and footpath.

The group were also shown on the ground with their hands zip-tied behind their backs as they were detained.
Heavily armed police in camoflauge uniforms stand beside men in who are seated on a footpath with their zip-tied behind their backs
Vision of the arrest was posted on social media. Source: ABC News
Speaking on 2GB radio on Friday morning, Hudson said officers moved in after receiving intelligence about a "possible violent act".

He said police believed the group may have been travelling to Bondi, but no weapons were found inside the vehicles apart from a knife.

The seven men were detained under a Commonwealth detention warrant, which is due to expire at 7.30pm on Friday.


National day of mourning to be held to honour victims of Bondi Beach terror attack

Hudson revealed the group had travelled from Victoria and both vehicles were registered there.

"We're in continuous consultation with our Victorian counterparts at this stage in relation to their knowledge," he said.
Are the arrests linked to Bondi?
NSW Police said they had not identified a connection between the group and the Bondi attack.

However, Hudson told ABC Radio that police believed the group had links to Islamic extremism.

Asked whether the men appeared to share an ideological adherence to Islamic extremism, Hudson said: "That’s our belief at this stage, yes."
READ MORE

Murders, terrorism: Dozens of charges laid against alleged 24-year-old Bondi gunman

Hudson acknowledged footage of the dramatic arrests was confronting in the aftermath of Sunday's attack, but said the police response was appropriate.

"Our tolerance for threat and risk is very low at the moment," he said.

"If we receive information that any type of criminality or violent act is about to be committed, we will act."

சௌதி இளவரசர் பிரான்சு தீவில் ரூ.2000 கோடி அரண்மனை வாங்கினார்

 சௌதி இளவரசர் பிரான்சு தீவில் ரூ.2000 கோடி அரண்மனை வாங்கினார் =2017




10000 Year Old elephant skeleton


 பைபிள் குரான் கதை புத்தகங்கள்படி உலகம் படைத்து 6000 வருஷம் தான் ஆச்சாம்




Pallikaranai

 2017




NGOs

 2018




JJ hospital stay - food bill

  

 
 


அமெரிக்கா - பெண் இறக்க வீட்டு ஃப்ரிட்ஜ் உள்ளே 10 ஆண்டு முன் இறந்த கணவர் உடல்

 அமெரிக்கா - பெண் இறக்க வீட்டு ஃப்ரிட்ஜ் உள்ளே 10 ஆண்டு முன் இறந்த கணவர் உடல் =2019




ஆறுமுக நாவலர் - தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி

 

பழனி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?

பழனி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?  UPDATED : டிச 09, 2014  

https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dindigul/where-is-rs1000-crore-property-belongs-to-palani-temple/1132766

பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இன்னும் கோவில் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளன. இது குறித்து, அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏன் என, தணிக்கை துறை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், அறநிலைய துறையின் அலட்சியத்தால் இந்த சொத்துகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

கடிதம்:

பழனி கோவிலுக்கான மண்டல தணிக்கை அலுவலர், அறநிலைய துறை ஆணையருக்கு, சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில் குறிப்பிடப்பட்டதாவது: கொடைக்கானலைச் சேர்ந்த, வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவர், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை, பழனி முருகன் கோவிலுக்கு சேருமாறு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலை, கொடைக்கானல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் 2003 மார்ச்சில் பதிவு செய்து, அதன் ஒரு பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பி உள்ளார். உயிலின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுத்து, சொத்துகளை கோவில் கணக்கில் சேர்க்கும்படி ஆணையர் அலுவலகத்தில் இருந்து, மதுரை இணை ஆணையருக்கு, 2004 ஜனவரியில் கடிதம் அனுப்பப்பட்டதுமதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம், உரிய நடவடிக்கைக்காக, கோவில் இணை ஆணையருக்கு, 2004 ஏப்ரலில் அனுப்பப்பட்டது. உயில் ஆவணம் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், அந்த சொத்துகள் இதுவரை கோவில் கணக்கில் சேர்க்கப் படவில்லை.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேள்விகள்:

எழுதியவராலேயே ரத்து செய்ய முடியாத அளவுக்கு, பாதுகாப்பு செய்யப்பட்ட இந்த உயிலின் இப்போதைய நிலை என்ன, இதில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட சொத்துகளின் நிலை என்ன என்பது தொடர்பாக, தணிக்கை அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இவ்வாறு கிடைத்த உயிலை பாதுகாக்கக் கூட எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக, ஒரு கோப்பு கூட உருவாக்கப்படவில்லை. இது போன்று எத்தனை உயில்கள், தானங்கள் வரப்பெற்று உரிய நடவடிக்கையின்றி கிடக்கின்றன என்பது தெரியவில்லை என, தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சொத்துகள் விவரம்:


*கோவை மாவட்டம் வால்பாறை, கேரளாவில் மூணாறு ஆகிய இடங்களில் உள்ள இரு தேயிலை தொழிற்சாலைகள். 

*கொடைக்கானல் டவுன் பகுதியில், மூன்று வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட, 197 சென்ட் நிலங்கள்.

*வி.என்.ஏ.எஸ்., காலணி தயாரிப்பு நிறுவனத்தில் 90 சதவீத பங்குகள்.
*இத்துடன், உயில் ஆவணத்தில் குறிப்பிடப்படாத, அவர் பெயரில் உள்ள பிற சொத்துகள்.

அறநிலைய துறையில் இதுவரை கேள்விப்படாத வகையில் இந்த முறைகேடு அமைந்துள்ளது. பக்தர் கொடுத்த சொத்து என்ன காரணத்துக்காக கோவில் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதை, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரிக்க வேண்டும். இந்த காலதாமதத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.


டி.ஆர்.ரமேஷ்,செயல் தலைவர்,

ஆலயம் வழிபடுவோர் சங்கம்

-- நமது நிருபர் - -

கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை & திராவிடியார் அராஜகம் நீதிபதி நேரடியாக அனுபவம்

இறைவன் திருக் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை & திராவிடியார் அராஜகம் நீதிபதி நேரடியாக அனுபவம்





இந்திய ரூபாய், தங்க விலை மற்றும் அமெரிக்க டாலர்: 1991 முதல் 2025 வரை வரலாற்று போக்கு

இந்திய ரூபாய், தங்க விலை மற்றும் அமெரிக்க டாலர்: 1991 முதல் 2025 வரை வரலாற்று போக்கு 

  • 1991: USD/INR ~ ₹22.7 | தங்கம் ~ ₹3,466
  • 2025  USD/INR ~ ₹88    | தங்கம் ~ 90000

ஆசிரியர் குறிப்பு: 1991இல் இந்தியப் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கியது முதல், இந்திய ரூபாய் (INR) அமெரிக்க டாலருக்கு (USD) எதிராக கணிசமாக மதிப்பிழந்துள்ளது. அதே நேரத்தில், தங்க விலை (24 காரட், 10 கிராம்) பல மடங்கு உயர்ந்துள்ளது. இது பணவீக்கம், உலகளாவிய நெருக்கடிகள், இறக்குமதி சார்பு மற்றும் பாதுகாப்பு சொத்து தேவை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்தக் கட்டுரை, விக்கிபீடியா, Investing.com, BankBazaar, ClearTax போன்ற நம்பகமான ஆதாரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு சராசரி மதிப்புகளை வழங்குகிறது (தோராயமானது; துல்லியமானது அல்ல). 2025 தரவு டிசம்பர் 19, 2025 வரை உள்ளது. இது முதலீட்டாளர்கள், பொருளாதார ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1991: சீர்திருத்தங்களின் தொடக்கம் – ரூபாயின் மதிப்பிழப்பு

1991இல் இந்தியாவின் பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாய் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

  • USD/INR: சராசரி ~ ₹22-25 (மதிப்பிழப்புக்கு முன் ~₹17, பின் ~₹25+).
  • தங்க விலை (10 கிராம்): ~ ₹3,466 - ₹4,000.

இந்த ஆண்டு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடங்கியது, தங்கம் பாதுகாப்பு சொத்தாக உயரத் தொடங்கியது.

1990கள்: தாராளமயமாக்கல் மற்றும் ரூபாய் வீழ்ச்சி

  • ரூபாய் USDக்கு எதிராக ஆண்டுக்கு சராசரி 5-10% வீழ்ச்சி.
  • தங்க விலை மெதுவாக உயர்ந்தது.

சில ஆண்டு தரவுகள்:

  • 1991: USD/INR ~ ₹22.7 | தங்கம் ~ ₹3,466
  • 1995: USD/INR ~ ₹32.4 | தங்கம் ~ ₹4,680
  • 1999: USD/INR ~ ₹43.1 | தங்கம் ~ ₹4,450

2000கள்: உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் தங்க உச்சம்

2008 உலக நிதி நெருக்கடி தங்கத்தை பாதுகாப்பு சொத்தாக்கியது.

  • 2000: USD/INR ~ ₹45 | தங்கம் ~ ₹4,400
  • 2005: USD/INR ~ ₹44.1 | தங்கம் ~ ₹7,000
  • 2009: USD/INR ~ ₹48.4 | தங்கம் ~ ₹15,000+

ரூபாய் ~₹45-50 இடையே இருந்தது, தங்கம் இரட்டிப்பு.

2010கள்: தங்க உச்சம் மற்றும் ரூபாய் வீழ்ச்சி

2011இல் தங்க உச்சம் (~₹26,400 சராசரி).

  • 2010: USD/INR ~ ₹45.7 | தங்கம் ~ ₹18,500
  • 2011: USD/INR ~ ₹46.7 | தங்கம் ~ ₹26,400
  • 2015: USD/INR ~ ₹64.1 | தங்கம் ~ ₹26,343
  • 2019: USD/INR ~ ₹70.4 | தங்கம் ~ ₹35,000+

ரூபாய் ₹70ஐ தாண்டியது.

2020கள்: கொரோனா, போர் மற்றும் புதிய உச்சங்கள்

கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் தங்கத்தை உயர்த்தின.

  • 2020: USD/INR ~ ₹74.2 | தங்கம் ~ ₹48,651
  • 2021: USD/INR ~ ₹73.9 | தங்கம் ~ ₹48,000
  • 2022: USD/INR ~ ₹78.6 | தங்கம் ~ ₹52,000
  • 2023: USD/INR ~ ₹82.8 | தங்கம் ~ ₹55,000+
  • 2024: USD/INR ~ ₹83.6 | தங்கம் ~ ₹65,000-70,000
  • 2025 (இதுவரை): USD/INR ~ ₹84-88 (சராசரி ~₹86-87) | தங்கம் ~ ₹80,000-94,000+ (உச்சம் ₹94,630+)

2025இல் ரூபாய் ₹88-90 இடையே, தங்கம் ₹90,000+ தாண்டியுள்ளது.

ஒப்பீடு அட்டவணை: ஆண்டு சராசரி மதிப்புகள் (தோராயமானது)

ஆண்டுUSD/INR (சராசரி)தங்கம் (10 கிராம், 24K)
1991~₹22-25~₹3,466
1995~₹32~₹4,680
2000~₹45~₹4,400
2005~₹44~₹7,000
2010~₹45.7~₹18,500
2015~₹64~₹26,343
2020~₹74~₹48,651
2023~₹83~₹60,000+
2024~₹84~₹70,000+
2025~₹86-88~₹80,000-94,000+

(தரவு: Wikipedia, BankBazaar, ClearTax, Investing.com – தோராயமான சராசரி)

போக்குகளின் காரணங்கள்

  • ரூபாய் மதிப்பிழப்பு: பணவீக்கம், இறக்குமதி சார்பு (எண்ணெய், தங்கம்), உலக நெருக்கடிகள்.
  • தங்க உயர்வு: உலகளாவிய பாதுகாப்பு தேவை, இந்திய திருமண/திருவிழா தேவை, பணவீக்க ஹெட்ஜ்.
  • தொடர்பு: ரூபாய் பலவீனமடையும் போது தங்க விலை (ரூபாயில்) உயர்கிறது.

முடிவுரை: பாடம் மற்றும் எதிர்காலம்

1991 முதல் 2025 வரை, ரூபாய் USDக்கு எதிராக ~4 மடங்கு மதிப்பிழந்துள்ளது (₹25லிருந்து ₹88+), தங்கம் ~25-30 மடங்கு உயர்ந்துள்ளது (₹3,500லிருந்து ₹90,000+). இது தங்கத்தை சிறந்த முதலீடாக்குகிறது, ஆனால் பணவீக்கத்தை காட்டுகிறது. 2025இல் உலக நெருக்கடிகள் தொடர்ந்தால் தங்கம் உயரலாம், ரூபாய் பலவீனமாகலாம்.

உங்கள் கருத்து: தங்கத்தில் முதலீடு செய்வது இன்னும் பாதுகாப்பானதா?

ஆதாரங்கள்: Wikipedia (Exchange rate history), BankBazaar, ClearTax, Investing.com, CEIC Data (டிசம்பர் 2025 வரை).

மகாராஷ்டிரா குக்கிராமத்தில் கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ் பதிவு!!

 மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தில் உள்ள செந்தூர்சனி குக்கிராமத்தில் செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த 100 நாள்களில் 27,397 பிறப்புச் சான்றிதழ் வேண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 7 இறப்புச் சான்றிதழ் கேட்டும் விண்ணப்பித்துள்ளனர்.

2011 மக்கள் கை கணக்கெடுப்பில் அங்கு 1,394 வசிப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆன்லைன் வழியே போலி பிறப்புச் சான்றிதழ் கேட்டு பதிவு செய்திருப்பவர்கள் வங்கதேசதத்திலிருந்து சட்ட விரோத ஊடுருவி வசித்து வருபவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது பற்றி என்.ஐ.ஏ. விசாரணை தேவையென்று பா.ஜ.க. பிரமுகர் கிரீட் சோமையா கோரிக்கை வைத்துள்ளார்.

டிசம்பர் 17 காலை 10:44: "1,500 பேர் இருக்கும் கிராமத்தில் செப்டம்பரில் மட்டும் 27,397 பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அதை நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்".
டிசம்பர் 17 மாலை 07:04: "27,397 பேரும் மேற்கு வங்க, வட இந்திய மற்றும் வங்க டேஷ் நபர்கள். (நடவடிக்கை பாய்கிறது".
*** Demography is Destiny!
Biggest Birth Certificate Scam of India
27,397 birth registration took place in September 2025, in Shendursani Village of Yavatmal District. Village Population is 1,500.
Most of these 27397 are above 18 year of Age & doesn't belongs to Maharashtra.
I am visiting today afternoon 3.30pm The Village Shendursani & Aarni Tehsil & also Police Station. FIR registered yesterday evening
Visited Sendur Sani Village at Yavatmal
27397 birth registration done in September, October, November 2025 through Gram Panchayat Terminal. Th
ALL belongs to West Bengal, North India, Bangladeshi e.g.
Kitaboon Nissa
Mohammed Azad
Shamshad Ahmad
Khurshid Alam
It's interstate scam, used fraudulently Gram Panchayat Computer Terminal, OTP & email address


தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம்

 தமிழகத்தில் S.I.R. வரைவு வாக்காளர் பட்டியல் 97.37 லட்சம் பேர் நீக்கம் “நீக்கப்பட்ட ஒரு கோடி பேரில் சுமார் 27 லட்சம் பேர் இறந்து போனவர்கள்”,...