போட்டோஷாப் திமுக வேசாதனைகள் வெளி வருகின்றன https://x.com/mannar_mannan28/status/2016090028792021088
(Historical & Theological view based on International University researches)
Tuesday, January 27, 2026
Monday, January 26, 2026
ஈவெராமசாமியார் கும்பல் மோசடி - சட்டக்குழு போட்டோவில் ஈவெரா போட்டோஷாப்
ஈவெராமசாமியார் கும்பல் மோசடி - சட்டக்குழு போட்டோவில் ஈவெரா போட்டோஷாப் https://x.com/AugPic/status/2015693238951121143
ஜோசப் விஜய் சினிமா தியேட்டர் ஓனருக்கு லாபம் தருகிறதா??
ஜோசப் விஜய் தயாரிப்பாளர் Vs தியேட்டர் உரிமையாளர்கள்.. யாருக்கு லாபத்தை கொடுத்தது லியோ? தொடரும் பஞ்சாயத்துக்கள்!
https://www.puthiyathalaimurai.com/cinema/actor-vijay-leo-not-profitable-for-theatre-owners-movie-hit-and-theatre-profit-explained Published on: 30 Oct 2023
லியோ படத்தின் வசூல் விவகாரத்திலும், அதன் வெற்றி குறித்தும் திருப்பூர் சுப்பிரமணியன் - லலித்குமார் பேச்சுகள் விவாதமாகியுள்ளன. இந்த நேரத்தில் லியோ படம் யாருக்கும் வெற்றியை கொடுத்தது என்ற கேள்விக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
ரிலீஸ் ஆவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தியேட்டரில் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையிலும் பார்க்கும் இடமெங்கும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம். வரவேற்பு, விமர்சனங்களை தாண்டி, வசூல் சாதனை, தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இருக்கா? இல்லையா? போன்ற விஷயங்களும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக திருப்பூர் சுப்பிரமணியன் - லலித்குமார் பேச்சுகள் விவாதமாகியுள்ளன. இந்த நேரத்தில் லியோ படம் யாருக்கும் வெற்றியை கொடுத்தது என்ற கேள்விக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
படத்தின் பட்ஜெட்டும்.. வெளியான வசூல் விவரமும்..
தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஹைப் ஏற்றப்பட்ட இந்த லியோ படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய தொகை நடிகர்களின் சம்பளமாக கொடுக்கப்பட்டாலும், முதல் 10 நிமிட ஹைனா காட்சிகளுக்கான கிராஃபிக்ஸ், நான் ரெடி தான் பாடலுக்கான டான்ஸ் மற்றும் கார் சேசிங் போன்ற காட்சிகளை மெச்சும் படி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் வசூல் 148 கோடி ரூபாய் என்ற பெரிய ஓபனிங் கிடைத்ததைத் தொடர்ந்து, 7 நாள் முடிவில் உலகம் முழுவதும் 461 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் ஹிட் ஆ ஃப்ளாப் ஆ என்று கேட்டால் வணீக ரீதியில் தயாரிப்பாளருக்கு லாபமான படம்தான் என்கின்றனர் சினிமாவை அறிந்தவர்கள்.
திருப்பூர் சுப்ரமணியன் Vs லலித் குமார் - பஞ்சாயத்து என்ன?
“லியோ திரைப்படத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த பிரியோஜனமும் இல்லை” என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தது, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியது. வசூல் வேட்டையில் இத்தனை சாதனை செய்துள்ளதே, பின் எப்படி பெரிய லாபம் இல்லை என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றன. இதற்கான விடையையும் அடுத்தடுத்த வரிகளில் பார்க்கலாம்.
வேறு வழி இல்லாம லியோ படத்தை இப்போது ஒளிபரப்பி வருகிறோம் என்று திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், “கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் லியோ படத்தை விநியோகம் செய்ய சுப்பிரமணியன் கேட்டார். அதனை நான் மறுத்துவிட்டேன். நானே படத்தை விநியோகம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டேன். இதனை மனதில் வைத்துக்கொண்டு சுப்பிரமணியன் இப்படி பேசலாம்” என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மனஸ்தாபத்திற்காக இப்படி விமர்சித்து வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவெனில், லியோ படத்தை தயாரித்து, விநியோகம் செய்தது லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோதான்.
அது என்ன ஷேர்.. லியோ படத்திற்கு எவ்வளவு?
முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகிறது என்றால், விநியோகஸ்தரிடம் மினிமம் கேரண்டி(MG) என்ற முறையில் ஒரு தொகையை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் வாங்குவார்கள். குறிப்பிட்ட தொகையை படத்தின் மூலமாக எடுத்துவிட்டால், அதற்கு பிறகு வரும் வருமானத்தில் தியேட்டர் உரிமையாளரும், விநியோகஸ்தரும் பங்குபோட்டுக்கொள்வார்கள். ஆனால், இப்போது இருக்கும் நடைமுறையே வேறு. அதாவது ஒவ்வொரு டிக்கெட்டிலும் இத்தனை சதவீதமான ஷேர் விநியோகஸ்தருக்கு, இத்தனை சதவீதம் தியேட்டர் உரிமையாளருக்கு என்று பிரிக்கப்படுகிறது. இந்த வழக்கம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். இந்த ஷேர் விவகாரம், எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் 60 - 40 ஆக இருந்தது, ரஜினி - கமல் காலத்தில் 65 - 35, விஜய் - அஜித் காலத்தில் 70 - 75 ஆக உயர்ந்துள்ளது என்கின்றார் திருப்பூர் சுப்பிரமணியன்.
கொரோனா பெருந்தொற்றின்போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக, முதன்முதலாக தியேட்டருக்கு வந்தது மாஸ்டர் படம் தான். 50 சதவீத இருக்கைக்கே அனுமதி கொடுக்கப்பட்டதால், முதன்முறையாக 75 முதல் 80 சதவீதமான ஷேரை விநியோகஸ்தருக்கு கொடுத்தனர். அதையடுத்து எந்த படத்திற்கும் இவ்வளவு ஷேர் கொடுக்கவில்லை. லியோ படத்திற்குத்தான் மீண்டும் இந்த ஷேரை கொடுத்தோம் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அதன்படி, மல்டிபிளக்ஸ் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களை கொண்ட தியேட்டர்களுக்கு ஒரு ஷேர், ஒரே ஸ்கிரீனை கொண்ட தியேட்டர்களுக்கு ஒருவகையான ஷேர், non ac தியேட்டர்களுக்கு ஒருவகையான ஷேர் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
லாபம்.. தியேட்டருக்கா? தயாரிப்பாளருக்கா?
இப்போது இருக்கும் நடைமுறைப்படி, முதல் வாரம் அல்லது முதல் இரண்டு வாரங்களுக்கு விநியோகஸ்தர், அதாவது தயாரிப்பாளர் தரப்புக்கே அதிக அளவான ஷேர் கொடுக்கப்படுகிறது. அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் அந்த ஷேர் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சாதகமாக ஏற்றம் காணும். இதனால், படத்தின் ஓபனிங்கைத் தாண்டி, எத்தனை நாட்களுக்கு தொடர்ந்து திரையிடப்படுகிறது என்பதை வைத்தே, தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபத்தின் அளவு கூடும் அல்லது குறையும். இந்த ஷேரைத்தாண்டி, எங்களுக்கான முக்கிய வருமானமே பார்க்கிங் மற்றும் ஸ்னாக்ஸ் ஸ்டாலில் இருந்துதான் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமானால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் 4 வாரத்திற்கு குறையாமல் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தின் வசூல் சுமார் 600 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்ததாக உரிமையாளர்களே கூறுகின்றனர். ஒரு படத்தின் வெற்றி என்பதே, விமர்சனங்களை கடந்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் ஓனர்களுக்கு கிடைக்கும் லாபம் நஷ்டத்தை பொறுத்ததுதான். அதன்படி, 2 வாரங்களை கடந்துள்ள லியோ படம், இதுவரை நல்ல வருமானத்தை கொடுத்த நிலையில், அடுத்து வரும் 2 வாரங்கள் முக்கியமானவை.
900+ தியேட்டர்களில் ரிலீஸ் ஏன்?
பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும்போது, அதிகப்படியான தியேட்டர்களில் அந்த படம் திரையிடப்படும். தற்போது தனியாக வந்து களமிறங்கியுள்ள லியோவுக்கு சுமார் 900+ தியேட்டர்களில் ஸ்கிரீன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு தமிழ்நாட்டில் தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருக்க, ஒரு படம் 600 தியேட்டர்களில் வெளியாவதற்கும், அதே படம் 900 தியேட்டர்களில் ஒளிபரப்பாவதற்கும் இடையேயான வித்தியாசம் பெரிய அளவில் இருக்கும். காரணம், அனைத்து தியேட்டர்களிலும் ஒரே படம் திரையிடப்படுவதால், நல்ல ஓபனிங் கிடைத்து 4 வாரங்களுக்கு ஓடவேண்டிய படம் 2 வாரங்களிலேயே ரசிகர்களிடையே சென்று சேர்ந்துவிடும்.
இதனால், 2 வார வசூலில் வரும் ஷேர் தியேட்டர் உரிமையாளர்களை தாண்டி, விநியோகஸ்தர் அதாவது தயாரிப்பாளர் தரப்புக்கு போகும் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுநர்கள். அப்படிப்பார்த்தால், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள லியோ, ஜெயிலரை முந்தும் என்று பேசப்பட்டாலும், எத்தனை வாரங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்பதை வைத்தே அதன் உரிமையாளர்களுக்கு லாபத்தை தரும். இத்தனையையும் தாண்டி, தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக தொகை கொடுத்து ஓடிடி நிறுவனத்தால் வாங்கப்பட்ட படமாகவும் லியோ மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சாதனையை ஒருவேளை எதிர்வரும் இந்தியன் -2 படம் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோவுக்கு ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன?
லியோ படம் LCU-ல் தான் வருகிறதா என்று எதிர்பார்த்து சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்த்த ரசிகர்களை, சின்ன சின்ன சீன்களை மட்டுமே LCU கனெக்ட்டுக்காக வைத்த படக்குழுவின் செயல், சிலருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. 100 சதவீதம் இது என்னுடைய படம் என்று லோகேஷ் சொல்லியிருந்த நிலையில், 100 சதவீதம் இது விஜய்க்கான படம்தான் என்று பேசப்படுகிறது. கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் அளவுக்கு லியோ இல்லை. ஆனால், விஜய்யின் நடிப்பு மற்ற படங்களை தாண்டி இதில் அவரை மிளிரச்செய்கிறது என்றும் சிலாக்கின்றனர்.
ஆக மொத்தம், அதிகம் எதிர்பார்த்து சென்றது ஒரு ஏமாற்றத்தை கொடுத்தாலும், அவ்வளவு மோசமான படமில்லை. ஒற்றை ஆளாக படத்தை தூக்கி சுமந்துள்ளார் விஜய் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆடியோ லான்ச் குட்டி கதையை மிஸ் பண்ணிவிட்டோமே என்று ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு வரும் 1ம் தேதி அன்று வெற்றிவிழாவில் வந்து விஜய் ஸ்டோரி சொல்லப்போகிறார் என்ற செய்தியும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்த குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும்?
எழுத்து: யுவராம் பரமசிவம்
ஈவெராமசாமியார் மூதாதையர் வீடு -1 ஏக்கர் சொத்து புறம்போக்கு நிலத்தில்
தமிழ் காட்டுமிராண்டி மொழி, சனியன் என்றும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு காலைப்பிடித்து பெரும் சொத்து சேர்த்த மறைந்த ஈவெராமசாமியார் மூதாதையர் வீடு உட்பட, ஈரோட்டில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு இன்னும் செல்லுபடியாகும் பட்டா இல்லை என்றும், இந்தச் சிக்கல்களை மாநில அரசு விரைவில் தீர்க்கும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வியாழக்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே, நிலத்தின் சர்வே எண், நில உரிமையாளரின் விவரங்கள் மற்றும் அந்த நிலத்தில் பயிரிடப்படும் பயிர்கள் குறித்த விவரங்களை பயனர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாநில அரசு ஒரு மொபைல் அடிப்படையிலான செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. கிராம வரைபடங்கள் மற்றும் பிற நில அளவை வரைபடங்களில் புவிசார் குறியீட்டைப் பதிக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் நில அளவை மற்றும் தீர்வுத் துறையின் பல்வேறு இணையவழி சேவைகளைப் பெறுவதற்கு உதவும் வகையில் ஒரு அழைப்பு மையம் நிறுவப்படும் என்று திரு. ராமச்சந்திரன் கூறினார். கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களைத் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், பதிவுசெய்யப்பட்ட சுயஉதவிக் குழுக்களுக்கு பூமிதான நிலங்களிலிருந்து வீட்டு மனைகளை அரசு வழங்கும்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் பதிவான நில அதிர்வுகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு ₹30 லட்சம் செலவில் நில அதிர்வு உணர்விகளுடன் கூடிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தை அமைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். தேசிய நில அதிர்வு மையம் மற்றும் தரவு மையங்களின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த மையம் அமைக்கப்படும்.
அனைத்து சான்றிதழ்களும் இனி இணையவழியில் மட்டுமே வழங்கப்படும்
நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்.
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!
1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர். 2.Double Document நிலம். Power of attorney(POA) double document அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட். 3.உயில் பத்திர நில double document. உயில் மூலம் உரிமை மாறி இருக்கா உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில். எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம். பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட். 4.Settlement பத்திர நிலம் double document . Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள். செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது. EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும். 5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document. 1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால். அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document. 6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா? அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள். DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள். அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள். Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள். எனவே ஜாக்கிரதை. பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும். நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள். இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும். 4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் . 5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும். கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம். அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள். 6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும். நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும். 7. பட்டாவின் பயனாளி யார்?. முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும் மேஜர் இனாம் ராயட்டு வாரி 1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும். இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம். ------------ Minor இனாம் சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும் தொழில் முறை இனாம் நிலம் ---- தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி, வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும். சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும். ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும். ------------ DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை) settlement etc யா என்று பார்க்க வேண்டும். மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை. --------- சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land. Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும். SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும். F-பட்டா. இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு. ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா. 1970-B-Memo land =பீமா பட்டா. B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும். Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர். ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும். -------- 1956-பூமி தான நிலம் Manual EC கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும். manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும். பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும். ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா. Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும். பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும். பூமி தான நிலம் வாங்காதீர். பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு. எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர். ----------- Zero value நிலம் -EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம். ----------- கோயில் நிலம் -HR&CE நிலமா வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும். கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே. கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம். கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும். இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது. ----------- ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில். land reforms act. இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். ----- 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம் இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme. RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம் மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும். ------- 1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது. ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும். இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m -------- 1961(center)to 1972(TN)Land ceiling act நிலம் நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும். UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும். Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும். -------- 1976 களின் Urban land seiling act ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும். ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை. 8. கோர்ட் attached property வாங்காதீர். 9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி. எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள். --------------- 10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள். 11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால், 12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் ) 13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது. 1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு வேண்டும். 1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும். இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால் 1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது. 2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள். 14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும். 15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க. 16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள் 18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள். நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?. உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம், லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர். மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம். Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல. 19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார். 20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள். பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே. ======== காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம். திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம். ======== நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர். அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர். இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...பராசக்தி படம் பெரும் தோல்வி- வசூல் எவ்வளவு
Parasakthi Box Office Collection Day 15: Sivakarthikeyan’s Film To Face A Deficit Of Over 95 Crores – A Disaster! January 25, 2026
Sivakarthikeyan starrer Parasakthi fails to witness any growth despite the Saturday boost. Check out day 15 collection! - By Jishika Madaan -
திருவள்ளுவர் 14ம் நூற்றாண்டு சிலை இப்போது எங்கே?
திருவள்ளுவர் 14ம் நூற்றாண்டு சிலை இப்போது எங்கே?
1972ல் அன்றைய கருணாநிதி சார் ஆட்சியில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சீரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் போது அகழாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு வள்ளுவர் சிலையில் சனாதன துறவியாக உள்ளார்.
கிரனைட் குவாரி ஏலம் அறிவித்து பிறகு போராட்டத்தால் நிறுத்திய ஸ்டாலின் அரசு
ஸ்டாலின் அரசு - மதுரை மேலூர் பகுதியில் மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் - 2 முக்கியமான கனிமங்களை வெட்டியெடுக்க மாநில இயற்கை வளத்துறை மத்திய அரசிடம் அனுமதி கோரியது.
7 பெண்களை ஏமாற்றிய கிறிஸ்துவப் பாதிரி பைபிள் பிரசாத் -புகாரை பதிவு செய்யாமல் அலைகழிக்கும் திமுக ஆட்சி போலீஸ்
https://www.facebook.com/watch/?v=1170947284861669
ஏமாந்த 2 மனைவிகள் புகாரை பதிவு செய்யாமல் அலைகழிக்கும் திமுக ஆட்சி போலீஸ்
ஹிந்து ராம் கீழ்த்தர விமரசனம் தாண்டி தொல்காப்பியப் பூங்கா- பணக்காரர்- முதல்வர் அடிவருடிகள் மட்டுமே என்பதை மாறியது
தொல்காப்பியப் பூங்கா மக்கள் வரிப்பணத்தில் 45 கோடி செலவில் புதிப்பிக்கப்பட்டது, ஆனால் அதில் வெகுசில கார்ப்பரேட் முதலாளிகள் & சில்லறைக்காக முதல்வர் அடிவருடிகளாக புகழ்ந்தவர் மட்டுமே பயன்படுத்தும் நிலை செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வந்தது

இந்த செய்தியை ஹிந்து N.ராம் மறுத்து போட்ட பதிவு- தரக்குறைவான வார்த்தைகள் // இது கலப்படமற்ற குப்பை, தவறான தகவல் தூய்மையானது மற்றும் எளிமையானது - தொல்காப்பியா பூங்காவிற்கு (கவனமாக மீட்டெடுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படும் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா) செல்லும் எவரும், வழக்கமான மற்றும் அவ்வப்போது நடைபயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் உட்பட பார்வையாளர்களின் கலவையான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணியை தாங்களாகவே காணலாம். அடையாறு சிற்றோடை மற்றும் கழிமுகத்திற்கு அருகிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், அதன் பெலிகன்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் நடைபாதை நடைபாதைகள் கொண்ட இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அவர்கள் விரும்புகிறார்கள்.
சென்னையின் புதிய பிரபலமான பொது இடம் இப்போது ஒரு தனியார் நடைபயண கிளப்பாகும்.//
OLA மின்சார ஸ்கூட்டர்- வாங்கி சில நாட்களில் ரிப்பேர் &பழுது- கன்சூயூமர் கோர்ட் விலை ரூ.1.2 லட்சம் + 35000 தர உத்தரவு
Bought an OLA electric scooter. Trouble in 10 days. Justice after two years. https://x.com/thinak_/status/2015648426726478115
போட்டோஷாப் திமுக வே(சா)தனைகள் வெளிவருகின்றன
போட்டோஷாப் திமுக வேசாதனைகள் வெளி வருகின்றன https://x.com/mannar_mannan28/status/2016090028792021088








